Multiple Page/Post

தொடர்ந்தும் அத்துமீறும் இந்திய ரோலர்கள்: 7 இலட்சம் பெறுமதியான வலைகள் நாசம் – 10 இந்திய மீனவர்கள் கைது !

தொடர்ந்தும் அத்துமீறும் இந்திய ரோலர்கள்: 7 இலட்சம் பெறுமதியான வலைகள் நாசம் – 10 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 10 பேர் ஜனவரி 8, இரவு கைது செய்யப்பட்டுள்ளதுடன்இ மீன்பிடி படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்டவர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் நேற்றிரவு யாழ்ப்பாணம் – காரைநகர், கோவளம் கலங்கரை விளக்கத்தில் நடத்திய விசேட நடவடிக்கையின்போது இவர்களை கைதுசெய்துள்ளனர்.

இதேவேளை இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய மீன்படியால் யாழ்ப்பாணம் – சுழிபுரம், காட்டுப்புலம் பகுதி மீனவர் ஒருவரின் 7 இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள் அறுக்கப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் இரவு இந்த மீனவர் திருவடி நிலை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அத்துமீறி நுழைந்த இந்திய இழுவைப் படகுகள் அவரது வலைகளை அறுத்துள்ளன. அவரிடமிருந்த 32 வலைகளில் 26 வலைகள் அறுக்கப்பட்ட நிலையில் 6 வலைகளே மீதமாகின. எஞ்சிய வலைகளும் சேதமடைந்த நிலையிலேயே காணப்படுகின்றன.

பாதிக்கப்பட்ட மீனவர் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்இ ஏழு இலட்சம் ரூபா வங்கியில் கடன் பெற்று முதலிட்டே கடலில் தொழில் செய்தேன். வலைகளை இந்திய இழுவைப் படகு அறுத்துச் சென்றதால் வாழ்வாதாரத்துக்கு என்ன செய்வேன்? வங்கிக் கடனை செலுத்த என்ன செய்வேன் என்று தெரியாமல் தவிக்கிறேன்.

புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி இந்திய மீனவர்கள் பிரச்சினையையும் தீர்த்து வைக்கவேண்டும். புதிதாக வந்த அமைச்சர் இதற்கு ஒரு தீர்க்கமான முடிவெடுத்து இந்திய இழுவைப் படகுகளை கட்டுப்படுத்த வேண்டும். அரசாங்கம் எனக்கு இழப்பீட்டை வழங்கிஇ நான் மீண்டும் தொழில் செய்ய வழிவகுக்க வேண்டும் என்றார்.

இஸ்லாமிய மத அவமதிப்பு : சர்ச்சைக்குரிய ஞானசார தேரருக்கு 9 மாத சிறை !

இஸ்லாமிய மத அவமதிப்பு : சர்ச்சைக்குரிய ஞானசார தே ரருக்கு 9 மாத சிறை !

இஸ்லாமிய மதத்தை அவதூறுசெய்த குற்றத்திற்காக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 9 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன 9 மாத சிறைத்தண்டனையும் 1இ500 ரூபாய் அபராதமும் விதித்துள்ளார்.

குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைக்கு நீதிமன்றில் ஆஜராகத் தவறியமையால் முன்னர் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை அடுத்தே அவருக்கு மேற்படி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஞானசார தேரரால் ஜூலை 16இ 2016 அன்று கிருலப்பனையில் நடாத்தப்பட்ட ஊடக சந்திப்பில். “இஸ்லாம் ஒரு புற்று நோய்… அதை ஒழிக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார். இதையடுத்து இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் அவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

 

தமிழரசுக்கட்சி சார்பில் பேச்சுவார்ததையில் ஈடுபட பா உ சிறிதரனுக்கு அனுமதி வழங்கப்படவில்லை – பா உ சாணக்கியன்

தமிழரசுக்கட்சி சார்பில் பேச்சுவார்ததையில் ஈடுபட பா உ சிறிதரனுக்கு அனுமதி வழங்கப்படவில்லை – பா உ சாணக்கியன்

“பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் இலங்கை தமிழரசுக்கட்சி சார்பில் எந்தவொரு பேச்சுவார்ததைகளிலும் ஈடுபட அனுமதி வழங்கப்படவில்லை” என அக்கட்சியின் மட்டு பா உ இராசமாணிக்கம் சுhணன்னியன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில் “கட்சி சார்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக இருந்தால் கட்சியினுடைய அனுமதி இருக்க வேண்டும். எனவே இது ஒரு பேச்சுவாரத்தையே இல்லை. அது மதிய உணவு இடைவேளை நேரத்தில் அவர்கள் சந்தித்ததே தவிர அது ஒரு அரசியல் சந்திப்பு அல்ல எனவும் சாணக்கியன் சுட்டிக்காட்டி உள்ளார். தமிழ் கட்சிகள் மத்தியில் அதிக வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டவர் இராசமாணிக்கம் சாணக்கியன் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏழாம் திகதி பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் சிறீதரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் மூவரும் சந்தித்து உரையாடி இருந்தனர். இது தமிழ் மக்களுக்கான அரசியல் வரைபை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட சந்திப்பாக தமிழ்தேசிய மக்கள் முன்னணி ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தது. இது தொடர்பில் தேசம்நெற் நேற்று கேள்வியும் எழுப்பி இருந்தது. இதற்குப் பதிலளிக்கும் வகையிலோயே பா உ சாணக்கியனின் பதில் அமைந்துள்ளது. இதன் அடிப்படையில் எதிர்வரும் 25ஆம் திகதிஇ தமிழ்த்தேசிய கொள்கையை வலியுறுத்தும் மூன்று முக்கிய கட்சியினருக்கு இடையில் மற்றுமொரு சந்திப்புப் பற்றியும் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் ஊடகச் சந்திப்பில் தெரிவித்து இருந்தார். ஏற்கனவே தேசம்நெற் இல் குறிப்பபிட்டது போல இது கட்சிகளின் சந்திப்பல்ல மூன்று தனிக்கட்டைகளின் சந்திப்பு என்பதை பா உ சாணக்கியனும் உறுதிப்படுத்தி உள்ளார்.

சிறிதரன்இ அடைக்கலநாதன் இடையேயான சந்திப்பு ஒரு உணவு நேரத்தில் பேசிக்கொண்ட சந்திப்பு எனவும் அதை பற்றி அலட்டிக்கொள்ள தேவவையில்லை எனவும் சாணக்கியன் கூறியுள்ளமையானது சைக்கிள் குழுவினரின் தலைமையேற்கும் திட்டமும் புஸ்வானமாகப்போகிறது என பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும் ஜனவரி 8 பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத்தலைவராகவும் நிதிக்குழவின் உறுப்பினராகவும் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவு செய்யப்பட்டுள்னார்.

பெரும்போகத்திற்கான உர மானியமாக 25000 ரூபா – பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

பெரும்போகத்திற்கான உர மானியமாக 25000 ரூபா மற்றும் பொட்டாசியம் உரத்தை இலவசமாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கென உர மானியத்தை வழங்க அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டம் தொடர்பில் நாடாளுமன்ற விவாதத்தின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திற்குமென உர மானியத்தை வழங்குவதற்கான கால எல்லை 2024 ஒக்டோபர் முதலாம் திகதியிலிருந்து 2025 பெப்ரவரி முதலாம் திகதி வரையாகும். இதற்கென 25000 ரூபா உர மானியம், 15000 ரூபா மற்றும் 10000 ரூபா என்ற தவணை அடிப்படையில் இரு கட்டங்களாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்

தற்போது 15000 ரூபா முதல் தவணை வழங்கப்பட்டுள்ளதுடன் விவசாயிகளின் உரத் தேவையை பூர்த்தி செய்வதற்காக சாதகமான மற்றும் உரிய செயன்முறையை முன்னெடுப்பதற்கு எமது அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதற்கென விவசாய அமைப்புகளிடமிருந்து கருத்துக்களை கேட்டறியும் நடவடிக்கையும் இடம்பெறுவதாக பிரதமர் தெரிவித்தார்.

