13

13

“வீரர்களின் திறமைகளை சரியான முறையில் பயன்படுத்தாமையே தற்போதைய கிரிக்கெட் வீழ்ச்சிக்கான முக்கிய காரணம்.” – சனத் ஜயசூரிய

இலங்கை கிரிக்கெட் அணியின் சில வீரர்களின் திறமைகளை சரியான முறையில் பயன்படுத்தாமையே தற்போதைய கிரிக்கெட் வீழ்ச்சிக்கான முக்கிய காரணம் என முன்னாள் இலங்கை அணித்தலைவர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தங்களுக்கு எதாவது செய்வதற்கான வாய்ப்பு கிடைக்குமாயின் நூற்றுக்கு நூறு வீதம் தங்களது உழைப்பை வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“கொரோனாவில் இருந்து இப்போதைக்கு மீட்சி இல்லை.” – உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு !

கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட  கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி உலகத்தையே முழுதாக முடக்கி வருகின்றது. வைரஸ் பரவ ஆரம்பித்து  சுமார் 5 மாதங்களுக்கு பிறகு பாதிப்பு குறைய தொடங்கியது. மேலும் தடுப்பு மருந்துகளும் பயன்பாட்டுக்கு வந்தன. இதனால் கொரோனா விரைவில் கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் வைரசின் தாக்கம் வேகமெடுத்துள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று இன்னும் அதிவேகமாக வளர்ந்து வருகிறது என்றும் அது முடிவுக்குவர நீண்ட காலம் ஆகலாம் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதாளோம் கூறியதாவது:-

கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் பல்வேறு நாடுகளில் ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சை பிரிவுகள் நிரம்பி வழிகின்றன. பல நாடுகளில் தொற்று பாதிப்பு அதிகரித்தாலும் மக்களின் அலட்சியம் காரணமாக தொடர்ந்து பரவி வருகிறது. இளம் வயதினர் தங்களுக்கு தொற்று வராது என்று நம்புகின்றனர். ஆனால் அது தவறானது.

கொரோனா பரவல் குறித்து பல்வேறு குழப்பங்கள், சிகிச்சையில் உள்ள சிக்கல்களால் வைரஸ் முடிவுக்கு வர நீண்டகாலம் ஆகும்.

பொதுமக்களின் ஒத்துழைப்பு மூலம் தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவது சாத்தியம் என்பது நமக்கு தெரியவந்துள்ள உண்மை என்றார்.

உலக சுகாதார அமைப்பின் உயர்அதிகாரி மரியாவான் கெர்கோவ் கூறும்போது, தொடர்ந்து 7 வாரமாக வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் உலகளவில் கொரோனா தொற்று 9 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே போல் இறப்பு எண்ணிக்கை ஒரே வாரத்தில் 5 சதவீதம் அதிகரித்து இருக்கிறது என்றார்.

இலங்கையில் தீவிரவாத செயற்பாடுகளுக்கான தடையின் எதிரொலி – பலப்படுத்தப்பட்டுள்ள தமிழ்நாட்டின் பாதுகாப்பு !

இலங்கையில் தீவிரவாத செயற்பாடுகளுக்கான தடைகளை தொடர்ந்து சர்வதேச வருகை மற்றும் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

அல்கொய்தா மற்றும் ஐ.எஸ். உட்பட 11 பயங்கரவாத குழுக்களை தடை செய்யும் நடவடிக்கையை இலங்கை ஆரம்பித்த நிலையில் இந்த அச்சுறுத்தல் உணரப்பட்டதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் குறித்த தடையை அடுத்து ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் தொடர்பாக அனைத்து மாநில ஆணையர்கள் மற்றும் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து மத அடிப்படைவாதிகள் விமானம் அல்லது கடல் வழியாக சட்டவிரோதமாக குடியேறுவதற்கான வாய்ப்பு குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் மத அடிப்படைவாதிகள் தமிழ்நாட்டில் தளம் அமைப்பதைத் தடுக்க உளவுத்துறையை பலப்படுத்தவும் மாநிலம் முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் பொலிஸாருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த வாரம், தீவிரவாத நடவடிக்கைகள் தொடர்பாக அல்கொய்தா, ஐ.எஸ். உள்ளிட்ட 11 குழுக்களை தடை செய்ய சட்டமா அதிபர் அங்கீகாரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.