ஈழத்து பெரியாரிஸ்ட் அருண் சித்தார்த் பெரியாருக்கு அம்பேக்காருக்கு சிலை எழுப்புகின்றார். ஏன்?
ஈழத்து பெரியாரிஸ்ட், கலகக்காரன், ‘எனக்கு ஒரு கனவு இருக்கின்றது’ எனச்சொல்லும் அருண் சித்தார்த்துடன் ஒரு நேர்காணல்
ஈழத்து பெரியாரிஸ்ட் அருண் சித்தார்த் பெரியாருக்கு அம்பேக்காருக்கு சிலை எழுப்புகின்றார். ஏன்?
ஈழத்து பெரியாரிஸ்ட், கலகக்காரன், ‘எனக்கு ஒரு கனவு இருக்கின்றது’ எனச்சொல்லும் அருண் சித்தார்த்துடன் ஒரு நேர்காணல்
யாழ். நூலகம் டிஜிட்டல்மயப்படுத்தப்பட வேண்டும் – முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா !
யாழ். நூலகம் டிஜிட்டல்மயப்படுத்தப்பட வேண்டும் எனவும், அரச வேலைவாய்ப்புக்கள் வெற்றிடங்களின் விகிதாசாரத்துக்கு ஏற்ப வடக்கு, கிழக்குக்கும் கிடைப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று ஈ.பி.டி.பி கோரியுள்ளது.
யாழ். ஊடக மையத்தில் நடைபெற்ற ஊகவியலாளர் சந்திப்பில் அக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
குறிப்பாக வடக்கு, கிழக்கு பிரதேசங்களுக்கு முன்மொழியப்பட்டுள்ள நிதிகள் சீரான முறையில் ஒதுக்கப்பட வேண்டும். வடக்கு மாகாணத்தின் வீதிகளை புனரமைப்பதற்கு 5000 மில்லியன் ரூபா முன்மொழியப்பட்டுள்ளது.
வடக்கை பொறுத்தவரையில் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்மான வீதிககளை முழுமையாக திருத்துவதற்கு சுமார் 10000 மில்லியன் ரூபா தேவை என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. அவற்றுள் வட்டுவாகல் பாலம் மற்றும் குறிகட்டுவான் இறங்குதுறை போன்றவை உள்ளடக்கப்படவில்லை. ஆனால் தற்போது வட்டுவாகல் பாலம் மற்றும் இறங்குதுறை உள்ளடக்கி 5000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
எனவே முன்னுரிமை அடிப்படையில் வீதிகள் தெரிவு செய்யப்பட்டு புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும். பூநகரி கௌதாரிமுனை வீதி, கிராஞ்சி, வலைப்பாடு போன்ற பகுதிகளுக்கான வீதி போன்ற பிரதான வீதிகளும் பரிசீலிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.
தலதாமாளிகைக்கு குண்டு வைத்தது ஜே.வி.பி என்கிறது எதிர்க்கட்சி’, ‘இல்லை இல்லை புலிகளே குண்டு வைத்தனர்’ என மன்னிப்பும் கோரிய பா.உ அர்ச்சுனா !
யாழ்ப்பாண நூலகத்தை எரிப்பதற்கு அரசியற் கட்சி ஒன்று உடந்தையாக இருந்தது என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அண்மையில் கருத்து வெளியிட்டமை கவலையளிக்கின்றது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் கபீர் ஹாசிம் மேலும் தெரிவிக்கையில், ”ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று முன்தினம் அவரது வரவு செலவுத் திட்ட உரையில் யாழ்ப்பாண நூலகம் குறித்து கருத்து தெரிவித்தார். யாழ்ப்பாண நூலகத்தை எரிப்பதற்கு அரசியற் கட்சி ஒன்று உடந்தையாக இருந்தது என்று எமது தாய்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இது விடயம் குறித்து நாங்கள் கவலைப்படுகின்றோம்.
எமது பெயர் பூசப்பட்டமை குறித்து ரணில் விக்ரமசிங்க பல வருடங்களுக்கு முன்னர் இந்த நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் என்ற வகையில் மன்னிப்பு கோரியிருந்தார். நாங்கள் கீழ்ப்படிவான முறையில் அந்த விடயத்தை மேற்கொண்டோம். ஆனால் அது குறித்து கதைக்கும் போது ஜனாதிபதிக்கு இந்த விடயம் நினைவுக்கு வரவில்லையா.
அன்று ஜேவிபியினர் பௌத்தர்களின் தலதா மாளிகைக்கு குண்டுத் தாக்குதல் மேற்கொண்ட போது அதற்கு மன்னிப்பு கோரியிருந்தார்களா அவர்கள் ஏன் கவலைப்படுவதில்லை.
யாழ்ப்பாண நூலகம் குறித்து கதைப்பது சரி நீங்கள் செய்த பிழை குறித்து உங்களுக்குள் விமர்சனங்களை மேற்கொண்டுள்ளீர்களா.” என தெரிவித்தார்.
இதனிடையே குறுக்கிட்ட யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தலதாமாளிகையை புலிகள் அழித்திருந்தால் அதற்காக வடக்கு மக்களின் பிரதிநிதியாக நான் மன்னிப்பு கோருகிறேன் என தெரிவித்திருந்தார். அப்போது எதிர்க்கட்சி பா.உ காபீர் காசிம் நீங்கள் ஜே.வி.பிக்காக மன்னிப்பு கோருகிறீர்களா..? அல்லது தமிழ் மக்களுக்காகவா என கேட்டபோது நான் புலிகள் தலதாமாளிகையை தாக்கியதற்காக மன்னிப்பு கோருகிறேன் என தெரிவித்திருந்தார்.
அரச மருதுவமனையில் வரிசையில் காத்துநின்று மருந்து பெற்ற அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் – குவியும் பாராட்டுக்கள் !
கொழும்பு தேசிய கண் சிகிச்சை வைத்தியசாலைக்கு சென்றிருந்து அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், மக்களோடு மக்களாக நின்று பொறுமையாக வரிசையில் சென்று மருத்துவரை சந்தித்தது பற்றி பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் கண் சிகிச்சைக்காக, கொழும்பு தேசிய கண் வைத்தியசாலைக்கு நேற்று புதன்கிழமை சென்றிருந்தார்.
இதன்போது மக்கள் கண் சிகிச்சை பெற நின்ற நிலையில் அவரும் நெடுநேரம் வரிசையில் காத்திருந்து தனக்குரிய இலக்கம் வந்த பின்னர் வைத்தியரை சந்தித்தார்.
அமைச்சராக இருந்த போதிலும் தனக்கான அதிகாரத்தை பயன்படுத்தாது, ஏனைய நோயாளிகளுடன் வரிசையில் நின்று அமைச்சர் சிகிச்சை பெற்றுள்ளதை பலரும் பாராட்டி வருகின்றனர்
எளிமையாக மக்களுடன் மக்களாக என்.பி.பி பா.உக்கள் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் உலாவருவது இலங்கையின் அரசியல் கலாச்சாரத்திற்கு முற்றிலும் மாற்றமானது. முன்னைய அரசாங்கங்களில் பதவி வகித்தோர் பெரும்பாலும் தனியார் மருத்துவமனைகளையே தமக்கான மருத்துவ தேவைகளுக்காக நாடி வந்த நிலையில் என்.பி.பியினர் இலவசமருத்துவத்தின் தரத்தை பேணும் வகையிலும் அதனை மக்களிடையே ஊக்குவிக்கவும் நேரடியாகவே அரச மருத்துவமனைகளை நாடுவது மாற்றமான அரசியல் கலாச்சாரம் உருவாவதை காட்டுகிறது என பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
அண்மையில் கடுமையான நோய்வாய்ப்பட்டிருந்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தாயார் அனுராதபுரம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்றமையும் கவனிக்கத்தக்கது.
ஒன்லைனில் அதிகமாக இலங்கை சிறுவர்களின் ஆபாச வீடியோக்கள் !
நாட்டில் குழந்தைகளின் ஆபாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஒன்லைனில் பதிவேற்றப்பட்டுள்ளதாகக் கூறி அமெரிக்க அரசாங்க நிறுவனம் ஒன்று முறைப்பாடுகளை தாக்கல் செய்துள்ளதாக குழந்தைகள் மற்றும் மகளிர் பணியகம் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஒரு காலத்தில் இலங்கை சிறுவர் பாலியல் உல்லாசப் பயணத்துறையின் தலைநகராக விளங்கியது. மேலும் ஒன்லைனில் ‘செக்ஸ்’ என்ற அடிப்படையில் தேடல்களை மேற்கொள்வதிலும் இலங்கை முன்நின்றுள்ளது. உல்லாசப் பயணத்துறை வளர்ந்துவரும் இன்றைய சூழலில் இதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது.
குழந்தைகளுக்காகப் பணியாற்றும் அமெரிக்க அரசு நிறுவனமான NCMEC, இந்த முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளதாக குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தடுப்புப் பணியகம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இந்த தொடர்பாக, குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்புப் பணியகத்தின் பெண் தலைமை ஆய்வாளர் சமந்தா நேற்று கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் முறைப்பாடு அளித்தார். இவை தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து அறிக்கை அளிக்குமாறு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம், சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்புப் பணியகத்திற்கு உத்தரவிட்டது.
தற்போதைய வரவு செலவுத் திட்டத்திலும் சிறுவர் பாதுகாப்பு விடயங்களில் அரசு கூடுதல் கவனம் செலுத்தியுள்ளதோடு வறுமைக் கோட்டில் உள்ளவர்களின் கல்வி வளர்ச்சியிலும் கவனமெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
“தெற்கில் துப்பாக்கிச்சூடு – யாழில் புலம்பெயர்ந்தவர்களின் பணத்திமிரால் வாள்வெட்டு ! வன்முறைக்கு பஞ்சமில்லை !
யாழ். வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் நேற்று மாலை மூவர் மீது மோசமான தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து வருகை தந்த நபர் ஒருவர் குடும்ப தகராறு காரணமாக தனது தந்தை மீதும், சகோதரன் மீதும், சகோதரனின் மகன் மீதும் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
வவுனியா பகுதியில் இருந்து வாகனத்தில் ஆட்களை அழைத்து வந்து வீட்டிற்குள் புகுந்து கம்பி, கற்களால் தாக்குதல் நடாத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாகனத்தில் வருகை தந்த தாக்குதல் கும்பல் வாகனத்திற்குள் வாள்களை மறைத்து வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. அடி காயங்களுக்குள்ளான மூவரும் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக மருதங்கேணி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்காவின் AI தொழில்நுட்பத்தை ஆட்டங்காண செய்யும் சீனாவின் டீப்சீக் – தென்கொரியாவிலும் தடை !
சீனாவை சேர்ந்த செயற்கை நுண்ணறிவு செயலியான டீப்சீக்-ஐ பதிவிறக்கம் செய்ய தென் கொரியாவில் தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டீப்சீக் செயலி பயனர் தரவுகளை கையாள்வது தொடர்பாக மதிப்பாய்வு செய்யும் வரை இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய முடியாது என்று தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் AI தொழில்நுட்பத்துக்கு போட்டியாக களமிறங்கியுள்ள டீப்சீக் பாவனையாளர்கள் மத்தியில் அதிகமாக தரவிறக்கம் பட்டு வருகிறது. முக்கியமாக, செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான என்விடியாவின் (NDvidia ) பங்குகள் 17% சரிவை சந்தித்தன, இதனால் சுமார் $600 பில்லியன் சந்தை மதிப்பு இழப்பு ஏற்பட்டது. மேலும், பிராட்காம் (Broadcom) போன்ற AI தொடர்புடைய நிறுவனங்களின் பங்குகளும் 17% வரை குறைந்தன.
சமீபத்திய தகவல்களின் படி, டீப்சீக்கின் வருகை, அமெரிக்க பங்குச் சந்தையில் மொத்தத்தில் $1 டிரில்லியன் அளவுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை அமெரிக்காவின் சில மாநிலங்களில் டீப்சீக் செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
சீனாவின் தொழில்நுட்ப பொருளாதார வளர்ச்சி அமெரிக்காவுக்கு மிகுந்த எரிச்சலையும் பொறாமையையும் ஏற்படுத்தி வருகின்றது. மேலும் உலக வங்கி வழங்கும் கடன்களிலும் பார்க்க அதிகமாக சீனா கடன்களை வழங்கி உலகின் பல பாகங்களிலும் தனது பொருளாதார மற்றும் நட்புறவை வளர்த்து வருகின்றது. இந்தியாவுடனான சீனாவின் உறவும் நெருக்கமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம் இந்தியப் பிரதமர் மோடியை அழைத்து அவமானப்படுத்தியது பல இந்தியர்களுக்கும் அமெரிக்காவின் போக்கில் அதிருப்தியை உண்டு பண்ணியுள்ளது. அத்தோடு விலங்குகள் இடப்பட்டு கைது செய்யப்பட்ட சட்டவிரோத குடியேற்றவாசிகளில் இன்னுமொரு தொகுதியினர் இந்தியாவில் இறக்கி விடப்பட்டுள்ளனர்.
எங்களை மக்கள் பாதுகாக்கிறார்கள் – பிரதமர் ஹரிணி அமரசூரிய !
உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அரலகங்வில மகாவலி திரையரங்கில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய. இந்த அரசாங்கம் மக்களால் தெரிவு செய்யப்பட்டு, மக்களால் பாதுகாக்கப்பட்டு, நாட்டில் மாற்றத்தை எதிர்பார்த்து மக்கள் கடந்த தேர்தலில் இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்தனர். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு நமது அரசுக்கு உள்ளது. அதற்காக அனைத்து துறைகளிலும் ஆய்வு செய்யப்பட்டு தரவுகளின் அடிப்படையில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இந்த நாட்டின் குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்க அரசு சிறப்பான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
முந்தைய அரசுகளின் கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் கொள்கைகளில் ஆசிரியர்களுக்கான சரியான திட்டம் இல்லை. ஆசிரியர்களின் மனப்பான்மையை வளர்ப்பதிலும், ஆசிரியர் பயிற்சி அளித்து, ஆசிரியர்களின் தொழில் திறனை மேம்படுத்துவதிலும், நவீன கல்வி அறிவை அவர்களுக்கு வழங்குவதில் நமது அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. என்றார்
கதிர்காம பேரழகி மன்னம்பேரியை எப்படி பார்க்கிறீர்களோ அது போல இசைப்பிரியாவுக்கும் நீதி வேண்டும் – பாராளுமன்றில் சிறிதரன் !
வரவு செலவுத் திட்டத்தில் 11 வீதமானதை இராணுவத்திற்காக ஒதுக்கியிருப்பது இந்த நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சிக்கு உகந்ததல்ல எனவும் இதனை நாங்கள் எதிர்ப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
அங்கு பா.உ சிறிதரன் மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்டிலே யுத்தம் இல்லை, சண்டை இல்லை, ஆயுதங்களுடைய சரசரப்புக்கள் இல்லை ஆனால் 442 பில்லியன் ரூபாக்கள் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இம்முறை சுகாதாரத்திற்காக, கல்விக்காக ஒதுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இருந்தாலும் கூட பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ளமை கவலையளிக்கின்றது.
கதிர்காமத்து அழகி மனம்பேரியின் மரணம் பாதிக்கப்பட்ட சிங்கள மக்களுக்கு மட்டுமல்ல அந்தக் கால கட்டத்திலே தமிழ் மக்களையும் நிறைந்த அளவிலே பாதித்திருந்தது. மனம்பேரியினுடைய மரணத்தை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்களோ அதேபோன்று இசைப்பிரியாவின் மரணம் எங்களை எவ்வளவு பாதித்திருக்கும் என்பதையும் தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள்.
சம உரிமை சமமாக வழங்குகின்றோம். நாங்கள் சமமாக நடத்துகின்றோம் என்ற வார்த்தைகளுக்கூடாக தமிழர்களின் கோரிக்கைகளை மழுங்கடிக்க செய்யாதீர்கள் ” என தெரிவித்துள்ளார்.