யாழ் மருத்துவ தொண்டர் பணியாளர்கள் அமைச்சரை 2ம் தடவை சந்தித்தது ஏன்? முதல் வழங்கப்பட்ட உறுதிமொழி மீண்டும் வழங்கப்பட்டது?
தம்பி தம்பிராஜா V ஊசி அர்ச்சுனா
25
25
தொடரும் தமிழக மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி ! இலங்கை – இந்திய கூட்டு ரோந்து சற்லைற்கள்…?
இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த 17 இந்திய மீனவர்கள் நேற்று அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 17 மீனவர்களும் தலைமன்னார் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விசாரணைகளின் பின்னர் குறித்த மீனவர்களை மன்னார் மாவட்ட கடல்த்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
தொடரும் இப்பிரச்சினையைக் கட்டுப்படுத்த இந்திய – இலங்கைக் கடற்படையினரின் கூட்டு ரோந்து பற்றி இருநாட்டு அரசுகளும் சிந்திக்க வேண்டும் என சில மீனவர்கள் தேசம்நெற்க்குத் தெரிவிக்கின்றனர். சற்லைற்களைப் பயன்படுத்தி தடுப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்கின்றனர் அம்மீனவர்கள்.
இதேவேளை மீனவர்கள் கைது செய்யப்பட்டதால் தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடம் கிராமத்தில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை கறுப்பு கிறிஸ்துமஸ் ஆக மாறி விட்டதாக சோகத்துடன் கூறும் மீனவர்களின் உறவினர்கள், மீனவர்களை உடனடியாக விடுதலை செய்து தாயகம் அழைத்து வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடந்த வாரம் இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இந்தியாவிற்கு விஜயம் செய்து பிரதமர் மோடியை சந்தித்திருந்த போது மீனவர் பிரச்சினை முக்கிய பேசுபொருளாக இருந்தது. குறிப்பாக மீனவர்கள் விவகாரத்தில் மனிதாபிமான அடிப்படையில் செயற்பட பிரதமர் மோடி கூறியிருந்தார். இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடி இடம்பெற்றுக் கொண்டு இருக்கிறது. தென்னிந்தியாவில் இருந்து ரோலர் படகுகளை பயன்படுத்தி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களால், இலங்கையின் வடக்கு கடல்வளம் சீரழிந்து வருவதுடன் மீன்வளமும் மீனின் இனப்பெருக்க வட்டமும் சிதைந்து வருவதாக சூழலியலாளர்களும், இலங்கை மீனவர்களும் தொடர்ந்தும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
அதிகரிக்கும் மதுபான சாலைகள் – கிளி மக்கள் போராட்டத்தில் குதித்தனர்! ஜனாதிபதிக்கு பறந்தது மகஜர் !!
கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகளவான மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது. அதிகரித்த மதுபான சாலைகளை மூடுமாறும் கோரி கிளிநொச்சி பசுமைப்பூங்கா முன்றலில் இருந்து ஆரம்பமாகிய இந்த போராட்டம் கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை முன்னெடுக்கப்பட்டது. பேரணியைத் தொடர்ந்து ஜனாதிபதிக்கான கோரிக்கைகள் அடங்கிய மகஜரை மாவட்ட பதில் அரசாங்க அதிபர் சு. முரளிதரனிடம் மத தலைவர்கள் இணைந்து கையளித்தனர்.
ஏற்கனவே கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளில் மதுபான சாலைகளின் எண்ணிக்கை அதிகரித்தள்ளமையானது குடும்ப வன்முறைகள், தொடங்கி வாள்வெட்டு பிரச்சினைகளுக்கு அடித்தளமிட்டிருந்த நிலையில், ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் வழங்கிய மதுபானசாலை அனுமதிகள் சமூக பிறழ்வுகளை மீள தூண்டியுள்ளது. கிளிநொச்சி மாவட்ட மக்களின் நம்பிக்கையை வென்ற பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கூட கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்துள்ள மதுபான கடைகள் பற்றியோ அதனால் ஏற்படும் சமூக சீர்கேடுகள் பற்றியோ இதுவரை வாய்திறந்தது கிடையாது. “கிளிநொச்சி மாவட்டத்தில் மதுபான சாலைகள் இல்லை. அங்கே மதுபான சாலைகளை திறக்க வேண்டும்” எனக் கோரியவர் தமிழரசு கட்சியின் வேட்பாளர் சி. சிறிதரன் என முன்னாள் யாழ்.மாநகரசபை முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்திருந்ததும் இங்கு கவனிக்கத்தக்கது.
பெரும்பாலும் பாடசாலைகள் அமைந்துள்ள சுற்றுவட்டத்திற்குள் மதுபான சாலைகள் எவையுமே அமைக்கப்பபடக்கூடாது என வலியுறுத்தப்படுகின்றது. இருந்த போதிலும் கூட கிளிநொச்சியின் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகள் காணப்படும் நகரப்பகுதிக்குள் 07 வரையான மதுபான கடைகள் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது. இவற்றுள் வீரா எனப்படும் பெயர் கொண்ட மதுபானசாலைக்கான அனுமதியை பெற்றுக்கொடுத்தவர் முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி விக்கினேஸ்வரன் என்பதும் குறிப்பிடத்தக்கது.


