ஏ9 வீதியை அடுத்த மாதம் மக்கள் பாவனைக்குத் திறக்க அரசாங்கம் முயற்சி

a9-road.jpgஅடுத்த மாதத்தில் ஏ9 வீதியை மக்கள் பாவனைக்குத் திறந்து விடுவதற்குத் திட்ட மிட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. ஏ9 வீதியைத் திறந்து விடும் பொருட்டு கிளிநொச்சியில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கிளைக் காரியாலயம் ஒன்றை திறக்கவுள்ளதாக பெருந்தெருக்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

ஏ9 வீதியில் உள்ள நிலக்கண்ணி வெடிகள் யாவும் அகற்றப்பட்டு அது தொடர்பான பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை கிடைக்கப்பெற்றதும்,ஏனைய பணிகள் அனைத்தும் ஆரம்பமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை அடுத்த மாதத்தின் இரண்டாம் வாரத்தில் கிடைக்கும் எனவும் பெருந்தெருக்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

ஏ9 வீதி ஓமந்தையில் இருந்து முகமாலை வரை கடந்த மாதம் திறக்கப்பட்டதுடன் முதல் கட்டமாக படையினருக்கான மற்றும் யாழ் குடாநாட்டுக்கான அத்தியாவசிய விநியோகங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *