October

October

ஆழ்கடல் மீன்பிடி அபிவிருத்தி செயலமர்வு – மூன்றாம் கட்டம் மாத்தறையில்

ஆழ்கடலில் மீன் பிடித்தலில் ஈடுபடுகின்றவ்களுக்கு கூடுதல் பலனைப் பெற்றுக்கொள்வது எவ்வாறு என்பது குறித்து விளக்கமளிக்கும் செயலமர்வின் மூன்றாவது கட்டம் எதிர்வரும் 08 ஆம் திகதி மாத்தறையில் நடைபெற உள்ளது.

மீன்பிடித்துறை சார்ந்த நவீன உபகரணங்களை பயன்படுத்துவது குறிதுது இதன்போது விளக்கம் அளிக்கப்படுகின்றது.

இந்தத்திட்டம் முதலில் கடந்த ஓகஸ்ட் மாதம் நீர்கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது. அதில் சுமார் 75 மீனவர்கள் கலந்துகொண்டுதுடன் சிறந்த பிரதிபலனும் கிடைத்துள்ளது. இதனையடுத்து இந்தத் திட்டத்தை ஏனைய பகுதிகளுக்கும் விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி தென் மாகாணத்தில் மூன்று கட்டங்களாக நடத்த ஒழுங்கு செய்யப்பட்டது.

அதன் முதல் கட்டம் இம்மாதம் 01 ஆம் திகதி பெந்தோட்டையிலும் இரண்டாம் கட்டமாக  02 ஆம் திகதி காலியிலும் நடத்தப்பட்டது. மூன்றாம் கட்ட செயலமர்வு எதிர்வரும் 08 ஆம் திகதி மாத்தறையில் நடத்தப்படவுள்ளது.இலங்கை முதலீட்டு; சபையும் தேசிய நீர்வள ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிறுவனமும் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன.

நாட்டில் முழுமையான அபிவிருத்தியை உருவாக்க வேண்டிய பொறுப்பு எம்மிடம் – ஜனாதிபதி

290909mahinda.jpgநாட்டுக்குத் தேவையான முழுமையான அபிவிருத்தியையும், தேசிய முன்னேற்றத்தையும் உருவாக்க வேண்டிய பொறுப்பை நாம் இன்று ஏற்றுக் கொண்டிருக்கிறோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். உலகிலேயே மிக மோசமான பயங்கரவாதிகள் என வர்ணிக்கப்பட்டவர்களுக்கு எதிரான யுத்தத்தில் படையினரின் வீரத்தைக் கண்ட எந்தவொரு அறிவுள்ளவரும் நாட்டைத் துண்டாட வேண்டும் என்றோ பிரிவினைவாதத்திற்காக ஆயுதம் ஏந்த வேண்டும் என்றோ நினைக்கமாட்டார்கள் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இராணுவத்தின் 60வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இராணுவத்தினரின் கண்காட்சி ஒன்று நடைபெறுகிறது. இதன் ஆரம்ப வைபவம் நேற்று நடைபெற்றது. இதில் அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உயிர்த்தியாகம் செய்த சகல படையினரும் உலகத்தில் ஈடிணையற்ற வீரர்கள் என்ற பெருமையை பெற்றுக் கொண்ட நிலையிலேயே இன்றைய 60 ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறோம். உலகில் ஈடிணையற்ற வீரர்கள் என்ற பெருமை நாம் பெற்ற வெற்றியினூடாகவே ஏற்பட்டுள்ளது.

ஆசியாவிலுள்ள சகல நாடுகளும் நாம் பெற்ற யுத்த ரீதியான வெற்றி தொடர்பாக ஆராய்ந்து வருகின்றன.

உலகம் கண்டிராத மிலேச்சத்தனமான தாக்குதல் முறைகளை பயங்கரவாதிகள் உலகுக்கு காண்பித்துக் கொண்டிருந்தனர். எனினும் எமது வீரர்கள் அவர்களுக்கு முகம் கொடுத்தது மட்டுமல்லாமல் வெற்றியும் கண்டார்கள்.

உலகில் பெரும்பாலும் இராணுவத்தினர் தாம் தயாரித்த நவீன ஆயுதங்களை, கண்காட்சிக்கு வைப்பதற்காக உற்சவங்களை நடத்துவார்கள். அணு ஆயுதங்கள் உட்பட, ஏனைய ஆயுதங்களையும் கண்காட்சிக்கு வைப்பது மட்டும் அல்லாமல் ஊர்வலங்களையும் நடத்துவார்கள். எனினும், பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்த த்தில் பெற்றுக்கொண்ட வெற்றியை நெஞ்சில் உரமாக சுமந்து கொண்டு கண்காட்சிகளை நடத்துவதற்கு உகந்தவர்கள் எமது இராணுவத்தினரே என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இக்கண்காட்சி 3ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரை நடைபெறுகிறது.

இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் விண்ணப்பங்கள் கையளிப்பு

ramadan-mosque.jpgவட மாகாணத்தில் இருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களை தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்காக தகவல் திரட்டும் வகையில் வடமாகாண முஸ்லிம்களிடமிருந்து திரட்டப்பட்ட 7000 (ஆயிரம்) விண்ணப்பப் படிவங்களை இலங்கை முஸ்லிம்களின் சம்மேளனம் மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடம் நேற்று அமைச்சில் வைத்து கையளித்தது.

அநுராதபுரம் வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சைப் பிரிவு !

அநுராத புரம் போதனா வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சைப் பிரிவொன்று இன்னும் மூன்று மாதங்களுக்குள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறுநீரக நோய் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் திலக் அபேசேகர தெரிவித்துள்ளார். அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வளவில் 2850 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஜந்து மாடிக்கட்டடத்தில் இப்பிரிவு ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதனால்,  ரஜரட்ட பிரதேச சிறுநீரக நோயாளர்கள் நன்மையடையவுள்ளனர். இதற்கு முன்னர் ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்து கண்டி மற்றும் கொழும்பு போன்ற பகுதிகளுக்கு சென்றுவந்த இப்பகுதி நோயாளர்களுக்கு இது பெரும் வரப்பிரசாதகமாக அமையவுள்ளது. 

தெல்தோட்டை மினி சூறாவளியில் 25 குடும்பங்கள் பாதிப்பு

011009rain-in-upcountry.jpgதெல் தோட்டை, பட்டிகாமம் தோட்டப் பகுதியில் வீசிய மினி சூறாவளி காரணமாக 3 லயன்களிலுள்ள 25 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. லயன்களிலுள்ள வீடுகளின் கூரைகள் காற்றில் அள்ளிச் செல்லப்பட்டதுடன் வீட்டின் சுவர்கள் இடிந்து வீழ்ந்துள்ளன. நேற்று முன்தினம் பிற்பகல் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

25 குடும்பங்களைச் சேர்ந்த 49 பேர் பட்டிகாமம் மலைமகள் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்குரிய சமைத்த உணவுகள் வழங்கப்பட்டுள்ளன. உடனடியாக நிவாரணங்களை பெற்றுக் கொடுக்கு மாறு அரச அதிபர் பணிப்புரை வழங்கியிருக்கிறார். பிரதேச செயலர்பால கிருஷ்ணன் நேரில் சென்று பார்வையிட்டார்.

சாம்பியன் கிண்ணம் இறுதியாட்டத்திற்கு அவுஸ்திரேலியா நியுசிலாந்து அணிகள் தெரிவு.

270909n-s.bmpசாம்பியன்ஸ் கிண்ண தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வெற்றிகொண்ட அவுஸ்திரேலிய அணியும் நேற்று இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாக்கிஸ்தானை வெற்றிகொண்ட நியுசிலாந்து அணியும் நாளை நடைபெறும் ஐ.ஸி.ஸி. சாம்பியன் கிண்ணத்துக்கான இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.

நேற்று பாக்கிஸ்தான் நியுசிலாந்து அணிகளுக்கிடையிலான அரையிறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாக்கிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 233 ஓட்டங்களை தனது இனிங்சில் பெற்றது. நேற்றைய போட்டியில் பாக்கிஸ்தானின் துடுப்பாட்டம் மிகவும் மந்கரமாகவே காணப்பட்டதென கிரிக்கட் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்தனர். நியுசிலாந்து அணி இப்போட்டியில் 5 விக்கட் வித்தியாசத்தில் வெற்றி இலக்கை அடைந்து இறுதிப்போட்டிக்குத் தெரிவானது. பந்துவீச்சிலும், துடுப்பாட்டத்திலும் டெனியல் விட்டோரி மிகவும் சிறப்பாக பணியாற்றினார். ஆட்டநாயகனாக தெரிவானார்.

நாளை தினம் அவுஸ்திரேலியா நியுசிலாந்து அணிகளுக்கிடையிலான ஆட்டம் மிகவும் விருவிருப்பாக அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதுவரை நடைபெற்ற போட்டிகளில் அவதானிக்கும் கிரிக்கட் விமர்சகர்கள் நியுசிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு அதிகமென தெரிவிக்கின்றனர். ஆனால், கிரிக்கட் ஆட்டத்தில் வெற்றி தோல்வியை ஹேஸ்யத்தின் மூலம் தெரிவிக்க முடியாது. அச்சந்தர்ப்பத்தில் காலநிலை மைதான நிலை நாணய சுழற்சியில் வெற்றி தோல்வி ஆகியனவே வெற்றியை தீர்மானிப்பதாக அமையுமென எதிர்பார்க்கலாம்.

நேற்றைய ஆட்டத்தில் அணிகள் பெற்ற ஓட்ட விபரங்கள் கீழே தொகுத்துத் தரப்பட்டுள்ளது.

ICC Champions Trophy – 2nd semi final
New Zealand v Pakistan
New Zealand won by 5 wickets (with 13 balls remaining)
       
 Pakistan innings (50 overs maximum)
 Imran Nazir  c Taylor b Bond  28 
 Kamran Akmal†  c Redmond b Butler  24
 Shoaib Malik  c Taylor b Butler  2 
 Younis Khan*  c Taylor b Vettori  15
 Mohammad Yousuf  b Mills  45
 Umar Akmal  lbw b Vettori  55 
 Shahid Afridi  c †McCullum b Butler  4 
 Naved-ul-Hasan  c Guptill b Vettori  8 
 Umar Gul  c Broom b Butler  6 
 Mohammad Aamer  not out  19
 Saeed Ajmal  not out  14  
 Extras (lb 6, w 5, nb 2) 13     
      
 Total (9 wickets; 50 overs) 233 (4.66 runs per over)
Fall of wickets1-46 (Imran Nazir, 9.4 ov), 2-61 (Shoaib Malik, 12.5 ov), 3-69 (Kamran Akmal, 14.2 ov), 4-86 (Younis Khan, 20.5 ov), 5-166 (Mohammad Yousuf, 38.6 ov), 6-181 (Umar Akmal, 40.5 ov), 7-183 (Shahid Afridi, 41.2 ov), 8-192 (Umar Gul, 43.3 ov), 9-198 (Naved-ul-Hasan, 44.2 ov) 
        
 Bowling   
 KD Mills 10 0 46 1
 SE Bond 10 1 54 1
IG Butler 10 0 44 4 8
JEC Franklin 8 0 33 0  
 DL Vettori 10 2 43 3
 GD Elliott 2 0 7 0  
 
 New Zealand innings (target: 234 runs from 50 overs)
 BB McCullum†  c Shahid Afridi b Mohammad Aamer  17 
 AJ Redmond  c & b Saeed Ajmal  31 
 MJ Guptill  c Naved-ul-Hasan b Umar Gul  11 
 LRPL Taylor  b Shahid Afridi  38 
 GD Elliott  not out  75  
 DL Vettori*  st †Kamran Akmal b Saeed Ajmal  41 
 NT Broom  not out  3
 
 Extras (b 2, lb 6, w 6, nb 4) 18     
      
 Total (5 wickets; 47.5 overs) 234 (4.89 runs per over)
Did not bat JEC Franklin, KD Mills, IG Butler, SE Bond 
Fall of wickets1-22 (McCullum, 4.3 ov), 2-43 (Guptill, 9.1 ov), 3-71 (Redmond, 16.4 ov), 4-126 (Taylor, 29.5 ov), 5-230 (Vettori, 46.6 ov) 
        
 Bowling  
 Mohammad Aamer 10 2 32 1
 Naved-ul-Hasan 8 0 57 0
 Umar Gul 8.5 0 48 1
 Saeed Ajmal 8 0 39 2
 Shahid Afridi 10 0 41 1 
 Shoaib Malik 3 0 9 0
 
Player of the match DL Vettori (New Zealand)

நலன்புரி முகாம்களிலுள்ள தமிழ் மக்களை விடுவிப்பதுடன் இடம்பெயர்ந்த முஸ்லிம்களை மீளக் குடியேற்ற வேண்டும்

120909tnalogo.jpgஇடம் பெயர்ந்து முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை விடுதலை செய்வது குறித்தும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கு உரிய தீர்வு காண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும் தமிழ், முஸ்லிம் கட்சிகள் கூட்டாக அறிக்கையொன்றை விடுத்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக்களின் தலைவரும் சிரேஷ்ட உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இதேவேளை, தமிழ், முஸ்லிம் கட்சிகள் 5 ஒன்றிணைந்து கூட்டாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன. அதில் நாட்டில் இடம்பெயர்ந்துள்ள இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் அரசமைப்புக்கு முரணாக சர்வதேச மனித உரிமை சட்டங்களை மீறி பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சட்டவிரோதமானது என சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் ஆர். சம்பந்தன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையில் அதன் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழர் விடுதலை கூட்டணியின் சார்பில் வீ.ஆனந்தசங்கரி, ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் மனோ கணேசன், அகில இலங்கை தமிழ் ஐக்கிய முன்னணி சார்பில் கே.விக்னேஸ்வரன் ஆகியோர்  ஒன்றிணைந்து கூட்டாக அறிக்கையொன்றை விடுத்துள்ளனர். இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலங்கை சுதந்திரமடைந்த நாளிலிருந்து தமிழ் பேசும் மக்கள் பல தசாப்த காலமாக கொடுந் துயரை அனுபவித்து வருகிறார்கள். அவர்கள் இனப்பாகுபாட்டையும், வன்முறையையும், இனச் சுத்திகரிப்பையும் எதிர்கொள்கின்றனர். 1983 இல் இடம்பெற்ற இனப் படுகொலையின்போது, அரசாங்கத்தின் ஒரு பகுதியினரும் அதில் ஈடுபட்டிருந்தனர். இனப்படுகொலைகளாலும் கடந்த 34 வருட கால இலங்கை இனரீதியான உள்நாட்டு யுத்தத்தாலும் வடக்கு கிழக்கில் வாழ்ந்த தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களும் ஏனையோரும் இன்னும் நாட்டின் ஏனைய பகுதி மக்களும் கூட பலியெடுக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, தமிழ் மக்கள் இத்தகைய துன்பங்களால் பெருமளவு சலிப்படைந்துள்ளனர். போரின் இறுதிக் கட்டத்தில் வன்னி மக்கள் எல்லையற்ற துன்பத்தை அனுபவித்துள்ளனர். போர் முடிவடைந்துள்ள இந்த நிலையிலும்கூட அவர்களுடைய துன்பம் இன்னும் தீர வில்லை. நாட்டில் எங்கும் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் மரண அச்சுறுத்தல்கள், பொது மக்கள் படுகொலைகள், ஊடகவியலாளர்களும் ஏனையோரும் காணமற் போதல் என்பவற்றுக்கு மத்தியிலும் நாம் இந்த இடம்பெயர்ந்து முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பாக உடனடியாகவும் கூட்டாகவும், முன்னுரிமை கொடுத்து செயற்பட வேண்டுமென கருதுகின்றோம்.

இதன் கீழ் ஒப்பமிட்டுள்ள நாம் அனைவரும் சகித்துக் கொள்ள முடியாத இந்நிலைமையினை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றோம். நாட்டிலுள்ள இடம்பெயர்ந்த இலட்சக் கணக்கான தமிழ் மக்கள் அரசியலமைப்புக்கு முரணாக சர்வதேச சட்டங்களை மீறி பலவந்தமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளமை சட்டவிரோதமானது என்று சுட்டுக் காட்ட விரும்புகின்றோம். இம்மக்கள் உடனடியாக அம்முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டு அவர்களது வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். அத்தோடு அவர்கள் தங்களது பாரம்பரிய தொழில்களான விவசாயம் மற்றும் மீன்பிடி போன்றவற்றில் ஈடுபட எத்தகைய தடையுமின்றி அனுமதிக்க வேண்டும். அல்லது அவர்கள் தமது உறவினர் நண்பர்களது வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும், அல்லது அவர்கள் தமது சட்டபூர்வமான உரிமையைப் பயன்படுத்தி தாங்கள் விரும்பிய இடத்துக்குச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். இவர்களில் குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதான குற்றச்சாட்டை எதிர்நோக்குபவர்கள் எதுவித தாமதமுமின்றி நீதிமன்றம் முன் நிறுத்தப்பட வேண்டும். இடம்பெயர்ந்த மக்கள் நீண்ட நாட்களாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அந்த முகாம்களுக்கு உறவினர்கள், மதகுருமார், பாராளுமன்ற உறுப்பினர்கள் , மாகாண சபை உறுப்பினர்கள், சிவில் சமூகத்தினர், ஐ.நா. நிறுவன பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பன செல்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டுமென நாம் வலியுறுத்துகிறோம்.

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டு கடந்த இரண்டு தசாப்தங்களாக கடும் துன்பங்களை எதிர்கொண்டுவரும் முஸ்லிம் மக்கள் அவர்களது சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்ல அனுமதிக்கப்படுவதோடு, அங்கு அவர்கள் தமது பொருளாதார, சமூக வாழ்வை எவ்வித இடையூறுமின்றி வாழ வழி செய்ய வேண்டும்.அதேபோன்று கிழக்கிலும் இடம்பெயர்ந்து கடும் துயரை அனுபவிக்கும் மக்களையும் அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

வடக்கிற்கும் கிழக்கின் சிலபகுதிகளுக்கும் நடைமுறைப்படுத்தப்படும் நடமாடும் சுதந்திரத்துக்கான கட்டுப்பாடு தளர்த்தப்படல் வேண்டும். குறிப்பாக, வட மாகாணத்தில் அடிப்படை உரிமை மீறல் நடவடிக்கைகள் விலக்கப்படல் வேண்டும்.

வட மாகாணத்தில் பல பகுதிகளிலும் ஊரடங்குச் சட்டமும் பல்வேறு கட்டுப்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்படுவது நியாயப்படுத்தப்பட முடியாதவைகளாகும். இதனால், அங்கு எவ்வித தாமதமுமின்றி உடனடியாக இயல்பு வாழ்க்கை ஏற்படுத்தப்படல் வேண்டும். நாட்டில் சில பகுதிகளில் வாழும் மக்கள் இன்னமும் அச்சத்துடனேயே உள்ளார்கள். அவசரமான விடயங்களுக்குக்கூட அவர்கள் செல்வதில்லை. இதனால், சமூக செயற்பாடுகள் தொடர்பான பணிகள் தடைப்பட்டுள்ளன. மேலும் இராணுவ நிர்வாகம் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், தளர்த்தப்பட வேண்டும். சமூக, பொருளாதார, இயல்புவாழ்வு மீளத் திரும்பும் வகையில் சிவில் நிர்வாகம் சீரமைக்கப்படல் வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பியன் கிண்ணம் – இன்று இரண்டாவது அரையிறுதிப்போட்டி New Zealand won by 5 wickets

270909n-s.bmpசம்பியன் கிண்ணத்துக்கான இரண்டாவது அரையிறுதிப்போட்டி இன்று பாக்கிஸ்தான் நிவுசிலாந்து அணிகளுக்கிடையில் இரவு பகல் ஆட்டமாக நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெரும் அணி 5ஆம் திகதி நடைபெறும் ICCசம்பியன் கிண்ணம் இறுதியாட்டத்துக்கு தெரிவாகும்.

இன்றைய போட்டியில் பாக்கிஸ்தான் அணி வெற்றிபெற வேண்டுமென்ற இலக்குடன் சிறப்பாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேநேரம்,  நிவுசிலாந்து அணியும் இறுதியாட்டத்துக்கு முன்னேற வேண்டும் என்ற அடிப்படையில் முனைப்பாக விளையாடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போட்டியின் ஸ்கோர் விபரங்களை தொகுத்துத்தர தேசம்நெற் விசேட ஒழங்குகளை மேற்கொண்டுள்ளது. இன்றைய போட்டி இலங்கை நேரப்படி மாலை 6 மணிக்கு ஆரம்பமாகிறது.

Pakistan won the toss and elected to bat
ICC Champions Trophy – 2nd Semi-Final
ODI no. 2906 | 2009/10 season
Played at New Wanderers Stadium, Johannesburg (neutral venue)
3 October 2009 – day/night (50-over match)
Umpires IJ Gould (England) and SJA Taufel (Australia)
TV umpire DJ Harper (Australia)
Match referee J Srinath (India)
Reserve umpire SJ Davis (Australia)

Pakistan 233/9 (50.0 ov)

Pakistan innings (50 overs maximum)
 Imran Nazir  c Taylor b Bond  28 
 Kamran Akmal†  c Redmond b Butler  24 
 Shoaib Malik  c Taylor b Butler  2 
 Younis Khan*  c Taylor b Vettori  15 
 Mohammad Yousuf  b Mills  45 
 Umar Akmal  lbw b Vettori  55
 Shahid Afridi  c †McCullum b Butler  4
 Naved-ul-Hasan  c Guptill b Vettori  8 
 Umar Gul  c Broom b Butler  6 
 Mohammad Aamer  not out  19
 Saeed Ajmal  not out  14  
 Extras (lb 6, w 5, nb 2) 13     
      
Total (9 wickets; 50 overs) 233 (4.66 runs per over)
Fall of wickets1-46 (Imran Nazir, 9.4 ov), 2-61 (Shoaib Malik, 12.5 ov), 3-69 (Kamran Akmal, 14.2 ov), 4-86 (Younis Khan, 20.5 ov), 5-166 (Mohammad Yousuf, 38.6 ov), 6-181 (Umar Akmal, 40.5 ov), 7-183 (Shahid Afridi, 41.2 ov), 8-192 (Umar Gul, 43.3 ov), 9-198 (Naved-ul-Hasan, 44.2 ov) 
        
 Bowling 
 KD Mills 10 0 46 1 
 SE Bond 10 1 54 1
 IG Butler 10 0 44 4 
 JEC Franklin 8 0 33 0
 DL Vettori 10 2 43 3
 GD Elliott 2 0 7 0  
   
New Zealand team    
BB McCullum†, AJ Redmond, MJ Guptill, LRPL Taylor, GD Elliott, NT Broom, JEC Franklin, DL Vettori*, KD Mills, IG Butler, SE Bond 

5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவு வெளியானது – லோகேஸ்வரன் முதலாவது இடத்தை பிடித்துள்ளார்.

031009logeswaran.gifஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. யாழ். வட்டுக்கோட்டை தமிழ் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த லோகேஸ்வரன் ஸ்ரீகர்ஷன் 192 புள்ளிகளைப் பெற்று தமிழ் மொழி மூலம் இலங்கையில் முதலாவது இடத்தை பிடித்துள்ளார்.

சிங்கள மொழிமூலம் 196 புள்ளிகளைப் பெற்று அம்பாந்தோட்டை ருஹரிணு விஜயபா மகா வித்தியாலய மாணவன் கே. ஏ. பிரமோத் டில்ஷான் முதலாவது இடத்தையும் பிடித்துள்ளார். வவுனியா பண்டாரிகுளம் விபுலானந்தா மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த சச்சிதானந்தம் கெளரீசன் என்ற மாணவன் 191 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில்(தமிழ் மொழி மூலம்) இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளார்.

