Multiple Page/Post

யானைகளைப் பார்க்க சுற்றுலா வருகின்றனர் ! ஆனால் நாங்கள் யானைகளை அழிக்கின்றோம் ! ?

யானைகளைப் பார்க்க சுற்றுலா வருகின்றனர் ! ஆனால் நாங்கள் யானைகளை அழிக்கின்றோம் ! ?

கடந்த 2024 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 24 லட்சமாக எகிறியிருந்தது. அவர்கள் இந்த அழகிய தீவையும் இங்குள் யானைகளையும் பார்க்கவே வருகின்றனனர். ஆனால் கடந்த ஆண்டு 386 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீனராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது .

பாதுகாப்பு திணைக்களத்தின் தகவல்களின் படி, அதிகப்படியாக 81 யானைகள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியும், 56 யானைகள் மின்சாரம் தாக்கியும் , உயிரிழந்துள்ளன .

இளம் வயதுடைய யானைகளே அதிகளவில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள வனஜீனராசிகள் பாதுகாப்பு திணைக்களம் , யானைகளின் தாக்குதல்களினால் 154 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில் 488 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீனராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது .

இலங்கையின் யானைகள், IUCN இனால் 1986 ஆம் ஆண்டிலிருந்து அழிந்து போகும் அபாயமுள்ள விலங்குகளின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டு உள்ளமையும் கவனிக்கத்தக்கது.

விமான நிலையத்தில் பா உ சிறிதரனுக்கு ஏற்பட்ட தாமதத்திற்கு சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்கா மன வருத்தம் !

விமான நிலையத்தில் பா உ சிறிதரனுக்கு ஏற்பட்ட தாமதத்திற்கு சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்கா மன வருத்தம் !

பயங்கரவாதத் தடைச் சட்டம் அரசாங்கத்தின் கொள்கை அல்லது விஞ்ஞாபனத்தின் ஒரு பகுதி அல்ல, ஆனால் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் வரை அது அவதானத்துடன் பயன்படுத்தப்படும் என அவைத் தலைவர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், பா.உ. சிறீதரன்; அண்மையில் இந்தியாவுக்கு பயணம் செய்தபோது, குடிவரவு அதிகாரிகள் பயணத் தடையை காரணம் காட்டி அவரின் பயணத்தை தடை செய்ய முற்பட்டதாகவும் பயங்கரவாத தடைச்சட்டத்தை தவறாகப் பயன்படுத்தியதாகவும் குற்றஞ்சாட்டி இருந்ததுடன் அத்தகைய தடைக்கு நீதிமன்ற உத்தரவு தேவை என்றும் வாதிட்டிருந்தார்.

குறித்த விடயத்துக்கு பதிலளித்த சபைத்தலைவர் பிமல் ரத்நாயக்க, இது தொடர்பில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சிறிதரன் எம்.பி.க்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு வருந்துவதாகவும் தெரிவித்த சபைத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினருக்கான சிறப்புரிமைகளை உறுதிப்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியதுடன் அங்கு பயங்கரவாத தடைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தவில்லை என்பது தெளிவானது எனவும் குறிப்பிட்டார்.

வடக்கை கைவிடமாட்டோம் ! திறமையுள்ளவர்களுக்கும் வேலை செய்ய விரும்புபவர்களுக்கும் வேலை வரும் ! ஜனாதிபதி அனுரகுமார

வடக்கை கைவிடமாட்டோம் ! திறமையுள்ளவர்களுக்கும் வேலை செய்ய விரும்புபவர்களுக்கும் வேலை வரும் ! ஜனாதிபதி அனுரகுமார

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் உலக வங்கியின் தெற்காசியப் பிராந்தியத்திற்கான உப தலைவர் மார்டின் ரேசர் உள்ளிட்ட குழுவினருக்கும் இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், கிளீன் ஶ்ரீலங்கா , கிராமிய வறுமை ஒழிப்பு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு உலக வங்கியிடமிருந்து நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க உடன்பாடு தெரிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் கல்வி, எரிசக்தி, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் வடக்கு அபிவிருத்தி ஆகியவற்றில் புதிய திட்டங்களுக்கு உதவி வழங்குவது குறித்து இதன் போது கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, புதிய அபவிருத்தி திட்டங்களில் வடக்கின் அபிவிருத்திக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், வடக்கில் மூன்று முதலீட்டு வலயங்களை நிறுவ நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும் வடக்கில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும், நீர் வசதிகளை வழங்கவும், வடக்கு மக்களின் சமூகப் பிரச்சினைகளுக்கு கலாச்சார அடையாளத்தைப் பாதுகாக்கும் வகையில் தீர்வு வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி அநுர குமார தெரிவித்தார்.

“நான் கனக்கப் பார்த்திருக்கிறேன், நான் மகிந்த ராஜபக்ச என்பதை ஜனாதிபதி அநுர மறந்து விடுகிறார்” முன்னாள் ஜனாதிபதி மகிந்த

“நான் கனக்கப் பார்த்திருக்கிறேன், நான் மகிந்த ராஜபக்ச என்பதை ஜனாதிபதி அநுர மறந்து விடுகிறார்” முன்னாள் ஜனாதிபதி மகிந்த

ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை 4.6 மில்லியன் வாடகையுடைய அரசாங்க வீட்டிலிருந்து கிளப்ப அறிவித்தல் வழங்கப்பட்டுவிட்டது. இது தென்னிலங்கை அரசியல் பரப்பில் பாரிய வாதப்பிரதிவாதங்களை தோற்றுவித்துள்ளது.

இந்நிலையில் , இது தொடர்பில் பதிலளித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, “நான் மகிந்த ராஜபக்ச என்பதை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மறந்து விடுகிறார். நான் எல்லாவற்றையும் பார்த்திருக்கிறேன். அரசியல் பழிவாங்கல் முதல் துன்புறுத்தல் வரை, எனது அரசு இல்லம் என்னிடமிருந்து பறிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி நினைத்தால், நான் வெளியேறத் தயாராக இருக்கிறேன். அவர் எனக்கு எழுத்துப்பூர்வ கோரிக்கையை அளிக்கட்டும்” என தெரிவித்துள்ளார்.

இதேவேளை நேற்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகை குறைப்பு மற்றும் பாதுகாப்பு குறைக்கப்பட்டமை தொடர்பில் மகிந்த ராஜபக்ச தரப்பினருக்கும் – என்.பி.பி தரப்பினருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டிருந்தன.

எனினும் இவை தொடர்பில் பாராளுமன்றத்தில் பதிலளித்திருந்த வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் “எச்சரிக்கைகள் தேவைப்படும் விஷயங்களில் எச்சரிக்கைகள் விடுக்கப்பட வேண்டும். சிலர் இதை நகைச்சுவையாக எடுத்துக்கொண்டு, அரசாங்கம் கடுமையான முடிவுகளை எடுக்க இயலாது என்று காட்டுகிறார்கள். நாங்கள் கடுமையான முடிவுகளை எடுக்க முடியும்,” என்று கூறியிருந்தார்.

சம்பளத்தை ஒறுத்து ஜெயலலிதா மாதிரி பணியாற்ற வேண்டாம் ! சம்பளத்தை பெற்று வினைத்திறனுடன் பாணியாற்றுங்கள்! 

சம்பளத்தை ஒறுத்து ஜெயலலிதா மாதிரி பணியாற்ற வேண்டாம் ! சம்பளத்தை பெற்று வினைத்திறனுடன் பாணியாற்றுங்கள்!

தேசிய மக்கள் சக்தியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவுகளும் ஒரு வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

நிஹால் கலப்பத்தியுடன் ஆரம்பமான பயணத்தை தாங்கள் தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொரளையில் உள்ள மக்கள் வங்கியில் உள்ள தற்போதைய வங்கிக் கணக்கில் தொடர்புடைய கொடுப்பனவுகள் வைப்பிலிடப்படும் என்றும், பின்னர் அந்தப் பணம் பொது சேவைக்குப் பயன்படுத்தப்படும் என்று கூறிய பிரதி அமைச்சர், இது மக்களுக்கு மேலும் சேவை செய்வதற்கான வாய்ப்பை உருவாக்கும் என்றும் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்களுக்கு சட்டப்படி கிடைக்கக் கூடிய பணத்தை அவர்களிடமே கொடுப்பதே ஆரோக்கியமானது அரசியல் ஆய்வாளர் த ஜெயபாலன்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் குடும்பங்கள் சொந்த பந்தங்கள் செலவுகள் உண்டு. கட்டுப்பாடு என்ற பெயரில் அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய சம்பளத்திலும் கை வைத்தால் அவர்கள் நீண்ட காலத்தில் சேவை மனப்பான்மையோடு மட்டும் பணியாற்ற முடியாது போகும் முன்னாள் தமிழ் நாட்டு முதலமைச்சர் சம்பளம் பெறவில்லை. ஆனால் அவர் கோடிக்கணக்கில் சொத்துக்களைச் சேர்த்தார். பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் சம்பளத்தை ஒறுத்துப் பணியாற்றத் தேவையில்லை. அரச நிதி வினைத்திறனுடன் பயன்படுத்துப்படுவதை உறுதிப்படுத்தினாலேயே போதும் எனவும் த ஜெயபாலன் தெரிவித்தார்.

இடதுசாரிகளாக இருந்தாலும் வ பெருமாள் உட்பட தமிழ் தலைவர்களிடம் இருப்பது வலதுசாரிச் சிந்தனையே !

இடதுசாரிகளாக இருந்தாலும் வ பெருமாள் உட்பட தமிழ் தலைவர்களிடம் இருப்பது வலதுசாரிச் சிந்தனையே !

முன்னாள் கிழக்கு மாகாணசபையின் செயற்பாட்டாளர் சோலையூரானோடு ஒரு உரையாடல்

 

கண்டாவளை, பளை முதல் புத்தளம் வரை கள்ள மரம் கடத்தல், மணல் அகழ்வு: அரசியல் தலைவர்கள் !

கண்டாவளை, பளை முதல் புத்தளம் வரை கள்ள மரம் கடத்தல், மணல் அகழ்வு: அரசியல் தலைவர்கள் !

 

மணல் அகழ்வு மோசடி சம்பவத்தின் பின்னணியில் இரண்டு முக்கிய அரசியல்வாதிகள் இருக்கின்றமை தெரியவந்துள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்

பாராளுமன்றத்தில் இது தொடர்பாக கருத்து வெளியிட்ட அமைச்சர் சமந்த வித்யாரத்ன, சிலாபம் மணல் நிறுவனத்திற்குச் சொந்தமான பளை என்ற பகுதியில், ஒதுக்கப்பட்ட அளவை விட அதிகமாக மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது ஒரு பாரிய மோசடி என்று தெரிவிj;jhu;. சுமார் 400 மில்லியன் ரூபா ஊழல் பரிவர்த்தனை மற்றும் மோசடி நடந்ததாக தெரியவருகின்றது

இந்த மோசடிக்கு இறுதியில் யார் பொறுப்பு என்று சொல்ல முடியாது. ஆனால் இரண்டு முக்கிய அரசியல்வாதிகள் இதில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்த அமைச்சர் சமந்த வித்யாரத்ன, பல ஒப்பந்ததாரர்கள் பற்றிய தகவல்களும் எமக்கு கிடைத்துள்ளன. இது தொடர்பான விசாரணைகள் தற்போது இடம்பெறுகின்றன என அமைச்சர் மேலும் தெரிவித்தார்

வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் மரங்களை வெட்டுதல், மணல் அகழ்வு என பல சட்டவிரோத செயற்பாடுகளின் பின்னணியில் பா உ சிறிதரன் இருப்பதாகக் குற்றசம்சாட்டப் படுகின்றது. பா உ சிறிதரனின் மனைவியின் ஊரான கண்டாவளையில் பெரும் மணல் களவு இடம்பெற்று வருகின்றது. கிளிநொச்சியில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கும் தமிழரசுக் கட்சிக்குமிடையே நெருங்கிய உறவுகள் இருப்பதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

இதேவேளை கடந்த ஆண்டு தேசம் திரை நேர்காணலில் பங்குபற்றியிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தமிழரசுக் கட்சியில் சில பணம் படைத்தவர்கள் உள்ளதாகவும் அவர்கள் மரம் வெட்டுதல், மணல் அகழ்வு போன்ற சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் என தெரிவித்தார். அத்துடன் அவர்கள் தொடர்பில் சிறீதரன் எம்.பியோ அல்லது கட்சியின் பிரபல அரசியல் தலைவர்களோ நடவடிக்கைகள் எடுப்பதில்லை எனவும் இந்த சட்டவிரோத செயற்பாடுகள் மூலம் கிடைக்கும் பணமே சிறீதரன் உள்ளிட்டோர் அங்கத்துவம் வகிக்கும் தமிழரசுக் கட்சியின் தேர்தல் காலங்களில் பயன்படுத்தப்படுவதாகவும் குற்றஞ்சாட்டி இருந்தது கவனிக்கத்தக்கது.

பா உ அர்ச்சுனாவை தேடி பிரச்சினைகள் வருகிறதா ? அல்லது பிரச்சினைகளை தேடி அவர் போகிறாரா ?  

பா உ அர்ச்சுனாவை தேடி பிரச்சினைகள் வருகிறதா ? அல்லது பிரச்சினைகளை தேடி அவர் போகிறாரா ?

மீண்டும் போக்குவரத்து பொலிஸாரின் உத்தரவுகளை புறக்கணித்து, செயற்பட்டமைக்காக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்காக சென்றவேளை, அங்கீகரிக்கப்படாத விஐபி விளக்குகள் பொருத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனத்தை போக்குவரத்து காவல்துறையினர் தடுத்து நிறுத்தியபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. குறித்த காணொளியில் பொலிசாருடன் தர்க்கம் செய்யும் பா உ இராமநாதன் அர்ச்சுனா, பாராளுமன்ற உறுப்பினர் அடையாள அட்டை தராதது அரசாங்கத்தின் பிழை. நீ என்ன படித்திருக்கிறாய்? சிங்கள எம்.பி ஒருவரை உன்னால் நிறுத்த முடியுமா? ஜனாதிபதி அனுர குமாரவின் வாகனத்தை நிறுத்துவியா? ஜனாதிபதி அனுரtpனால் தான் நாங்கள் சொந்த வாகனத்தில் பாராளுமன்றம் செல்ல வேண்டியிருக்கிறது என தனது ஆவேசத்தை வெளிப்படுத்துவதை அக்காணொலி காட்டுகின்றது.

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்த கருத்தானது, இனங்களுக்கிடையில் முரண்பாட்டை ஏற்படுத்தியதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இதனிடையே பாஉ அர்ச்சுனா கைது செய்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு அனுராதபுர நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை பாராளுமன்ற அமர்விலும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் நேற்றைய தினம் பா உ அர்ச்சுனா தனக்கு பேசுவதற்கு நேரம் தரவில்லை என முறைப்பாடு செய்துள்ளார்.

சாணக்கியன் – செல்வம் கிளீன் சிறிலங்கா விசாரணைக்குள் வருகிறார்களா ?

சாணக்கியன் – செல்வம் கிளீன் சிறிலங்கா விசாரணைக்குள் வருகிறார்களா ?

கடந்த ஆண்டு யூலை 25 அபிவிருத்திக்காக இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு கிடைத்த 400 மில்லியன் நிதியை அவர் திறம்பட செலவழியாமல் மோசடி செய்ததாக குற்றம் சாட்டுகிறார் ஈழ மக்கள் ஜனநாயக முன்னணி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்ரனிசில் ராஜ்குமார்.

அதேசமயம் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனும் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வந்துள்ளது.

அநுரவின் கிளீன் சிறிலங்கா திட்டத்தின் மூலம் சாணக்கியனின் ஊழலை விசாரிக்கும் படி நேற்றைய செய்தியாளர் மாநாட்டில் அறை கூவல் விடுத்தார். சாணக்கியனின் அநுசரணையில், கல்லாத்தில் ஒரு கூட்டுறவுச் சங்க கட்டடம் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு 50 இலட்சம் ரூபாய்களே செலவிடப்பட்டதாக தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது என கூறும் அன்ரனிசில். பூரணமாக கட்டி முடிக்கப்படாத கட்டத்திற்கு 50 இலட்சம் செலவானதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது என்கிறார். பூரணமாகாத கட்டத்தின் படங்களையும் செய்தியாளர் மாநாட்டில் காட்டினார் அன்ரனிசில். அவர் மேலும் தான் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பெற்றுக்கொண்ட ஆவணங்களின் அடிப்படையில் புள்ளிவிபரங்களை குறிப்பிட்டு மட்டக்களப்பு மாவட்டம் புறக்கணிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

மேலும் விநோதமான ஒரு கோரிக்கையை அனைத்து மத குருமார்களிடம் முன்வைத்தார். அதாவது மக்களை கசக்கி பிழிந்து பெறப்பட்ட வரிப்பணத்தையே நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பன்முகப்படுத்தப்பட்ட நிதி மூலம் மத ஸ்தாபனங்களுக்கு ஒதுக்குகிறார்கள். எனவே அந்த கொடைகளை பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தந்தார் என ஒலிபெருக்கியில் பிரச்சாரம் செய்வது ஏனைய கட்சி உறுப்பினர்கள் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார். ஏனவே சாணக்கியனுக்கு இலவச விளம்பரம் செய்ய வேண்டாம் என மறைமுகமாக கேட்டுக் கொண்டார்.

 

மக்களோடு மக்களாக உலவும் என்.பி.பி பா உ க்கள், அமைச்சர்கள் !

மக்களோடு மக்களாக உலவும் என்.பி.பி பா உ க்கள், அமைச்சர்கள் !

தொடருந்து சேவையில் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மக்களோடு மக்களாக தொடருந்தில் பயணித்துள்ளார்.

இதன்போது, தொடருந்தில் தன்னுடன் பயணித்த பயணிகளிடம் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க கலந்துரையாடிய காணொளி பலருடைய கவனத்தையும் ஈர்த்துவருகிறது.

அடிக்கடி இடம்பெறும் தொடருந்து தாமதங்கள், மின் விசிறிகள் பழுது, தொடருந்துகளில் ஏறுவதில் மாற்றுத் திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள், தண்டவாளங்கள் மற்றும் தொடருந்து நிலையங்களில் சுகாதார சீர்கேடு, பாதுகாப்பற்ற பாழடைந்த தொடருந்தை தொடர்ந்து பயன்படுத்தல் போன்ற பிரச்சினைகளை பொதுமக்களிடம் இருந்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க கேட்டறிந்துள்ளார்.

இதே போன்று யாழ் பா உ க இளங்குமரன் யாழ் பஸ்தரிப்பு நிலையத்திற்குச் சென்று மக்களின் குறைகளைக் கேட்டறிந்து கொண்டார்.

முன்னதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மழைவெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நேரடியான கள ஆய்வு மூலம் ஆராய்ந்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தது மீனவர்கள் பலரையும் மகிழ்ச்சிப்படுத்தியிருந்தது.