ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கிழக்கு மாகாண அபிவிருத்தியில் விசேட கவனம் செலுத்தியுள்ளார். இம்மாகாண அபிவிருத்திக்காக இதுவரையில் ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு அமைச்சர் நஜீப் ஏ மஜீத் தெரிவித்தார். சின்னக் கிண்ணியா கோப் சிற்றி திறப்பு விழா கடந்த சனிக்கிழமை கிண்ணியா பலநோக்குக் கூட்டுறவுச் சங்கப் பணிப்பாளர் சபைத் தலைவர் எஸ்.ஏ. மஜீத் தலைமையில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்டக் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் ஜீ. ராஜினி மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எம். நஸீர் ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்டனர்