இந்தப் பாடசாலையில் 58 மாணவர்கள் இந்தப் பரீட்சையில் சித்தியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயத்தில் 82 மாணவர்களும், சைவப்பிரகாசா மகளிர் மாகாவித்தியாலயத்தில் 42 மாணவர்களும், தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் 34 மாணவர்களும், நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயத்தில் 10 மாணவர்களும், பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் 6 மாணவர்களும் , சிதம்பரபுரம் சிறிநாகராஜா வித்தியாலயத்தில் 5 மாணவர்களும் , செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் 4 மாணவர்களும் , தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயத்தில் 3 மாணவர்களும் , இயங்கராவூர் , தாலிக்குளம் ஆகிய பாடசாலைகளில் தலா 2 மாணவர்களும் இந்தப் பரீட்சையில் சித்தியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு 2 லட்சத்து 98,000 மாணவர்கள் தோற்றினர். இவர்களுள் 31,000 பேரே சித்தியடைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார்.

மாவட்டங்களுக்குரிய வெட்டுப்புள்ளிகள் வருமாறு:

கொழும்பு, கம்பஹா, களுத்துறை / கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருணாகல், கேகாலை தமிழ் மொழிமூலம் 141 புள்ளிகள். சிங்கள மொழிமூலம் – 144 புள்ளிகள்

நுவரெலியா தமிழ் – 137 சிங்களம் 138
வவுனியா – தமிழ் 136 சிங்களம் 136
அம்பாறை – தமிழ் 139 சிங்களம் 139
திருகோணமலை – தமிழ் 138 சிங்களம் 139
புத்தளம் – தமிழ் 137 சிங்களம் 139
அநுராதபுரம் – தமிழ் 138 சிங்களம்139
பொலன்னறுவை – தமிழ் 140 சிங்களம் 139
பதுளை – தமிழ் 138 சிங்களம் 139
மொனராகலை – தமிழ் 135 சிங்களம் 138
மன்னார் – தமிழ் 139
இரத்தினபுரி – தமிழ் 134 சிங்களம் 141
மட்டக்களப்பு – தமிழ் 139

ஐ.சி.சி. விருது – தலைசிறந்த வீரர் டோனி, டெஸ்ட் வீரர் காம்பீர் 20 ஓவர் போட்டி வீரர் டில்சான்,

tmdil.jpgசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ. சி. சி) ஆண்டுதோறும் சிறந்த வீரர்களுக்கு விருதுகளை வழங்கி கெளரவித்து வருகிறது. ‘கிரிக்கெட் வீரர்களின் ஆஸ்கார்’ என்று அழைக்கப்படும் இவ்விருதுக்கு இந்த ஆண்டு நிறைய வீரர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன. ஓராண்டு காலம் (2008ம் ஆண்டு ஆகஸ்டு 13 ந் திகதி முதல் 2009 ம் ஆண்டு ஆகஸ்டு 24 ந் திகதி வரை) வீரர்களின் செயல்பாட்டின் அடிப்படையில் விருதுக்கு தகுதியானவர்கள் கருத்தில் கொள்ளப்பட்டனர்.

இதன் பின்னர் ஒவ்வொரு பிரிவிலும் தலா 4 வீரர்கள் கொண்ட இறுதிப்பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் 6 வது ஐ. சி. சி. விருதுகளை பெறும் வீரர்கள் யார் – யார்? என்ற விவரம் நேற்று முன்தினமிரவு ஜோகனஸ்பர்க்கில் நடந்த கோலாகலமான விழாவில் அறிவிக்கப்பட்டன.

இதன்படி ஆண்டின் சிறந்த 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான விருதை இலங்கை அணி டில்ஷான் பெற்றார். சமீபத்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியின் அரைஇறுதியில் மே. தீவுக்கு எதிராக 57 பந்துகளில் 96 ஓட்டங்கள் விளாசியது அவருக்கு இந்த விருதை பெற்றுத்தந்தது. வளர்ந்து வரும் வீரருக்கான விருதுக்கு அவுஸ்திரேலியாவின் 24 வயதான வேகப்பந்து வீச்சாளர் பீட்டல் சிடில் தேர்வு செய்யப்பட்டார். கடந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆன சிடில் 12 டெஸ்ட் ஆடி 49 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார்.

இந்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தலைசிறந்த வீரருக்கான ஐ. சி. சி. விருதுக்கு இந்திய வீரர்கள் டோனியும் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கு கவுதம் காம்பீரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். மேலும்  விளையாட்டு உணர்வுடன் ஆடியதற்கான உத்வேக அணிக்கான விருதுக்கு நியூசிலாந்து அணியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.