Multiple Page/Post

வெண்மூட்டுப் பூச்சி நோயை ஒழிக்க அமெரிக்காவிலிருந்து ஒட்டுண்ணி

நாடு பூராவும் பப்பாசி, இறப்பர் அடங்கலான பெருமளவு தாவரங்களில் பரவி மரங்களை அழித்துவரும் வெண் மூட்டுப் பூச்சி நோயை ஒழிப்பதற்கு அமெரிக்காவின் விவசாயத் திணைக்களத்திலிருந்து ஒட்டுண்ணி வகையொன்றை தருவிக்க விவசாயத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இந்த ஒட்டுண்ணி நாளை இலங்கைக்கு எடுத்து வரப்படவுள்ளதோடு நாளை மறுதினம் முதல் இந்த ஒட்டுண்ணி மூலம் வெண்மூட்டுப் பூச்சியை ஒழிக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக தாவரபரிசோதனை மற்றும் அபிவிருத்தி நிறுவனப் பணிப்பாளர் ஜினதாச த சொய்சா கூறினார்.

இது தொடர்டபாக விளக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (13) நடைபெற்றது. இந்த மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது :-

இதற்கு முன்னரும் இலங்கையில் இவ்வாறான வெண்மூட்டுப் பூச்சிகள் பரவிய போதும் அவை கட்டுப்படுத்தப்பட்டன. ஆனால் கடந்த 2008 மார்ச் மாதம் முதல் நாட்டின் பல்வேறு பகுதியிலும் பரவி வரும் வெண்மூட்டுப் பூச்சி வேகமாகப் பரவக் கூடியது.  இதனை இரசாயனப் பொருட்கள் மூலம் ஒழிப்பது கடினம். இந்தியா, தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளிலும் இந்த நோய் பரவியுள்ளது.

இலங்கையில் 28 வகையான தாவரங்களில் இந்த நோய் பரவியுள்ளது. நுவரெலியா மாவட்டம் தவிர சகல பகுதிகளிலும் இந்த நோய் பரவியுள்ளது. வடக்கு கிழக்கு நிலமை குறித்து தகவல் கிடைக்கவில்லை. பப்பாசி மரத்திலேயே இந்த நோய் கூடுதலாக பரவுகிறது. தற்பொழுது இறப்பர் மரங்களிலும் பரவத் தொடங்கியுள்ளது.

இந்த நோயை தடுப்பது குறித்து விவசாய அமைச்சின் கீழுள்ள பல்வேறு பிரிவுகள் ஆய்வுகளையும் முயற்சிகளையும் மேற்கொண்டன. மெக்சிகோவில் இருந்தே இந்த நோய் இலங்கைக்கு பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த வெண்மூட்டுப் பூச்சியை ஒழிப்பதற்கு அமெரிக்கா போன்ற நாடுகள் ஒட்டுண்ணி வகையொன்றை பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளன. அவ்வகையான ஓட்டுண்ணிகளை இலங்கைக்கு இலவசமாக வழங்க அமெரிக்க விவசாயத் திணைக்களம் முன்வந்துள்ளது.

இலங்கைக்கு எடுத்துவரப்படும் இந்த ஒட்டுண்ணி 16ஆம் திகதி வைபவ ரீதியாக பொலன்னறுவையில் வைத்து விடுவிக்கப்படும். அடுத்து மேலும் 10 பிரதேசங்களில் இந்த ஒட்டுண்ணிகள், வெண்மூட்டுப் பூச்சியை ஒழிக்கப் பயன்படுத்தப்படும். இவ்வாறான ஒட்டுண்ணிகளை இலங்கையில் உற்பத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஒட்டுண்ணிகள் மூலம் 6 மாத காலத்தில் வெண்மூட்டுப் பூச்சிகள் அழிந்துவிடும். வெண்மூட்டுப் பூச்சி நோய் பரவிய மரங்களை அழித்துவிட வேண்டும். இன்றேல் அந்த மரங்களில் இருந்து ஏனைய மரங்களுக்கும் இந்த நோய் தொற்றும் என்றார்.

25வது முதலமைச்சர்கள் மாநாடு

ibatticaloa-sri-lanka-01.jpgஇலங்கையில் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டதன் பின்னர் இடம்பெறும் 25வது முதலமைச்சர்கள் மாநாடு நாளையும், நாளை மறுநாளும் மட்டக்களப்பு மாநகரில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படவுள்ளதையிட்டு மட்டக்களப்பு மாநகரமானது விழாக்கோலம் பூண்டிருக்கின்றது. மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ள இம் மாநாட்டினை ஒட்டி மட்டக்களப்பு நகர் அதி உயர் பாதுகாப்புப் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்படவுள்ளது. 3.000 பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்

நலன்புரி நிலையங்களுக்கு ‘யூனிசெப்’ 1000 மலசலகூடங்கள் அன்பளிப்பு

unicef.jpgஅரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குத் தப்பி வந்து வவுனியாவில் உள்ள நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோருக்கு 1000 மலசலகூடங்களை அமைத்துக் கொடுக்க  ‘யுனிசெப்’ நிறுவனம் முன்வந்துள்ளதாக மீள்குடியேற்ற மற்றும் அணர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அமைச்சின் செயலாளர் யு.எல்.எம். ஹால்தீன் தெரிவிக்கையில், வவுனியாவிலுள்ள இடம்பெயர்ந்தோருக்கு மலசலகூட வசதிகளைச் செய்துகொடுப்பது தொடர்பான பேச்சுவார்த்தையொன்று , அமைச்சர் றிஷாத் பதியுதீன் தலைமையில் இடம்பெற்றது. மீள்குடியேற்ற அமைச்சில் இடம்பெற்ற இப்பேச்சுவார்த்தையில் யுனிசெப் நிறுவனத்தின் உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

வவுனியாவில் உள்ள நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்தோருக்கு அரசாங்கம் சகல வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. அவர்களது தேவைகள் இனங்காணப்பட்டு நாளாந்தம் அவை நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த அடிப்படையில் யுனிசெப் நிறுவனத்தினால் வழங்கப்படவுள்ள 1000 மலசலகூடங்கள் முதற்கட்டமாக தற்போது இயங்கி வரும் நலன்புரி நிலையங்களிலேயே அமைக்கப்படும். இவ்வாறு அமைக்கப்பட்டு எஞ்சுகின்றவை புதிதாக அமைக்கப்படவுள்ள நிவாரணக் கிராமங்களுக்கு வழங்கப்படும் எனக் கூறினார்.

அமைச்சர் நிமல் ஜெனீவா பயணம்

nimal-siriiii.jpgஉலக சுகாதார ஸ்தாபனத்தின் 62வது வருடாந்த மாநாட்டில் பங்கு பற்றுவதற்காக சுகாதாரப் பராமரிப்பு போஷாக்குத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று (13ம் திகதி) ஜெனீவா பயணமானார். இதேவேளை சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை பதிலமைச்சராக சுகாதார மேம்பாட்டு அமைச்சர் ஜயரத்ன ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

62வது உலக சுகாதார மாநாடு எதிர்வரும் 18ம் திகதி முதல் 27ம் திகதிவரையும், உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிறைவேற்று சபைக் கூட்டம் 28ம் திகதி முதல் 30ம் திகதி வரையும் ஜெனீவாவில் நடைபெறவிருக்கின்றது. இம்மாநாட்டில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா விசேட உரையாற்றவுள்ளார்.

சப்ரகமுவ ஆளுநர் மொஹான் எல்லாவெலயின் இறுதிக் கிரியைகள் 16ஆம் திகதி

ellawala.jpgகாலஞ் சென்ற சப்ரகமுவ மாகாண ஆளுநர் மொஹான் சாலிய எல்லாவெலயின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 16ஆம் திகதி பலாங்கொடை நகரில் நடைபெறவுள்ளதாக ஆளுநரின் உதவிச் செயலாளர் விஜேவர்தன தெரிவித்தார்.61 வயதான மொஹான் சாலிய எல்லாவெல சுகயீனமுற்ற நிலையில் கொழும்பில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் அனுமதிக்கப்பட்டு, நேற்று முன்தினம்  பகல் காலமானார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான  இவர் கடந்த 2008ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி சப்ரகமுவ மாகாண ஆளுநராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார். இரு பிள்ளைகளின் தந்தையான மொஹான் சாலிய எல்லாவெல 1991ஆம் ஆண்டு முதல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பலாங்கொடை அமைப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.

வாகன விபத்தில் ரூபவாஹினி தொ.நு. ஊழியர் இருவர் பலி

வாகன விபத்து ஒன்றில் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர். பஸ்யால – மீரிகம வீதியிலுள்ள ஹங்வான எனும் இடத்தில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த இரு உத்தியோகத்தர்களே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். கொழும்பிலிருந்து சென்றுகொண்டிருந்த இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனவான் மற்றொருவானுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று அதிகாலை இடம்பெற்ற இந்த வாகன விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக வத்துபிட்டிவெல அரசாங்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

ரூபவாஹினி தொழில்நுட்ப பிரிவு உத்தியோகத்தர்களான ஹங்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த எம்.எம். குணவர்தன, ஹோமாகமையைச் சேர்ந்த டி.ஆர்.எம். ஹிரிபிட்டிய ஆகியோரே உயிரிழந்தவர்கள் ஆவர். இந்த விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இருவரது மரணச் சடங்குகளுக்கான செலவை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் ஏற்றுள்ளது.

உள்ளூராட்சி சபைகள் திருத்தச் சட்டமூலம் வாபஸ் பெறப்பட்டாலும் வேறு வடிவத்தில் அது மீண்டும் கொண்டுவரப்படலாம்

batticaloa-sri-lanka.jpgஉள்ளூராட்சி சபைகள் திருத்த சட்டமூலம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும் அது தொடர்பில் நாம் தொடர்ந்தும் விழிப்புடன் இருக்க வேண்டும். ஏனெனில், அது வேறொரு உருவில் மீண்டும் கொண்டு வரப்படலாமென எச்சரித்துள்ள இ.தொ.கா. சிரேஷ்ட தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான ஆர். யோகராஜன், இந்த சட்டமூலத்தை கடுமையாக எதிர்த்ததன் மூலம் சிறுபான்மை மக்களின் உரிமைகளை கிழக்கு மாகாண முதலமைச்சர் பாதுகாத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

உள்ளூர் அதிகார சபைகள் திருத்த சட்டமூலத்தின் மூலம் சிறுபான்மை இனங்களுக்கும் சிறிய கட்சிகளுக்கும் ஏற்பட்டிருக்கும் ஆபத்தே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் பிரதிநிதிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் விளக்கும் முகமாக மு.கா. தலைமையகமான தாருஸ்ஸலாமில் அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற செயலமர்வில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த யோகராஜன் மேலும் கூறியதாவது;

“கிழக்கு மாகாண சபை, உள்ளூர் அதிகார சபைகள் திருத்த சட்டமூலத்தை எதிர்த்து இன்று முறியடித்திருக்கிறது. இம் மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐ.தே.க., ஜே.வி.பி. கட்சிகளுக்கு அரசாங்கத்தை விட 2 ஆசனங்கள் குறைவாக 17 ஆசனங்கள் இருக்கின்ற நிலையில் அரச தரப்பில் 2 பேர் இச்சட்டமூலத்தை எதிர்த்தால் அல்லது வாக்களிக்காமல் தவிர்த்துக்கொண்டால் சட்டமூலம் நிராகரிக்கப்பட்டதாகிவிடும். தானிருந்து வந்த அமைப்பைக் காட்டிக் கொடுத்து வந்தவர் என்று என்னால் விமர்சிக்கப்பட்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் இதனை முழுமையாக எதிர்த்ததினால் தான் இது சாத்தியமாகியுள்ளது. அந்த வகையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் தென்னிலங்கையில் வாழும் எல்லாச் சிறுபான்மை மக்களையும் காப்பாற்றி இருக்கிறார். அதற்கு அவரை நான் பாராட்டாதிருக்க முடியாது.

கிழக்கு மாகாணஅபிவிருத்திக்காக ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிகமான நிதி

abdul-majeed.jpgஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கிழக்கு மாகாண அபிவிருத்தியில் விசேட கவனம் செலுத்தியுள்ளார். இம்மாகாண அபிவிருத்திக்காக இதுவரையில் ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு அமைச்சர் நஜீப் ஏ மஜீத் தெரிவித்தார். சின்னக் கிண்ணியா கோப் சிற்றி திறப்பு விழா கடந்த சனிக்கிழமை கிண்ணியா பலநோக்குக் கூட்டுறவுச் சங்கப் பணிப்பாளர் சபைத் தலைவர் எஸ்.ஏ. மஜீத் தலைமையில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்டக் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் ஜீ. ராஜினி மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எம். நஸீர் ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்டனர்

காங். எதிராக பிரசாரம் செய்த சீமான் விரட்டியடிப்பு

india-elc.jpg
காரைக்குடியில் ஒரு வாக்குச் சாவடிக்கு வந்து இலங்கைத் தமிழர்களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டதாகக் கூறி, அதிமுகவுக்கு வாக்களிக்குமாறு பிரசாரம் செய்த இயக்குனர் சீமானை திமுகவினரும் காங்கிரஸாரும் விரட்டியடித்தனர்.

வாக்குச் சாவடிக்கு அருகே வந்த சீமான், காங்கிரஸ் வேட்பாளர் ப.சிதம்பரத்துக்கு வாக்களிக்காதீர்கள், அதிமுகவுக்கு வாக்களியுங்கள் என்று அங்கிருந்த மக்களிடம் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த சிதம்பரத்தின் ஆதரவாளர்களும் திமுகவினரும் அவரைச் சுற்றி வளைத்தனர். பின்னர் அவரை அங்கிருந்து விரட்டியடித்தனர். அடிதடி நடக்கும் சூழல் ஏற்பட்டதால் பொலிஸார் அவரை ஒரு ஜீப்பில் அழைத்துச் சென்று தூர இடத்தில் இறக்கி விட்டுவிட்டு வந்தனர். இதையடுத்து தனது சொந்த ஊரான அரணையூர் சென்று வாக்களித்தார் சீமான்.

அமீருக்கு வாக்கு இல்லை…

அதே போன்று இலங்கைத் தமிழர் விஷயத்தில் தீவிரம் காட்டி வரும் இன்னொரு இயக்குனரான அமீரின் குடும்பத்தினர் மதுரை கே.கே. நகரில் ஒரு அபார்ட்மென்டில் வசிக்கின்றனர். ஆனால் இம்முறை வாக்காளர் பட்டியலில் அமீரின் பெயர் இல்லை. இதனால் வாக்களிக்க வந்த அவர் வாக்களிக்க முடியாமல் திரும்பினார்.

தற்போது கிடைத்த செய்தி: கிளேமோர் மீட்பு

claymore.jpgகொழும்பு, கிராண்டன்பாஸ் பொலிஸ் பிரதேசத்துக்குட்பட்ட தொட்டலங்க லூக்கஸ் வீதியிலுள்ள கராஜ் ஒன்றிலிருந்து மிகச் சக்தி வாய்ந்த 18 கிளேமோர்களைப் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.