போர் நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொள்வதாக ஹமாஸ் அறிவிப்பு – மகிழ்ச்சியில் பாலஸ்தீனியர்கள் !

எகிப்து மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் முன்வைத்த போர் நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொள்வதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

அந்த அமைப்பை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே, கத்தார் பிரதமர் மற்றும் எகிப்திய தலைவர்களுக்கு இந்த யோசனையை ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை ஹமாஸ் ஏற்றுக் கொண்ட போர்நிறுத்தப் பிரேரணையை இஸ்ரேல் அரசாங்கம் ஆய்வு செய்து வருவதாக இஸ்ரேலிய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக அறிய முடிகிறது.

இதனிடையே போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்த நிலையில் இடம்பெயர்ந்து ரபாவில் தங்கியுள்ள பலஸ்தீன மக்கள் மகிழ்ச்சி ஆராவாரத்தில் ஈடுபட்டுள்ளதையும் அறிய முடிகிறது.

 

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *