16

16

கட்டுப்பாட்டு பிரதேசத்துக்குள் 757 பொதுமக்கள் வருகை

udaya_nanayakkara_brigediars.jpgகடந்த இரண்டு தினங்களில் 757 பொதுமக்கள் இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசங்களை நோக்கி வருகை தந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். திங்கட்கிழமை 518 பொதுமக்களும் செவ்வாய்க்கிழமை 239 பொதுமக்களுமே மூன்று தடவைகளில் வருகை தந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கமைய புலிகளின் பிடியிலிருந்து தப்பிவந்து பாதுகாப்புப் படையினரிடம் தஞ்சமடைந்த பொதுமக்களின் எண்ணிக்கை 68,037 ஆக அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தை நோக்கி வந்த 136 பொதுமக்களுள் 45 ஆண்கள், 39 பெண்கள், 22 சிறுவர்கள் மற்றும் 20 சிறுமிகள் அடங்குவர். அம்பலவான்பொக்கணை பிரதேசத்தை நோக்கி வந்த 103 பொதுமக்களில் 32 ஆண்கள், 27 பெண்கள், 26 சிறுவர்கள் மற்றும் 18 சிறுமிகளும் அடங்குவதாக அவர் மேலும் குறிப்பிட்டார். 

மன்னாரில் தொடர்ச்சியாக மின்சாரம் தடை

மன்னாரில் கடந்த சில வாரங்களாக பகல்-இரவு வேளைகளில் மின்சாரம் தடைப்பட்டு வருவதாகவும் இதனால் மக்களின் அன்றாட தேவைகள் தொடர்ச்சியாகத் தடைப்பட்டு வருவதாகவும் பிரதேசவாசிகள் கவலை தெரிவிக்கின்றனர். சித்திரை புத்தாண்டு தினத்தன்று முழுநேரமும் மன்னாரில் மின்சாரம் தடைப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை தொடர்ச்சியாகவும், பகல், இரவு வேளைகளிலும் மின்சாரம் தடைப்பட்டு வருகின்றமையால் தமது தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாதுள்ளதாகவும், மின் சாதனங்கள் பழுதடைவதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.