கொழும்பு மாநகர சபையின் அதிகாரங்களை நடைமுறைப்படுத்தவும் கடமைகளை நிறைவேற்றவும் நியமிக்கப்பட்டிருந்த உத்தியோகத்தரான சுமணபால அப்பதவியிலிருந்து புதன்கிழமை நீக்கப்பட்டுள்ளார்.
மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானாவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரமே சுமணபால பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் செயலகத்தால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பதவிக்கு பத்வானி ஜெயவர்த்தன என்பவர் ஆளுநர் அலவி மௌலானாவால் நியமிக்கப்பட்டுள்ளார். அரசியல் அமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டளை மற்றும் மேல்மாகாண சபையின் 1991 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க உள்ளூராட்சி நிர்வாக கண்காணிப்பு சட்ட பிரகாரத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாகவே இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.