October

October

தமிழகக் குழுவினர் இன்று மலையகத்துக்கு விஜயம்!

12kanimoly.jpgதமிழ கத்தின் முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் இலங்கை வந்துள்ள 10 பேர் அடங்கிய குழுவினர் இன்று மலையகப் பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் அழைப்பின் பேரில் மலையகத்திற்கு வருகை தந்த இக்குழுவில் டி.ஆர்.பாலு, கலைஞரின் மகள் கனிமொழி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உட்பட பலரும் அடங்குகின்றனர்.
 
ஹெலிகொப்டர் மூலம் நோர்வூட் மைதானத்திற்கு வந்த இக்குழுவினர் அங்கிருந்து ஹட்டனை நோக்கி வாகனத்தில் பயணித்தனர். ஹட்டன் நகரை இன்று காலை 10.45 மணியளவில் வந்தடைந்த இக்குழுவினருக்கு ஹட்டன் நகர் வர்த்தகர்கள், பொதுமக்கள் திரண்டு வந்து வரவேற்பளித்தனர்.

கனிமொழியைச் சுழ்ந்து கொண்டு மக்கள் அவரை மலர்மாலைகள் அணிவித்து வரவேற்றனர்.கலைஞர் வாழ்க, தமிழ்நாடு வாழ்க என உற்சாக கோஷங்கள் எழுப்பினர். மலையக மக்களின் வரவேற்பில் திக்குமுக்காடிப்போன கனிமொழி உள்ளிட்ட குழுவினரைப் பாதுகாப்பு பிரிவினர் மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் மறுபடி வாகனங்களில் ஏற்றி அங்கிருந்து அழைத்து செல்ல முயன்றனர்.

இந்நிலையில் வாகனத்தைச் சுழ்ந்து கொண்ட மக்கள் கனிமொழி மற்றும் திருமாவளவனின் பெயர்களை உரக்க உச்சரித்து வாழ்த்துத் தெரிவித்தனர். சுமார் ஒரு மணிநேரம் இம்மக்களின் அன்புப் பிடியில் சிக்கிக் கொண்ட குழுவினர் கொட்டகலைக்குச் சென்றனர். இவர்களுக்கு அங்கும் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்தியாவின் அணு ஆயுதம் ஏந்திச் செல்லும் ஏவுகணை சோதனை வெற்றி!

தரையி லுள்ள ஒரு இலக்கிலிருந்து மற்றொரு தரை இலக்கை துல்லியமாக தாக்கும் வல்லமை கொண்ட பிரிதிவி -2 ஏவுகணையை இந்தியா இன்று ( திங்கட் கிழமை)  வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சோதனை நடத்தியது.
 
ஐந்து நிமிட இடைவேளையில் இரண்டு ஏவுகணைகள் அடுத்தடுத்து சோதனை செய்யப்பட்டுள்ளன. சரியாக காலை 10.28 க்கு முதல் ஏவுகணையும், 10.33 க்கு இரண்டாவது ஏவுகணையும் ஏவப்பட்டு சோதனை செய்யப்பட்டன.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரிதிவி -2 ஏவுகணை ஒரு குறுகிய தூர ஏவுகணையாகும். 9 மீட்டர் நீளமும் 1.1 மீட்டர் அகலமும் கொண்ட இந்த ஏவுகணைää  250 கி.மீ.ää வரை சென்று தாக்கும் வல்லமை கொண்டதாகும்.

திரவ எரிபொருளில் இயங்கக்கூடிய இந்த ஏவுகணையில்ää ஆயிரம் கிலோ எடை கொண்ட  வெடிகுண்டுகளை  பொருத்த முடியும்.   அணு ஆயுதங்களையும் தாங்கிச்செல்லும் இந்த ஏவுகணைகளை கடலில் பயணிக்கும் கப்பலில் இருந்து கூட தரை இலக்கை தாக்கும் வகையில் ஏவலாம்.

கடந்த 1996ம் ஆண்டு இந்தியா, முதன்முறையாக பிருத்வி-2 ரக ஏவுகணையை சோதித்து பார்த்தது. பின்ää 1999ம் ஆண்டு இந்திய விமானப்படையில்ää இந்த ஏவுகணை சேர்க்கப்பட்டது.  தொடர்ந்து ஜூன் 2000ää  மார்ச் 2001ää டிசம்பர் 2001ää ஜனவரி 2004 மற்றும் மார்ச் 2004 ஆகிய ஆண்டுகளில் பிருத்வி-2 சோதித்துப்பார்க்கப்பட்டது.

கடைசியாக கடந்த 2006ம் ஆண்டு வெற்றிகரமாக பிருத்வி சோதித்துப்பார்க்கப்பட்டது. இந்தியாவிடம் இதுவரை 70 பிருத்வி -2 ரக ஏவுகணைகள் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 10 முதல் 30 ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த அக்டோபர் 1ம் திகதி, சீனா தனது தேசிய தினத்தின் போது,  52 வகையான புதிய ஆயுதங்களை முதன்முறையாக உலகின் பார்வைக்கு வைத்து அசத்தியது.

இதனையடுத்து, இன்று ( 12 ம் தேதி திங்கட்கிழமை ) பிருத்வி-2 ஏவுகணை,  ஒரிசாவிலுள்ள சண்டிப்பூர் ஏவுகணை சோதனை மையத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. இந்தச்சோதனை வெற்றிகரமாக நடந்தது தொடர்ந்து,  பிரம்மோஸ், கே-15 மற்றும் அக்னி -2 ஏவுகணைகளும் விரைவில் சோதிக்கப்படவுள்ளன.

இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம்

000cricket.jpgஇந்தி யாவில் இலங்கை அணி அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அச்சுற்றுப்பயணத்தின்போது இந்திய அணியுடன் 5 ஒருதினப் போட்டிகளிலும், 2 டுவென்டி20 போட்டிகளிலும், மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட உ ள்ளது.

போட்டிகள் நடைபெறும் இடங்களை கிரிக்கெட் வாரியத்தின் சுற்றுப்பயணத் திட்டக் குழு உறுதிசெய்தது.

டெஸ்ட் போட்டி நடைபெறும் இடங்கள்: மும்பை, கான்பூர் மற்றும் ஆமதாபாத்

ஒருதினப் போட்டி நடைபெறும் இடங்கள்: கட்டாக், ராஜ்கோட், விசாகப்பட்டினம், தில்லி மற்றும் கோல்கத்தா டுவென்டி20 போட்டி நடைபெறும் இடங்கள்: மொஹாலி மற்றும் நாக்பூர்.

போட்டி நடைபெறும் தேதிகள் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என பி
சிசிஐ செயலர் ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.
 

தென் மாகாண சபை தேர்தல் முடிவு அரசின் எதிர்கால தோல்விக்கான அறிகுறியாகும் : ஐ.தே.க. செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க

தென் மாகாண சபைத் தேர்தல் முடிவு அரசாங்கத்திற்கு பாரிய ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. 90 வீதமான வாக்குகளைப் பெற்று சரித்திரம் படைப்போம் எனக் கூறிய அரசாங்கத்தின் இந்த சரிவானது எதிர்கால தோல்விக்கான அறிகுறியாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

அரசாங்கம் கட்டம் கட்டமாக தேர்தல்களை நடத்தி வந்துள்ளதால் 1300 மில்லியன் ரூபா வீணடிக்கப்பட்டுள்ளது. அது மாத்திரமல்லாமல் தென் மாகாண சபைத் தேர்தலில் பாரிய அளவு அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார். தென் மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் தொடர்பில் விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் இடம்பெற்றது. அதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் அவர் கருத்து கூறுகையில், ஜனாதிபதியின் குடும்ப அரசியலுக்கும் ஜனநாயகத்திற்கு விரோதமான அரசின் செயற்பாட்டிற்கும் எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர். தென் மாகாண மக்களின் இந்தத் தீர்ப்பு ஏனைய மாகாண மக்களுக்கும் தைரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இராணுவ வெற்றியையும் தென் மாகாணத்தில் பல அபிவிருத்தி வேலைத் திட்டத் திட்டங்களையும் முன்வைத்தே அரசாங்கம் இந்தத் தேர்தலில் களமிறங்கியது. இதன் மூலம் பாரிய வெற்றியை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் எதிர்பார்த்திருந்தது. ஆனால், எதிர்பார்த்தளவு வாக்குகளை அரசாங்கத்தால் பெற முடியவில்லை. குறிப்பாக ஜனாதிபதி பிறந்த மாவட்டமான அம்பாந்தோட்டையில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பெற்றுக் கொண்ட வாக்குகளை விட இத்தேர்தலில் குறைந்த வாக்குகளே பெறப்பட்டுள்ளன.

இந்த மாகாணத்தில் பாரிய அளவு தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. தேர்தல் தினத்தன்று கூட கட்டவுட், பெனர், போஸ்டர் என தேர்தல் விளம்பரங்கள் நீக்கப்படாமல் இருந்தன. 7 ஆம் திகதி நள்ளிரவுடன் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் முடிவடைகின்றன என அறிவிக்கப்பட்ட போதிலும் 9 ஆம் திகதி வரை அரசாங்க தரப்பினர் தேர்தல் பிரசாரப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இவ்வாறு சட்டத்தை மதிக்காது செயல்படும் இவர்களால் மக்களை சட்டத்தை மதித்து செயல்படுமாறு எப்படிக் கூற முடியும்? மக்கள் இப்போது தெளிவடைந்துள்ளார்கள். தொடர்ந்தும் இவர்களால் மக்களை ஏமாற்ற முடியாது. . அரசாங்கம் கூறுவதைப் போல மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைக்கவில்லை. எனவே அரசாங்கம் உடனடியாக பொதுத் தேர்தல் ஒன்றை நடத்த வேண்டும். அதனை எதிர்கொள்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்றார்

ஜனாதிபதி மஹிந்தவே நோபல் பரிசுக்கு தகுதி – கனடா நஷனல் போஸ்ட்

Alfred_Nobelசமாதானத் திற்கான நோபல் பரிசுக்குத் தகுதியானவர் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவேயன்றி அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அல்ல என்று கனடா நெஷனல் போஸ்ட் ஆங்கிலப் பத்திரிகை தெரிவித்துள்ளது.

இந்தப் பரிசை அமெரிக்க ஜனாதிபதிக்கு வழங்குவது வேடிக்கையான விடயம் என்றும் அந்த பத்திரிகை சுட்டிக் காட்டியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி எதிர்காலத்தில் ஆற்ற விருக்கும் பணிகளுக்காகவே இப் பரிசு இப்போது வழங்கப்படுவதாக அப் பத்திரிகையின் ஆசிரியர் ஜொனதன் கேனியா குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி சமாதானத்திற்கான நோபல் பரிசுக்குத் தகுதியானவர் என்பதை செயற்பாடு மூலம் உறுதிப்படுத்தியுள்ளார் என்றும் அப்பத்திரிகை தெரிவித்திருக்கின்றது.

மூன்று தசாப்தங்களாக இலங்கை குடி மக்கள் முகம் கொடுத்த குரூரமான பயங்கரவாதத்திலிருந்து அம் மக்களை விடுவித்து, அவர்களுக்கு சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்திருப்பதற்காக அவர் இப் பரிசுக்குரிய தகுதியைப் பெற்றிருக்கின்றார் எனவும் அப்பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

விலங்கியல் பூங்காவில் பொலிதீனுக்குத் தடை!

கொழும்பு தெஹிவளையிலுள்ள தேசிய விலங்கியல் பூங்காவிற்குள் சுற்றுலாப் பயணிகள் பொலிதீன் கொண்டு செல்வதைத் தடை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் தெரிவிக்கின்றது.
 
அதன் அடிப்படையில் விலங்கியல் பூங்காவிற்குள் பிரவேசிக்கும் சுற்றுலாப் பயணிகள் மீது சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. பூங்காவிலுள்ள விலங்கினங்களைப் பாதுகாக்கும் ஒரு நடவடிக்கையாக இந்தத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

பூங்காவிற்கு வருகை தருகின்றவர்கள் விலங்கினங்களுக்கு பொலிதீன் கவர்களுடன் உணவுப்பொருட்களை வழங்குவதைத் தடுப்பதே இதன் நோக்கமாகும்.

அன்மையில் பூங்காவில் காணப்பட்ட மிகவும் அரிதான ஒரு விலங்கு எதிர்பாராத விதமாக உயிர்நீத்தது. சோதனையின் போது அதன் வயிற்றிலிருந்து ஒன்றரைக் கிலோ பொலிதீன் கண்டெடுக்கப்படடுள்ளது.

தேர்தல் முடிவு சர்வதேச சமூகத்திற்கு ஓர் முக்கிய செய்தி – ஜனாதிபதி

121009.jpgஅரசாங் கத்திற்கு எதிராக செயற்படுவோ ருக்கும், சர்வதேச சமூகத்தினருக்கும் தென்பகுதி மக்கள் இத்தேர்தல் முடிவு மூலம் முக்கிய செய்தியொன்றை வழங்கியுள்ளனர் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தென் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றிபெற்றிருப்பதையொட்டி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

தாய்நாட்டின் மீது அன்பு கொண்டிருக்கும் மக்களுக்குக் கிடைத்திருக்கும் பாரிய வெற்றியாகவே தென் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றுள்ள அமோக வெற்றியைக் கருதுகின்றேன்.

2005ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் எனது வெற்றிக்காகத் தென் மாகாண மக்கள் பாரிய பங்களிப்பு செய்தார்கள்.

இந்த மாகாண சபைத் தேர்தலிலும் ஐ.ம.சு. முன்னணி மூன்றிலிரண்டு பெரும்பான்மை வெற்றிபெறப் பங்களிப்பு செய்திருப்பதன் மூலம் எமது அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கின்றார்கள். இத்தேர்தல் முடிவை தென் மாகாண மக்கள் மஹிந்த சிந்தனைக்கு அளித்திருக்கும் மீள் அங்கீகாரமாகவே நான் கருதுகின்றேன்.

அரசாங்கத்திற்கு எதிராகப் பிழையான அபிப்பிராயத்தைக் கட்டியெழுப்புவதற்காகச் செயற்படுவோக்கும் சர்வதேச சமூகத்தினருக்கும் இத்தேர்தல் முடிவின் ஊடாக முக்கியமான செய்தியொன்றை தென் மாகாண மக்கள் வழங்கியுள்ளார்கள்.

நாட்டைப் பாதுகாத்து மக்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கான எங்களது திட்டங்களை மேலும் வலுவான முறையில் முன்னெடுக்க இந்த மக்கள் ஆணை உந்து சக்தியாக அமையும்.

கெளரவமான நாட்டைக் கட்டியெழுப்பும் எமது உன்னத முயற்சியில் இணைந்து கொள்ளுமாறு சகலருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் அழைப்பு விடுக்கின்றேன்.

 அரசியல், இன, மத சக்திகளுக்கு உட்படாமல் நாட்டின் சுபீட்சத்திற்காக ஒன்றுபட்ட தென் மாகாண மக்களை நான் இருதயபூர்வமாக நினைவு கூருகிறேன்.

அதேநேரம், அமைதியாகத் தேர்தலை நடத்தி முடிப்பதற்கு நடவடிக்கை எடுத்த தேர்தல் ஆணையாளர் உட்பட அரசாங்க அதிகாரிகள், பாதுகாப்பு பிரிவினர் உட்பட பொறுப்புடன் செயற்பட்ட நிறுவனங்களுக்கும் இச்சந்தப்பத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன் இவ்வாறு ஜனாதிபதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சீனாவும், இந்தியாவும் உணவு உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டும் – ஐ.நா. எச்சரிக்கை

சீனாவும், இந்தியாவும் உணவு உற்பத்தியில் கவனம் செலுத்தாவிட்டால் இரு நாடுகளிலும் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்றும் ஐக்கிய நாடுகளின உணவு மற்றும் விவசாய அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் உயர்நிலைக்கூட்டம் இத்தாலி தலைநகர் ரோமில் இன்றும் நாளையும்  நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் 2050-ம் ஆண்டில் உலக நாடுகளின் உணவுத் தேவைக் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
 
சீனா,  இந்தியா ஆகிய நாடுகளும் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ளன. இரு நாடுகளிளும் மக்கள் தொகை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உயர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவுப்; பொருட்;களின் தேவையும் அதிகரிக்கிறது.
 
2050-ம் ஆண்டில் இரு நாடுகளும் அதிகமான உணவுப்; பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டியதிருக்கும். இதற்காக இரு நாடுகளும் விவசாயத் துறையில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு செய்ய வேண்டியதிருக்கும். இதற்கு இரு நாடுகளும் தங்களை ஆயத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்.
 
விவசாயத் துறை முதலீட்டை அதிகரிக்க இரு நாடுகளும் தற்போதிருந்தே முயற்சி மேற்கொள்ள வேண்டும். விவசாய துறையில் தனியார் முதலீட்டை அதிகரிப்பது அவசியம். இது உள்நாட்டு அளவில் மட்டுமல்லாது வெளிநாட்டு அளவிலும் இருக்க வேண்டும்.
 
விவசாயத் துறையில் முதலீட்டுக்குத் தடையாக உள்ள காரணிகளைக் களைந்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தனியார் நிறுவனங்கள் எளிமையாக முதலீடு செய்யும் வகையில் சாதகமான சு10ழலை உருவாக்குவது அவசியம்.
 
இதுதவிர்த்து,  சீனா,  இந்தியா இரு நாடுகளுமே உள்நாட்டில் விவசாயிகளை ஊக்குவித்து வேளாண் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். வேளாண் உற்பத்தியை அதிகரிப்பதற்கு நவீன தொழில்நுட்பங்களின் பலன் அனைத்து விவசாயிகளுக்கு கிடைக்கச் செய்வது முக்கியமானதாகும்.
 
விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை பாதுகாப்பாகச் சேமித்து வைக்கக் குளிர்பதனக் கிடங்குகளை அமைத்தல்,  விவசாயப் பொருள்களுக்கு உரிய விலை கிடைப்பதற்கான சந்தையை ஏற்படுத்திக் கொடுத்தலிலும் இரு நாட்டு அரசுகளும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என ஐ.நா வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக எம்.பிக்கள் குழு நிவாரண கிராமங்களுக்கு நேரில் விஜயம்

111009.jpgஇலங்கை வந்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த இந்திய நாடாளுமன்றக் குழுவினர் நேற்றுக் காலை யாழ். நகருக்கும், அங்கிருந்து வவுனியா நிவாரணக் கிராமங்களுக்கும் விஜயம் செய்தனர்.

நேற்றுக் காலை விமானப் படை விமானம் மூலம் இரத்மலானையிலிருந்து யாழ். நகரைச் சென்றடைந்த குழுவினர் பலாலி விமானத் தளத்திலிருந்து ஹெலிகொப்டர் மூலம் யாழ். கோட்டையை சென்றடைந்தனர். காலை 9.45 மணியளவில் யாழ். கோட்டையை வந்தடைந்த குழுவினரை வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி, யாழ். அரச அதிபர் கணேஸ் ஆகியோர் வரவேற்றதுடன் தந்தை செல்வா நினைவுத் தூபி அருகே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வரவேற்றார்.

தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்தபின்னர் பேண்ட், மற்றும் நாதஸ்வர மேள வாத்தியங்களுடன் ஊர்வலமாக யாழ். பொது நூலகத்துக்கு குழுவினர் அழைத்துச் செல்லப்பட்டனர். யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்திலும் தமிழக குழுவினர் கலந்துகொண்டனர்.

யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்துகொண்டனர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழக குழுவின் தலைவர் ரி. ஆர். பாலுவுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்தார். யாழ். மேயர் பதவிக்கு தெரிவாகியுள்ள திருமதி யோகேஸ்வரி கவிஞர் கனிமொழிக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்தார். இந்த நிகழ்வுகளின் பின்னர் யாழ். நூலகத்துக்கு முன் குழுமியிருந்த மக்களுடனும் தமிழக் குழுவினர் உரையாற்றினர்.

தென்னிந்திய திருச்சபையின் முன்னாள் யாழ். ஆயரும், செல்வநாயகம் ஞாபகார்த்த அறங்காவல் குழுவின் தலைவருமான பேராயர் வணக்கத்துக்குரிய ஜெபநேசன் அடிகளாரும் தமிழக குழுவினருடன் பேசினார். யாழ். நிகழ்வுகளை முடித்துக் கொண்ட தமிழக குழுவினர் ஹெலிகொப்டர்களில் காலை 11.30க்கு வவுனியா புறப்பட்டனர்.

வவுனியா மனிக்பாம் நிவாரணக் கிராமத்தை அண்டியுள்ள ஹெலிக்கொப்டர் நிறுத்துமிடத்துக்கு பகல் 12.15 மணியளவில் வந்து சேர்ந்த தமிழக குழுவினர் மனிக்பாம் நிவாரணக் கிராமத்தின் வலயம் 1, வலயம் 2 என்பவற்றுக்கு விஜயம் செய்தனர்.

நிவாரணக் கிராமத்திலுள்ள பாடசாலைகளை பார்வையிட்டதுடன் அங்கிருந்த மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டறிந்துகொண்டனர். நிவாரணக் கிராமங்களிலுள்ள மக்கள் தமிழக குழுவில் அங்கம் வகிக்கும் கலைஞர் கருணாநிதியின் புதல்வி கவிஞர் கனிமொழியையே பெரும்பாலும் சூழந்துகொண்டனர்.

கதிர்காமர், அருணாசலம், இராமநாதன் வலயம் 4, 5 போன்ற நிவாரணக் கிராமங்களுக்கும் அவர்கள் விஜயம் செய்தனர். சில நிவாரணக் கிராமங்களின் உள்ளே சென்று மக்களுடன் உரையாடினர். சில கிராமங்களை வாகனத்தில் சென்றபடியே பார்வையிட்டனர்.

சென்னையிலுள்ள துணை உயர் ஸ்தானிகராலயத்தின் உதவி உயர் ஸ்தானிகர் வீ. கிருஷ்ணமூர்த்தி, வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலர் காரியவசம், இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகர் ஆலோக் பிரசாத் ஆகியோரும் தமிழக குழுவினருடன் சென்றுள்ளனர். வவுனியா நிவாரணக் கிராமங்களிலிருந்து தமிழக குழுவினர் நேற்று மாலை 4.00 மணிக்கு மீண்டும் கொழும்பு திரும்பினர்.

260 இலங்கையர்கள் இந்தோனேஷிய கடலில் கைது

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாகப் படகில் சென்றுகொண்டிருந்த 260 இலங்கையர்கள் இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டனர். இந்தோனேஷியப் பொலிஸார் இதனை அறிவித்துள்ளனர்.

ஜாவாவுக்கும் சுமாத்திராவுக்கும் இடையிலுள்ள சுண்டா நீரிணையில் மரப்படகொன்றில் சென்றுகொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரும் இந்தோனேஷிய கடற் படையினரும் அதிகாலை வேளையில் இவர்களை கைது செய்தனர். இவர்களில் பெண்களும் சிறுவர்களும் இருந்தனரெனத் தெரிவித்த பொலிஸ் அதிகாரி, விசாரணைக்காக இந்தோனேஷியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனரெனக் கூறி னார்.

சட்டவிரோத குடியேற்றக்காரர்களை அவுஸ்திரேலியாவுக்குள் கொண்டுசெல்வதற்குரிய முக்கியதளமாக இந்தோனேஷியா திகழ்கிறது.  இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தோனேஷியாவைப் பயன்படுத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட 260 பேரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.