மேலும் வயல் காணிகளில் நெற் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கென வழங்கப்படும் நிதி நிவாரணத்திற்கு மேலதிகமாக 25000 தசம் ஏழு மூன்று மெட்ரிக் தொன் அளவிலான மியுரியேட் ஒப் பொடேஷ் உரத்தை அரசினால்; இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய குறிப்பிட்டார்.

அரசாங்க பணியாளர்களின் நடத்தைகளில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் – ஆளுநர் நா.வேதநாயகன்

அரசாங்க பணியாளர்களின் நடத்தைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் ஊடாக மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

‘கிளீன் சிறிலங்கா’ திட்டம் தொடர்பில் வடக்கு மாகாண அலுவலர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு வடக்கு மாகாண பிரதம செயலர் அலுவலக கேட்போர் கூடத்தில் இன்று (09) காலை நடைபெற்றது.

ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலர்  சாரதாஞ்சலி மனோகரன் கலந்துகொண்டு, ‘கிளீன் சிறிலங்கா’ வேலைத்திட்டம் தொடர்பான விரிவான விளக்கங்களை வழங்கியதுடன், அரசாங்க அலுவலர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

அதன் பின்னர் உரையாற்றிய வட மாகாண ஆளுநர், ‘கிளீன் சிறிலங்கா’ வேலைத்திட்டம் கௌரவ ஜனாதிபதியால் தொடக்கி வைக்கப்பட்டது என்பதையும் இந்த அரசாங்கத்தின் அந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உண்டு என்றும் குறிப்பிட்டார்.

மக்களின் சேவைகளை விரைவாகவும் தரமாகவும் அன்பாகவும் வழங்குவது அரச பணியாளர்கள் ஒவ்வொருவரினதும் பொறுப்பு எனச் சுட்டிக்காட்டிய ஆளுநர், அந்த மாற்றத்தை அரச பணியாளர்களின் நடத்தையில் ஏற்படுத்துவதன் ஊடாக செய்ய முடியும் என்று குறிப்பிட்டார்.

மேலும், இந்த நடத்தை மாற்றங்கள் உடனடியாக செய்யக்கூடியவை எனக் குறிப்பிட்ட ஆளுநர், 2025ஆம் ஆண்டினை வட மாகாணத்தில் இந்த மாற்றங்களை ஏற்படுத்தும் ஆண்டாக மாற்றுவோம் என்றார்.

கஜா தேவையில்லை என்கிறார் ஆனால் 13ஆவது திருத்தமும் – மாகாணசபையும் இல்லாத தீர்வை நாம் ஏற்க மாட்டோம் – ரெலோ

கஜா தேவையில்லை என்கிறார் ஆனால் 13ஆவது திருத்தமும் – மாகாணசபையும் இல்லாத தீர்வை நாம் ஏற்க மாட்டோம் – ரெலோ அமைப்பின் லண்டன் பிரதிநிதி சாம் சம்பந்தன்

 

 

 

கமலா முதல் அனிதா வரை வட அமெரிக்க அரசியலில் கலக்கும் தமிழ்ப் பெண்கள்

கமலா முதல் அனிதா வரை வட அமெரிக்க அரசியலில் கலக்கும் தமிழ்ப் பெண்கள்

உலகின் சக்தி வாய்ந்த நாடுகளாக கருதப்படுகிற அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளின் அதியுயர் அரச தலைமைப் பதவிகளை பெறும் போட்டியில் இடம்பெறுவதே மிகச் சவாலான காரியம்.

அப்படியிருக்க அமெரிக்காவில் தமிழகத்தையும் தமிழையும் பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரீஸ் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக இருப்பதும், க‌ட‌ந்த 2024 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாக ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கியமையும் குறிப்பிடத்தக்கதாகும். கமலா அமெரிக்காவில் வீசிய வெளிநாட்டவர்களுக்கு எதிரான தீவிர வலதுசாரி அலையால் வெற்றி வாய்ப்பை தவற விட்டிருந்தார். ஆனாலும் பிற்போக்குவாத கடும்போக்கு வலதுசாரியான டொனால்ட் ரம்புக்கு கமலா கடும் எதிர் போட்டியாளராக திகழ்ந்தார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

அதேபோன்று கனடாவின் நடப்பு பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ ஆளும் லிபரல் கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் லிபறல் கட்சியானது பொதுத் தேர்தலுக்கு செல்ல முன்னர் கட்சியின் புதிய தலைமைக்கான தேடலில் ஈடுபட்டுள்ளது. லிபரல் கட்சியின் புதிய தலைவர் பதவிக்கு பலருடைய பெயர்கள் பரிந்துரைக்கப்படுகின்றன.

அதில் முன்னாள் துணைப் பிரதமர் கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் முதல் வெளியுறவுத் துறை அமைச்சர் மெலனி ஜோலி மற்றும் தற்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் அனிதா ஆனந்த் வரையிலான மூன்று பேருமே போட்டியில் முன்னிலை வகிக்கின்றனர். லிபறல் கட்சியின் தலைமைப் பதவியை யார் கைப்பற்றுவார்களோ அவர்களே லிபறல் கட்சி சார்பாக பிரதம வேட்பாளராக போட்டியிடுவர்.

 

57 வயதாகும் அனிதா ஆனந்த் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். அனிதாவின் தந்தை தமிழகத்தைச் சேர்ந்தவர் எனவும் தாயார் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. இவரது பெற்றோர் நைஜீரியாவிலிருந்து கனடாவில் குடியேறியவர்கள். ஒக்ஸ்போர்ட் மற்றும் குயின்ஸ் பல்கலைக்கழக பட்டதாரியான இவர் கனடாவிலும் தன்னுடைய பட்டப்படிப்பை தொடர்ந்துள்ளார். 2019 இல் அரசியலுக்கு வந்த அனிதா ஆனந்த் லிபறல் கட்சி தலைமையிலான அரசாங்கத்தில் பல்வேறு முக்கிய பொறுப்புக்களை வகித்துள்ளார்.

தன்னை முதலாவது கனடாவின் இந்து பாராளுமன்ற பெண் உறுப்பினர் என பெருமிதத்துடன் குறிப்பிடும் அனிதா ஆனந்த், கட்சித் தலைமைப் பதவியை கைப்பற்றி பிரதமர் வேட்பாளரானால் அவரே கனடாவின் அதிஉயர் பதவியக்குப் போட்டியிடும் முதலாவது தமிழ் பூர்வீக பெண் ஆவார். எவ்வாறெனினும் இடம்பெறப் போகும் கனடா பொதுத்தேர்தலில் அனிதா ஆனந்த் அங்கம் வகிக்கும் லிபறல் கட்சி மண்ணை கவ்வும் என அரசியல் அவதானிகள் கூறுகின்றனர். கமலா ஹாரீஸ்சும் சரி அனிதா ஆனந்தும் சரி குடியேறிகளின் வாரிசுகளான இவர்கள் எந்த அரசியல் பின்புலமும் இல்லாமல் அரசியலுக்குள் துணிந்து வந்தவர்கள். இவர்கள் இருவருமே அரசியலில் பெண்களுக்கு முன்மாதிரிகளாக இருக்கின்றார்கள்.

ஒடுக்குமுறையைச் சந்தித்து அதுக்கு எதிராக உயிரையும் துச்சமென மதித்துப் போராடிய தமிழ் பெண்களுக்கு தமிழ் தேசியக் கட்சிகள் வெல்லக் கூடிய ஒரு ஆசனத்தைக் கூடக் கொடுக்கவில்லை. ஆனால் சர்வதேச அரங்கில் பிரித்தானியாவில், அமெரிக்காவில், கனடாவில் என தமிழ் பெண்கள் களமிறங்கி ஆண்களைக் காட்டிலும் மிகத் திறமையாக அரசியலை முன்னெடுக்கின்றனர்.

அமெரிக்க அரசியல்: பணக்கார பையன்களின் கூட்டு அட்டகாசங்கள் !

அமெரிக்க அரசியல்: பணக்கார பையன்களின் கூட்டு அட்டகாசங்கள் !

பேஸ்புக் ஓனர் மார்க் ஸுகர்பெர்க் தனக்கு சொந்தமான “மெற்ரா” நிறுவனத்தின் கீழான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூகவலைத் தளங்களில் பயன்படுத்தப்படும் தகவல்களின் உண்மை தன்மையை கண்டறியும் செயல்முறையை நிறுத்தப்போவதாக பேஸ்புக் வீடியோ மூலம் அறிவித்துள்ளார். இதுபற்றி கூறும் மார்க் “இந்த முடிவானது கருத்துச் சுதந்திரத்தை தனது சமூக வலைத்தளங்களில் மீண்டும் அமுல்ப்படுத்தவே “ எடுக்கப்பட்டதாக கூறுகிறார். தகவல்களின் உண்மைத்தன்மையை சம்பந்தப்பட்ட சமூகவலைத்தளங்களை நிர்வகிக்கும் நிறுவனங்கள் ஆராய்வதை கருத்துச் சுதந்திரத்தின் மீதான தணிக்கை என விமர்ச்சிக்கின்றனர்.

குறிப்பாக அமெரிக்காவில் குடியரசுக் கட்சிவாதிகள் மற்றும் டொனால்ட் ரம்பை ஆதரிக்கும் தரப்பினர் ஏலவே சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல்களின் உண்மைத்தன்மையை பரிசோதனை செய்யும் புறோகிறாம்ஸ்சை எதிர்த்து வந்தனர். இந்தவிடயத்தைப் பொறுத்தவரை கடும்போக்கு வலதுசாரியான இன்னொரு பணக்கார பையனான எலான் மஸ்க் தனக்கு சொந்தமான சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தில் ஆரம்பம் முதலே தகவல்களின் உண்மைத்தன்மையை சோதிக்கும் செயல்முறையை இல்லாதொழித்திருந்தார். அதற்குப் பதிலாக எக்ஸ் தளம் “சமூக குறிப்புக்கள் “( community notes) என்ற அம்சத்தை உருவாக்கியிருந்தது.

ஒப்பீட்டளவில் மெற்ரா அதனது சமூகவலைத்தளங்களில் குடியேறிகள் மற்றும் பாலினம் தொடர்பான விரோதக் கருத்துக்களை தணிக்கை செய்து வந்தது. தற்போது மார்க் ஸுகர்பெர்க் தான் அமெரிக்க நிறுவனங்களை தாக்கும் மற்றும் அதிக தணிக்கைக்கு அழுத்தங்களை கொடுக்கும் அரசாங்கங்களுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம்ப்புடன் இணைந்து செயற்படப்போவதாக அறிவித்துள்ளார். மறைமுகமாக மார்க் சாடுவது ஐரோப்பிய நாடுகளின் தனிநபர் உரிமைகளை பாதுகாக்கும் சட்டங்களையும் சமூக வலைத்தளங்களில் மீதான ஐரோப்பிய நாடுகளின் கட்டுப்பாடுகளையுமே என அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.

மறுபுறம் பார்த்தால் மார்க் ஸுகர்பெர்க்கும் டொனால்ட் ரம்ப்பிற்கும் இடையிலான உறவு எப்போதுமே மோசமாகவே இருந்தது. இதன் விளைவாக டொனால்ட் ரம்ப்பின் பேஸ்புக் கணக்கு இரண்டு வருடங்களுக்கு மேல் இரத்து செய்யப்பட்டிருந்தது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ரம்ப் வெற்றியடைந்த பின்னர் மார்க் ஸுகர்பெர்க் உடனான உறவு மேம்பட்டு வந்தது. கடந்த வருடம் நவம்பரில் டொனால்ட் ரம்ப் மார்க்கை விருந்துபசாரத்திற்கும் அழைத்திருந்தார். அந்த வகையில் டொனால்ட் ரம்பின் பதவியேற்பு விழாவிற்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக அளிப்பதாக மார்க் ஸுகர்பெர்க் அறிவித்துள்ளார். இதனை எலான் மஸ்க்கும் வரவேற்றுள்ளார். இப்படியாக பணக்கார முதலாளிப் பையன்கள் ஏகாதிபத்திய அமெரிக்க ஆட்சியாளர்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு உலகை ஆட்டிப்படைக்க விரும்புகிறார்கள்.

வடக்கில் ஐந்து தொழில் பேட்டைகள் – புலம்பெயர் தமிழர்களை அழைக்கின்றனர் யாழ் என்பிபி யினர் !

வடக்கில் ஐந்து தொழில் பேட்டைகள் – புலம்பெயர் தமிழர்களை அழைக்கின்றனர் யாழ் என்பிபி யினர் !

புலம்பெயர் தமிழர்கள் வடக்கில் முதலீடு செய்வது குறித்து ஆர்வத்துடன் உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, வைத்தியர் பவானந்தராஜா ஆகியோர் வெளிநாட்டு விவகார அமைச்சர் விஜித ஹேரத் அவர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை பாரளுமன்ற அலுவலகத்தில் நடத்தியிருந்தனர். அதன் போதே யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இதன் போது வடக்கு மாகாணத்தில் ஐந்து தொழிற்பேட்டை நிலையங்களை அமைப்பதற்காக காணிகள் இனங்காணப்பட்டு உள்ளதாகவும் விரைவில் வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். ஆர்வமுள்ளவர்கள் இலங்கை முதலீட்டு சபையின் ஊடாக தங்கள் செயற்திட்டங்களை முன்வைக்க முடியும் எனவும் விஜித ஹேரத் பதிலளித்தார்.

அதே போன்று நீண்ட காலமாக புலம்பெயர்ந்து நாட்டுக்கு வர முடியாது இருக்கும் தமிழர்கள், தாங்கள் நாட்டுக்கு வர விரும்புவது தொடர்பான ஆர்வத்தை பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி அமைச்சருக்கு தெரியப்படுத்தினார்.

இதேவேளை செய்வாய்க்கிழமை நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் உரையாற்றிய பா.உ செல்வம் அடைக்கலநாதன் புலம்பெயர் தமிழ் மக்கள் இலங்கையில் முதலீடு செய்வது தொடர்பில் பேசிய போது பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறையிலிருப்பதானது புலம்பெயர் மக்களின் முதலீடுகளை இலங்கைக்கு கொண்டு வருவதில் பாரிய தடையாக உள்ளது என சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யூத வழிபாட்டு தலங்களிற்கு அரசு அனுமதி வழங்கவில்லை. விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் ! – பிரதமர் ஹரினி !

யூத வழிபாட்டு தலங்களிற்கு அரசு அனுமதி வழங்கவில்லை. விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் ! – பிரதமர் ஹரினி !

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, இஸ்ரேலின் தேசிய மத நிலையங்களையோ அல்லது அதற்கு நிகரான கட்டிடங்களையோ நிர்மாணிப்பதற்கு எந்தவொரு அரசாங்க நிறுவனமும் அனுமதி வழங்கவில்லை என தெரிவித்துள்ளார். அத்தோடு இவ்வாறான சட்டவிரோத கட்டிடங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டு இஸ்ரேலிய மத நிலையங்கள் அல்லது கலாச்சார நிலையங்கள் கட்டப்பட்டு வருவதாகவும் அவ்வாறான இடங்களில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பிய போதே பிரதமர் மேற்கண்டவாது தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் எவ்வித சட்டவிரோதச் செயல்களிலும் ஈடுபட அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அவர் அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்தார்.

இஸ்ரேலில் யுத்தத்தில் ஈடுபட்ட இராணுவத்தினர் இலங்கைக்கு குறிப்பாக அறுகம்பே பகுதிக்கு சுற்றுலாவருகின்றனர். இது தொடர்பில் யுத்தக்குற்றத்தில் ஈடுபட்ட ஒருவர் கொழும்பில் இருப்பதாகத் தேடப்பட்டு பின்னர் அவர் தப்பித்து விட்டதாகச் சொல்லப்பட்டது. விசா காலாவதியான பின்னரும் சில இஸ்ரேலியப் பயணிகள் தங்கியுள்ளார்கள் என்றும் இவர்கள் பொலிஸாரால் குடிவரவு அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டு மிரிஹான குடிவரவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் பிரதமர் ஹரினி நேற்று மாராளுமன்றத்தில் தெரிவித்தார்.