அனர்த்தங்கள் பற்றி முன்னெச்சரிக்கை செய்வதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று முன்னெச்சரிக்கை கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் மூன்று கோபுரங்கள் நிறுவப்படவுள்ளன.
இக்கோபுரங்களின் செயற்பாடுகளை விளக்குவதற்கான ஒரு கூட்டம் கடந்த திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் திருமதி ஆர். கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதேச செயலாளர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், கிராம சேவையாளர்கள் அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். கலாநிதி புத்திக வீரங்சிக தலைமையிலான குழுவினரால் கருத்துரையும் விளக்கமும் அளிக்கப்பட்டன