அமெரிக்காவின் AI தொழில்நுட்பத்தை ஆட்டங்காண செய்யும் சீனாவின் டீப்சீக் – தென்கொரியாவிலும் தடை !

அமெரிக்காவின் AI தொழில்நுட்பத்தை ஆட்டங்காண செய்யும் சீனாவின் டீப்சீக் – தென்கொரியாவிலும் தடை !

சீனாவை சேர்ந்த செயற்கை நுண்ணறிவு செயலியான டீப்சீக்-ஐ பதிவிறக்கம் செய்ய தென் கொரியாவில் தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டீப்சீக் செயலி பயனர் தரவுகளை கையாள்வது தொடர்பாக மதிப்பாய்வு செய்யும் வரை இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய முடியாது என்று தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் AI தொழில்நுட்பத்துக்கு போட்டியாக களமிறங்கியுள்ள டீப்சீக் பாவனையாளர்கள் மத்தியில் அதிகமாக தரவிறக்கம் பட்டு வருகிறது. முக்கியமாக, செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான என்விடியாவின் (NDvidia ) பங்குகள் 17% சரிவை சந்தித்தன, இதனால் சுமார் $600 பில்லியன் சந்தை மதிப்பு இழப்பு ஏற்பட்டது. மேலும், பிராட்காம் (Broadcom) போன்ற AI தொடர்புடைய நிறுவனங்களின் பங்குகளும் 17% வரை குறைந்தன.

சமீபத்திய தகவல்களின் படி, டீப்சீக்கின் வருகை, அமெரிக்க பங்குச் சந்தையில் மொத்தத்தில் $1 டிரில்லியன் அளவுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை அமெரிக்காவின் சில மாநிலங்களில் டீப்சீக் செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சீனாவின் தொழில்நுட்ப பொருளாதார வளர்ச்சி அமெரிக்காவுக்கு மிகுந்த எரிச்சலையும் பொறாமையையும் ஏற்படுத்தி வருகின்றது. மேலும் உலக வங்கி வழங்கும் கடன்களிலும் பார்க்க அதிகமாக சீனா கடன்களை வழங்கி உலகின் பல பாகங்களிலும் தனது பொருளாதார மற்றும் நட்புறவை வளர்த்து வருகின்றது. இந்தியாவுடனான சீனாவின் உறவும் நெருக்கமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம் இந்தியப் பிரதமர் மோடியை அழைத்து அவமானப்படுத்தியது பல இந்தியர்களுக்கும் அமெரிக்காவின் போக்கில் அதிருப்தியை உண்டு பண்ணியுள்ளது. அத்தோடு விலங்குகள் இடப்பட்டு கைது செய்யப்பட்ட சட்டவிரோத குடியேற்றவாசிகளில் இன்னுமொரு தொகுதியினர் இந்தியாவில் இறக்கி விடப்பட்டுள்ளனர்.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *