ஆழ்கடல் மீன்பிடி அபிவிருத்தி செயலமர்வு – மூன்றாம் கட்டம் மாத்தறையில்

ஆழ்கடலில் மீன் பிடித்தலில் ஈடுபடுகின்றவ்களுக்கு கூடுதல் பலனைப் பெற்றுக்கொள்வது எவ்வாறு என்பது குறித்து விளக்கமளிக்கும் செயலமர்வின் மூன்றாவது கட்டம் எதிர்வரும் 08 ஆம் திகதி மாத்தறையில் நடைபெற உள்ளது.

மீன்பிடித்துறை சார்ந்த நவீன உபகரணங்களை பயன்படுத்துவது குறிதுது இதன்போது விளக்கம் அளிக்கப்படுகின்றது.

இந்தத்திட்டம் முதலில் கடந்த ஓகஸ்ட் மாதம் நீர்கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது. அதில் சுமார் 75 மீனவர்கள் கலந்துகொண்டுதுடன் சிறந்த பிரதிபலனும் கிடைத்துள்ளது. இதனையடுத்து இந்தத் திட்டத்தை ஏனைய பகுதிகளுக்கும் விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி தென் மாகாணத்தில் மூன்று கட்டங்களாக நடத்த ஒழுங்கு செய்யப்பட்டது.

அதன் முதல் கட்டம் இம்மாதம் 01 ஆம் திகதி பெந்தோட்டையிலும் இரண்டாம் கட்டமாக  02 ஆம் திகதி காலியிலும் நடத்தப்பட்டது. மூன்றாம் கட்ட செயலமர்வு எதிர்வரும் 08 ஆம் திகதி மாத்தறையில் நடத்தப்படவுள்ளது.இலங்கை முதலீட்டு; சபையும் தேசிய நீர்வள ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிறுவனமும் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *