15

15

பிரித்தானியாவில் பதிவுகள் இல்லாமல் 1.2 மில்லியன் பேர்: இவர்ளைப் பதிவு செய்ய பொதுமருத்துவர்கள் முன்வருகின்றார்கள் இல்லை!!!

பிரித்தானியாவில் குடியுரிமை மற்றும் ஆவணங்கள் ஏதும் இன்றி 1.2 மில்லியன் பேர் இருப்பதாகவும், 80வீதமான பொது மருத்துவர்கள் இவர்களை தங்கள் மருத்துவ மையத்தில் பதிவு செய்ய மறுக்கின்றனர் எனவும் தெரியவருகின்றது. தற்போது மிக வேகமாக பரவி வருகின்ற டெல்டா வெரியன்ரும், இனி வரும் குளிர் காலத்தில் ஏற்படப் போகும் வைரஸ் தொற்றுக்களாலும் இந்த மக்கள் பிரிவினர் கூடுதலாகப் பாதிக்கப்படுவர் என அஞ்சப்படுகின்றது.

தற்போதைய கொன்சவேடிவ் அரசு குடிவருவோருக்கு எதிராக கடந்த பல ஆண்டுகளாக கடும் நடவடிக்கைகளை எடுத்து வந்ததால்; வீடுவாடகைக்கு விடுபவர்கள் முதல் பொதுமருத்துவர்கள் வரை உள்துறை அமைச்சின் முகவர்கள் போலவே செயற்பட நிர்ப்பந்திக்கப்பட்டனர். தற்போது பொது மருத்துவர்களுக்கு அவ்வாறான நிர்ப்பந்தங்கள் எதுவும் இல்லாத போதும், பொது மருத்துவர்கள் குடிவரவுப் பத்திரங்கள் இல்லாதவர்களை தங்கள் சுகாதார மையங்களில் பதிவு செய்ய மறுக்கின்றனர்.

தற்போது ஜெனரல் மெடிக்கல் கவுன்சில் குடிவரவு பத்திரங்கள் மற்றும் ஆவணங்கள் இல்லாதவர்களையும் பொது மருத்துவர்கள் தங்கள் மருத்துவ சுகாதார மையங்களில் பதிவுசெய்து; அவர்களுக்கான கோவிட் வக்சினை வழங்குமாறு வலியுறுத்தி வருகின்றது. அரசும் பொது மருத்துவர்கள் எவ்வித குடிவரவு மற்றும் ஆவணங்கள் இல்லாமலேயே பொதுமருத்துவர்கள் தங்கள் மையங்களில் யாரையும் பதிவு செய்யலாம் என்பதையும் வலியுறுத்தி உள்ளது. அரசுக்கு எத்தனை பேர் கோவிட் வக்சீன் போட்டுள்ளார்கள் என்று தெரியுமே அல்லாமல் எத்தனை பேர் வக்சீன் போட்டுக் கொள்ளாமல் உள்ளனர் என்ற விபரம் தெரியாது.

மேலும் பொது மருத்துவர்களின் கீழ் பதிவு செய்பவர்களின் விபரங்கள் குடிவரவுத் திணைக்களத்துடன் பரிமாறப்படாது என்ற உறுதியையும் ஜெனரல் மெடிகல் கவுன்சில் வழங்கி உள்ளது. மேலும் ஆவணங்கள் இல்லாதவர்கள் வக்சீன் போடுவதற்கு வசதியாக நடமாடும் வக்சீன் மையங்கள் சிலவற்றையும் அரசு இயக்கிவருகின்றது.

பல லட்சம் ரூபாய் ஆலய ஊழல்: வாள் வெட்டில் ஈடுபட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் நேற்று சரணடைந்தார்!

யாழ் சித்தங்கேணியில் வாள்வெட்டில் ஈடுபட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ரஜீவன் நேற்று யூலை 14 இல் சரணடைந்தார். யுலை 11 இல் வாள் வெட்டு இடம்பெற்றது முதல் தலைமறைவாக இருந்த இவர் நேற்று மாலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார். இவரினால் வாள்வெட்டுக்கு உள்ளான குலசிங்கம் குலரத்தினம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று தற்போது வீட்டுக்கு வந்துள்ளார்.

சித்தங்கேணி பிள்ளையார் கோவிலில் இடம்பெற்ற மாகும்பாபிஷேகத்தையொட்டி உலகெங்கும் இருக்கும் ஆலயத்தின் அடியவர்களிடம் சேகரிக்கப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நிதி மோசடி செய்யப்பட்டது தொடர்பான வாக்கு வாதத்திலேயே ரஜீவன் வாள்வெட்டில் ஈடுபட்டதாக தெரியவருகிறது. மகா கும்பாபிஷேகத்திற்கு ஊரில் நிதிப் பங்களிப்புசெய்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்ட போதும் வெளிநாடுகளில் இருந்து நிதிப்பங்களிப்பு செய்த பலரின் பெயர்கள் வெளிவரவில்லை. வெளிநாட்டில் இருந்து நிதிப்பங்களிப்புச் செய்தவர்கள் ஆலயத்துடன் தொடர்புகொண்டு தாங்கள் நிதிப் பங்களிப்புச் செய்ததை நிர்வாகத்திடம் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக கும்பாபிஷேக நிதி கணக்குகளுக்கு பொறுப்பாக இருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேசசபை உறுப்பினர் ரஜீவன் குழுவினருக்கும் ஆலயத்தின் நிர்வாகத் தலைவராக இருந்த குலரத்தினம் குலசிங்கத்திற்கும் இடையே சிறிதுகாலமாக முறுகல் நிலை காணப்பட்டது.

யூன் 11 மாலை வாள்வெட்டு நடப்பதற்கு முன்னரும் இவர்கள் தொலைபேசியில் வாக்குவாதப்பட்டு நேரடியாக பார்த்துக்கொள்வதாக ரஜீவன் குலரத்தினத்திற்கு சவால்விட்டுள்ளார். அதனைத் தொடர்ந்தே அன்றைய தினம் மாலை 3:30 மணியளவில் அருகில் இருற்த சித்தங்கேணி சிவன் கோவில் வளாகத்தில் ரஜீவன் வாள் கொண்டுவந்து குலரத்தினத்தை தாக்கி உள்ளார்.

தமிழர்களுடைய அரசியல் தீர்வுக்காக கூட்டமைப்பினர் அமெரிக்கத் தூதுவரை சந்திப்பாம் – பல சந்திப்புக்கள் நடந்தாயிற்று தீர்வைத்தான் காணவில்லை !

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவினருடன் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பி. டெப்லிட்ஸ் தலைமையிலான குழுவினர் இன்று முக்கிய பேச்சு நடத்தியுள்ளனர்.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லலத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது அரசியல் தீர்வு தொடர்பில் நீண்ட நேரம் பேசப்பட்டது எனக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அத்துடன் தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் உள்ளிட்ட பரந்துபட்ட விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ்ர்களின் அரசியல் தீர்வுக்காக பேசப்பட்டது என எத்தனையோ சந்திப்புக்கள் நடந்தாகிவிட்டது. இன்று வரை அந்த தீர்வு ஒன்றுமே கிடைக்கவில்லை என்பதே யதார்த்தம். இவர்களுடன் ஒப்பிடும் போது அரச தரப்புடன் உள்ள தமிழ் அரசியல்தலைவர்கள் இவர்களுடைய விமர்சனங்களுக்கு நடுவிலும் ஏதோ சிலவற்றை தானும் மக்களுக்காக செய்து முடித்துவிட்டனர். ஆனால் இந்த தமிழ்தேசியம் பேசுவோர் மட்டும் இன்னமும் துரோகி பட்டம் சூட்டிக்கொண்டும் – இந்தியாவும் சர்வதேசமும் ஏதாவது செய்யும் என்ற மாயையையும் ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.

இவர்கள் கூறும் சர்வதேச சட்டங்கள் என்ன தீர்வை வழங்கிவிட்டன என்று தான் தெரியவில்லை. அண்மையில் கூட வரிச்சலுகை தரமாட்டோம் என  ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசை  கடிந்து கொண்டது. ஆனால் இலங்கையின் அரசு அதை சட்டைசெய்ததாகவே தெரியவில்லை.

தமிழர்களுக்கு அரசியல் சார்ந்து ஏதாவது தீர்வு கிடைக்க வேண்டுமாயின் தமிழ்தலைமைகள் பேச வேண்டியது அமெரிக்காவுடனோ – இந்தியாவுடனோ – சர்வதேசத்துடனோ அல்ல. இலங்கையின் அரசாங்கத்திடம் பேச வேண்டும். கடந்த நல்லாட்சி கால அரசில் இவர்களால் ஒரு அரசியல்கைதியையாவது விடுவிக்க முடிந்ததா..? இல்லையே.

வீணாக மக்களை இன்னமும் மகிந்த தரப்பு எதிரிகள் என்ற விம்பத்துக்குள்ளேயே வைத்துக்கொண்டு தமிழ் சமூகத்தின் பிரச்சினைகளை தீர்க்காது இருப்பதே இவர்களுடைய முக்கியமான இலக்கு போல் தோன்றுகிறது. சில வேளை இருக்கக்கூடும். மக்களுடைய அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விட்டால் இவர்கள் எதை வைத்து அரசியல் செய்வார்கள் ..? என நாடாளுமன்றில் சுரேன் ராகவன் கேட்டது தான் நினைவிற்கு வருகிறது..!