![]()
காங்கேசன்துறைக்கும் திருகோணமலைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை வழமை போல் ஒன்று விட்ட ஒருநாள் நடைபெறவிருக்கிறது. யாழ். அரச அதிபர் கே.கணேஷ் இத் தகவலைத் தெரிவித்தார். இந்த நடைமுறை இன்று முதல் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என்றும் அவர் கூறினார்.
மாவட்டச் செயலகத்தில் இன்று பயணம் மேற்கொள்வதற்காக அனுமதிச்சீட்டினை பெற்றுக்கொண்டவர்களும் அவசர தேவையின் நிமித்தம் செல்ல இருப்பவர்களும் காலை 7.30 மணிக்கு யாழ்ப்பாணம் ரயில் நிலையத்திற்கு சமுகமளிக்குமாறு அரச அதிபர் கேட்டுள்ளார்.