இலங்கையின் தீர்மானத்திற்கு இந்தோனேஷியா ஆதரவு

இலங்கை தொடர்பாக மேற்கு நாடுகள் இரட்டை நிலைப்பாட்டுடன் இருப்பதாக இந்தோனேஷியா குற்றம் சாட்டியுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு மேற்கொண்ட இறுதிக் கட்ட நடவடிக்கை தொடர்பாக விசாரணை நடத்துவதற்கான முயற்சிகளில் மேற்கு நாடுகள் ஈடுபட்டிருப்பது தொடர்பாகவே இந்தோனேஷியா இக்குற்றச்சாட்டைத் தெரிவித்திருக்கிறது.

ஆப்கானிஸ்தான், பாலஸ்தீன சூழ்நிலைகளுடன் ஒப்பிட்டு தமது உரிமை மீறல் விசா ரணைகளில் இரட்டை நிலைப்பாட்டை மேற்கு நாடுகள் கொண்டிருப்பதாக இந்தோனேஷியா சாடியுள்ளது.

“இதனை (உரிமைகள் மீறல் விசாரணைக்கான அழைப்பு) நாம் அரசியல் ரீதியானதாக பார்க்கிறோம். காஸாவில் இஸ்ரேலின் உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணை முயற்சி தொடர்பாக அவர்கள் ஏன் ஆர்வமின்றி செயற்படாமல் அவர்கள் (மேற்கு நாடுகள்) நிராகரித்தன? என்று இந்தோனேஷிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெகு பைசாசியாவை மேற்கோள் காட்டி உள்ளூர் ஊடகமொன்று நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்திருக்கிறது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நேற்று சமர்ப்பிக்கப்படவிருந்த கொழும்பின் தீர்மான வரைபுக்கு இந்தோனேஷியா ஆதரவளிக்கும் என்று அப்பேச்சாளர் கூறியுள்ளார்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *