May

May

ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் இரண்டாவது அமர்வு இன்று

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான இரண்டாவது அமர்வு இன்று நடைபெறவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச் சாட்டுக்களை மறுத்து ரஷ்யா மற்றும் சீனப் பிரதிநிதிகள் நேற்றைய அமர்வில் உரையாற்றினர். ஏனைய நாடுகளின் பிரதிநிதிகள் இன்று உரையாற்றவுள்ளனர் எனவும் அமைச்சு அறிவித்துள்ளது. 

நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தியின் உறவினரை காணவில்லை

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தியின் செயலாளரான தவராஐசிங்கம் சுபாஸ் (23 வயது) என்பவர் நேற்று அதிகாலை முதல் மர்மமான முறையில் காணாமல்போயுள்ளார். சென்னையிலிருந்து கட்டுநாயக்கா விமானநிலையத்தை வந்தடைந்த இவர் அங்கு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும் , இதுவரை அவர் வீடு திரும்பவில்லை என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெயானந்தமூர்த்தியின் சகோதரியின் மகனான இவர் தனது பெற்றோருடன் கொழும்பிலேயே வசித்து வருகின்றார்.

நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.15 மணியளவில் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தைச் வந்தடைந்த சமயம் அங்கு வைத்து கைது செய்யப்பட்டடதாக தகவலறிந்த தாயார் இக்கைது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் ஊடாக பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் தொடர்பு கொண்டதாகவும், இதன் பிரகாரம் நேரடியாக வந்து அழைத்துச் செல்லுமாறு பொலிஸ் பொறுப்பதிகாரியினால் பதிலளிக்கப்பட்டதாகவும் இது தொடர்பாகக கூறப்படுகின்றது.

கொழும்பிலுள்ள கனேடிய தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம்

canada-2.jpgகொழும்பிலுள்ள கனேடிய தூதரகம் முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. கனேடிய அரசங்கம் விடுதலை புலிகள் அமைப்பிற்கு ஆதரவளிப்பதாக குற்றம்சாட்டி இவ் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டோர் கோஷங்களை எழுப்பியதுடன் பாதாதைகளையும் ஏந்தியிருந்தனர்

மட்டு. மாவட்டத்தில் மேலும் மூன்று இடங்களில் அனர்த்த முன்னெச்சரிக்கைக் கோபுரங்கள்

kalmunai.jpgஅனர்த்தங்கள் பற்றி முன்னெச்சரிக்கை செய்வதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று முன்னெச்சரிக்கை கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் மூன்று கோபுரங்கள் நிறுவப்படவுள்ளன.

இக்கோபுரங்களின் செயற்பாடுகளை விளக்குவதற்கான ஒரு கூட்டம் கடந்த திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் திருமதி ஆர். கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதேச செயலாளர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், கிராம சேவையாளர்கள் அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். கலாநிதி புத்திக வீரங்சிக தலைமையிலான குழுவினரால் கருத்துரையும் விளக்கமும் அளிக்கப்பட்டன

1 இலட்சம் படையினரை மேலும் திரட்டுவதற்கு இராணுவம் தீர்மானம் -ஜெனரல் சரத் பொன்சேகா

fonseka-000.jpgஉள்நாட்டு யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில், விடுதலைப்புலிகளின் மற்றொரு கிளர்ச்சி ஏதாவது மீண்டும் இடம்பெறுவதை தடுப்பதற்காக மேலும் 1 இலட்சம் படையினரை திரட்டவுள்ளதாக இராணுவத் தரப்பு தெரிவித்திருக்கிறது.

வெளிநாடுகளிலுள்ள புலி உறுப்பினர்கள் புதிய தலைமைத்துவத்தின் கீழ் மீண்டும் முயற்சிப்பர் என்பதால், படையினரை கட்டியெழுப்பவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்ததாக ஏ.பி. செய்திச்சேவை குறிப்பிட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் சிட்னி, மெல்பேர்ண் நகரங்களிலும் நோர்வேயின் ஒஸ்லோ நகரிலும் வணக்க நிகழ்வுகள்

வன்னியில் சிறிலங்கா படையினர் நடத்திய இனப்படுகொலையில் பலியான மக்களையும் போராளிகளையும் நினைவுகூர்ந்து அவுஸ்திரேலியாவின் சிட்னி, மெல்பேர்ண் நகரங்களிலும் நோர்வேயின் ஒஸ்லோ நகரிலும் துயர நாள் கடைப்பிடிக்கப்பட்டு வணக்க நிகழ்வுகள் நடைபெற்றன

பிரெஞ்ச் ஓபன்-முதல் சுற்றில் சானியா தோல்வி

27-saniamirza.jpgபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா அதிர்ச்சி தோல்வியடைந்தார். நான்கு கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் இரண்டாவதான பிரெஞ்ச் ஓபன் பாரிசில் நடக்கிறது. பெண்களுக்கான ஓற்றையர் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, கஜகஸ்தானை சேர்ந்த கலினா வஸ்கோபோயேவாவை எதிர்கொண்டார்.

போதுமான பயிற்சியில் இல்லாமல் இந்த போட்டியில் பங்கேற்ற சானியா துவக்கத்தில் தவறு மேல் தவறு செய்தார். இதையடுத்து அவர் முதல் செட்டை 4-6 என பறிகொடுத்தார். அடுத்த செட்டில் சானியா வெற்றிக்காக கடுமையாக போராடினார். ஆனால், இவரது முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. இரண்டாவது செட்டை கடும் போராட்டத்துக்கு பின் 6-7 என இழந்தார். இறுதியில் 4-6, 6-7 என்ற நேர் செட்களில் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.சானியா அடுத்ததாக பெண்கள் இரட்டையரில் சீன தை பேவை சேர்ந்த ஜியா ஜங் சுவாங்குடன் இணைந்து விளையாடுகிறார்

இலங்கையின் தீர்மானத்திற்கு இந்தோனேஷியா ஆதரவு

இலங்கை தொடர்பாக மேற்கு நாடுகள் இரட்டை நிலைப்பாட்டுடன் இருப்பதாக இந்தோனேஷியா குற்றம் சாட்டியுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு மேற்கொண்ட இறுதிக் கட்ட நடவடிக்கை தொடர்பாக விசாரணை நடத்துவதற்கான முயற்சிகளில் மேற்கு நாடுகள் ஈடுபட்டிருப்பது தொடர்பாகவே இந்தோனேஷியா இக்குற்றச்சாட்டைத் தெரிவித்திருக்கிறது.

ஆப்கானிஸ்தான், பாலஸ்தீன சூழ்நிலைகளுடன் ஒப்பிட்டு தமது உரிமை மீறல் விசா ரணைகளில் இரட்டை நிலைப்பாட்டை மேற்கு நாடுகள் கொண்டிருப்பதாக இந்தோனேஷியா சாடியுள்ளது.

“இதனை (உரிமைகள் மீறல் விசாரணைக்கான அழைப்பு) நாம் அரசியல் ரீதியானதாக பார்க்கிறோம். காஸாவில் இஸ்ரேலின் உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணை முயற்சி தொடர்பாக அவர்கள் ஏன் ஆர்வமின்றி செயற்படாமல் அவர்கள் (மேற்கு நாடுகள்) நிராகரித்தன? என்று இந்தோனேஷிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெகு பைசாசியாவை மேற்கோள் காட்டி உள்ளூர் ஊடகமொன்று நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்திருக்கிறது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நேற்று சமர்ப்பிக்கப்படவிருந்த கொழும்பின் தீர்மான வரைபுக்கு இந்தோனேஷியா ஆதரவளிக்கும் என்று அப்பேச்சாளர் கூறியுள்ளார்

குத்துச்சண்டை வீரர் மைக் டைசனின் மகள் மரணம்

27-mike.jpgகுத்துச் சண்டை வீரர் மைக் டைசனின் நான்கு வயது மகள் வீட்டில் இருந்த உடற்பயிற்சி சாதனம் ஒன்றின் கேபிளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

முன்னாள் உலக ஹெவிவெயிட் குத்துச்சண்டை சாம்பியன் மைக் டைசனிற்கு பல மனைவிமார். அவர்களின் மூலம் இவருக்கு ஜெனா (வயது 20), மைக்கே (வயது 18), ராய்னா (வயது 13), அமிர் (வயது 11), மைகுல் (வயது 7) மற்றும் எக்சோடஸ் (வயது 4) என ஆறு குழந்தைகள் உள்ளனர்.

தற்போது டைசன் பீனிக்ஸ் நகரில் மைகுல் மற்றும் எக்சோடஸ் ஆகிய என்ற இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருவதாக தெரிகிறது. இந் நிலையில் நேற்று முன்தினம் மைக் டைசனின் கடைசி குழந்தையான எக்சோடஸ் வீட்டில் இருந்த உடற்பயிற்சி அறைக்குள் சென்று விளையாடி கொண்டிருந்த சமயம் அங்கிருந்த உடற்பயிற்சி சாதனம் ஒன்றின் கேபிள் அந்த சிறுமியின் கழுத்தை சுற்றி இறுக்கியது. இதில் குழந்தை அந்த இடத்திலே மயங்கமுற்றுள்ளார்.

கழுத்தில் கேபிள் இறுகி அவள் தொங்கி கொண்டிருப்பதை பார்த்த அவளது சகோதரன் மைகுல் தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார்.இதையடுத்து ஓடிச் சென்று சிறுமியை மீட்ட தாய் மருத்துவமனைக்கு கொண்டு சென்றாலும் மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துவி்ட்டனர் 

போர்க் குற்ற விசாரணைக்கு எதிராக அரசுடன் கைகோர்த்து செயற்பட ஐ.தே.க. தயார்- தயாசிறி ஜயசேகர எம்.பி.

dayasiri-jayasekara-000.jpgபயங்கரவாதம் முழுமையாக தோற்கடிக்கப்பட்டமைக்காக ஜனாதிபதிக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் நன்றி கூறிக்கொள்வதுடன் அவ்விருவருக்கும் எதிராக சர்வதேசத்தினால் மேற்கொள்ளவிருக்கின்ற போர்க் குற்ற விசாரணைகளுக்கு எதிராக அரசுடன் கைகோர்த்துச் செயற்பட ஐ.தே.க. தயார் என்று அக்கட்சியின் குருணாகல் மாவட்ட எம்.பி.யான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாழ்க்கை தொழில்சார் தொழில்நுட்ப பல்கலைக்கழக சட்டத்தின் கீழான கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.