03

03

கோவெக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது – பாரத் பயோடெக் நிறுவனம்

கோவெக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என அதனை தயாரித்த பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

 

கொவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டதால், பக்க விளைவுகள் ஏற்பட்டு பாதிக்கப்பட்டதாகவும், அதில் பலர் மரணம் அடைந்ததாகவும் சமீபத்தில் பிரிட்டிஷ் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன.

 

அவை விசாரணைக்கு வந்தபோது, “கொவிஷீல்டு தடுப்பூசியால் டி.டி.எஸ் எனப்படும் இரத்தம் உறைவு மற்றும் இரத்த தட்டணுக்கள் குறைதல் போன்ற பக்கவிளைவு மிக மிக அரிதாக ஏற்படும்” என அஸ்ட்ராஜெனகா நிறுவனம் இங்கிலாந்து நீதிமன்றத்தில் கூறியிருந்தது. கொரோனாவிற்கு தடுப்பூசி செலுத்திய அனைவரிடமும் இச்செய்தி பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியது.

 

மேலும், ‘இந்தியாவில் கொவிஷீல்டு தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதா’ என ஆய்வு செய்யக்கோரி இந்திய உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

இதனையடுத்து, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘கோவெக்சின்’ தடுப்பூசி குறித்தும் பலருக்கு சந்தேகம் கிளப்பியது. இந்நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமான கோவெக்சின் தயாரிப்பு நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவனம் தனது அறிக்கையில், இது குறித்து விளக்கம் கொடுத்துள்ளது.

 

அதில், “பலமுறை சோதனை செய்த பிறகே கோவெக்சின் தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்தது. ஆகவே, இரத்தம் உறைதல் உள்ளிட்ட எந்த பக்கவிளைவுகளும் இந்த தடுப்பூசியால் ஏற்படாது. மக்களின் பாதுகாப்புதான் முதன்மையானது. எனவே, கோவெக்சின் எவ்வித எதிர்மறையான பாதிப்புகளையும் கொடுக்காது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இந்த செய்தி கோவெக்சின் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பெருமூச்சை அளித்துள்ளது.

சமூக ஊடகங்களில் பெற்றோர்களால் பகிரப்படும் குழந்தைகளின் படங்கள் – எச்சரிக்கிறது அவுஸ்திரேலிய அரசாங்கம் !

சமூக ஊடகங்களில் தங்கள் பிள்ளைகளின் படங்களை பெற்றோர் பகிர்ந்துகொள்வது ஆபத்துக்களை உருவாக்குகின்றது என அவுஸ்திரேலிய அரசாங்கம் எச்சரித்துள்ளது.

 

சமூக ஊடகங்களில் தங்கள் பிள்ளைகளின் படங்களை பதிவிடும் பெற்றோர்களை பாலியல் நோக்கத்தில் பலர் இலக்குவைப்பது கருத்துக்கணிப்பொன்றின் மூலம் தெரியவந்துள்ளதை தொடர்ந்தே இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

 

சமூக ஊடகங்களில தங்கள் பிள்ளைகளின் படங்களை பெற்றோர் இலக்குவைத்து செயற்பட்டுள்ள கும்பல்கள் தாங்கள் பணம் செலுத்தினால் பிள்ளைகளின் நிர்வாண படங்களை தருவீர்களா என வேண்டுகோள் விடுத்துள்ளமை இந்த கருத்துக்கணிப்பின் போது தெரியவந்துள்ளது.

 

4000 பேரிடம் இந்த விடயங்கள் குறித்து கருத்து கோரப்பட்டதாகவும் இவர்களில் 100க்கும் அதிகமான பெற்றோர் தங்களிடம் தங்கள் பிள்ளைகளின் நிர்வாண படங்களை ஆகக்குறைந்தது ஒருவராவது கோரியதாகதெரிவித்துள்ளனர் என கருத்துக்கணிப்பினை மேற்கொண்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்

 

சிறுவர் பாலியல் நாட்டம் கொண்டவர்கள் உட்பட பலர் தங்கள் பிள்ளைகளின் படங்களை பார்த்த பின்னர் தங்களிடம் மேலும் படங்களை கோரினார்கள் என தெரிவித்துள்ளனர்.

 

பொதுவான சமூக ஊடக பதிவுகள் போன்றவற்றில் படங்களை பகிர்ந்துகொள்ளும் பெற்றோரிடம் இவ்வாறான வக்கிரமான கேள்விகள் கேட்கப்படலாம் என அவுஸ்திரேலிய குற்றவியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனுக்கு ஆதரவாக அமெரிக்க பல்கலைக்கழகங்களில் போராட்டங்கள் – மாணவர்களை தாக்கும் பொலிஸார்!

அமெரிக்காவின் கலிபோர்னியாபல்கலைகழக வளாகத்திற்கு கூடாரங்களை அமைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் பாலஸ்தீன மாணவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு எச்சரித்துள்ள பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி செல்வதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சில பகுதிகளில் மாணவர்களிற்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெறுகின்றன.

எங்களின் பல்கலைகழகத்திலிருந்து வெளியேறு என மாணவர்கள் கோசம் எழுப்பிவருகின்றனர்.

நூற்றுக்கணக்கான பொலிஸார் உள்ளே நுழைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகின்றன.

 

அரை நிர்வாண உள்ளாடையோடு பகிரப்பட்ட பெண் என் முன்னாள் காதலி – மனைவி: லூட்டன் UK அனாதன் ஒப்புதல் வாக்குமூலம் !

‘Ana Than’ அனாதன் யார் இந்த முகநூல் பொறுக்கி? என்ற தலைப்பில் தேசம்நெற்றில் வெளியான செய்தியை அடுத்து சம்பந்தப்பட்ட முகநூலின் சொந்தக்காரர் தேசம்நெற்றைத் தொடர்புகொண்டு அரைநிர்வாணப் படங்களை தான் தான் பகிர்ந்ததை ஒப்புக்கொண்டார். இரு ஆண் குழந்தையின் தந்தையான மில்ட்ன் கீன்ஸ்ஸில் கடை வைத்திருந்த வர்த்தகரான இவர் முன்னாள் காதலியோடு மீண்டும் உறவை ஏற்படுத்தியதாகவும் அந்த உறவில் விரிசல் ஏற்பட்டதும் அவரைப் பழிவாங்கும் வகையில், அரை நிர்வாண உள்ளாடையோடு அவரது படங்களைப் பகிர்ந்துள்ளார். சம்பந்தப்பட்ட பெண் தற்போது யாழிலேயே வாழ்கின்றார்.

 

அப்பெண்ணோடு தான் சிறுவயது முதல் யாழ் சங்கானையில் உள்ள பாடசாலையில் கல்வி கற்றதாகவும் பதின்ப வயதில் அப்பெண்ணோடு காதல் மலர்ந்ததாகவும் தெரிவிக்கின்றார். பின்னல் அவர்கள் யுத்தம் காரணமாக வன்னிக்குப் புலம்பெயர தொடர்புகள் விடுபட்டதாகவும் அனாதன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். ஆனால் 1996இல் தான் பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்து விட இருவரது வாழ்க்கையும் வெவ்வேறு திசைகளில் பயணித்ததாகக் கூறுகின்றார்.

 

வன்னியில் இயக்கம் கட்டாய ஆள்சேர்ப்பில் ஆண்களையும் பெண்களையும் பிடித்துச் சென்றதால் அவளின் பெற்றோர் அவளுக்கு சிறுவயதிலேயே திருமணம் பேசி தங்களுக்கு பிடித்த ஒருவருக்கு திருமணம் செய்து வைத்ததாக லூட்டன் அனாதன் தெரிவிக்கின்றார். அதன் பின் மீண்டும் இவர்கள் தொடர்பை ஏற்படுத்தி உறவை வளர்த்து அது விரிசலாகி அவரது குடும்பமும் பிரிந்து தற்போது முகநூல் வசையாடல்களில் வந்து முடிந்துள்ளது. யுத்தம், பல வந்த ஆட்சேர்ப்பு என்பன இவ்வாறான சமூகச் சிதைவுகளையும் பண்பாட்டுச் சிதைவுகளையும் கூட இன்றும் ஏற்படுத்தி வருகின்றது. நாற்பது வயதில் பேரப்பிள்ளைகளை பராமரிக்கும் பெண்கள் வன்னியில் அதிகம்.

 

தற்போது மில்டன் கீன்ஸ் கடை உரிமையாளர் அனாதன் தேசம் ஜெயபாலனோடு நடத்திய உரையாடலை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..!