10

10

போரை நிறுத்தக் கோரி முன்னாள் த.தே.கூ. எம்.பி. ஈழவேந்தன் தென்னாபிரிக்காவில் உண்ணாவிரத போராட்டம்

eelaventhan_.jpgஇலங் கையில் போரை நிறுத்த அனைத்துலகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முன்னாள் த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மா.க.ஈழவேந்தன் தென்னாபிரிக்காவின் டேர்பனில் அமைந்துள்ள மாரியம்மன் ஆலயத்தில் உண்ணாநிலைப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளார்.

வியாழக்கிழமை காலை 8:30 மணியளவில் பின்வரும் ஆறு கோரிக்கைகளை அனைத்துலக சமூகத்திடம் முன்வைத்து அவர் தனது உண்ணாநிலை போராட்டத்தை இவர் ஆரம்பித்துள்ளார்.

1. உடனடியாக நடைமுறைப்படுத்தக் கூடியவாறான நிரந்தரமான போர் நிறுத்தம் மேற்கொள்ளக் கோரி இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

2. அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்களின் மேற்பார்வையுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளும் உடனடியாக வழங்கப்படவேண்டும்.

3. இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் தடுப்பு முகாம்களுகக்கு சுதரந்திரமான அனைத்து மனிதாபிமான நிறுவனங்களும் எந்தவித தடைகளும் இன்றி அனுமதிக்கப்பட வேண்டும்.

4. தமிழர்களின் சுயநிர்ணய அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் உடனடியான பேச்சுக்கள் தொடங்கப்பட வேண்டும்.

5. தென்னாபிரிக்க தமிழ்ச் சமூகத்தினர் இவரின் உண்ணாநிலைப் போராட்ட முயற்சியில் தங்களையும் இணைத்துகொள்வதற்கு முன்வந்துள்ளனர்.

6. புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களையும் மனித உரிமை ஆர்வலர்களையும் இவ்வாறான நடவடிக்கைகளில் தத்தமது நாடுகளில் ஈடுபடுமாறு உலகத் தமிழ்ச் சொந்தங்களிடம் கோரிக்கை.

76 அகவையுடைய மா.க.ஈழவேந்தன் கடந்த அறுபது ஆண்டுகளாக இலங்கை அரசியலில் ஈடுபட்டு வந்தவர்.

சோமாலியக் கடற்கொள்ளையர்களால் மேலும் ஒரு கப்பல் கடத்தல்

somaliya-robbery.jpgஉணவு உதவிப் பொருட்களடங்கிய கொள்கலன்களை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்றை அமெரிக்காவைச் சேர்ந்த சுமார் 20 மாலுமிகளுடன் சேர்த்து சோமலிய கடற்கொள்ளையர்கள் கைப்பற்றியுள்ளனர்.

இந்த வாரத்தில் இவ்வாறு நடத்தப்பட்ட தாக்குதல்களில் பிந்தியது இதுவாகும்.

சோமாலிய கடற்கரைக்கு அப்பால் சுமார் 500 கிலோ மீட்டர் தொலைவில், கடற்கொள்ளையர்களின் படகுகளால் இந்த டச்சுக் கப்பலின் மீது இரவு நேரத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த கப்பலின் நிலைமை குறித்து தாம் அவதானித்து வருவதாக கூறியுள்ள அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை, அந்த மாலுமிகளை பாதுகாப்பாக மீட்பது குறித்து தாம் ஆராய்ந்துவருவதாக தெரிவித்துள்ளது.

சோமாலிய கடற்கொள்ளையர்களின் இத்தகைய தாக்குதல்கள் வர வர மிகவும் துணிச்சலானவையாகவும், நுட்பமானவையாகவும் மாறி வருவதாக செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.

கொழும்பு மாநகரசபை அதிகாரி சுமணபால பதவி நீக்கம்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரங்களை நடைமுறைப்படுத்தவும் கடமைகளை நிறைவேற்றவும் நியமிக்கப்பட்டிருந்த உத்தியோகத்தரான சுமணபால அப்பதவியிலிருந்து புதன்கிழமை நீக்கப்பட்டுள்ளார்.
மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானாவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரமே சுமணபால பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் செயலகத்தால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பதவிக்கு பத்வானி ஜெயவர்த்தன என்பவர் ஆளுநர் அலவி மௌலானாவால் நியமிக்கப்பட்டுள்ளார்.  அரசியல் அமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டளை மற்றும் மேல்மாகாண சபையின் 1991 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க உள்ளூராட்சி நிர்வாக கண்காணிப்பு சட்ட பிரகாரத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாகவே இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.