31

31

“தீவிரமாக பரவும் டெல்டா. இரண்டு தடுப்பூசிகளுமே பயனற்றவை.” – அமெரிக்கா அதிர்ச்சி அறிக்கை !

இந்தியாவில் பி.1.617.2 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரசுக்கு டெல்டா வைரஸ் என உலக சுகாதார அமைப்பு பெயர் சூட்டி உள்ளது. இந்த வைரஸ்தான் இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலையில் அதிக கைவரிசை காட்டியது.

டெல்டா வைரஸ், உலகின் 100 நாடுகளுக்கு மேல் பரவிவிட்டது. எதிர்காலத்தில் இது இன்னும் தீவிரமாக தாக்கும் வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள சி.டி.சி. என்னும் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் அறிக்கை ஊடகங்களில் கசிந்துள்ளன. அதில் பல முக்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அந்த அறிக்கையில் ,

“டெல்டா வைரஸ் பெரியம்மை போல எளிதாக பரவும், கடுமையாக பாதிக்கும். மேலும், தடுப்பூசி போடாதவர்கள் என்ன வேகத்தில் பரப்புவார்களோ, அதே வேகத்தில் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களும் டெல்டா வைரசை பரப்புவார்கள். இது மெர்ஸ், சார்ஸ், எபோலா, ஜலதோஷம், பருவ காய்ச்சல், சிற்றம்மை போல வேகமாக பரவுகிற வைரஸ் ஆகும். இது பெரியம்மை போல தொற்றும். அதே நேரத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் பாதுகாப்பானவர்கள். தடுப்பூசிகள் நோய்த்தொற்றின் 90 சதவீத தீவிரத்தை தடுக்கிறது. ஆனால் தொற்றை தடுப்பதிலும், பரப்புவதிலும் குறைவான செயல்திறனைத்தான் கொண்டுள்ளன.” என குறித்த அறிக்கை தெரிவித்துள்ளது.

இதுபற்றி சி.டி.சி.யின். இயக்குனர் டாக்டர் ரோச்செல்லி வாலன்ஸ்கை கூறுகையில், “2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், தொற்று பாதிப்புக்குள்ளாகிறபோது, தடுப்பூசி போடாமல் தொற்று பாதிப்புக்குள்ளாகிறவர்கள் போலவே மூக்கிலும், தொண்டையிலும் அதிகளவிலான வைரசை சுமந்து செல்வார்கள். சிற்றம்மை, பெரியம்மை போல மிகவும் பரவுகிற வைரஸ் டெல்டா வைரஸ். பள்ளிக்கூடங்களில், மாணவர்கள், ஊழியர்கள், வருகிறவர்கள் என அனைவரும் கண்டிப்பாக முககவசத்தை எல்லா நேரமும் அணிந்திருக்க வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளார்.

ஐ.நா. அலுவலகம் மீது தலிபான்கள் தாக்குதல் !

மேற்கு ஆப்கானிஸ்தானில் செயல்படும் ஐ.நா. அலுவலகம் மீது தலிபான்கள் நடத்திய தாக்குதலில் பொலிசார் ஒருவர் உயிரிழந்தார்.

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அரசுக்கும் இடையே நீண்டகால போர் நடைபெற்று வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டுவர அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எனினும் பல சுற்று முடிவில் உடன்பாடு எட்டப்படவில்லை. அரசுக்கு ஆதரவாக அமெரிக்காவின் நேட்டோ படைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து படைகளை விலக்கி கொள்வது என அமெரிக்க அரசு முடிவு செய்தது.

எனினும், திட்டமிட்டபடி கடந்த முதலாம் திகதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்கு பதிலாக தள்ளி போனது. இதன்பின் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் செயல்படும் ஹெராட்டில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய வளாகத்தை ‘தலிபான்கள்’ தாக்கியதால் ஆப்கானிஸ்தான் பொலிஸார் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் சில அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.நா. அலுவலகத்தில் பாதுகாப்பு குவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த அவுஸ்ரேலியாவில் களமிறக்கப்பட்ட இராணுவம் !

கொவிட் முடக்கநிலை கட்டுப்பாடுகளை அமுல்படுத்த உதவுவதற்காக அவுஸ்ரேலியா அரசாங்கம், சிட்னிக்கு நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்களை அனுப்பியுள்ளது.

ஜூன் மாதம் தொடங்கிய டெல்டா மாறுபாடு கிட்டத்தட்ட 3,000 தொற்றுநோய்களை உருவாக்கியது மற்றும் ஒன்பது இறப்புகளுக்கு வழிவகுத்தது.

அவுஸ்ரேலிய பாதுகாப்பு படை வீரர்கள், திங்கட்கிழமை நிராயுதபாணியான ரோந்துப் பணிகளைத் தொடங்குவதற்கு முன் வார இறுதியில் பயிற்சி பெறுவார்கள். ஆனால், இராணுவ தலையீடு அவசியமா என்று பலர் கேள்வி எழுப்பினர்.

முடக்கநிலை கட்டுப்பாடுகள் குறைந்தபட்சம் ஒகஸ்ட் மாதம் 28ஆம் திகதி வரை நீடிக்கப்பட வாய்ப்புள்ளது. அத்தியாவசிய உடற்பயிற்சி, ஷாப்பிங், கவனிப்பு மற்றும் பிற காரணங்களைத் தவிர மக்கள் வீட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐந்து வாரங்கள் முடக்கப்பட்ட போதிலும், நாட்டின் மிகப்பெரிய நகரத்தில் நோய்த்தொற்றுகள் தொடர்ந்து பரவி வருகின்றன. அதிகாரிகள் 170 புதிய தொற்றுகளை வெள்ளிக்கிழமை பதிவு செய்தனர்.

10 கிமீ (6.2 மைல்) பயண வரம்பை உள்ளடக்கிய விதிகளை மக்கள் பின்பற்றுகிறார்களா என்பதை உறுதி செய்ய இராணுவ வீரர்கள் கண்கானிப்பில் ஈடுபடுவார்கள்.