அமெரிக்க அரசியல்: பணக்கார பையன்களின் கூட்டு அட்டகாசங்கள் !

அமெரிக்க அரசியல்: பணக்கார பையன்களின் கூட்டு அட்டகாசங்கள் !

பேஸ்புக் ஓனர் மார்க் ஸுகர்பெர்க் தனக்கு சொந்தமான “மெற்ரா” நிறுவனத்தின் கீழான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூகவலைத் தளங்களில் பயன்படுத்தப்படும் தகவல்களின் உண்மை தன்மையை கண்டறியும் செயல்முறையை நிறுத்தப்போவதாக பேஸ்புக் வீடியோ மூலம் அறிவித்துள்ளார். இதுபற்றி கூறும் மார்க் “இந்த முடிவானது கருத்துச் சுதந்திரத்தை தனது சமூக வலைத்தளங்களில் மீண்டும் அமுல்ப்படுத்தவே “ எடுக்கப்பட்டதாக கூறுகிறார். தகவல்களின் உண்மைத்தன்மையை சம்பந்தப்பட்ட சமூகவலைத்தளங்களை நிர்வகிக்கும் நிறுவனங்கள் ஆராய்வதை கருத்துச் சுதந்திரத்தின் மீதான தணிக்கை என விமர்ச்சிக்கின்றனர்.

குறிப்பாக அமெரிக்காவில் குடியரசுக் கட்சிவாதிகள் மற்றும் டொனால்ட் ரம்பை ஆதரிக்கும் தரப்பினர் ஏலவே சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல்களின் உண்மைத்தன்மையை பரிசோதனை செய்யும் புறோகிறாம்ஸ்சை எதிர்த்து வந்தனர். இந்தவிடயத்தைப் பொறுத்தவரை கடும்போக்கு வலதுசாரியான இன்னொரு பணக்கார பையனான எலான் மஸ்க் தனக்கு சொந்தமான சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தில் ஆரம்பம் முதலே தகவல்களின் உண்மைத்தன்மையை சோதிக்கும் செயல்முறையை இல்லாதொழித்திருந்தார். அதற்குப் பதிலாக எக்ஸ் தளம் “சமூக குறிப்புக்கள் “( community notes) என்ற அம்சத்தை உருவாக்கியிருந்தது.

ஒப்பீட்டளவில் மெற்ரா அதனது சமூகவலைத்தளங்களில் குடியேறிகள் மற்றும் பாலினம் தொடர்பான விரோதக் கருத்துக்களை தணிக்கை செய்து வந்தது. தற்போது மார்க் ஸுகர்பெர்க் தான் அமெரிக்க நிறுவனங்களை தாக்கும் மற்றும் அதிக தணிக்கைக்கு அழுத்தங்களை கொடுக்கும் அரசாங்கங்களுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம்ப்புடன் இணைந்து செயற்படப்போவதாக அறிவித்துள்ளார். மறைமுகமாக மார்க் சாடுவது ஐரோப்பிய நாடுகளின் தனிநபர் உரிமைகளை பாதுகாக்கும் சட்டங்களையும் சமூக வலைத்தளங்களில் மீதான ஐரோப்பிய நாடுகளின் கட்டுப்பாடுகளையுமே என அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.

மறுபுறம் பார்த்தால் மார்க் ஸுகர்பெர்க்கும் டொனால்ட் ரம்ப்பிற்கும் இடையிலான உறவு எப்போதுமே மோசமாகவே இருந்தது. இதன் விளைவாக டொனால்ட் ரம்ப்பின் பேஸ்புக் கணக்கு இரண்டு வருடங்களுக்கு மேல் இரத்து செய்யப்பட்டிருந்தது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ரம்ப் வெற்றியடைந்த பின்னர் மார்க் ஸுகர்பெர்க் உடனான உறவு மேம்பட்டு வந்தது. கடந்த வருடம் நவம்பரில் டொனால்ட் ரம்ப் மார்க்கை விருந்துபசாரத்திற்கும் அழைத்திருந்தார். அந்த வகையில் டொனால்ட் ரம்பின் பதவியேற்பு விழாவிற்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக அளிப்பதாக மார்க் ஸுகர்பெர்க் அறிவித்துள்ளார். இதனை எலான் மஸ்க்கும் வரவேற்றுள்ளார். இப்படியாக பணக்கார முதலாளிப் பையன்கள் ஏகாதிபத்திய அமெரிக்க ஆட்சியாளர்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு உலகை ஆட்டிப்படைக்க விரும்புகிறார்கள்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *