November

November

அத்தானி குழுமம் முன்னைய இலங்கை அரசுக்கு லஞ்சம் கொடுத்ததா? அமெரிக்க FDC விசாரணை!

இலங்கைத் தமிழ் அகதிகள்: லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து கடைசியில் உக்ரைன் போர்க்களத்தில்

 

அத்தானி குழுமம் முன்னைய இலங்கை அரசுக்கு லஞ்சம் கொடுத்ததா? அமெரிக்க FDC விசாரணை!

 

தலைப்புச் செய்திகள்:

 

1. அத்தானி குழுமம் இலங்கையில் லஞ்சம் கொடுத்ததா? அமெரிக்க நிறுவனம் ஆராய்கின்றது: இலங்கையில் கப்பல் இறங்குதுறையைக் கட்டுவதற்கு அத்தானி குழுமம் இலங்கை அரசுக்கு, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததா என்பது பற்றிய விசாரணைகளை அமெரிக்க நிறுவனமான யுஎஸ் இன்ரநஷனல் டெவலப்மன்ற் பினான்ஸ் கோப்பிரேசன் (US International Development Finance Cooperation) ஆரம்பித்துள்ளது.

 

2. வடக்கு மீனவர் பிரச்சினையும் இலங்கை – இந்திய உறவும்: மீனவர் எங்களுடைய பிரச்சினையை ஜனாதிபதி அனுரா தன்னுடைய இந்திய விஜயத்தின் போது பிரதமர் மோடியுடன் பேசி நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என வட மாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் செயலாளரும், மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவச் சங்கத்தின் பிரதிநிதியுமான மொகமட் அஹாலம் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் கோரிக்கை வைத்தார்.

 

3. மீனவர் பிரச்சினையில் யாழ் பல்கலைப் பேராசிரியர்: யாழ் பல்கலைக்கழகப் பொருளியல் பேரசிரியர் அகிலன் கதிர்காமர் வடமாகாண மீனவர்களின் பிரச்சினைகளில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கு ஆலோசகராகச் செயற்பட்டு வருகின்றார். இவருடைய ஈடுபாடு குறுகிய காலத்திலும் நீண்ட காலத்திலும் இலங்கையினதும் தமிழ் மக்களினதும் நலன்களை மட்டுமே கருத்தில் கொண்டதாக இருக்க வேண்டும் என தமிழ் சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

4. யாரோடு யார் இணைவது தமிழ் தேசியக் கட்சிகளுக்குள் குழப்பம்: ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசிய முன்னணி, தமிழரசுக் கட்சி ஆகியவை ஒன்றிணைய வேண்டும் என்ற அழுத்தத்திற்குள் யாரோடு யார் சேருவது என்ற குழப்பத்தில் உள்ளனர்.

 

5. உக்ரைன் போர்க்களத்தில் இலங்கைத் தமிழர்கள்: ஏஜன்சியில் பணம் கட்டி ஐரோப்பா புறப்பட்ட தமிழ் இளைஞர்கள்இ ரஸ்ய இராணுவ சிப்பாய்களாக உக்ரைன் போர்க் களத்தில் களமிறக்கப்பட்டுள்ளனர்.

அகதிகளாக தரைமார்க்கமாக ஐரோப்பா வருபவர்கள் உக்ரைன்இ ரஷ்யா ஊடாக கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கூடாக மேற்கு ஐரோப்பாவுக்கு வருவது கடந்த மூன்று தசாப்தங்களுக்கு அதிகமாக நடைபெற்று வருகின்றது. சுற்றுலா விசாவில் ஐரோப்பாவிற்கு அனுப்பிவைப்பதாக போலி வாக்குறுதியளித்த முகவர்கள்இ ரஸ்யாவிற்கு சுற்றுலா விசாவில் இளைஞர்களை வரவழைத்ததோடு விமானநிலையத்திலேயே வைத்து ரஸ்ய ஆமிக்கொமாண்டரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

 

விரிவான செய்திகள்:

 

1. அத்தானி குழுமம் இலங்கையில் லஞ்சம் கொடுத்ததா? அமெரிக்க நிறுவனம் ஆராய்கின்றது: இலங்கையில் கப்பல் இறங்குதுறையைக் கட்டுவதற்கு அத்தானி குழுமம் இலங்கை அரசுக்கு, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததா என்பது பற்றிய விசாரணைகளை அமெரிக்க நிறுவனமான யுஎஸ் இன்ரநஷனல் டெவலப்மன்ற் பினான்ஸ் கோப்பிரேசன் (US International Development Finance Cooperation) ஆரம்பித்துள்ளது.

 

அமெரிக்க நிறுவனங்கள் பலவற்றிடம் போலியான ஆவணங்களைத் தயாரித்து, மில்லியன் கணக்கில் கடன்பெற்று முதலீடுகளை மேற்கொள்ள அத்தானி நிறுவனம் முயற்சி எடுத்து வந்தது. இந்தியாவில் லஞ்சம் கொடுத்துப் பெறப்பட்ட சூரியக் கதிர் திட்டங்களுக்கான ஆவணங்களை வைத்துக் கொண்டே அத்தானி குழுமம் கடன்களைப் பெற்றது. கடன்களுக்கு விண்ணப்பித்தது. ஆனால் இவர்கள் உண்மையான சூரியக் கதிர் சக்தியைப் பயன்படுத்தும் திட்டங்களுக்குப் பதில் லஞ்சம்கொடுத்து இவ்வாறான திட்டங்கள் பற்றிய அனுமதியை சமர்ப்பித்தமை விசாரணைகளில் வெளிவந்தததையடுத்து கௌதம் அத்தானி அவருடைய மருமகள் சகார் உட்பட ஏழு பேருக்கு அமெரிக்க நீதிமன்று பிடிவிறாந்து பிறப்பித்துள்ளது.

 

தற்போது கொழும்பில் உள்ள துறைமுகக் கட்டுமானப் பணிகளுக்கும் யுஎஸ் இன்ரநஸனல் டெவெலப்பமன்ற் கோப்பிரேசன் (US International Development Finance Cooperation) 550 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க டொலர் கடன் வழங்க கொள்கையளவில் ஒத்துக்கொண்டிருந்தது. ஆனால் அது முழுமையான ஒப்பந்தத்திற்குச் செல்லவில்லை. தற்போது அமெரிக்க நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையடுத்து அந்தத் திட்டத்திற்கான நிதியை வழங்குவதற்கு முன் இலங்கையிலும் அத்தானி குழுமம் லஞ்சம் பெற்றுத்தான் இக்கட்டுமானப் பொறுப்பை ஏற்றதா என்ற கேள்விக்கு விடைகான அமெரிக்க நிறுவனம் விசாரணைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது.

 

அத்தானி குழுமத்தின் விமான நிலைய கட்டுமானத் திட்டத்தை கென்ய அரசு ஏற்கனவே இரத்துச் செய்துவிட்டது. கொழும்பு கப்பற் துறைமுகத் திட்டத்தை தற்போதைய அரசு இரத்துச் செய்தால் சர்வதேச அரங்கில் அது இந்தியாவுக்கும் மோடி அரசுக்கும் பெரும் அவமானத்தை ஏற்படுத்தும். அத்தோடு அத்தானி குமுமம் மன்னாரில் காற்றாலை அமைக்கும் திட்டத்தையும் வைத்துள்ளது. அதற்கு சுழலியலாளர்கள் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் ஹருணி அமர சூரிய இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செய்தியில் தாங்கள் ஆட்சிக்கு வருமுன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் பற்றி மேற்பார்வை செய்தே அவற்றுக்கான அனுமதிகளை வழங்குவோம் எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மன்னார் காற்றாலைத் திட்டம் குப்பையில் வீசப்படும் என்ற வாக்குறுதி தேசிய மக்கள் சக்தியால் வழங்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி அனுராவின் விடயத்தில் அத்தானி குழமம் பற்றிய அம்சமும் முக்கிய இடத்தைப் பிடிக்கும் என அவதானிகள் கருதுகின்றனர்.

 

தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடிப்படை அற்றவை என அத்தானி குழுமம் தெரிவித்துள்ளது.

 

2. வடக்கு மீனவர் பிரச்சினையும் இலங்கை – இந்திய உறவும்: மீனவர் எங்களுடைய பிரச்சினையை ஜனாதிபதி அனுரா தன்னுடைய இந்திய விஜயத்தின் போது பிரதமர் மோடியுடன் பேசி நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என வட மாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் செயலாளரும், மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவச் சங்கத்தின் பிரதிநிதியுமான மொகமட் அஹாலம் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் கோரிக்கை வைத்தார்.

 

வட மாகாண கடற்தொழிலாளர் இணையத்தினரினர் யாழ் வீரசிங்க மண்டபத்தில் கடற்தொழில் அமைச்சருடன் மேற்கொண்ட சந்திப்பிலேயே இந்தக் கோரிக்கை வைக்கப்பட்டது. இச்சந்திப்பில் வட மாகாண கடற்தொழிலாளர்; இணையத்தின் பேச்சாளர் அன்னராசா ஜந்து அம்சக் கோரிக்கையொன்றையும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் கையளித்தார்.

 

இலங்கை – இந்திய உறவு பாதிக்கப்படாத வகையில் இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டு வந்து வடக்கு கிழக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்போம் என்று அமைச்சர் சந்திரசேகர் மீனவர்களுக்கு உறுதியளித்தார். நேற்றைய தேசம்நெற் செய்திகளில் குறிப்பிட்டது போல் வடக்கு கிழக்கு பகுதிகளில் சர்வதேச நாடுகளின் ஈடுபாடு பற்றித் தெரிவித்த அமைச்சர் இலங்கையை எந்த நாட்டுக்கும் எதிராகப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்றும் நாங்கள் இந்தியாவினதும் சீனாவினதும் கடன்பொறிக்குள் சிக்கியிருக்கின்றோம் என்பதையும் சுட்டிக்காட்டினார். அமைச்சருடைய உறுதி மொழிகளை தாங்கள் நம்புவதாக கடற்தொழிலாளர் இணையத்தினர் அங்கு தெரிவித்தனர்.

 

3. மீனவர் பிரச்சினையில் யாழ் பல்கலைப் பேராசிரியர்: யாழ் பல்கலைக்கழகப் பொருளியல் பேரசிரியர் அகிலன் கதிர்காமர் வடமாகாண மீனவர்களின் பிரச்சினைகளில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கு ஆலோசகராகச் செயற்பட்டு வருகின்றார். இவருடைய ஈடுபாடு குறுகிய காலத்திலும் நீண்ட காலத்திலும் இலங்கையினதும் தமிழ் மக்களினதும் நலன்களை மட்டுமே கருத்தில் கொண்டதாக இருக்க வேண்டும் என தமிழ் சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

இவருடைய பாத்திரத்தை மீனவர்கள் வரவேற்றுள்ளனர். அகிலன் கதிர்காமர் நீண்ட காலமாக சிறிலங்கா டெமொகிரசி போர்ரம் என்ற அமைப்பை மேற்கு நாடுகளில் செயற்படுத்தி வந்தவர். அமெரிக்காவில் கல்விகற்று அங்குள்ள வங்கிகளில் பணியாற்றிய இவர் அமெரிக்க, நோர்வே இராஜதந்திரிகளுடன் மிக நெருக்கமாகப் பணியாற்றியவர். தற்போது இலங்கைக் கரையோரப் பிரதேசங்களை இந்தியா ஆக்கிரமிப்பு செய்வது பற்றிய பிரச்சினைகளில் அகிலன் கதிரகாமரின் ஈடுபாடு யாருடைய நலனின் அடிப்படையில் அமையும் என்ற கேள்வி தமிழ் அரசியல் அவதானிகள் மத்தியில் எழுந்துள்ளது. அமெரிக்க நலன்சார்ந்து இலங்கைக்கும் – இந்தியாவுக்கும் இடையே முறுகல் நிலையைத் தோற்றுவிப்பதாக இது அமையக் கூடாது எனவும் அவ்அவதானிகள் தெரிவிக்கின்றனர். தற்போது இலங்கையின் வடக்கு கிழக்கு சர்வதேச ஆடுகளமாக மாறியிருப்பதால் யார் யாருடைய நலன்களை உள்ளொன்று வைத்துச் செயற்படுகின்றனர் என்பது முக்கியமானதாக உள்ளது.

 

4. யாரோடு யார் இணைவது தமிழ் தேசியக் கட்சிகளுக்குள் குழப்பம்: ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசிய முன்னணி, தமிழரசுக் கட்சி ஆகியவை ஒன்றிணைய வேண்டும் என்ற அழுத்தத்திற்குள் யாரோடு யார் சேருவது என்ற குழப்பத்தில் உள்ளனர்.

 

சங்கு, ஜனநாயகக் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஒரே பாராளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் நான் தோற்றுப் போனவர்களோடு சேருவதா, வென்றவர்களோடு சேருவதா இல்லையேல் இப்படியே தனிக்கட்டையாக நிற்பதா என்று புலம்பியுள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்டத்தின் அடிப்படையில் வாருங்கள் பேசுவோம் என யூலி சங்கை ஏற்றிக்கொண்டு குடா நாட்டுக்குள் மட்டும் சைக்கிளோடும் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் அறிவித்திருக்கிறார். தமிழரசுக் கட்சியில் நின்று வெற்றி பெற்றாலும் வீட்டுக்குள்ளேயே நிம்மதியாய் படுக்க வழியில்லாமல் எல்லோரையும் அணைத்துக் கொண்டு வீட்டுத் திண்ணையில் படுப்போம் வாருங்கள் என்று பா உ எஸ் சிறிதரன் அழைப்பு விடுகிறார். கிளிச்சுக்கொண்டு போனவை இப்ப என்னவாம் என்ற தோரணையில் பாராளுமன்றத்தில் தன்னுடைய சீட்டும் கிளிந்த பின்னும் எம் ஏ சுமந்திரன் வீட்டில் கோலோச்சிக்கொண்டிருக்கிறார். அனுரா அலையில் மிஞ்சினதுகள் வெள்ளம் கொண்டு போகாதோ என மக்கள் பரிகசிக்கின்றனர்.

 

5. உக்ரைன் போர்க்களத்தில் இலங்கைத் தமிழர்கள்: ஏஜன்சியில் பணம் கட்டி ஐரோப்பா புறப்பட்ட தமிழ் இளைஞர்கள், ரஸ்ய இராணுவ சிப்பாய்களாக உக்ரைன் போர்க் களத்தில் களமிறக்கப்பட்டுள்ளனர்.

 

அகதிகளாக தரைமார்க்கமாக ஐரோப்பா வருபவர்கள் உக்ரைன், ரஷ்யா ஊடாக கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கூடாக மேற்கு ஐரோப்பாவுக்கு வருவது கடந்த மூன்று தசாப்தங்களுக்கு அதிகமாக நடைபெற்று வருகின்றது. சுற்றுலா விசாவில் ஐரோப்பாவிற்கு அனுப்பிவைப்பதாக போலி வாக்குறுதியளித்த முகவர்கள், ரஸ்யாவிற்கு சுற்றுலா விசாவில் இளைஞர்களை வரவழைத்ததோடு விமானநிலையத்திலேயே வைத்து ரஸ்ய ஆமிக்கொமாண்டரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

 

இதேபோல 2022 ஆம் ஆண்டு ஒரு பெண் அடங்கலாக 7 பேர் கொண்ட இலங்கையைச் சேர்ந்த குழுவினர் ஏஜன்சி மூலம் வெளிநாடு வர முற்பட்ட போது உக்ரைனில் வைத்து ரஸ்ய இராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டிருந்தனர். அவ்வாறு பிடிபட்டவர்கள் ஆறு மாதங்களுக்கு மேல் யுத்த முனையில் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதோடு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டார்கள். பின்னர் உக்கிரைன் இராணுவத்தால் அவர்கள் மீட்கப்பட்டனர்.

 

சுற்றுலா விசாவில் மேற்கு ஐரோப்பாவிற்குச் செல்ல முற்பட்ட இளைஞர்கள் ரஸ்யவின் இராணுவ பயிற்றிச் முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 14 நாட்கள் இராணுவபயிற்சி முடிவடைந்ததும் உடனடியாக ரஸ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டு உக்கரைன் ரஸ்யப் போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட இளைஞர்களிடம் ஆமி அடையாள அட்டை ஒன்று பயணத்திற்கு தேவைப்படுவதால் தான் பயிற்சி என்று கூறப்பட்டு ரஸ்ய மொழியில் எழுதப்பட்ட ஆவணத்தில் கையொப்பம் பெறப்பட்டுள்ளது. உடன்படிக்கையின்படி ஒரு வருட காலத்திற்கு அவர்கள் இராணுவத்தில் பணியாற்ற கடமைப்பட்டுள்ளதாக முகவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

ரஸ்ய உக்கிரைன் எல்லையில் நிற்கும் இளைஞர்களின் தொலைபேசித் தொடர்புசாதனங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டு அவர்கள் உறவினருடன் தொடர்பு கொள்வதையும் தடுத்துள்ளனர்.

 

இலங்கையிலில் இருக்கும் உறவினர்கள் இது தொடர்பில் முகவர்களை தொடர்பு கொண்ட போது அவர்கள் மிரட்டப்படுவதோடு இப்பயணத்திற்கென பேசப்பட்ட பணத்தையும் முழுமையாக பெற்றுக் கொண்டு ஏமாற்றி வருகிறார்கள். இந்த விடயத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸநாயக்க தலையீடு செய்து தங்களது பிள்ளைகளை மீட்டுத்தர வேண்டும் என பிள்ளைகளின் தாய்மார் கண்ணீரோடு கோரிக்கை வைக்கின்றனர்.

 

இலங்கையில் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் உக்ரைன் இஸ்ரேல் யுத்தத்தில் கூலிப்படைகளாக இணைந்துகொண்டதும் அவரில் ஒருவர் உக்ரைனில் பிடிபட்ட காணொலியையும் தேசம்நெற் வெளியிட்டுஇருந்தது. இந்த இராணுவ வீரர்களுடைய பெற்றோரும் அரசு தங்களது பிள்ளைகளை மீட்டுத்தர வேண்டும் என்று கோரியுள்ளனர்.

 

அகதிகளாக நாட்டை விட்டு வெளியேற முற்பபடும் இலங்கையின் வடக்கு கிழக்கைச் சேர்ந்த இளைஞ்ர்களில் கணிசமானவர்கள் மரணத்தை தழுவுகின்றனர். இன்னும் அதிகமானவர்கள் அறியப்படாத நாடுகளில் ஒதுங்கி அவர்களுடைய எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. லட்சங்கள், கோடிகள் கொடுத்து அவர்களுடைய எதிர்காலம் சீரழிக்கப்படுகின்றது. டியுகோ கார்ஸியா (Dego Carcia) , இந்தோனேசியா, பர்மா, ரஷ்யா, உக்ரைன் மற்றும் ஆபிரக்க நாடுகளிலும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மாட்டுப்பட்டுள்ளனர். இன்னும் சிலர் பல நாடுகளின் சிறைகளிலும் உள்ளனர். வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர் மனித உரிமை அமைப்புகள் இவர்கள் தொடர்பில் தகவல்களைத் திரட்டி அவர்களது எதிர்காலத்திற்கு ஒரு நம்பிக்கையை வழங்க வேண்டும் என தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 

தற்போது மேற்கு நாடுகளுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளுடாக வருவதற்கான வாய்ப்பு உள்ள போது இளைஞர்கள் இவ்வாறான சோம்பேறித்தனமான சட்ட விரோத முயற்சிகளில் ஈடுபடக்கூடாது என சமூக செயற்பாட்டாளர் ஒருவர் கடுமையான வார்த்தைகளில் தெரிவித்தார்.

 

 

@⁨L. A VITHUSAJINY 2024 AL⁩ Ready to be read.

ஈழத்து அரசியலில் உண்மையிலேயே மிஸ்டர் பீன்களாக உலா வரும் நிலாந்தன் உள்ளிட்ட பத்தி எழுத்தாளர் குழு !

“பின்னடைவான ஓர் அரசியல் சூழலுக்குள், தமிழ் மக்களின் இறுக்கத்தைத் தளர்த்தி, எல்லாவற்றையும் சிரித்துக் கடக்கும் ஒரு அனுபவத்தைத் தர ஒரு மிஸ்டர் பீன்ஸ் கிடைத்திருக்கிறாரா? சிரிப்போம்.கடப்போம்.” என பத்தி எழுத்தாளர் நிலாந்தன் குறிப்பிட்டுள்ளார்.

 

உண்மையிலேயே ஊசி அர்ச்சுனா தமிழ்தேசிய ஆசன பலத்தை உடைத்துவிட்டார் என்கின்ற அவருடைய கருத்து ஒருபுறம் இருக்க நிலாந்தன் உள்ளிட்ட பத்தி எழுத்தாளர் குழுவினர் ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ்தேசியத்துக்கான வாக்கெடுப்பு என கூறி லைக்காவின் நிதி உதவியுடன் சங்கு அரியத்தாரை களமிறக்கி அடிவாங்கினர். அதன் தொடர்ச்சியாக தமிழ்தேசிய கூட்டமைப்பை மேலும் உடைத்து சங்கு சின்னத்தை பாராளுமன்ற தேர்தலிலும் களமிறக்கி தமிழர்கள் சார்ந்த ஆசன பலத்தை மேலும் உடைத்தவர்களும் இவர்கள் தான். இந்த நிலாந்தன் உள்ளிட்ட குழுவினர் இன்றுவரை ஜனாதிபதி பொதுவேட்பாளர்  பற்றியோ…?  அவருக்கான இரண்டு லட்சம் வாக்களுக்கான முடிவு தொடர்பிலோ..? அல்லது தோல்விக்கான விமர்சன ரீதியான கலந்துரையாடல்களையோ இன்று வரை செய்யவில்லை. அனைத்து தமிழ்தரப்பையும் ஓர் புள்ளியில் இணைத்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வைக்க முன்வந்த பொதுக்கட்டமைப்பை நாசமாக்கியது பற்றியோ கிஞ்சித்தும் வாய் திறக்கவில்லை. ” இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பத்திரிகைகளில் மட்டும் பிறரை மிஸ்டர் பீன் என நக்கலடித்து வரும் நிலாந்தன் உள்ளிட்ட குழுவினர்தான் உண்மையான பீன் என பலரும் விமர்சித்து வருகின்றனர். இநே வேளை நிலாந்தன் உள்ளிட்ட குழுவினர் ஹீரோக்கள் என பரப்புரை செய்துவந்த பார் லைசன்ஸ் புகழ் விக்கியரின் மான் சின்னம், சித்தார்த்தன் உள்ளிட்டோரின் சங்கு சின்னம் ஆகியவை தான் மிஸ்டர் பீன்களாகிப்போயுள்ள அதேவேளை நிலாந்தன் பீன் என கூறிய ஊசி அர்ச்சுனா பெற்ற இருபதாயிரம் வாக்குகளின் பக்கத்தில் கூட நிலாந்தன் குழுவினரின் ஹீரோக்களால் நெருங்க முடியவில்லை.

தலைவர் வழி, மாவீரர் தியாகங்கள் என வழமையான ஏமாற்று தேசியவாதிகளுடன் இணைந்தார் ஊசி அர்ச்சுனா!

பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர் மருத்துவர் அர்ச்சுனா இராமநாதனுடன் கலந்துரையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக சபாநாயகர் அசோக ரங்வல தெரிவித்துள்ளார்.

 

பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்ததுடன், இனவாதம் குறித்து கருத்து வெளியிட்டமையினால் அவர் தொடர்பில் விவாதம் ஏற்பட்டுள்ளது.

 

எனவே இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினருடன் கலந்துரையாடி மேலதிக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

 

கண்டிக்கு விஜயம் செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சபாநாயகர் அசோக ரங்வல இதனை தெரிவித்தார்.

 

“ஒரு தனிநபராக அவரது அபிலாஷை என்னவென்று எங்களுக்குத் தெரியாது.அவர் பிரதிநிதித்துவப்படுத்திய மக்களின் அபிலாஷை மிகவும் தெளிவானது.

 

இன்று நாட்டில் அவ்வாறானதொன்றை மக்கள் எதிர்பார்க்கவில்லை.

அந்த மக்கள் வடக்கு, மேற்கு அல்லது கிழக்காக இருக்கலாம், நல்லிணக்கத்துடன் நாட்டை அபிவிருத்தி செய்ய தலையிடுவார்கள் என அனைத்து மக்களும் நம்புகின்றனர்.இது ஒரு தனி நபரால் செய்யப்பட்டது என்பது எங்களுக்குத் தெரியும்.

 

அதுபற்றி அவரிடம் பேசி, அவரது அனைத்து முகநூல் கணக்குகளையும் சரிபார்த்தோம்.நாமும் அவருடன் பேசலாம், புத்திசாலித்தனமாக செயல்பட்டு எதிர்காலத்தில் இதை தெளிவுபடுத்துவோம் என்றார்.

வடக்கு கிழக்கு மக்கள் கூட்டாக இணைந்து இனவாதமற்ற இலங்கை என்ற கருத்தியலில் தேசிய மக்கள் சக்திக்கு வாய்ப்பளிக்க மருத்துவ மாபியாக்களையும் – மருத்துவ சீர்கேடுகளையும் பகிரங்கப்படுத்திய ஊசி அர்ச்சுனாவையும் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட மக்கள் பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். தான் எதற்காக தெரிவு செய்யப்பட்டோம் என்பது பற்றிய அடிப்படை புரிதலே இல்லாமல் மேலும் மேலும் தன்னை ஓர் ஒப்புயர்வற்ற நபர் என கருதி செயற்பட்டு வரும் ஊசி அர்ச்சுனா பாராளுமன்றத்தில் வைத்து விடுதலை புலிகள், பிரபாகரன் என்றெல்லாம் பேஸ்புக் நேரலையில் வெடித்து தள்ளுகிறார். இந்த நிலையில் அவர் மீது சி.ஐ.டியில் வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில் வேறு வழியில்லாமல் பாராளுமன்ற சபாநாயகர் அசோக ரங்வல,  ஊசி அர்ச்சுனாவுடன் கலந்துரையாடலில் ஈடுபட முடிவெடுத்துள்ளதாக அறிய முடிகிறது. அவர் முன்வைத்த பிரிவினைவாத கருத்துக்கள் தொடர்பிலேயே அவர் கலந்துரையாடவுள்ளதாக அறிய முடிகிறது. இருந்தாலும் தனது முகநூல் கணக்கில் உள்ள தொண்ணூறாயிரம் பின்தொடர்பவர்களுக்கு புதிதாக என்ன கதையை ஊசி அர்ச்சுனா அடித்து விடப்போகிறார் என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

ஈ.பி.டி.பியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் !

முன்னாள் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா நிர்வாக செயலாளருமான குலசிங்கம் திலீபன் கட்சியில் இருந்தும் அதன்அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் வெளியேறுவதாக இன்று அறிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள செய்தி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளாதவது

 

ஆரம்பத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் (தமிழரசுக் கட்சியில்) ஆரம்பித்த எனது அரசியல் பயணம், பின்பு, 2013ம் ஆண்டிலிருந்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) உடன் இணைந்து கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாகச் செயலாளராக பொறுப்பேற்று மக்கள் பணியாற்றினேன். மேலும், 2020 இல் பாராளுமன்ற உறுப்பினராகவும் தெரிவாகினேன்.

 

தற்போது நடைபெற்ற 2024 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளே கிடைக்கப் பெற்றன.

 

இதுவரை காலமும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியில் பயணித்து மக்கள் சேவையாற்றினேன். சில விடயங்கள் காரணமாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியில் இருந்து விலகுகிறேன். இது தொடர்பான கடிதத்தினை, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் கெளரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு பதிவுத் தபாலில் அனுப்பியுள்ளேன்.

 

இக் கட்சியில் இருந்து நான் வெளியேறுவதற்கு, கட்சியோ அல்லது கட்சியின் தலைமையோ காரணமில்லை, எனது தனிப்பட்ட முடிவு என்பதை தெரிவித்துள்ளேன். என்றுள்ளது.

தமிழர்களுக்கு நினைவேந்தல் நடாத்துவதற்கு முழுமையான அனுமதி உண்டு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

தமிழ் மக்கள் மாவீரர் வாரத்தை அனுஷ்டிப்பதற்கு எந்த வித தடையும் கிடையாது, அவர்கள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியும் என கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்  தெரிவித்தார்.

யாழில் தொலைக்காட்சி ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்கள் மாவீரர் தினத்தை இம்முறை எவ்விதமான கெடுபிடிகளும் அடக்குமுறைகளும் இல்லாமல் அனுஷ்டிக்க முடியும்.

அதற்கு எந்தவிதமான தடையும் கிடையாது. மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்பவர்களை ஒளிப்படம் எடுக்க வேண்டாம் என பாதுகாப்புத் தரப்பினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே மக்கள் சுதந்திரமான முறையில் மாவீரர் வாரத்தை அனுஷ்டிக்க முடியும். அது அவர்களின் உரிமை. அதற்கு அரசு தடை எதுவும் போடாது“ என தெரிவித்தார்

பாராளுமன்றத் தேர்தல்; தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிகழ்ந்த இரண்டாவது தோல்வி – பேராசிரியர் கீதபொன்கலன் கருத்து

பாராளுமன்றத் தேர்தல்; தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிகழ்ந்த இரண்டாவது தோல்வி – பேராசிரியர் கீதபொன்கலன் கருத்து

 

புரட்சிகரமான மாற்றத்தைப் புரிந்துகொண்ட வடக்கு மக்களுக்கு தலை வணங்குகிறோம் – ஜேவிபி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவிப்பு

 

யாழ் மையவாத அரசியல் தனக்கு ஒவ்வாதவர்களை விரட்டியடிக்கும். அன்று துரையப்பாவுக்கு நடந்தது இன்று சுமந்திரனுக்கும் நடந்துள்ளதுள்ளது என்கிறார் இடதுசாரி அரசியற் செயற்பாட்டாளர் ந. ஜெயபாலன்

 

இலங்கைக் கான நான்காம் கட்ட நிதியை விடுவித்துள்ளது ஐஎம்எப் . 2.9 பில்லியன் அமெரிக்க டொலரை வழங்குவதற்கு அனுமதி

 

மக்களை துன்பப்படுத்தி ஐ.எம்.எப் கடன்களை செலுத்த முற்படுவது என்.பி.பியின் முதலாளித்துவச் சிந்தனைப் போக்கையே வெளிப்படுத்துகின்றது. – தமிழ் சொலிடாரிட்டி அமைப்பின் முக்கியஸ்தர் சேனன் குற்றச்சாட்டு

 

மாவீரர் தினத்தில் எதிர்ப்பரசியல் ஒன்றை முன்னெடுக்க இருந்த வாய்ப்புகளையும் இல்லாமல் செய்துள்ள புதிய அரசு – மாவீரர் தினத்திலும் சோபையிழந்தது தமிழ் தேசியம்

இலங்கைத் தமிழர்கள் தமிழீழத்தை கைவிட்டாலும் புலம்பெயர்ந்தவர்களும் தமிழகத்துச் சீமானும் தான் தமிழீழம் கேட்கின்றார்கள்! வே பிரபாகரனின் முன்னாள் தளபதி சின்னத்துரை ராகவன்

யாழ் நல்லூரடியில் சட்டத்தரணி வீட்டில் களவாடப்பட்ட ஒரு கோடி நாற்பது லட்சம் பெறுமதியான பணமும் நகைகளும் மீட்பு

2024 சிவஜோதி ஞாபகார்த்த விருது தேசிய நல்லிணக்க முயற்சிகளுக்காக மாத்தள சுனேத்த ஹாமத்துரு தேரோவுக்கு

தேசம் திரை தலைப்புச் செய்திகளை காண கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்யவும்..!

 

 

 

கிளிநொச்சி மாவட்டத்திற்கு காலபோக பயிர்ச்செய்கைக்கான இலவச மானிய உரத்திற்கென 454.49 மில்லியன் ரூபாய் நிதி !

அரச கொள்கைகளுக்கமைவாக கிளிநொச்சி மாவட்டத்திற்கு 2024/2025 ஆண்டு காலபோக பயிர்ச்செய்கைக்கான இலவச மானிய உரத்திற்கென 454.49 மில்லியன் ரூபாய் நிதி வைப்பிலிடப்பட்டுள்ளது.

அந்தவகையில் கிளிநொச்சி, உருத்திரபுரம், இராமநாதபுரம், அக்கராயன்குளம், புளியம்பொக்கனை, முழங்காவில், பூநகரி, பரந்தன், கண்டாவளை, பளை ஆகிய கமநல சேவை பிரிவுகளுக்கென குறித்த நிதி ஓதுக்கீடு கிடைக்கப்பெற்றுள்ளது.

முதற்கட்டமாக ஏக்கர் ஒன்றுக்கு 15,000 ரூபா வீதமும் இரண்டாம் கட்டமாக ரூபா 10,000 வீதமும் விவசாயிகளின் கணக்கிலக்கங்களுக்கு வைப்பிலிடப்பட்டுள்ளன.

இரண்டாம் கட்டமாக கண்டாவளை கமநல சேவை பிரிவிற்கு 1249.2467 ஏக்கருக்கு 12492467 ரூபாவுமாக வைப்பிலிடப்பட்டுள்ளது.

இந்தவகையில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு 2024/2025 ஆண்டு காலபோக பயிர்ச்செய்கைக்கான இலவச மானிய உரத்திற்கென முதற்கட்டத்தில் மொத்தமாக 272,818,048.50 ரூபாவும் இரண்டாம் கட்டத்தில் 181,669,857.00 ரூபாவுமாக மொத்தமாக 454,487,905.50 ரூபாய் நிதியானது அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது.

எனவே விவசாயிகள் தங்களது கணக்கிலக்கங்களில் மேற்குறிப்பிடப்பட்டுள்ள தொகையானது வைப்பிலிடப்பட்டுள்ளதா என்பதனை உறுதிபடுத்திக்கொள்வதோடு பெற்றுக்கொள்ளாத விவசாயிகள் தங்களது கமநல சேவை நிலையங்களை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

புதிய அரசாங்கம் அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாட்டை வெளிப்படுத்தியிருப்பதானது, எமது நம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளது – சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள்

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதிக்குற்பட்ட 330 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 3ஆம் கடன் தவணை தொடர்பில் ஊழியர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின் பிரதானி பீட்டர் ப்ரூவர்  தெரிவிக்கிறார்.

 

 

 

 

மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் இன்று(23) முற்பகல் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது மீளாய்வு தொடர்பான விசேட ஊடக சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார்.

 

 

 

 

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள 4 வருட காலப்பகுதியைக் கொண்ட நீடிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பில் நாட்டின் அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாக அவர் கூறினார்.

 

 

 

 

இந்த கலந்துரையாடல்களின் பிரதிபலனாக ஊழியர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின் பிரதானி பீடடர் ப்ரூவர் தெரிவித்தார்.

 

 

 

 

ஊழியர் மட்ட இணக்கப்பாடு தொடர்பான உடன்படிக்கை அங்கீகாரம் பெறுவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவம் மற்றும் நிறைவேற்று சபைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

 

 

 

 

சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடுகளுக்கு அமைய இந்த ஆண்டு ஜூன் மாத இறுதி வரையிலான இலக்குகள் குறிப்பிடத்தக்க அளவு பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன், செப்டெம்பர் அளவில் வேலைத்திட்டத்தின் செயற்றிறன் வலுவாகக் காணப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

 

 

 

 

ஒக்டோபர் மாதத்திற்கு முன்னதாக பெரும்பாலான கட்டமைப்பு ரீதியான இலக்குகள் தாமதத்துடனேனும் செயற்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் கூறினர்.

 

 

 

 

புதிய அரசாங்கத்திற்கான மக்கள் ஆணை, ஊழல் இன்றி பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கானது எனவும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் இதன்போது வலியுறுத்தினர்.

 

 

 

 

வறிய மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளதெனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

 

 

 

 

நீடிக்கப்பட்ட கடன் வசதியின் மூன்றாவது தவணையை விடுவிப்பதற்கான மீளாய்வுக்காக கடந்த 17 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்த சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவும் இலங்கையும் கைச்சாத்திட்ட ஆவணத்தை ஜனாதிபதி அனுர குமார நடைமுறைப்படுத்தவேண்டும் – ரணில் விக்கிரமசிங்க

இந்தியாவும் இலங்கையும் கடந்த வருடம் கைச்சாத்திட்ட ஆவணத்தை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நடைமுறைப்படுத்தவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்க பிடிஐக்கு கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நானும் பிரதமர் மோடியும் கைச்சாத்திட்ட தொலைநோக்கு ஆவணத்தில் இரண்டுநாடுகளிற்கும் இடையில் எந்தஎந்த துறைகளில் ஒத்துழைப்பை முன்னெடுக்கவேண்டும் என்பது குறித்து நாங்கள் தெரிவித்துள்ளோம்,திசநாயக்க முன்னோக்கி செயற்படவேண்டும் இதனை நடைமுறைப்படுத்தவேண்டும் என நான் கருதுகின்றேன் என ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மீனவர்களின் பிரச்சினைகள் படிப்படியாக தீர்க்கப்படும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன்

வடக்கு மாகாண மீனவ சங்க பிரதிநிதிகளுக்கும் கடற்தொழில் அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பானது, இன்று (23) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது.

வடக்கு மாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் ஊடகப்பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

கலந்துரையாடலில் அண்மையில் புதிதாக கடற்தொழில் அமைச்சராக பதவியேற்றிருக்கும் இராமலிங்கம் சந்திரசேகரன் (Ramalingam Chandrasekar) கலந்து கொண்டிருந்தார் .

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு கடற்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தெளிவுபடுத்தினர்.

இதன் போது ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை படிப்படியாக தான் முன்னெடுப்பதாக  மீனவ சங்கப் பிரதிநிதிகளுக்கு கடற்தொழில் அமைச்சர் உறுதி அளித்தார்.

இதேவேளை, யாழ் . போதனா வைத்தியசாலைக்கு இன்றைய தினம்  நேரில் விஜயம் மேற்கொண்ட கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் , வைத்தியசாலையின் சேவை நிலைமைகளை நேரில் ஆராய்ந்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் மிக விரைவில் நேரில் விஜயம் மேற்கொண்டு , சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்வார் என கடற்தொழில் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையின் வளர்ச்சி மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்கான தேவைகளை வைத்திய சாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தியிடம் நேரடியாக கேட்டறிந்த அவர், சாதகமான மாற்றங்களை கொண்டுவர சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடி, தன்னால் முடிந்த எல்லாவற்றையும் மேற்கொள்ளவதாக உறுதி அளித்தார்.

அத்துடன், சுகாதார அமைச்சர் வைத்தியர்.நளின்த ஜயதிஸ்ஸ விரைவில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் இதன்மூலம் சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கான மேலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.