தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தியின் செயலாளரான தவராஐசிங்கம் சுபாஸ் (23 வயது) என்பவர் நேற்று அதிகாலை முதல் மர்மமான முறையில் காணாமல்போயுள்ளார். சென்னையிலிருந்து கட்டுநாயக்கா விமானநிலையத்தை வந்தடைந்த இவர் அங்கு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும் , இதுவரை அவர் வீடு திரும்பவில்லை என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெயானந்தமூர்த்தியின் சகோதரியின் மகனான இவர் தனது பெற்றோருடன் கொழும்பிலேயே வசித்து வருகின்றார்.
நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.15 மணியளவில் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தைச் வந்தடைந்த சமயம் அங்கு வைத்து கைது செய்யப்பட்டடதாக தகவலறிந்த தாயார் இக்கைது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் ஊடாக பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் தொடர்பு கொண்டதாகவும், இதன் பிரகாரம் நேரடியாக வந்து அழைத்துச் செல்லுமாறு பொலிஸ் பொறுப்பதிகாரியினால் பதிலளிக்கப்பட்டதாகவும் இது தொடர்பாகக கூறப்படுகின்றது.