போரை நிறுத்தக் கோரி முன்னாள் த.தே.கூ. எம்.பி. ஈழவேந்தன் தென்னாபிரிக்காவில் உண்ணாவிரத போராட்டம்

eelaventhan_.jpgஇலங் கையில் போரை நிறுத்த அனைத்துலகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முன்னாள் த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மா.க.ஈழவேந்தன் தென்னாபிரிக்காவின் டேர்பனில் அமைந்துள்ள மாரியம்மன் ஆலயத்தில் உண்ணாநிலைப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளார்.

வியாழக்கிழமை காலை 8:30 மணியளவில் பின்வரும் ஆறு கோரிக்கைகளை அனைத்துலக சமூகத்திடம் முன்வைத்து அவர் தனது உண்ணாநிலை போராட்டத்தை இவர் ஆரம்பித்துள்ளார்.

1. உடனடியாக நடைமுறைப்படுத்தக் கூடியவாறான நிரந்தரமான போர் நிறுத்தம் மேற்கொள்ளக் கோரி இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

2. அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்களின் மேற்பார்வையுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளும் உடனடியாக வழங்கப்படவேண்டும்.

3. இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் தடுப்பு முகாம்களுகக்கு சுதரந்திரமான அனைத்து மனிதாபிமான நிறுவனங்களும் எந்தவித தடைகளும் இன்றி அனுமதிக்கப்பட வேண்டும்.

4. தமிழர்களின் சுயநிர்ணய அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் உடனடியான பேச்சுக்கள் தொடங்கப்பட வேண்டும்.

5. தென்னாபிரிக்க தமிழ்ச் சமூகத்தினர் இவரின் உண்ணாநிலைப் போராட்ட முயற்சியில் தங்களையும் இணைத்துகொள்வதற்கு முன்வந்துள்ளனர்.

6. புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களையும் மனித உரிமை ஆர்வலர்களையும் இவ்வாறான நடவடிக்கைகளில் தத்தமது நாடுகளில் ஈடுபடுமாறு உலகத் தமிழ்ச் சொந்தங்களிடம் கோரிக்கை.

76 அகவையுடைய மா.க.ஈழவேந்தன் கடந்த அறுபது ஆண்டுகளாக இலங்கை அரசியலில் ஈடுபட்டு வந்தவர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *