July

July

தொடரும் பொருளாதார நெருக்கடி – வடக்கில் நாட்கூலிகளின் பிள்ளைகளுக்கு எட்டாக்கனியாகும் இலவச கல்வி !

தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக பாடசாலைகளிலிருந்து மாணவர்கள் இடைவிலகும் அபாயம் அதிகரித்துள்ளதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஏற்பட்டுள்ள விவைாசி உயர்வானது நாளாந்த உணவுக்கான கையிருப்பையே சிதைத்து விடுகின்ற நிலையில் கல்வி எல்லாம் இரண்டாம் கட்டமாகிவருவதை பல பின்தங்கிய குடும்பங்களில் காண முடிகின்றது.
அண்மையில் கிளிநொச்சி கிராமப்புற பாடசாலை ஆசிரியர் ஒருவருடன் பாடசாலை மாணவர் நிலை பற்றி அறிய தேசம் இணையத்திலிருந்து தொடர்பு கொண்ட போது “ கிராமப்புறம் என்பதால் மட்டுமன்றி இங்குள்ள பல பிள்ளைகளுடைய பெற்றோர் நாட்கூலிகள். நாட்டின் விலையேறந்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். பிள்ளைகளுக்கு காலை உணவு கூட வழங்க அவர்களுக்கு வழி இல்லை. பாதிக்கும் மேற்பட்ட பிள்ளைகள் காலை உணவு உண்ணாமலேயே பாடசாலைக்கு வருகின்றனர். பல மாணவர்கள் காலைக்கூட்டத்திலேயே மயங்கி விழுந்து விடுகின்றனர். பசியோடு எவ்வாறு இந்த மாணவர்களால் 1.30 மணி வரை இருந்து கற்க முடியும். ஆரமப காலங்களில் வழங்கப்பட்ட சத்துணவு திட்டங்களும் நிறுத்தப்பட்டு விட்டன.” என வேதனையுடன் அந்த ஆசிரியர் பதிவு செய்திருந்தார்.
லட்சம் சிறுவர்களுக்கு உணவில்லையெனில்! - GTN
குறிப்பாக கிராமப்புறங்களில இந்த நிலை இன்னமும் இதிகமாகியு்ளதாக பாடசாலை அதிபர்கள்  பலரும் விசனப்பட்டுக்கொள்வதை காணமுடிகின்றது. கூலி வேலைககு போகும் தந்தை இருக்குமு் குடும்பங்களை கொண்ட பகுதிகளில் உயர்தரம் (12)  சாதாரண தரம் கற்கும் மாணவர்கள் (11) அடிக்கடி விடுமுறை எடுக்கின்றனர் எனவும், ஏன் என வினவப்பட்ட போது தந்தையுடன் வேலைக்கு செல்வதாக மாணவர்கள் கூறியதாகவும் ஒரு பாடசாலை அதிபர் கூறியிருந்தார்.

இது போக பாடசாலை உபகரணங்களின் விலையேற்றம் இன்னும் மாணவர்களை திண்டாட வைக்கின்றது. சாதாரண அப்பியாசக்கொப்பி ஒன்றின் அடிப்படை விலை 100 ரூபாயை தொடுகின்றது. அப்படியானால் ஏனைய பொருட்களின் விலை..?  டொலர் தட்டுப்பாடு காரணமாக காகிதங்களை இறக்குமதி செய்வதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதன்காரணமாக, அப்பியாசக் கொப்பிகள், எழுதுகருவிகள் உள்ளிட்ட ஏனைய பாடசாலை உபகரணங்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளன.
இந்தநிலையில், நாட்டின் பல பகுதிகளிலும் பாடசாலை உபகரணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விலையை விட அதிகமாக வர்த்தகர்கள் விற்பனை செய்வதால் தாம் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதுதான் நேரம் என கருதி பல தனியார் கல்வி நிலையங்களும் காசு கொள்ளையில் முழு மூச்சுடன் ஈடுபடுக்கின்றன. தனியார் கல்வி நிலையங்களில் பணியாற்றும்  பெரும்பாலான ஆசிரியர்கள் அரச பாடசாலைகளின் ஆசிரியர்களே. கேள்விகளை பாடசாலை கரும்பலகையில் எழுதிவிட்டு விடை தேவை என்றால் தனியார் கல்வி நியைத்துக்கு வரவும் எனக்கூறும் நிலையே இன்னமும் வடக்கில் தொடர்கிறது. உயர்தரம் மற்றும் சாதாரண தர கற்கைகளுக்கு பாடசாலை கல்வி மட்டுமே போதுமானதாக இல்லாததால் தனியார் கல்வி நிலையங்களுக்கு கட்டாயமாக போக வேண்டிய சூழல் உள்ள நிலையில் கலைப்பிரிவு மாணவர்களிடம் ரூபா 5000 வரை அறவிடப்படுகின்றது. அதே நேரம் விஞ்ஞான பிரிவு மாணவர்களிடம் ரூபா 10000 க்கும் மேல் அறவிடப்படுகின்றது.  பணம் உள்ள குடும்பங்களுக்கு சரி – இல்லாத – ஏழை மாணவர்களின் நி என்னவாகும்..?  இந்த ஆசிரியத்தை புனிதப்படுத்தும் பலரும் இதை கண்டுகொள்வதே கிடையாது. பொருளாதார நெருக்கடியில் இந்த ஆசிரியர்களின் சுரண்டல் இன்னமும் அதிகமாகி்கொண்டிருக்கிறது.
இன்னொரு பக்கம் எரிபொருள் தட்டுப்பாடு வேறு. அரசாங்க ஊழியர்களுக்கு தொடர்ந்து ஏதோவொரு வகையில் பெற்றோல் கிடைத்துக்கொண்டே இருக்கறது. அவர்களுடைய பிள்ளைகள் பாடசாலைக்கு சென்றே படிப்பார்கள். ஆனால் தினசரி வேலைக்கு போகும் நாட்கூலிகளுக்கு பெற்றோல் இல்லை. இருந்தாலும் அதன் லீட்டரின் விலை 500 ரூபாய்.  நாட்கூலி 1500 ரூபாயில் பெற்றோல் போடுவதா – பிள்ளையை படிக்க வைப்பதா என்ற சூழலே வடக்கில் காணப்படுகின்றது.
யுத்தத்தின் கோர பிடியிலிருந்து ஓரளவு நிமிர்ந்து கொண்டிருந்த நமது சமூகமானது இன்று மீண்டும் பொருளாதார நெருக்கடியின் சுமையால் தனது கல்வி வாய்ப்பை இழக்க ஆரம்பித்துள்ளது.
எனவே விரைந்து செயலாற்றி மீண்டும் இந்த மாணவர்களின் கல்வியை மேம்படுத்த – தொடர்ந்து கல்வி கிடைக்க வடக்குக்கான கல்வி அமைச்சின் நிறுவனங்களும் – கற்ற சமூகமும் – புலம்பெயர் தமிழர்களும் – குறிப்பாக தமிழ்தேசியம் என கூவித்திரிந்து கொண்டிருக்கும் வடக்கின் அரசியல் தலைமைகளும் – தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் –  இது தொடர்பில் அதீத  கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது.

லிபியாவில் தொடர் மின்வெட்டு – பாராளுமன்றத்துக்கு தீ வைத்து சூறையாடிய மக்கள் !

ஆப்பிரிக்க நாடான லிபியாவில் அதிபர் கடாஃபியின் மறைவுக்குப் பிறகு அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. தற்போதைய அரசுக்கு தொடர்ந்து எதிர்ப்பை தெரிவித்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, டாப்ரக் நகரில் உள்ள லிபிய பாராளுமன்றத்தைச் சூறையாடிய மக்கள் பாராளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

லிபியாவின் கிழக்கு நகரமான டோப்ரூக்கில் உள்ள நாடாளுமன்றத்தை போராட்டக்காரர்கள் தாக்கி அதன் சில பகுதிகளுக்கு தீ மூட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொடர் மின்வெட்டு மற்றும் கட்டுப்பாடற்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கண்டித்தே அங்கு போராட்டம் நடத்தப்படுகின்றது.

லிபியா மக்கள் டோப்ரூக் நகரில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தின் மீது தாக்குதல் நடத்தி, பின் நாடாளுமன்ற கட்டடத்தை முற்றுகையிட்டு அதன் ஒரு பகுதிக்கு தீ மூட்டியுள்ளனர்.

இந்நிலையில், லிபிய பாராளுமன்ற கட்டிடத்துக்கு தீ வைத்த சம்பவத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

வெளிநாட்டு பொருட்களாலே கொரோனா பரவுகிறது – அவதானமாக இருக்குமாறு வடகொரியா அறிவுறுத்தல் !

தென் கொரியா எல்லைக்கு அருகில் அன்னிய பொருட்களை குடிமக்கள் தொடுவதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்று, வடகொரியாவுக்குள் பரவியதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால், தென்பகுதியில் இருந்து எல்லையில் வீசியெறியும் பொருட்களை சுற்றி பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக தெற்கில் உள்ள ஆர்வலர்கள் துண்டு பிரசுரங்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை அனுப்ப பலூன்களை எல்லையில் பறக்கவிட்டனர். அதற்கு பதிலளிக்கும் விதமாக, கொவிட் அந்த வழியில் எல்லையைத் தாண்டியிருக்க சாத்தியம் இல்லை என்று தென்கொரியா கூறியுள்ளது.

வட கொரியாவின் மாநில ஊடகங்களின்படி, தென் கொரிய எல்லைக்கு அருகில் அடையாளம் தெரியாத பொருட்களை தொட்டதன் பின்னர், கொவிட் நோயால் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் அதிகாரப்பூர்வ விசாரணையில் கண்டறியப்பட்டனர்.

