February

February

தேசியத் தலைவர் யார் ? சரியான போட்டி: சிறிதரன், கஜேந்திரகுமார், சீமான் ?

தேசியத் தலைவர் யார் ? சரியான போட்டி: சிறிதரன், கஜேந்திரகுமார், சீமான் ?

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மறைவுக்குப் பின் அந்த இடத்தில் தங்களை முன்னிலைப்படுத்த பலரும் முயற்சி எடுத்தனர். அதில் முன்னிலைக்கு வந்தவர்களில் பா உ சிறிதரனும், பா உ கஜேந்திரகுமாரும் முக்கியமானவர்கள். இவர்கள் மாவீரர் தினங்களில் தங்களை அடையாளம் காட்டியும், தாங்களே ‘தேசியத் தலைவர்’ரின் கொள்கைகளை முன்னெடுப்பதாகவும் நம்புகின்றனர். முன்னாள் விடுதலைப் போராளியும் வேர்கள் புலனாய்வுப் பிரிவின் பகுப்பாளருமான முல்லை மதியின் வார்த்தைகளில் சொன்னால் அதித கற்பனாவதிகள்.

தற்போது ஈழத் தமிழர்களைத் தாண்டி பின்தளத்தில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் “தேசியத் தலைவர்” போட்டியில் முன்னணியில் ஓடிக்கொண்டுள்ளார். அவருடைய அணிக்கு மதிவதனி பிரபாகரனின் சகோதரி அருணா முக்கிய தூணாக உள்ளார். தலைவரின் குடும்பத்தை தான் நேரில் சந்தித்ததாக சீமானுக்கான அன்று ஒரு புரட்டையும் அவர் வெளியிட்டு இருந்தார். சீமானுக்கு லண்டனில் நிதி வழங்குபவர்களில் முக்கியமானவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளராக நன்கு அறியப்பட்ட பிரித்தானிய அரசியல் செயற்பாட்டாளர் ஜனனி ஜனநாயகத்தின் தந்தை, நாடுகடந்த அரசாங்கத்தின் பிரதிநிதி சீவரத்தினத்தின் மகன் இவர்களை விடவும் பல குட்டிக் குட்டி சீமான் ஆதரவுக் கூறுகள் புலம்பெயர் ஈழத் தமிழர்கள் மத்தியில் உள்ளனர்.

இனவாதியும் சாதியமானுமான சீமானுடன் உடன்கட்டை ஏறுவதற்குத் தயாராக மான் சின்ன அரசியல்வாதி இராசையா உமாகரன் உள்ளார். அவர் சீமானை வெகுவிரையில் தேசியத் தலைவராகப் பிரகடனப்படுத்தினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

விசிலடிச்சான் குஞ்சுகளும் பிற்போக்குத் தமிழ் தேசியவாதிகளும் சமூகவலைத்தள லைக் பிரியர்களுமே சீமானின் அணியல் பெரும்பாலும் உள்ளனர். அவர்களுடாக சீமான் கணிசமான வருமானத்தை ஈட்டுவதுடன் ஈழத்தமிழர்களுக்கு எதிராக முற்போக்குதன்மையோடு சீர்திருத்தத்தைக் கொண்டு வந்த பெரியார் போன்றவர்களின் கருத்துக்களை சீமான் தமிழகத்திலிருந்து அப்புறப்படுத்தி சங்கிகளின் பிஜேபியை தமிழ்நாடுக்குக் கொண்டு வரப்படாதபாடு படுகின்றார்.

திராவிடம் தமிழகத்தில் ஆரியத்துவத் திணிப்புக்கு எதிராகவும் இந்தி மொழித் திணிப்புக்கு எதிராகவும் வீச்சுப்பெற்ற கருத்தியல் என்கிறார் அசோக் யோகன் கண்ணமுத்து. பெரியார் மீது விமர்சனங்கள் இருந்தாலும் பெரியாரின் சீர்திருத்தங்களில் காணப்பட்ட முற்போக்குப் பாத்திரம் முக்கியமானது என்கிறார் அவர். சீமான் போன்றவர்களின் சுயநல விமர்சனங்களையும் அசோக் யோகன் கண்ணமுத்து கடுமையாக விமர்சித்தார்.

கொம்யுனிஸ்ட் சண்முகதாசனின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவரும் முகநூலில் நன்கு அறியப்பட்டவருமான எஸ் பாலச்சந்திரன் தன்னுடைய இடதுசாரியச் சிந்தனைக்கு முரணாக சீமானுக்கு ஆதரவாக தனது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றார். அவருடைய பதிவை நீங்கள் இங்கு காணலாம்.

“தமிழீழ விடுதலைப் புலிகளை எதிர்ப்பவர்கள், புலனாய்வுத்துறைகள் பேச விரும்புவதை தன்னை விடுதலைப் புலிகளாகக் காட்டிக்கொள்ளும் சீமானே பேச ஆரம்பித்து விட்டார்” என்று சீமானின் சந்தர்ப்பவாத அரசியலைக் கடுமையாக விமர்சிக்கின்றார், ஜேர்மனியில் இருந்து இயங்கும் அரசியல் சமூகச் செயற்பாட்டாளர் சபேசன்.

லைக்காவுக்கு எதிராக ஒருவன் மீடியா ஊடகவியலாளர்கள் போராட்டம் ! ஊடகவியலாளர்களை நடுத்தெருவில் விட்ட லைக்கா !

லைக்காவுக்கு எதிராக ஒருவன் மீடியா ஊடகவியலாளர்கள் போராட்டம் ! ஊடகவியலாளர்களை நடுத்தெருவில் விட்ட லைக்கா !

 

லைக்காவின் மீடியாக் குழுமத்திற்கு எதிரான வழக்குகள் வழக்குகள் ஆரம்பிக்கப்படதையடுத்து லைக்கா மீடியா குழுமத்தை விற்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டது. ஆனால் லைக்காவின் தமிழ் மீடியாக் குழுமமான ஒருவனை வாங்குவதற்குத் தயாரான நிலையில் யாரும் இருக்கவில்லை. அதற்கான நன்மதிப்பையும் லைக்கா உருவாக்கவில்லை. இந்நிலையிலேயே லைக்கா ஊடகக் குழுமம் மூடுவிழாக் காண்கிறது என்ற செய்தியை இரு வாரங்களுக்கு முன் தேசம்நெற் செய்தி வெயிளியிட்டு இருந்தது. தற்போது லைக்காவின் தமிழ் ஊடகப் பிரிவை எவ்வித முன்னறிவித்தலும் இல்லாமல் சடுதியாக மூடுவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அதன் ஊடகவியலாளர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். அத்துடன் ஒருவன் அலுவலகத்திற்கு முன்னதாக போராட்டத்திலும் ஈடுபட்டு உள்ளனர்.

லைக்கா நிறுவனம் இயங்கிய நாடுகளிலெல்லாம் அவர்களுக்கு எதிரான வழக்குகளுக்குக் குறைவில்லை. வரி ஏய்ப்பிலும் லைக்காவுக்கு நிகர் லைக்காவே எனும் அளவிற்கு ஐரோப்பிய நாடுகளிலேயே நீதி மன்றங்கள் தீர்ப்பளித்து இருந்தன. பிரித்தானியா, பிரான்ஸ் நாடுகளில் லைக்காவுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்புக்களில் மொத்தம் 60 மில்லியன் பவுண்கள் வரியைச் செலுத்த வேண்டும் என லைக்கா பணிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவிலும் வரி நெருக்கடிகள் உருவாகியுள்ளது. இலங்கையிலும் சட்ட நெருக்கடிகள். அதனால் தற்போது லைக்கா கிரிஸ்நாட்டுக்கு தங்கள் அலுவலகத்தை நகர்த்த உள்ளதாகத் தெரியவருகின்றது.

ஒருவன் மீடியா குழுமத்தில் அவர்களுடைய டிஜிற்றல் பப்ளிகேஷனுக்கு என்ன நடக்கும் என்பது இதுவரை தெளிவாகத் தெரியவரவில்லை. அது தொடர்ந்தும் இயங்கும் என்றும் அது இன்றோடு நிறுத்தப்படும் என்றும் ஒன்றுக்கு ஒன்று முரணான செய்திகள் வெளிவந்துள்ளது.

ஒருவன் பத்திரிகைக்கு ஆரம்பத்தில் காலைக்கதிர் ஆசிரியர் வித்தியாதரனே நியமிக்கப்பட்டு இருந்தார். ஆனால் பாராளுமன்றத் தேர்தலில் சங்கு சின்னத்தில் நின்ற ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதவன் தொலைக்காட்சியின் இயக்குநர் குரபரனூடாக வேட்பாளருக்கு ஒரு கோடி நிதி வழங்கியதும் அந்த வேட்பாளர்களை ஆதரிக்கச் சொல்லி பணிப்புரைகள் வழங்கப்பட்டதால் வித்தியாதரன் தன்னுடைய பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு வெளியேறி விட்டார்.

அவரைத் தொடர்ந்து அமிர்தநாயகன் நிகஸ்ஷன் பிரத ஆசிரியராக பொறுப்பேற்றார். டிசம்பர் 3 அன்று நிக்ஸ்ஷன் தனது முகநூல் பதிவில் வருமாறு குறிப்பிட்டிருந்தார்: “நான் எதிர்பார்க்கவில்லை என் மீது கொண்ட அன்பும் எனது நிர்வாகத்தின் மீது அவர்கள் வைத்திருந்த மதிப்பும் இன்று வெளிப்பட்டுள்ளதை நான் உணர்ந்து மகிழ்ச்சி அடைந்தேன்.” தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடியதையொட்டியே இப்பதிவு வெளியிடப்பட்டது. அது நடந்து சரியாக இரு மாதங்களில் நிக்ஸனின் மீதான நம்பிக்கையால் தங்களுடைய நிரந்தர வேலைகளையும் விட்டுவிட்டு லைக்காவின் கொழுத்த சம்பளத்திற்காக வந்தவர்கள் அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதையாகி நிர்க்கதியாகி உள்ளனர்.

ஐபிசி பிரித்தானியக் கலையகத்திலும் ஊடகவியலாளர்களுக்கு இதே நிலையேற்பட்டது. கொழுத்த சம்பளத்தோடு பெரும் எண்ணிக்கையில் ஊடகவியலாளர்கள் தொழில்நுட்பவியலாளர்களை உள்வாங்கி விட்டு சடுதியாக அவர்கள் வேலை இழக்க வேண்டிய நிலை உருவாக்கப்பட்டது. ஊடக அனுபவமற்ற வியாபாரிகள் ஊடகங்களைப் பொறுப்பேற்கின்ற போது அவர்கள் தங்களுடைய நாய்களுக்கு வழங்கும் முக்கியத்துவத்தை ஊடகவியலாளர்களுக்கு வழங்குவதில்லை.

இது தொடர்பில் கருத்து வழங்கிய மனித உரிமைச் செயற்பாட்டாளர், மற்றவர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கின்ற ஊடகவியலாளர்கள் லைக்கா நிறுவனத்திற்கு எதிராக தொழில் நீதிமன்றில் முறைப்பாடு செய்து தங்களுக்கான நட்டஈட்டைப் பெற்றுக்கொள்ளப் போராட வேண்டும் எனத் தெரிவித்தார்.

2009ற்கு பின்னர் தமிழ்தேசியம் என்ற பெயரில் உலா வரும் போலி ஆசாமிகள் – முல்லை மதி காட்டம் !

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவராக செயற்பட்டுக்கொண்டு திலீபனுக்கு பேரணியும் செய்கிறார் கஜேந்திரகுமார் – தமிழ்தேசிய அரசியலை 2009இன் பின்னர் எவரும் உண்மையாக மேற்கொள்ளவில்லை – புலிகளை அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள் தமிழரசுக்கட்சியினர் – அர்ச்சுனாஇயக்கப்படுகிறார் – இலங்கை தமிழரசுக்கட்சியின் பின்னால் இலங்கை உளவுத்துறை ‘ –

 

புலிகளின் தலைவரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கிய வேர்கள் புலனாய்வுத்துறையின் புலனாய்வுப் பகுப்பாளருடன் ஒர் உரையாடல்

40 ஆயிரம் ஏக்கரில் தென்னைப் பயிர்ச்செய்கைக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு – சாவகச்சேரியில் அநுர தெரிவிப்பு

40 ஆயிரம் ஏக்கரில் தென்னைப் பயிர்ச்செய்கைக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு – சாவகச்சேரியில் அநுர தெரிவிப்பு

வட மாகாணத்தில் 40 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் தென்னைப் பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கு வரவு ,செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். சாவகச்சேரியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,
வட மாகாணம் சுற்றுலாத்துறையில் சிறந்து விளங்குகிறது.2025 ஆம் ஆண்டு இலங்கைக்கு அதிக சுற்றுலாப்பயணிகள் வருகை தரும் ஆண்டாக பதிவாகும்.சுற்றுலா பயணிகள் வட மாகாணத்துக்கு வருகை தர வேண்டும். அதற்கான திட்டத்தை நாம் தயாரிப்போம். மக்களின் பொருளாதாரம் வலுப்படுத்தப்பட வேண்டும். அதுவே எமது பிரதான இலக்காகும். வட மாகாணத்தில் உள்ள கிராமப்புற வீதிகளை புனரமைப்பதற்கான நிதியை ஒதுக்குவோம்.புதிய திட்டங்களை அமைப்பதற்கும் நாம் தயாராக உள்ளோம்.

இனி மக்களுக்கு இனவாதம் தேவையில்லை. எந்தவொரு இனவாதத்துக்கும் இலங்கையில் இதன் பின்னர் சந்தர்ப்பம் இல்லை. இந்த நாட்டில் அரசியல் பொருளாதார சமூக கலாசார ரீதியாக பல மாற்றங்களை கொண்டு வருவதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம். மக்களுடன் பிணைப்பைக் கொண்ட அரசியல் கலாசாரத்தை உருவாக்குவோம். மக்களின் சொத்துக்களை வீண் விரயம் செய்யாத அரசியல் கலாசாரத்தை தோற்றுவிப்போம். இனவாதத்தின் ஊடாக நாட்டினால் முன்னோக்கி செல்ல முடியாது. ஒற்றுமையின் மூலமே நாட்டினால் முன்னோக்கி செல்ல முடியும் என்றார்.

 

காணாமலாக்கப்பட்டோருக்கு இழப்பீடு, காணி இழந்தோருக்கு நட்டஈடு – அர்ச்சுனாவுடைய கருத்தால் ஆடிப்போன தமிழ்த்தேசியவாதிகள்

காணாமலாக்கப்பட்டோருக்கு இழப்பீடு, காணி இழந்தோருக்கு நட்டஈடு – அர்ச்சுனாவுடைய கருத்தால் ஆடிப்போன தமிழ்த்தேசியவாதிகள்

காணாமலாக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் தெரிவித்தமை சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

காணாமலாக்கப்பட்டோருக்கான உதவித்திட்டங்களை தொடர்ந்து வழங்குமாறு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தார். இதன்போது குறுக்கிட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, என்னுடைய அப்பா இலங்கை பொலிஸில் வேலைசெய்து தமிழீழ காவல்துறையில் சேவையாற்றி 2009இல் காணாமலாக்கப்பட்டார். காணாமலாக்கப்பட்டோருக்கான நிலையம் ஸ்தாபிக்கப்பட்டு பெருமளவான நிதி ஒதுக்கப்படுகிறது. அதனால் எந்தப் பிரயோசனமும் இல்லை. காணாமலாக்கப்பட்டோர் உண்மையில் இருக்கின்றார்களா இல்லையா என்பதை சொல்லவேண்டும். காணாமலாக்கப்பட்டோர் அலுவலகத்தில் வேலைசெய்த பெண்மணி சுவிஸில் அரசியல் தஞ்சம் தஞ்சம் கோரியுள்ளார். இவ்வாறான விடயங்களுக்கு இதைப் பயன்படுத்தாமல் எங்களுடைய சகோதரங்கள், அப்பா, அம்மா இருக்கின்றார்களா இல்லையா என்பதை தெரிவித்துக்கொண்டு அவர்களுக்குரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என்றார்.

இதேவேளை தையிட்டி விகாரையை இடிப்பது முட்டாள்தனமானது அதற்குரிய நட்ட ஈட்டை வழங்கி விகாரைக்குரிய காணி பாதிக்கபட்டோருக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தையும் அர்ச்சுனா முன்வைத்திருந்தார்.

தற்போது இவை சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளன. காணாமலாக்கபட்டோருக்கு நீதிகோரியும், பௌத்தமயமாக்கல் காணிஅபகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தமிழ்த்தேசியவாதிகள் தொடர்போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். தமிழ்த் தேசியப்பரப்பில் இவற்றைவைத்தே பெரும்பாலானோர் அரசியல் நடத்துகின்றனர். இந்தநிலையில் அர்ச்சுனாவின் கருத்து அவர்களுடைய அரசியல் இருப்பை பாதிக்கும் என்பதால் அர்சுனாவை சமூக ஊடகங்களில் வசைபாடுகின்றனர். அதேவேளை அர்ச்சுனாவுடைய கருத்து யதார்த்தத்திற்கு ஏற்புடையது என்று அவரது கருத்தைப் பலர் ஆமோதித்து வருகின்றனர்.

ஜனாதிபதி மாளிகையில் என்ன செய்யப் போகின்றீர்கள் ? முன்மொழிவை வையுங்கள் காணியைத் தருகின்றேன் ஜனாதிபதி அனுர

ஜனாதிபதி மாளிகையில் என்ன செய்யப் போகின்றீர்கள் ? முன்மொழிவை வையுங்கள் காணியைத் தருகின்றேன் ஜனாதிபதி அனுர

மக்களின் காணிகள் மக்களுக்கே உரித்தாக வேண்டும் எனவும், வடக்கின் காணிப்பிரச்சினை தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டு, வெகு விரைவில் மக்களுக்கு மீண்டும் காணிகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

நாட்டின் அபிவிருத்திக்காக அல்லது பாதுகாப்புக் காரணங்களுக்காக நாட்டின் எந்தப் பகுதியிலும் காணிகளை அரசாங்கம் சுவீகரிக்க முடியும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அந்தக் காணிகளுக்குப் பதிலாக கட்டாயமாக மாற்று காணிகளை மக்களுக்கு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ். மக்களுக்கான மிக முக்கியமான திட்டங்களுக்காக யாழ். ஜனாதிபதி மாளிகையை முற்றாக விடுவிக்கத் தயாரெனவும், அதற்கான உரிய முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

 

2.5: போரினால் இடம்பெயர்ந்த குடும்பங்கள் இன்னும் வடமாகாணத்தில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், இது குறித்து ஆராய்ந்து விரைவான தீர்மானங்களை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார்.

பொலிஸ் சேவையில் இணையுங்கள் ! 2000 பேருக்கு வேலைவாய்ப்பு !

பொலிஸ் சேவையில் இணையுங்கள் ! 2000 பேருக்கு வேலைவாய்ப்பு !

பொலிஸ் சேவையில் 2000 தமிழ் இளைஞர்களை இணைத்துக்கொள்ள தாயாராக இருப்பதாக ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க நேற்று வல்வெட்டித்துறையில் தெரிவித்துள்ளார்.

பொலிஸ்துறையில் தமிழர்கள் குறைவாக உள்ளனர். மக்களுக்கு சேவையை வழங்க அந்த மக்களின் மொழியில் கதைக்கும் அதிகாரிகள் தேவை. இந்தப் பகுதிகளில் பாரியளவில் போதைவஸ்துப் பாவனை விஸ்தரிப்பு நடக்கின்றது. இளைஞர்கள் போதைவஸ்துக்கு பெருமளவில் அடிமையாகி வருகின்றனர். இதை நிறுத்துவதற்கு சக்தி வாய்ந்த திட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம். அதற்கு உங்கள் ஒத்துழைப்பு தேவை என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தக் கடற்பரப்பு உங்களுடையது. மீன் பிடிக்கும் உரிமையிருப்பது உங்களுக்கு!” வல்வையில் ஜனாதிபதி

இந்தக் கடற்பரப்பு உங்களுடையது. மீன் பிடிக்கும் உரிமையிருப்பது உங்களுக்கு!” வல்வையில் ஜனாதிபதி

இந்தக் கடற்பரப்பு உங்களுடையது. மீன் பிடிக்கும் உரிமையிருப்பது உங்களுக்கு. அந்த உரிமையை நாங்கள் உறுதிப்படுத்த வேண்டும். அதற்கு எங்களுக்கு சில காலம் வழங்குங்கள். சட்டவிரோத ரோலர்களைப் பயன்படுத்தி எங்களது மீனர்களை அச்சுறுத்துவதை கட்டாயம் நிறுத்தப்படும் என்றார் ஜனாதிபதி அனுர. வல்லையில் நடந்த தேசிய மக்கள் சக்தியின் கட்சிக் கூட்டத்திலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

வடக்கு மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் படிப்படியாக தீர்க்கப்படும் எனவும் அதற்குரிய கால அவகாசத்தை வழங்குமாறும் அனுரகுமார திசநாயக்க கோரியுள்ளார். வல்வெட்டித்துறையில் நேற்று இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மக்கள் ஒன்றுகூடலில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்இ நீண்ட காலமாக வடமாகாணத்தில் மீனவர்களுக்கு பிரச்சினைகள் காணப்படுகின்றன. அவை தீர்க்கப்பட வேண்டும். நாங்கள் இந்திய அரசாங்கத்திடம் பல தடவைகள் பேச்சுவார்த்தை நடாத்தினோம். கடற்பரப்பின் பாதுகாப்பை வலுப்படுத்துமாறு கடற்படைக்கு கட்டளையிட்டுள்ளோம். படிப்படியாக மீனவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்போம் எனவும் ஜனாதிபதி அனுரா உறுதியளித்தார்.

கிளிநொச்சியில் பொலிஸார் கள்ளச் சாராயம், கள்ளமரம் கடத்துவது, கள்ளமண் அகல்வதற்கு உடந்தை ? அமைச்சர் பிமல் ரத்நாயக்க

கிளிநொச்சியில் பொலிஸார் கள்ளச் சாராயம், கள்ளமரம் கடத்துவது, கள்ளமண் அகல்வதற்கு உடந்தை ? அமைச்சர் பிமல் ரத்நாயக்க

கிளிநொச்சியில் பொலிஸார் கள்ளச்சாராயம், கள்ளமரம் கடத்துவது, கள்ளமண் அகல்வதற்கு எல்லாம் உடந்தையாக இருக்கின்றனர், தமிழரசுக் கட்சியின் பா உ எஸ் சிவஞானம் சிறிதரனின் இடது வலது கரங்களும் இவற்றுடன் தொடர்புற்றிருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்து வந்தார். தற்போது அவர் பொலிஸார் மீது வைத்த குற்றச்சாட்டுக்களை யாழ் பா உ க இளன்குமரனும் முன்வைத்துள்ளார். இதே குற்றச்சாட்டுக்களை அமைச்சர் பிமல் ரத்நாயக்காவும் கிளிநொச்சி பொலிஸார் மீது வைத்துள்ளார்.

கிளிநொச்சி – இராமநாதபுரம், வவுனியா – ஈச்சங்குளம் பகுதி பொலிஸாரின் செயற்பாடுகளால் பொலிஸ் நிலையங்களை மூடுமாறு மக்கள் விரக்தியில் தன்னிடம் தெரிவித்ததாக யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் வியாபாரம் உள்ளிட்ட சட்டவிரோத வியாபாரங்களை கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுப்பதில்லை என குற்றம் சாட்டியிருந்தார்.

அதன்போது கருத்து தெரிவித்த பிமல் ரத்நாயக்க, வடக்கில் விரும்பத்தகாத செயற்பாடுகளால் பொலிஸார் மீது நம்பிக்கை இழந்து விரக்தி நிலையில் உள்ளனர். சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்தால்இ உடனேயே சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு அந்த தகவல் செல்கின்றன. தமது பகுதியில் பொலிஸ் நிலையம் இருந்தும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் எதற்காக பொலிஸ் நிலையம், அதனை மூடிவிடுங்கள் என என்னிடம் தெரிவித்தனர் என்றார்.

அதற்கு பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் பதில் அளிக்கையில்இ கீழ்நிலை பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது நம்பிக்கையீனம் இருந்தால், மேலதிகாரிகளுக்கு தகவல் வழங்க முடியும் என குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்காவில் இருந்து 3000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்படலாம் !

அமெரிக்காவில் இருந்து 3000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்படலாம் !|

டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான புதிய அமெரிக்க நிர்வாகத்தால் நாடு கடத்தப்படவுள்ள சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களில் 3இ065 இலங்கையர்களும் அடங்குவதாக அந்நாட்டின் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப்பிரிவு அறிவித்துள்ளது.

இந்த வகையில், உலகின் பல நாடுகளில் இருந்து வந்து அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள 14 இலட்சத்துக்கு அதிகமானோரின் பெயர்ப் பட்டியலை புதிய அமெரிக்க நிர்வாகம் தயாரித்துள்ளது.

அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படுவதற்கான இறுதிப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள வெளிநாட்டினரின் எண்ணிக்கையும் இதில் அடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.