மன்னாரில் தொடர்ச்சியாக மின்சாரம் தடை

மன்னாரில் கடந்த சில வாரங்களாக பகல்-இரவு வேளைகளில் மின்சாரம் தடைப்பட்டு வருவதாகவும் இதனால் மக்களின் அன்றாட தேவைகள் தொடர்ச்சியாகத் தடைப்பட்டு வருவதாகவும் பிரதேசவாசிகள் கவலை தெரிவிக்கின்றனர். சித்திரை புத்தாண்டு தினத்தன்று முழுநேரமும் மன்னாரில் மின்சாரம் தடைப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை தொடர்ச்சியாகவும், பகல், இரவு வேளைகளிலும் மின்சாரம் தடைப்பட்டு வருகின்றமையால் தமது தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாதுள்ளதாகவும், மின் சாதனங்கள் பழுதடைவதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *