அரை நிர்வாண உள்ளாடையோடு பகிரப்பட்ட பெண் என் முன்னாள் காதலி – மனைவி: லூட்டன் UK அனாதன் ஒப்புதல் வாக்குமூலம் !

‘Ana Than’ அனாதன் யார் இந்த முகநூல் பொறுக்கி? என்ற தலைப்பில் தேசம்நெற்றில் வெளியான செய்தியை அடுத்து சம்பந்தப்பட்ட முகநூலின் சொந்தக்காரர் தேசம்நெற்றைத் தொடர்புகொண்டு அரைநிர்வாணப் படங்களை தான் தான் பகிர்ந்ததை ஒப்புக்கொண்டார். இரு ஆண் குழந்தையின் தந்தையான மில்ட்ன் கீன்ஸ்ஸில் கடை வைத்திருந்த வர்த்தகரான இவர் முன்னாள் காதலியோடு மீண்டும் உறவை ஏற்படுத்தியதாகவும் அந்த உறவில் விரிசல் ஏற்பட்டதும் அவரைப் பழிவாங்கும் வகையில், அரை நிர்வாண உள்ளாடையோடு அவரது படங்களைப் பகிர்ந்துள்ளார். சம்பந்தப்பட்ட பெண் தற்போது யாழிலேயே வாழ்கின்றார்.

 

அப்பெண்ணோடு தான் சிறுவயது முதல் யாழ் சங்கானையில் உள்ள பாடசாலையில் கல்வி கற்றதாகவும் பதின்ப வயதில் அப்பெண்ணோடு காதல் மலர்ந்ததாகவும் தெரிவிக்கின்றார். பின்னல் அவர்கள் யுத்தம் காரணமாக வன்னிக்குப் புலம்பெயர தொடர்புகள் விடுபட்டதாகவும் அனாதன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். ஆனால் 1996இல் தான் பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்து விட இருவரது வாழ்க்கையும் வெவ்வேறு திசைகளில் பயணித்ததாகக் கூறுகின்றார்.

 

வன்னியில் இயக்கம் கட்டாய ஆள்சேர்ப்பில் ஆண்களையும் பெண்களையும் பிடித்துச் சென்றதால் அவளின் பெற்றோர் அவளுக்கு சிறுவயதிலேயே திருமணம் பேசி தங்களுக்கு பிடித்த ஒருவருக்கு திருமணம் செய்து வைத்ததாக லூட்டன் அனாதன் தெரிவிக்கின்றார். அதன் பின் மீண்டும் இவர்கள் தொடர்பை ஏற்படுத்தி உறவை வளர்த்து அது விரிசலாகி அவரது குடும்பமும் பிரிந்து தற்போது முகநூல் வசையாடல்களில் வந்து முடிந்துள்ளது. யுத்தம், பல வந்த ஆட்சேர்ப்பு என்பன இவ்வாறான சமூகச் சிதைவுகளையும் பண்பாட்டுச் சிதைவுகளையும் கூட இன்றும் ஏற்படுத்தி வருகின்றது. நாற்பது வயதில் பேரப்பிள்ளைகளை பராமரிக்கும் பெண்கள் வன்னியில் அதிகம்.

 

தற்போது மில்டன் கீன்ஸ் கடை உரிமையாளர் அனாதன் தேசம் ஜெயபாலனோடு நடத்திய உரையாடலை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..!

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *