03

03

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த 1,82,480 பேர் நலன்புரி நிலையங்களில்-வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு

chals_.jpgவன்னியில் இருந்து இடம்பெயர்ந்த 1,82,480 நானூற்றி எண்பது பேர் வவுனியா, யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் 1,67,330பேர் வவுனியா மாவட்டத்தில் உள்ள இருபத்திநான்கு நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார்.

அகதிகள் தொடர்பாக வவுனியா அரசாங்க அதிபர் அலுவலகத்தினால் கடந்த 30ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 11,150 பேரும் திருகோணமலை மாவட்டத்தில் 4 ஆயிரம் பேரும் நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள அகதிகளின் எண்ணிக்கை விபரம் வருமாறு :

வவுனியா மாவட்டத்தில் அரவிந்தோட்ட சைவ வித்தியாலயத்தில் 365 குடும்பங்களைச் சேர்ந்த 1183 பேர்,

ஆனந்தகுமார சுவாமி வலயம் ஒன்றில் 11600 பேர்,

கதிர்காமம் கிராமத்தில் 5904 குடும்பங்களைச் சேர்ந்த 22, 143 பேர்,

அருணாசலம் கிராமத்தில் 10831 குடும்பங்களைச் சேர்ந்த 37873 பேர்,

செட்டிகுளம் மகா வித்தியாலயத்தில் 550 குடும்பங்களைச் சேர்ந்த 1793 பேர்,

பிள்ளையார்குளம் பாடசாலையில் 491 குடும்பங்களைச் சேர்ந்த 1575 பேர்,

முதலியார் குளம் பாடசாலையில் 288 குடும்பங்களைச் சேர்ந்த 817 பேர்,

ராமநாதன் வலயம் இரண்டில் 52,000 பேர்,

பம்பைமடு விடுதியில் 1421 குடும்பங்களைச் சேர்ந்த 4569 பேர்,

நெலுக்குளம் கலைமகள் வித்தியாலயத்தில் 1519 குடும்பங்களைச் சேர்ந்த 3491 பேர்,

சைவபிரகாச மகா வித்தியாலயத்தில் 1375 குடும்பங்களைச் சேர்ந்த 3437 பேர்,

தமிழ் மகா வித்தியாலயத்தில் 1808 குடும்பங்களைச் சேர்ந்த 4929 பேர்,

வவுனியா முஸ்லிம் வித்தியாலயத்தில் 509 குடும்பங்களைச் சேர்ந்த 1526 பேர்,

காமினி மகா வித்தியாலயத்தில் 734 குடும்பங்களைச் சேர்ந்த 1645 பேர்,

கோவில் குளம் மகா வித்தியாலயத்தில் 562 குடும்பங்களைச் சேர்ந்த 1829 பேர்,

கல்வியியற் கல்லூரியில் 1944 குடும்பங்களைச் சேர்ந்த 5990 பேர்,

பூந்தோட்டம் மகா வித்தியாலயத்தில் 570 குடும்பங்களைச் சேர்ந்த 1669 பேர்,

தமிழ் மகாவித்தியாலயத்தில் 465 குடும்பங்களைச் சேர்ந்த 1237 பேர்.

கந்தபுரம் வாணிவித்தியாலயத்தில் 1073 பேர்,

பூவரசங்குளத்தில் 994 பேர்,

தாண்டிக்குளம் பாடசாலையில் 561 குடும்பங்களைச் சேர்ந்த 1492 பேர்,

புதுக்குளம் பாடசாலையில் 989 குடும்பங்களைச் சேர்ந்த 3124 பேர்,

ரம்பைக்குளம் மகளிர் வித்தியாலயத்தில் 1350 பேர்,

கோமரசன் குளம் மகாவித்தியாலயத்தில் 2150 பேரும் தங்கி உள்ளனர்.

இதைத் தவிர யாழ். மாவட்டத்தில் உள்ள நலன்புரி நிலையங்களில் 3791 குடும்பங்களைச் சேர்ந்த 11150 பேர் தங்கி இருப்பதுடன் திருகோணமலை மாவட்டத்தில் மூன்று பாடசாலைகளில் 4000 பேர் தங்கி உள்ளனர்.

அவர்கள் தங்கியிருக்கும் பாடசாலைகளின் விபரம் வருமாறு:

அரபாத் நகர் முஸ்லிம் வித்தியலயத்தில் 1560 பேரும்,

முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 1797 பேரும்,

சிங்கள மகா வித்தியாலயத்தில் 643 பேரும் தங்கி உள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் உள்ள அகதிகள் குறித்து மாவட்ட அரச அதிபர் தகவல் தருகையில், எமது மாவட்டத்தில் உள்ள முகாம்களில் தங்கி இருப்போரில் ஐம்பத்து ஐயாயிரம் பேரைத் தவிர, ஏனையோர் சமைத்து சாப்பிடுகின்றனர். அதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நலன்புரி நிலையத்திற்கும் நிரந்தரமாக டாக்டர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். நடமாடும் வைத்திய சேவைகளும் நடத்தப்படுகின்றன. இதுவரை முன்னூற்றி ஐம்பது மில்லியன் ரூபாவரை செலவிடப்பட்டுள்ளது. நலன்புரி நிலையங்களில் உள்ளவர்களுக்கு எம்மால் முடிந்த அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கிறோம். 

ஈழத் தமிழர்களுக்கு அளித்த வாக்குறுதியைக் காப்பேன்: ஜெயலலிதா

j-j-j.jpgஇலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தனி ஈழம் மட்டுமே தீர்வு என்றும் அதனை அமைத்தே தீருவேன் என்றும் தான் அளித்த வாக்குறுதியை நிச்சயம் காப்பேன் என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க. கூட்டணி மார்க்சிஸ்ட் வேட்பாளரை ஆதரித்து சனிக்கிழமை நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, ஈழத் தமிழர்களுக்கு தான் அளித்த வாக்குறுதியைக் காப்பாற்ற தனது கூட்டணிக்கு வாக்களித்து உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தனி ஈழமே தீர்வு என்று தான் கூறியதற்கு உலகத் தமிழர்களிடமிருந்து குவியும் பாராட்டுக் கடிதங்கள் குறித்து இக்கூட்டத்தில் குறிப்பிட்ட ஜெயலலிதா, சுவிட்சர்லாந்து தமிழ் பேரவை அனுப்பியிருந்த கடிதத்தை கூட்டத்தினருக்குப் படித்துக் காட்டினார்.

“இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தனி ஈழமே ஒரே தீர்வு என்று துணிச்சலாக, பகிரங்கமாக, அச்சமின்றி நீங்கள் அளித்திருக்கும் ஈழம் குறித்த வாக்குறுதிக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றி என்று எனக்கு உலகம் முழுவதிலும் இருந்து தமிழர்கள் செய்திகளை அனுப்பியவண்ணம் இருக்கிறார்கள். எங்களுக்கு மிகுந்த ஆறுதல் தருவதாக உங்கள் ஈழப் பிரகடனம் அமைந்திருக்கிறது என்று நன்றி சொல்லி கடிதம் அனுப்பியிருக்கிறார்கள்.

உலகெங்கும் வாழும் தமிழர்கள் இப்படி உணர்ச்சிப்பூர்வமாக இருக்கும் வேளையில், நம் கைக்கெட்டிய தூரத்தில், கண்ணுக்கெட்டிய தூரத்தில் வாழுகின்ற தமிழர்களைப் பற்றி சிறிதும் அக்கறையில்லாது மத்திய, மாநில அரசுகள் கபட நாடகங்களை தொடர்ந்து அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றன.

இலங்கைத் தமிழர்களின் துயரத்திற்கு முடிவு ஏற்பட தனி ஈழம் அமைவதுதான் ஒரே வழி, ஒரே தீர்வு. அதை நான் செய்து முடிப்பேன். வங்காள தேசம் உருவாக பாகிஸ்தானிற்கு எதிராக இந்தியப் படையை இந்திரா காந்தி அனுப்பியது நியாயமென்றால், எங்கள் தமிழர் நலன் காக்க இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்புவதும் நியாயமே. அதை நான் செய்து முடிப்பேன் என்று நான் பிரகடனம் செய்தேன். அதைப் பாராட்டித்தான் உலகம் முழுவதிலும் இருந்து தமிழர்கள் எனக்கு நன்றி செய்திகளையும், வாழ்த்துகளையும் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராகிய நான் ஒன்றைச் சொன்னால் அதைச் செய்து முடிப்பேன் என்று உலகத் தமிழனம் நம்புகிறது என்று ஜெயலலிதா பேசினார்.

‘பங்கருக்குள் இருந்து ஒரு மூச்சுக்காற்று’- தம்பா

பங்கருக்குள் இருந்து ஒரு மூச்சுக்காற்று

கனரக பீரங்கிகள்போல் அதிர்ந்து எழுகின்றன
பேச்சுக்கள்.
தலைக்குமேல் ’செல்’ போல் கூவிச் செல்கின்றன
அறிக்கைகள்.
’கிளஸ்தர்’ குண்டுகள் போல் சிதறி விழுகின்றன
உறுதி மொழிகள்.

கூத்தும் கரணமும்
இது ஒரு தேர்தல் காலம்;
இழப்பும் அவலமும்
எமக்கு யுத்தகாலம்.

நேற்றைய பேச்சு
இன்று இல்லை
இன்றைய உயிர்
நாளை இல்லை.

நாங்கள் இழப்பது
நீங்கள் பெறுவதற்கு
இழப்பதோ உயிர்கள்
பெறுவதோ வாக்குகள்.

போதும்!

எதிர்பார்த்து ஏமாந்து போவதிலும்
எதிர்கொண்டு எழுவதே மேல்.

– தம்பா

மாணவி தினுசிக்காவின் படுகொலைக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் கண்டனம்

sivanesathurai.jpg மட்டக்களப்பு நகர பிரதேசத்தில் பாடசாலை மாணவியொருவர் கடத்தப்பட்டு இப்படி படுகொலை செய்யப்படடிருப்பது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது.இது உண்மையிலே வருத்தமளிக்கின்ற செயலாகும்.  இதனை யார் புரிந்திருந்தாலும் சட்டத்தின் முன் கொண்டுவரப்பட்டு உரிய தண்டனை வழங்க வேண்டும் என நான் பொலிஸாரினைக் கேட்டிருக்கின்றேன்.

இந்தச் சம்பவமானது உண்மையில் கிழக்கின் சாதாரண நிலையினைக் குழப்ப விரும்புகின்றவர்களின் செயலாகவே நான் பார்க்கின்றேன். அதாவது கிழக்கு மாகாணத்திலே தற்போது அமைதியும் ஜனநாயகமும் முன்னெடுத்துச் செல்லப்படுகின்ற இந்த வேளையிலே அதனை விரும்பாத ஒரு சில விசமிகளே இவ்வாறான வேலைகளைச் செய்திருக்க வேண்டும். இவ்வாறான செயற்பாடுகள் மீண்டும் நடைபெறாது இருப்பதற்குரிய அனைத்து நடவடிக்கையினையும் பாதுகாப்புத் தரப்பினர் மேற்கொண்டுவருகின்றார்கள். இது தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் விசாரணை அறிக்கையினயும் கோரி இருக்கின்றேன்.” என இது தொடர்பாக அவர் கருத்து வெளியிட்டுள்ளார். 

திஸ்ஸநாயகம் தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா கவலை

tissa-nayakam.jpgஉலகமெங்கும் ஊடகத்துறைக்கு எதிரான அச்சுறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர்பாக கவலை தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இலங்கையில் ஓராண்டு காலத்திற்கு மேலாக ஊடகவியலாளர் ஜே.எஸ். திஸ்ஸநாயகம் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலைமை குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார். உலக ஊடக சுதந்திர தினம் கொண்டாடப்படுவதையொட்டி அமெரிக்க ஜனாதிபதி விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,.

“உலகின் ஒவ்வொரு மூலையிலும், ஊடகவியலாளர்கள் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்கள். அல்லது தொந்தரவுகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அஸர்பைஜான் முதல் ஸிம்பாப்வே வரை, பர்மா முதல் உஸ்பெகிஸ்தான் வரை, கியூபா முதல் எத்த்திரியா வரை இந்த நிலை உள்ளது. இவ் விடயத்தில் மனத்துயரை உண்டாக்கும் உதரணங்களாக தோன்றுவது இலங்கையில் ஜே.எஸ். திஸ்ஸநாயகம் சீனாவில் ஷிடாலோ மற்றும் ஹு ஸ்ரீயாவோ ஆகியோராவர்.

உண்மையை பொறுப்புடன் வெளிப்படுத்தும் முழு உலகத்தின் ஊடகத்துறையைச் சேர்ந்த தைரியமிக்க ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஆதரவாக இன்று என் குரலை எழுப்புகிறேன். அவ்வாறு செய்வதன் மூலம் தோமஸ் ஜெர்ப்பஸன் கூறிய வார்த்தைகளை நினைவு கூருகிறேன். எமது அரசாங்கத்தின் அடிப்படை மக்களின் அபிப்பிராயமேயாகும். அந்த நோக்கத்திற்கான உரிமை காக்கப்பட வேண்டும். மேலும் ஊடகமில்லாத ஒரு அரசாங்கம் வேண்டுமா? அல்லது அரசாங்கமில்லாத ஊடகம் வேண்டுமா? என்பதை நான் தீர்மானிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.,.

தேர்தலுக்கு பின் ஈழத்தை பற்றி ஜெயலலிதா பேச மாட்டார்: திருமாவளவன்

thirmavala.jpgராஜபக்சேவின் குரலை பிரதி பலிக்கும் ஜெயலலிதா இன்று ஓட்டுக்காக ஆதாயம் தேடி தனி ஈழம் பெற இந்திய ராணுவத்தை அனுப்பி தனி ஈழம் அமைப்பேன் என்பது முற்றிலும் மோசடித்தனமான பேச்சு.வருகின்ற 11 ந்தேதிக்கு பிறகு ஈழத்தை பற்றி ஜெயலலிதா பேசவே மாட்டார் என விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

இலங்கை முல்லைத்தீவில் இலங்கை ராணுவம் சுற்றி வளைத்து 11/2 லட்சம் ஈழத் தமிழர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். உணவு, உடை, மருந்து மற்றும் இருப் பிடம் இல்லாமல் கொடூரமான முறையில் அல்லலுக்கு ஆட்பட்டு வருகிறார்கள். இந்திய ராணுவத்தை அனுப்பி தனி ஈழம் பெற்றுத் தருவேன் என்று ஜெயலலிதா கூறியது பற்றி கேட்டதற்கு தேர்தலுக்காக எதையும் எப்படியும் பேசுவார் ஜெயலலிதா என்பதற்கு இது சான்று. தனி ஈழத்திற்கு நேர் எதிரான கொள்கைகளை உடையவர் ஜெயலலிதா. புலிகளை பயங்கரவாதிகள் என்றும் புலிகளின் தலைவர் பிரபா கரனை இந்தியாவுக்கு கொண்டு வந்து தண்டிக்க வேண்டும் என்றும் பேசியவர் ஜெயலலிதா. தேர்தல் நேரத் தில் வாக்குசேகரிக்க தற்போது தனி ஈழம் பற்றி பேசுகிறார். புலிகளை பற்றி தற்போதைய அவர்களின் நிலை என்ன என்பது பற்றி முதலில் விளக்க வேண்டும்.

இன்றும் புலிகளை பயங்கர வாதிகள் என்று கூறுகிறாரா? போராளிகள் என்று கூறு கிறாரா என்பதை மக்களுக்கு விளக்க வேண்டும். ராஜ பக்சேவின் குரலை பிரதி பலிக்கும் ஜெயலலிதா இன்று ஓட்டுக்காக ஆதாயம் தேடி தனி ஈழம் பெற இந்திய ராணுவத்தை அனுப்பி தனி ஈழம் அமைப்பேன் என்பது முற்றிலும் மோசடித்தனமான பேச்சு.வருகின்ற 11 ந்தேதிக்கு பிறகு ஈழத்தை பற்றி ஜெய லலிதா பேசவே மாட்டார்.எனவே ஜெயலலிதாவின் மாய் மால ஜாலங்களில் தமிழக மக்கள் ஏமாறக்கூடாது என்று கூறினார்.

தமிழகத்தில் தி.மு.க.வின் வெற்றிவாய்ப்பு பற்றி கேட்டதற்கு தி.மு.க.வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும்,ஈழத்தமிழர் பிரச்சினையை பயன்படுத்தி எப்படியாவது வெற்றி பெற்று விடலாம் என்று இல்லாதது பொல்லாதது எல்லாம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா தனக்கே எதிரான கருத்துக்களை சொல்லி வருகி றார். ஆனால் அவருடைய கூட்டணி கட்சியினர் அடிக் கடி தங்களுடைய நிலைப் பாடுகளை மாற்றி கொள்ளக் கூடியவர்கள் என்ற உண்மை மக்களுக்கு தெரிந்துள்ளதால் யாரும் நம்ப தயாராக இல்லை.எனவே இத்தகைய அவதூறு பிரசாரங்களை தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பை பாதிப்படை வைக்க முடியாது என்றார்.

5 பிரிட்டிஷ் எம்.பி.க்கள் நாளை இலங்கை வருகை

uk-london.jpgபிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவர் அடங்கிய தூதுக்குழுவொன்று நாளை திங்கட்கிழமை வடபகுதி மனிதாபிமான நிலைமை தொடர்பாக ஆராய்வதற்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளது. பக்கிங்காம் எம்.பி. கட்சியின் ஜோன் பேர்கவ், முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் டெஸ் பிறவுண், ஸ்கொட்லாந் எம்.பி. மக்கெலம் புரூசி, வட அயர்லாந்திற்கான எம்.பி. எட்வட் மக்கிரடி மற்றும் தொழிலாளர் கட்சி எம்.பி. மொஹமட் சர்வர் ஆகியோரே இக்குழுவில் அடங்கியுள்ளனர்.

இவ் இருநாள் விஜயத்தின் போது இவர்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் பல்வேறு அரசாங்க எதிர்க்கட்சித் தலைவர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்திக்கவுள்ளனர். இவ்விஜயம் இலங்கை அரசாங்கம் விடுத்த அழைப்பின் பேரிலேயே மேற்கொள்ளப்படுகிறது.

வன்னி மக்களுக்கு ஒருவேளையாவது உணவளித்து உயிர்காக்க உதவுங்கள் – திருமலை, மட்டு .மறை மாவட்ட துணை ஆயர் அவசர கோரிக்கை

Wanni_War_IDPsமன்னார் மாவட்டத்தில் தினமும் பஸ்களில் கொண்டுவந்து குவிக்கப்படும் வன்னி அகதிகளுக்கு குடிநீருக்கும் உணவுக்கும் உதவுமாறு திருமலை, மட்டு .மறை மாவட்ட துணை ஆயர் வண. பொன்னையா ஜோசப் பொதுமக்களுக்கு அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்;கடந்த 24 ஆம், 25 ஆம் திகதிகளில் மன்னாருக்கு அவசர விஜயமொன்றை மேற்கொண்டு விட்டு திரும்பிய பின் அவர் மட்டு. ஆயரில்லத்தில் வைத்து இந்த அவசர வேண்டுகோளை விடுத்துள்ளார்.

வன்னியின் போர் பிரதேசத்துக்குள்ளிருந்து தினம் தினம் வவுனியாவுக்குக் கொண்டுவரப்படும் அகதிகளில் பெரும்பாலானோரை வவுனியா செட்டிகுளம் மன்னார் வீதியின் இரு மருங்கிலுமுள்ள காட்டுப்பிரதேசங்களில் அரசாங்கம் கொண்டுவந்து இறக்கியுள்ளது. இப்பகுதிகளை அரச அதிகாரிகள் இயந்திரங்களை கொண்டு துரிதமாக துப்புரவு செய்துகொடுக்க, அவ்விடங்களில் தற்காலிக கொட்டில்களும் கூடாரங்களும் மலசல கூடங்களும் அமைக்கும் அவசர பணிகளில் யுனிசெப் அமைப்பும் கரித்தாஸ்(செடெக்) நிறுவனமும் இணைந்து செயலாற்றிக்கொண்டிருக்கின்றன.

தாம் மன்னாரில் நின்ற கடந்த 24 ஆம் ,25 ஆம் திகதிகளில் மிகப் பெருந்தொகையான பெண்களும் சிறுவர்களும் சிறுமியர்களும் வயது முதிர்ந்த ஆண்களும் பஸ்களில் கொண்டுவந்து இறக்கப்படுவதைக் கண்டோம். இவர்கள் உடுத்த உடுப்புக்கு மாற்றுடையில்லாமல் வெறும் கையினராகவே காணப்பட்டனர். இவர்கள் மத்தியில் ஆண்கள் தொகை குறைவாயிருந்தது. இறக்கப்பட்டவர்களில் பலரும் காடுமேடென்றும் பாராமல் பசியினாலும் தாகத்தினாலும் மயங்கிவீழ்ந்து கிடக்கக் காணப்பட்டனர். இந்தக்கையறு நிலையில் அவர்களுக்கு எதுவும் வழங்கக்கூடிய நிலையில் யாரும் இருக்கவில்லை. இவர்களுக்கு தினமும் ஆயிரம் உணவுப் பார்சல்களையாவது வழங்கமுடியாத நிலையில் தாங்களிலிருப்பதாக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் என்னிடம் கூறிக்கண்ணீர் வடித்தார்.

இந்த நேரத்தில் இன,மத பேதங்களுக்குமப்பால் மனிதநேயத்துடன் மற்றவர்கள் அந்த அகதிகளுக்கு உணவளிக்க முன்வரவேண்டும். நாள்தோறும் அவர்களுக்கு உணவளிப்பதே முக்கியம்.அதுவே அவசரம். அதன்பிறகே மற்றதெல்லாம். நேற்றைய நாள் கடந்துவிட்டது. நாளை என்ன நடக்குமோ தெரியாது. இன்றைய நாள் எமது கரங்களில் உள்ளது. இன்று துன்பத்தில் ஓலமிடும் எமது சகோதரர்களின் அவலக்குரலைக்கேட்டும் நாம் உதவிசெய்யமறுத்தால், பின் வாங்கினால் நாம் வாழ்ந்தும் பயனில்லை. நாளைவரை காத்திருக்கவேண்டாம். இன்று அவர்களுக்கு உணவளிக்காவிட்டால் நாளை அவர்கள் இருக்கமாட்டார்கள்.

உணவோடு குடிநீரும் குழந்தைகளுக்காக பால்மா, மருந்துப்பொருட்கள்,உடைகளும் அவர்களுக்குத்தேவை .அவலப்படும் இவர்களுக்கு செய்யும் உதவிகள் அந்த இறைவனுக்கே செய்வதாகுமென்று ஆயர் தெரிவித்தார்.

பாரீஸில் சமூகப் பாதுகாப்பு அமைப்பு மே தின ஊர்வலம்

May_Day_Protest_Parisபிரான்ஸ் – பாரீஸில் சமூகப் பாதுகாப்பு அமைப்பு ( Comité de Défense Social) மற்றும் Les Libertaires அமைப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்ட மே தின ஊர்வலம் நேற்றைய தினம் (01.05.2009) மிச் சிறப்பாக நடந்தேறியது. இலங்கை மக்கள் எதிர்கொள்ளும் யுத்த அவலங்களை வெளிப்படுத்தும் கோசங்களை முதன்மைப்படுத்தி இவ் மே தின ஊர்வலம் அமைந்திருந்தது. குறிப்பாக இலங்கை அரசு, தமிழ் ஈழ விடுதலைப் புலிகள், இலங்கை அரசோடு சேர்ந்து இயங்கும் ஆயுதக் குழுக்கள் மீதான கண்டன கோசங்கள் மே தின ஊர்வலத்தில் கலந்துகொண்டோரால் முன் வைக்கப்பட்டது.

May_Day_Protest_Parisபெரும்திரளான மக்கள் கலந்துகொண்ட இந்த மே தின ஊர்வலம் இலங்கையில் நடக்கும் அனைத்து வன்முறைகளையும் எதிர்க்கும் மே தின ஊர்வலமாக இவ்வருடம் அமைந்திருந்தது. பிரான்சில் இருக்கும் பல்வேறு அமைப்புக்களைச்சார்ந்த இடதுசாரிகள், பெண்ணியலாளார்கள், அனார்க்கிஸ்டுக்கள் சுற்றுப்புறச் சுhழலியலாளர்கள் என பலரும் இவ் மே தின ஊர்வலத்தில் கலந்துகொண்டு இலங்கையில் நடக்கும் அனைத்து வன்முறைகளுக்கும் எதிரான தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

வழமைபோல் அரச ஆதரவாளர்களினதும் புலி ஆதரவாளர்களினதும் பல்வேறு எதிர்ப்பையும் தடைகளையும் மீறி இவ் ஊர்வலம் நடாத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சமூகப் பாதுகாப்பு அமைப்பு ( Comité de Défense Social)

சர்வதேச சமூகம் பிரபாகரனை பாதுகாக்க முயற்சித்தால் அது பகற்கனவாகவே முடியும் – அமைச்சர் முரளிதரன்

Karuna Colதமிழ் மக்களின் எதிர்கால நலன்களுக்கு உதவ சர்வதேச சமூகம் முன்வர வேண்டுமே தவிர பிரபாகரனைப் பாதுகாக்க முயற்சித்தால் அந்த முயற்சி வெரும் பகற்கனவாகவே அமையுமென அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

புலிகளின் பிடியிலிருந்து மீட்கப்படும் மக்களின் எதிர்காலத்தை சுபீட்சமானதாக்க சகல சர்வதேச நாடுகளும் உதவுவதுடன் யுத்தத்தினால் அழிந்து போயுள்ள பிரதேசங்களைக் கட்டியெழுப்ப முன்வரவேண்டுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தின நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்றுமுன்தினம் அலரிமாளிகையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது:-சர்வதேச சமூகம் யுத்த நிறுத்தமொன்றைக் கோருகிறது. பிரிட்டிஷ், அமெரிக்க படைகள் ஈராக்கில் யுத்தம் புரிந்த போதும் ஆப்கானிஸ்தானில் படைகள் போராடிய போதும் சர்வதேச சமூகம் அது மனிதாபிமான நடவடிக்கை என்கிறது. அப்படியானால் இன்று வன்னியில் மாபெரும் மனிதாபிமான நடவடிக்கையே நடைபெறுகிறது.

பிரபாகரனிடமிருந்து எஞ்சிய மக்களையும் மீட்கும் மனிதாபிமான நடவடிக்கை இடம்பெறுகிறது. இந்த இராணுவ நடவடிக்கை மிகவும் தேவையானது. இதை உணராது சர்வதேச சமூகம் யுத்த நிறுத்தம் கோருவது தவறானது எனெவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.