இந்தக் கடற்பரப்பு உங்களுடையது. மீன் பிடிக்கும் உரிமையிருப்பது உங்களுக்கு!” வல்வையில் ஜனாதிபதி

இந்தக் கடற்பரப்பு உங்களுடையது. மீன் பிடிக்கும் உரிமையிருப்பது உங்களுக்கு!” வல்வையில் ஜனாதிபதி

இந்தக் கடற்பரப்பு உங்களுடையது. மீன் பிடிக்கும் உரிமையிருப்பது உங்களுக்கு. அந்த உரிமையை நாங்கள் உறுதிப்படுத்த வேண்டும். அதற்கு எங்களுக்கு சில காலம் வழங்குங்கள். சட்டவிரோத ரோலர்களைப் பயன்படுத்தி எங்களது மீனர்களை அச்சுறுத்துவதை கட்டாயம் நிறுத்தப்படும் என்றார் ஜனாதிபதி அனுர. வல்லையில் நடந்த தேசிய மக்கள் சக்தியின் கட்சிக் கூட்டத்திலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

வடக்கு மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் படிப்படியாக தீர்க்கப்படும் எனவும் அதற்குரிய கால அவகாசத்தை வழங்குமாறும் அனுரகுமார திசநாயக்க கோரியுள்ளார். வல்வெட்டித்துறையில் நேற்று இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மக்கள் ஒன்றுகூடலில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்இ நீண்ட காலமாக வடமாகாணத்தில் மீனவர்களுக்கு பிரச்சினைகள் காணப்படுகின்றன. அவை தீர்க்கப்பட வேண்டும். நாங்கள் இந்திய அரசாங்கத்திடம் பல தடவைகள் பேச்சுவார்த்தை நடாத்தினோம். கடற்பரப்பின் பாதுகாப்பை வலுப்படுத்துமாறு கடற்படைக்கு கட்டளையிட்டுள்ளோம். படிப்படியாக மீனவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்போம் எனவும் ஜனாதிபதி அனுரா உறுதியளித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *