16

16

உக்ரைன் தொடர்பில் பேச்சுவார்த்தையை தொடங்க விரும்புகிறோம் – ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்

ரஸ்ய உக்ரைன் போர் தொடர்பில், பேசுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

சீன அதிபர் ஜின்பிங் ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு அழைப்பு விடுத்ததை தொடர்ந்து புடின் இன்று(16)சீனாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

5-வது முறையாக பதவி ஏற்ற பிறகு அதிபர் புடின் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.

2 நாட்கள் தங்கும் அவர் ஜனாதிபதி ஜின்பிங் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

சீனா செல்லும் முன் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த புடின், உக்ரைன் போர் தொடர்பில் தான் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

நாங்கள் எப்போதுமே பேச்சுவார்த்தைக்கு மறுப்பு தெரிவித்ததில்லை என்று கூறியுள்ளார்.

உக்ரைன் தொடர்பில் பேச்சுவார்த்தையை தொடங்க விரும்புகிறோம், என்றாலும், அந்த பேச்சுவார்த்தைகள், ரஷ்யா உட்பட, பிரச்சினையில் சம்பந்தப்பட்டுள்ள எல்லா நாடுகளின் நலனையும் கருத்தில் கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் கற்றுத்தந்த பாடம் – இந்தியாவும் தமிழீழ விடுதலைப் போராட்டமும்..!

தமிழர்கள் தங்களுடைய உரிமைகளை சிங்கள பேரினவாத அரசிடம் இருந்து பெறுவதற்காக முன்னெடுக்கப்பட்ட இலங்கை தமிழரின் போராட்டத்தில் இந்தியாவின் தலையீடு பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தது. குறித்த தாக்கம் தமிழீழம் கோரிய போராட்டத்தில் ஏற்படுத்திய முடிவுகள் தொடர்பிலும் – கடந்த காலத்திலிருந்து தமிழர்களும் – தமிழ் அரசியல் தலைமைகளும் எவ்வாறான கற்றலை பெற்றுள்ளனர் – அதனை முறையாக நடைமுறை அரசியலில் பயன்படுத்துகின்றனரா..? என்பது தொடர்பிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் நினைவேந்தல் பற்றிய கருத்தாடல்களின் போக்கு ஆகிய விடயங்கள் தொடர்பாகவும் அரசியல் ஆய்வாளர் மயில்வாகனம் அருள்குமார் அவர்களுடன் பரபரப்பான ஓர் அரசியல் கலந்துரையாடல் .

தொகுப்பாளர் – திரு.த. ஜெயபாலன்.

இது தொடர்பான முழுமையான தேசம் திரை காணொளியை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்…!