11

11

பொதுபல சேனா அமைப்பை தடைசெய்யவேண்டும் என்ற பரிந்துரை நிராகரிப்பு !

பொதுபல சேனா அமைப்பை தடைசெய்யவேண்டும் என்ற பரிந்துரையை அமைச்சர்கள் குழு நிராகரித்துள்ளதாக அமைச்சரவை குழுவின் செயலாளர் ஹரிகுப்த ரோகணதீர தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆறு உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சர்கள் குழுவே இத்தீர்மானித்தை எடுத்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்ட சஹ்ரான் ஹாசிமின் அமைப்பு உட்பட பல அமைப்புகள் குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளன. இந்த அமைப்புகளை தடை செய்யவேண்டும் என்ற பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என மேலும் தெரிவித்தார்.

எனினும் பொதுபலசேனா குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் அமைப்பு இல்லை என்பதால், அதனை தடை செய்வதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

“இந்த வருட இறுதிக்குள் மாகாணசபை தேர்தல்.” – அமைச்சர் நாமல் ராஜபக்ச

“அரசாங்கம் இந்த வருட இறுதிக்குள் மாகாணசபை தேர்தல்களை நடத்தும் நோக்கத்துடன் உள்ளது.” என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தேர்தலை நடத்துவதற்கு அவசியமான திருத்தங்கள் அதனை நடத்துவதற்கான நடவடிக்கைகளிற்கு நான் ஆதரவை வழங்குவேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் கட்சி தலைவர்களின் சந்திப்பில் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்களை முன்னெடுக்க எண்ணியுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர்
எதிர்கட்சியினர் மாகணசபை தேர்தல் முறை குறித்து ஏதாவது எதிர்ப்பினை வெளியிட்டால் அவர்கள் அதற்கான மாற்றுவழிகளை முன்வைக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கை அரசின் கைக்கூலியாக அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா செயற்படுகின்றாரா? – வட மாகாண கடற்றொழிலாளர்கள் சந்தேகம் !

வட பகுதி தமிழ் மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் இடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் இலங்கை அரசின் கைக்கூலியாக அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா செயற்படுகின்றாரா? என வட மாகாண கடற்றொழிலாளர்கள் இயக்கம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.

இந்திய மீனவர்களுக்கு அனுமதிப்பத்திர நடைமுறை ஊடாக இலங்கை கடற்பரப்பிற்குள் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அனுமதிப்பது தொடர்பான முன்மொழிவை டக்ளஸ் தேவானந்தா முன்வைத்தமை தொடர்பில் வட மாகாண தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் கடல் தொழில் நிலையம் ஆகியன இணைந்து தமது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளன. அந்தக்கண்டன அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் கடற்றொழில் அமைச்சர்களாக இருந்த பெரும்பான்மையினத்தவர்களுக்கே இவ்வாறான யோசனை உருவாகாத நிலையில், தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று நாடாளுமன்றம் சென்ற டக்ளஸ் தேவானந்தா தமிழர்களுக்கே அநீதி இழைக்கின்றார் என வட மாகாண கடற்றொழிலாளர்கள்  குற்றஞ்சாட்டியுள்ளனர்.

“தொல்லியல் திணைக்களத்துக்கு புதிதாக ஆலயங்கள் கட்டுவதற்கோ விகாரைகள் கட்டுவதற்கோ அவர்களுக்குரிய சட்டத்திலே எந்தவொரு அதிகாரங்களும் கிடையாது.” – எம்.ஏ.சுமந்திரன்

“தொல்லியல் திணைக்களத்துக்கு புதிதாக ஆலயங்கள் கட்டுவதற்கோ விகாரைகள் கட்டுவதற்கோ அவர்களுக்குரிய சட்டத்திலே எந்தவொரு அதிகாரங்களும் கிடையாது.” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன்,  என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சி, உருத்திரபுரம் பகுதியில் அமைந்துள்ள உருத்திரபுரீஸ்வரர் கோயிலில் பௌத்த விகாரை அமைப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக கோயில் வளாகத்தில் நேற்று(10.04.2021) விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

அந்தக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தெரிவிக்கையில், “உருத்திரபுரீஸ்வரர் கோயில் வளாகத்தில் உள்ள மேட்டில் பௌத்த விகாரை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தொல்லியல் திணைக்களத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ள சட்டத்தில் அவர்களுக்கு உள்ள அதிகாரமானது, தொன்மை வாய்ந்த புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது மட்டுமேயாகும். புதிதாக ஆலயங்கள் கட்டுவதற்கோ விகாரைகள் கட்டுவதற்கோ அவர்களுக்குரிய சட்டத்திலே எந்தவொரு அதிகாரங்களும் கிடையாது.

கிளிநொச்சி, உருத்திரபுரீஸ்வரர் கோயிலில் பௌத்த விகாரை அமைக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. கோயில் வளாகத்தில் தொல்பொருள் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள தாங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. அவ்வாறான ஆராய்ச்சிகள் தமிழ் தரப்பையும் இணைத்து மேற்கொள்ளப்பட வேண்டும்.

கடந்த தடவை குறித்த கோயிலுக்கு வந்திருந்த தொல்பொருள் திணைக்களத்தினரின் நடவடிக்கைக்கு ஊர் மக்கள் ஒன்றுகூடி எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் அவர்கள் நடவடிக்கையைக் கைவிட்டுப் போயுள்ளார்கள். இந்நிலையில், தொல்லியல் திணைக்களம் விகாரைகள் கட்டுவதற்கான நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்தால் அதனை நாம் வலுவாக எதிர்ப்போம்.

இதேவேளை, எமது பிரதேசங்களிலே புராதனச் சின்னங்கள் ஏராளமாக இருக்கின்றன. அவ்வாறான புராதனச் சின்னங்களை அவர்கள் ஆராய்ச்சி செய்யலாம். நாம் தொன்மை வாய்ந்த ஒரு இனம் என்ற நிலையில் எமது பிரதேசங்களில் நிச்சயமாக பல தொன்மை வாய்ந்த இடங்கள் இருக்கும். எனவே, அவை ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும். இதன்போது, தமிழர்கள் எப்போதிருந்து இங்கே வாழ்ந்தார்கள் என்பதை உறுதிப்படுத்தக் கூடியதாக இருக்கும்.

எனவே, அவ்வாறான ஆராய்ச்சிகள் செய்யப்படும்போது தமிழ் மக்களினுடைய பிரதிநிதிகள், துறைசார் உத்தியோகத்தர்கள், துறைசார் மாணவர்கள் எல்லோரையும் இணைத்து அந்த ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெடுக்குநாறி, உருத்திரபுரீச்சகம் ஆகிய ஆலய பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு ! – விதுர விக்ரமநாயக்க

வவுனியா வெடுக்குநாறி, கிளிநொச்சி உருத்திரபுரீச்சகம் ஆகிய ஆலயங்களுக்கு, புத்தாண்டுக்கு பின்னர் விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்போது குறித்த ஆலயங்களில் காணப்படும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை வழங்குவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை முல்லைத்தீவு- குருந்தூர் மலைக்கு அருகிலுள்ள 400 ஏக்கர் காணிகளை தொல்பொருள் செயற்பாடுகளுக்கு பெற்றுக்கொள்ள முன்னெடுத்த நடவடிக்கையும் நிறுத்தப்பட்டுள்ளதாக விதுர விக்ரமநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

குருந்தூர் மலைக்கு அருகிலுள்ள 400 ஏக்கர் காணிகளை கையகப்படுத்தும் நடவடிக்கையை நிறுத்துமாறும் இது பொருத்தமற்ற செயற்பாடாகுமெனவும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களினால் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவுக்கு சுட்டிக்காட்டப்பட்டது.

அதனைத் தொடர்ந்தே 400 ஏக்கர் காணிகளை தொல்பொருள் செயற்பாடுகளுக்கு பெற்றுக்கொள்ளுவது நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சென்னை அணி தலைவர் டோனிக்கு ரூ.12 லட்சம் அபராதம் !

14-வது ஐ.பி.எல் தொடரில்  சென்னை அணி நேற்று நடந்த தொடக்க ஆட்டத்தில் டெல்லி அணியிடம் தோற்றது. 188 ரன் குவித்தும் சென்னை அணி  அணியால் வெற்றி பெற முடியவில்லை. அந்த அளவுக்கு அணியின் பந்து வீச்சு பலவீனமாக இருந்தது.

இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் மெதுவாக பந்துவீசினார்கள். குறிப்பிட்ட நேரத்தில் அவர்கள் பந்துவீசாமல் கூடுதல் நேரத்தை எடுத்துக்கொண்டனர்.

இதற்காக ஐ.பி.எல். விதிமுறைப்படி சென்னை அணி தலைவர் டோனி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு ரூ.12 லட்சம் (இந்திய ரூபாய்)  அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். விளையாட்டு விதிப்படி 20 ஓவரை 90 நிமிடங்களில் வீச வேண்டும். அதாவது ஒரு மணி நேரத்தில் 14.1 ஓவரை வீசி முடிக்க வேண்டும். சென்னை அணி பந்து வீசுவதற்கு அதிக நேரம் எடுத்து கொண்டதால் டோனிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக வலுக்கும் மக்கள் போராட்டம் – 600க்கும் அதிகமானோர் இராணுவத்தால் சுட்டுக்கொலை !

மியன்மார் நாட்டில் கடந்த பிப்ரவரி 1-ந் திகதி இராணுவம் திடீரென்று புரட்சியில் ஈடுபட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த பொதுத் தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டி ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
மேலும் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்களையும் இராணுவம் கைது செய்தது. இராணுவ ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
இராணுவத்தின் எச்சரிக்கையையும் மீறி மக்கள் சாலைகளில் இறங்கி போராடி வருகிறார்கள். ஆனால் போராட்டங்களை ஒடுக்க இராணுவம் துப்பாக்கிசூடு நடத்தி வருகிறது. இதில், பலர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனாலும் பொது மக்கள் போராட்டம் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் மியன்மாரில் ஒரே நாளில் 82 பேரை ராணுவம் சுட்டு கொன்றுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பாகோ நகரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக பொது மக்கள் போராட்டங்கள் நடத்தினர். அவர்கள் மீது ராணுவம் துப்பாக்கிசூடு நடத்தியது. இதில் ஒரே நாளில் 82 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த மாதம் 14-ந் திகதி யான்கூன் நகரில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தியதில் ஒரே நாளில் 114 பேர் கொல்லப்பட்டனர். அதன் பிறகு ஒரே நாளில் அதிகபட்சமாக பாகோ நகரில் 82 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே மியன்மாரில் இராணுவத்தால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 614 ஆக உயர்ந்துள்ளதாக மியான்மர் அரசியல் கைதிகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் 46 பேர் சிறுவர்கள் என்றும் அந்த அமைப்பு கூறி உள்ளது. இதற்கிடையே ஷான் மாநிலத்தின் நாங்கமோன் என்ற இடத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி படை உள்ளிட்ட இனக்குழுக்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 10 போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டனர்.

“பொலிஸ்மா அதிபரின் அதிகாரங்களை எந்த மேயரும் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப் போவதில்லை.” – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

“நாட்டின் எந்த மேயரும் பொலிஸ் அதிகாரங்களை பயன்படுத்துவதற்கு அரசாங்கம் அனுமதியளிக்காது எனவும் பொலிஸ்மா அதிபரின் அதிகாரங்களை எந்த மேயரும் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப் போவதில்லை” என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகளின் காலத்தில் வடக்கு-கிழக்கில் பொலிஸ் மற்றும் நீதித்துறை எவ்வாறு செயற்பட்டது என்பது மக்களிற்கு தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்நகர மேயருக்கு எதிராக சட்டங்களை நடைமுறைப்படுத்தவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவில் தன்னை பற்றிய நற்பெயரை உருவாக்குவதற்காக 6.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கிய இலங்கை அரசாங்கம் !

அமெரிக்காவில் தன்னை பற்றிய நற்பெயரை உருவாக்குவதற்காக இலங்கை அரசாங்கம் 2014 இல் மத்திய வங்கி ஊடாக அமெரிக்க வர்த்தகர் ஒருவருக்கு பணம் 6.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியது என தெரிவித்துள்ள வோல்ஸ்ரீட் ஜேர்னல் அந்த நபர் சி.ஐ.ஏ.யின்யின் உளவாளி எனவும் தெரிவித்துள்ளது.
இமாட் ஜூபாரி என்பவர் அமெரிக்க அரசாங்கத்திற்கு புலனாய்வு தகவல்களை வழங்குபவராக நீண்டகாலமாக செயற்பட்டு வந்தவர் என சட்ட ஆவணங்கள் மற்றும் அவரை நன்கறிந்தவர்களை மேற்கோள் காட்டி வோல் ஸ்ரீட் ஜேர்னலின் பத்திரிகையாளர் பைரன் டாவேர் தெரிவித்துள்ளார்.
இமாட் ஜூபாரியின் செயற்பாடுகள் குறித்து சில குற்றச்சாட்டுகள், அவருடன் இணைந்து பணியாற்றிய சி.ஐ.ஏ அதிகாரிகளுடன் தொடர்புடையவை என அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர் என வோல்ஸ்ரீட் ஜேர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.
ஒருமுறை அவர் இலங்கையின் சார்பான திட்டமொன்றினை முன்னெடுப்பதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார் இதுவே பின்னர் அவருக்கு எதிரான குற்றவியல் குற்றச்சாட்டாக மாறியுள்ளது என வோல்ஸ்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது.
இலங்கையின் சார்பில் அந்த திட்டத்தை பொறுப்பேற்ற பின்னர் ஜூபேரி கடலோர கண்காணிப்பு அமைப்புமுறையொன்றை கொள்வனவு செய்யுமாறு இலங்கை அரசாங்கத்தை கேட்டுக்கொண்டார், அதனை பயன்படுத்தி இந்து சமுத்திரத்தின் பெரும்பகுதியை கண்காணிக்க முடியும் என வோல்ஸ்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கம் ஜூபேரியிடம் வழங்கிய அதன் பொதுமக்களின் வரிப்பணத்தில் 87 வீதத்தினை அவர் தனது தனிப்பட்ட தேவைகளிற்காக செலவிட்டுள்ளார் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீதிமன்றம் தனது செல்வாக்கை பயன்படுத்தி வெளிநாடு ஒன்றிடமிருந்து பணம் உட்பட நன்மைகளை பெற்ற குற்றச்சாட்டு உட்பட பல குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவருக்கு 12 வருடசிறைத்தண்டனையை வழங்கியுள்ளது.

“இந்த நாட்டில் ராஜபக்ஷக்களைப் போன்ற நல்லதொரு தலைவர்களைக் எப்போதும் காண முடியாது.” – இசாக் ரஹ்மான்

“இந்த நாட்டில் ராஜபக்ஷக்களைப் போன்ற நல்லதொரு தலைவர்களைக் எப்போதும் காண முடியாது.” என அநுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இசாக் ரஹ்மான் தெரிவித்தார்.

நாட்டை திறம்பட அபிவிருத்திக்கு இட்டுச் செல்கின்றவர்களே இவர்கள் என இசாக் ரஹ்மான் மேலும் தெரிவித்தார்.

கிண்ணியாவில் நேற்று (10.04.2021) இடம் பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

சமூகமே ஏமாந்து விடாதீர்கள். கல்வி மார்க்கத்தில் அக்கறை கொண்ட நாங்கள் சிலரின் இனவாத பேச்சுக்களுக்கு ஏமாறக்கூடாது. இனவாதம், மதவாதம் ஒழிய வேண்டும். கண்ணியமாகவும் கௌரவமாகவும் நாம் சிறுபான்மைச் சமூகமாக வாழவேண்டுமானால் தற்போது இருக்கின்ற ஆட்சியாளர்களுடனே இணைந்து வாழவேண்டும். அவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தக்கூடாது.

பசில் ராஜபக்ச போன்ற நல்லதொரு தலைவனை யாராலும் கண்டு கொள்ள முடியாது. எங்கள் ஏழுபேரையும் பாரிய அபிவிருத்தி ஊடாக இணைத்துக் கொண்டு செல்லும் நிமால் லான்சா போன்ற இராஜாங்க அமைச்சரும் இங்கு இருக்கிறார்.

அண்மையில் நாட்டுக்கு வருகை தந்த பாகிஸ்தான் நாட்டு பிரதமர் எங்களிடம் கூறியதாவது கன்னியமாக வாழவேண்டுமானால் இருக்கின்ற ஆட்சியாளர்களுடன் இணைந்து கொள்ளவேண்டும் என்று தான்.

உலகின் பாரிய அபிவிருத்திக்கு இட்டுச் செல்லக்கூடிய வளமான நாட்டை கட்டியெழுப்பக்கூடிய தலைமைகளுடன் தற்போது இணைந்தால் தான் நாம் நிம்மதியாக வாழ முடியும்.”என்றார்.