இபோ-ரியில் உள்ள ஒரு மலையில் பொருட்களைக் கண்டுபிடித்த பின்னர், ஏப்ரல் தொடக்கத்தில் 18 வயது சிப்பாய் மற்றும் 5 வயது குழந்தை வைரஸுக்கு நேர்மறை சோதனை செய்ததாக அது தெரிவித்துள்ளது.

விசாரணையின் விளைவாக, நாட்டில் உள்ள மக்கள் காற்று மற்றும் பிற காலநிலை நிகழ்வுகள் மற்றும் எல்லைக் கோடு மற்றும் எல்லைகளை ஒட்டிய பகுதிகளில் பலூன்கள் மூலம் வரும் அன்னிய விஷயங்களை விழிப்புடன் கையாள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஒரு விசித்திரமான பொருளைக் கவனிக்கும் எவரும் உடனடியாக அதைப் புகாரளிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். எனவே அவசரகால தொற்றுநோய் எதிர்ப்புக் குழுவால் அதை விரைவாக அகற்ற முடியும்.

அறிக்கை தென் கொரியாவை நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், தென்கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சகம் கொவிட் எவ்வாறு நாட்டிற்குள் வந்திருக்க முடியும் என்பதற்கான வடக்கின் விளக்கத்தை கடுமையாக மறுத்தது.

நேட்டோ தான் பிரச்சினைகளுக்கான மூல காரணம் – ரஷ்யாவும் சீனாவும் சாடல் !

நேட்டோ நாடுகளுக்கு ரஷியா நேரடி அச்சுறுத்தலாக இருக்கிறது என்றும், உலக ஸ்திரத்தன்மைக்கு சீனா கடும் சவால்களை முன்வைக்கிறது என்றும், நேட்டோ மாநாட்டில் பிரகடனம் செய்யப்பட்டது.

சைபர் தாக்குதல்கள் முதல் பருவநிலை மாற்றம் வரை, பெரும் அதிகாரப் போட்டி மற்றும் எண்ணற்ற அச்சுறுத்தல்களின் ஆபத்தான கட்டத்தில் உலகம் மூழ்கியுள்ளது என்று மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நேட்டோ அமைப்பை ரஷியா மற்றும் சீனா கடுமையாக சாடி உள்ளன. எங்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள், எந்த பிரதேசத்தில் இருந்து உருவாக்கப்படுகிறதோ, அதே அச்சுறுத்தல்களை நாங்களும் உருவாக்குவோம், என ரஷிய அதிபர் புடின் எச்சரித்தார்.

 

நேட்டோதான் உலகம் முழுவதும் பிரச்சினைகளை உருவாக்குகிறது என சீனா குற்றம்சாட்டி உள்ளது. ரஷிய அதிபர் புடினின் அச்சுறுத்தல்கள் புதிது இல்லை என்று எஸ்டோனிய பிரதமர் காஜா கல்லாஸ் தெரிவித்தார்.

‘போர் முடிவுக்கு வந்தது – போருக்கான காரணம் முடியவில்லை.’ – கனேடிய நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு !

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் தமிழ் இனப்படுகொலைக் கல்வி வார அறிவிப்பை ‘கல்வி’ நோக்கத்திற்காகச் செய்ததாகக் கூறி தடை கோரிய கனடாவில் வசிக்கும் சிங்களவரின் மனுவை கனேடிய நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

 

உலக வரலாற்றில் தமிழ் இனப்படுகொலையும் ஏனைய இனப்படுகொலைகளும் இடம்பெற்ற காலப்பகுதியாக ஒவ்வொரு வருடமும் மே 18ஆம் திகதியுடன் முடிவடையும் ஏழுநாட்களை புலம்பெயர்ந்த கனேடிய தமிழர்கள் குறிப்பிடுவது சட்டவிரோதமானது என தெரிவித்தும் சர்வதேச சட்டத்தின் கீழ் எந்தவொரு தமிழ் இனப்படுகொலையும் அங்கீகரிக்கப்படவில்லை எனவும், ‘இனப்படுகொலை’ என்ற வார்த்தையை பயன்படுத்த கனேடிய மாகாண அரசாங்கத்திற்கு அதிகாரம் இல்லை எனவும் சிங்கள விண்ணப்பதாரர்கள் தமது மனுவில் தெரிவித்துள்ளனர்.

 

இது ஒரு பிரிவினருக்கு எதிராக மற்றொரு பிரிவினர் மீதான வெறுப்பை வளர்க்கிறது என்றும் இந்த வழக்கில் வாதிடப்பட்டது. எனினும் சிங்கள விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை இரத்து செய்த ஒன்ராறியோ நீதிமன்றம், இலங்கை 26 ஆண்டுகால உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது, ஆனால் ‘போருக்கான காரணம் முடிவிற்கு வரவில்லை’ என்று அறிவித்துள்ளது.