07

07

தமிழ்ப் பொது வேட்பாளர் அர்த்தமற்றது! இலங்கைக்கான பொது வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும்!

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் – 2024 தொடர்பான அரசியல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில் இந்த தேர்தலில் தமிழர்களின் நிலைப்பாடாக பொதுவேட்பாளர் என்ற கொள்கையை தமிழ்தேசிய கட்சிகள் முன்மொழிந்து வருகின்றன. இது தொடர்பில் பல வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் பொதுவேட்பாளர் தொடர்பிலும் அதிலுள்ள சாதக – பாதக நிலை தொடர்பிலும் எழுத்தாளரும் அரசியல் ஆர்வலருமான து.சேனன் அவர்களுடன் தேசம் ஜெயபாலன் கலந்துரையாடும் பரபரப்பான அரசியல் கலந்துரையாடல்.

தேசம் திரை காணொளியை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..!

ரஃபா எல்லைகளை கைப்பற்றிய இஸ்ரேல் – மனிதாபிமான உதவிகள் முழுமையாக தடைப்பட வாய்ப்பு!

காசா பகுதியில் உள்ள ரஃபாஎல்லையை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

ரஃபா மூலோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிஎன்பதுடன் எகிப்திலிருந்து காசாவிற்கான மனிதாபிமான உதவிகள் வருவதற்கான ஒரேயொரு பாதையாகவும் காணப்படுகின்றது.

ரஃபாவின் காசா பக்கத்தினை நாங்கள் தற்போது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளோம் எங்களது சிறப்பு படைகள் இந்த பகுதியில் சோதனை நடவடிக்கைகள் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளன என இஸ்ரேலின் இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை காசா எல்லை அதிகாரசபைக்கான பேச்சாளர் இஸ்ரேலிய டாங்கிகள் காணப்படுவதை உறுதிசெய்துள்ளார்.

அந்த பகுதி ஊடாக மனிதாபிமான உதவிகள் பயணிப்பது நிறுத்தப்பட்டுள்ளதாக மனிதாபிமான அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இதேவேளை ஹமாஸ் அமைப்பு  மூன்று கட்ட யுத்த நிறுத்தம் தொடர்பான யோசனைகளையும் கைதிகள் பணயக்கைதிகள் பரிமாற்றம் தொடர்பான யோசனைகளையும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ள அதேவேளை இஸ்ரேல் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ளது.

போர் நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொள்வதாக ஹமாஸ் அறிவிப்பு – மகிழ்ச்சியில் பாலஸ்தீனியர்கள் !

எகிப்து மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் முன்வைத்த போர் நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொள்வதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

அந்த அமைப்பை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே, கத்தார் பிரதமர் மற்றும் எகிப்திய தலைவர்களுக்கு இந்த யோசனையை ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை ஹமாஸ் ஏற்றுக் கொண்ட போர்நிறுத்தப் பிரேரணையை இஸ்ரேல் அரசாங்கம் ஆய்வு செய்து வருவதாக இஸ்ரேலிய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக அறிய முடிகிறது.

இதனிடையே போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்த நிலையில் இடம்பெயர்ந்து ரபாவில் தங்கியுள்ள பலஸ்தீன மக்கள் மகிழ்ச்சி ஆராவாரத்தில் ஈடுபட்டுள்ளதையும் அறிய முடிகிறது.