Multiple Page/Post

தமிழீழத்தை உருவாக்கும் இந்தியாவின் எண்ணம் இலங்கை வாழ் தமிழர்களிடம் இல்லை – அமைச்சர் கெஹெலிய

krambukkela.bmp

ஐக்கிய இலங்கைக்குள் ஒற்றுமையாக வாழ்வதே அனைத்து இன மக்களினதும் எதிர்பார்ப்பாகும். இந்நிலையில் நாட்டை இரண்டாக கூறுபோட்டு தனித் தமிழீழத்தை உருவாக்குவதான இந்தியாவின் எண்ணம் இலங்கை வாழ் தமிழர்களிடம் இல்லை என்று தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்காக பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வல தெரிவித்தார்.

இலங்கையில் பெரும்பான்மை இனத்தவர்களிற்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளைப் போன்று சமமான முறையில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில், அவர்களுக்கு நிர்வாக அதிகாரத்தை வழங்க வேண்டும். இந்த முயற்சி தோல்வி அடைந்தால், தமிழர்கள் கண்ணியத்துடன் வாழ ஏதுவாக அவர்களுக்கென தனி மாநிலம் அமைக்க வலியுறுத்தப்படும் என்று அ.தி.மு.க.வின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறித்து கருத்து கேட்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் கூறியதாவது நாட்டை இரண்டாகக் கூறுபோட்டு மற்றுமொரு அரசாங்கத்தின் அதிகாரத்தின் கீழ் செயற்பட நம்நாட்டுத் தமிழ் மக்கள் ஒருபோதும் விரும்பவிலலை. அவர்களுக்குத் தேவை ஐக்கிய இலங்கைக்குள் சுதந்திரமான வாழ்வு மட்டுமேயாகும். இதனை எமது அரசாங்கம் இன்னும் ஓரிரு நாட்களில் நனவாக்கிவிடும். அந்த நம்பிக்கை மக்களுக்கும் உண்டு.

இந்நிலையில் அ.தி.மு.க.வின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு தமிழ்ப் பகுதிகளை புதுப்பிக்கவும் மேம்படுத்தவும் இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்காகவும் மானியமாக வழங்கப்படவுள்ள 10ஆயிரம் கோடி ரூபாவை இப்பொழுதே அரசாங்கத்திடம் வழங்க அக்கட்சி நடவடிக்கை எடுக்க முடியும்.

காரணம் எமது அரசாங்கம் சிங்களம் தமிழ் என்ற பேதமின்றியே தமது நடவடிக்கைகளைக் கையாண்டு வருகின்றது. அந்தவகையில் அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தி நடடிக்கைகளுக்கு அந்தப் பணம் உதவியாக இருக்கும்.

இதேவேளை இலங்கை இந்திய ஒப்பந்தத்தின்படி உருவாக்கப்பட்ட 13ஆவது அரசியலமைப்பு சீர்த்திருத்தம் தற்போது நடைமுறையில் உள்ளது. அதில் குறைபாடுகள் இருப்பின் நிவர்த்தி செய்துகொண்டு அதற்கேற்றவாறு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். 

பாபர் மசூதி இடிப்பில் காங்கிரசுக்கும் பங்கு உண்டு: லாலு

laluprasat.jpgபீகார் மாநிலத்தில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய ராஷ்ட்ரீய ஜனதாதள கட்சி தலைவர் லல்லு பிரசாத் யாதவ், அயோத்தியில் பழம் பெருமை வாய்ந்த பாபர் மசூதியை 1992ம் ஆண்டு பா.ஜ.க. இடித்தது. அத்வானி பிரதமர் ஆக வேண்டும் என்ற கனவில் தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.
 
பாபர் மசூதி இடிக்கப்பட்டதில் காங்கிரஸ் கட்சிக்கும் பங்கு உண்டு. அந்த பழியில் இருந்து காங்கிரஸ் தப்ப முடியாது. காங்கிரஸ் கட்சி நினைத்திருந்தால் பாபர் மசூதி இடிப்பை தடுத்திருக்க முடியும். பாபர் மசூதி இடிக்கப்படுவதை தடுக்க காங்கிரஸ் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இது சம்பந்தமாக நான் விவாதிக்க தயார். காங்கிரஸ் கட்சியினர் இது தொடர்பாக முட்டாள்தனமாக எதுவும் உளறிக்கொண்டிருக்ககூடாது.
 
காங்கிரஸ் கட்சியினர் இது தொடர்பாக ஏதாவது பேசினால் மேலும் பல ரகசியங்களை நான் வெளியிட வேண்டியது வரும். பாபர் மசூதி பற்றி காங்கிரசின் இரட்டை வேடத்தை நான் அம்பலப்படுத்த நேரிடும் என்றார். பாபர் மசூதி இடிப்புக்கும் காங்கிரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. லல்லுவின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.

‘இனி தமிழன் என்று சொல்லடா தலைகுனிந்து நில்லடா’-சத்யராஜ்

sathyaraj.jpgஉலகமெங்கும் உள்ள தமிழர்கள் தங்கள் ஈழ உறவுகளுக்காக ஒன்றுபட்டு குரல் கொடுக்கிறார்கள். ஆனால் தாயகத் தமிழர்களான நாம் அதை சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம். மீண்டும் ஒரு பெரும் போராட்டத்தில் நாம் இறங்க வேண்டும் என நடிகர் சத்யராஜ் கூறினார்.

கவிஞர் பா.விஜய் கதாநாயகனாக அறிமுகமாகும் ஞாபகங்கள் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை ஏவி.எம். ஏசி ப்ளோரில் நடந்தது. விழாவில் பங்கேற்ற நடிகர் சத்யராஜ் பேசியதாவது:

ஐயா…நான் இறையாண்மைக்கு எதிரா எதுவும் பேசலீங்க… உண்மையைப் பேசுறேன்… சரித்திரத்தை, இந்திய- இலங்கை அரசாங்கங்கள் ஏற்றுக் கொண்ட சரித்திரத்தைத்தான் சொல்கிறேன். இந்த ஞாபகங்கள் விழாவில் நெஞ்சைவிட்டு அகலாத ஞாபகமாக ஈழ மண்ணில் நம் சொந்தங்கள் அழிந்துகொண்டிருப்பது சுற்றிச் சுழல்கிறது. தமிழ்நாட்டில் உள்ள எல்லா அமைப்புகளும், எல்லா கட்சிகளும் ஒன்று சேர்ந்து ஈழ தமிழர்களுக்காக மீண்டும் குரல் கொடுக்க வேண்டும்.

லண்டனில் இரண்டு லட்சம் தமிழர்கள் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். பிரான்சு, ஜெர்மனி, நார்வே, அமெரிக்கா, ஆஸ்திரேலியா என உலகம் முழுக்க தமிழர் கொடியுடன் தமது உறவுகளின் உயிர்காக்க கண்ணீரும் கம்பலையுமாக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.நாம் அவற்றைப் பற்றிய செய்திகளைப் படித்துக் கொண்டு பொழுதைக் கழிப்பதை விட்டுவிட்டு, மீண்டும் நமது உணர்வுகளை வலிமையாக இந்த அரசுக்குப் புரியும் விதமாகக் காட்ட வேண்டும்.

உலகம் முழுக்க 8 கோடி தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இலங்கையில் உள்ள 3 லட்சம் தமிழர்களை நாம் காப்பாற்றவில்லை என்றால், தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று சொல்லிக்கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை. இனி தமிழன் என்று சொல்லடா தலை குனிந்து நில்லடா என்றுதான் சொல்ல வேண்டியது வரும் என்றார் சத்யராஜ்.

“வாக்குரிமையிருந்தும் வாக்களிக்காத தமிழர் எதிர்காலத்தில் வாக்குரிமையை இழக்கநேரிடும்’

வாக்குரிமையிருந்தும் வாக்களிக்காத தமிழர்கள் எதிர்காலத்திலே தமது வாக்குரிமையை இழக்கவேண்டிய ஒரு நிலைமை உருவாகும். கொழும்பிலே நிரந்தரமாக வாழ விரும்பும் தமிழர்கள் தமது இருப்பை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு வாக்குரிமை மிகவும் அவசியமாகும். வாக்குரிமையில் அக்கறை கொண்டு ஒவ்வொரு வருடமும் தொடர்ச்சியாக எமது பெயர்களை வாக்காளர் பதிவேட்டிலே இடம்பெறச்செய்யவேண்டும். அதேபோல் தமது வாக்குகளை ஒவ்வொரு தேர்தலிலும் தமிழ் வாக்காளர்கள் பயன்படுத்தவேண்டும். இந்த அடிப்படை ஜனநாயக உரிமையை பயன்படுத்தாதவர்களை வரலாறு மன்னிக்காது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் எம்.பி. கொழும்பு கொச்சிக்கடை செல்லையா தோட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.

தேர்தலை முன்னிட்டு மேல் மாகாணத்தில் பணியாற்றும் பொலிஸாரின் விடுமுறைகள் ரத்து

sri-lanka-police.jpgமேல் மாகாணசபைத் தேர்தலை முன்னிட்டு மேல் மாகாணத்தில் கடமையாற்றும் பொலிஸாரது விடுமுறைகள் யாவும் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 25 ஆம் திகதி மேல்மாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் இன்று சனிக்கிழமை முதல் தீவிரப்படுத்தப்படவுள்ளன.

இதற்காக இன்று 18 ஆம் திகதி முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரையான பத்து நாட்கள் மேல் மாகாணத்திலுள்ள அனைத்துப் பொலிஸ் நிலையங்களிலும் கடமையாற்றும் அனைத்துப் பொலிஸாரதும் விடுமுறைகள் இரத்துச் செய்யப்படுவதாகப் பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்தக் காலப்பகுதியில் இவர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இந்தக் கடமைக்காக வெளி மாவட்டங்களிலிருந்தும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸார் மேல் மாகாணத்துக்கு வரவழைக்கப்படவுள்ளனர்.  தேர்தல் பிரசாரங்கள் எதிர்வரும் வியாழக்கிழமை நள்ளிரவுடன் முடிவடையும் நிலையில் வன்முறைகளும் அதிகரித்து வருகின்றது. தேர்தல் தினத்தன்று தேவைப்பட்டால் படையினரின் உதவியைப் பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

காங்கிரஸ் எம்.பி. அன்வர் உசேன் மீது பாதணி வீச்சு

anwar-hussan.jpg அஸ்ஸாம் மாநிலம் தும்ரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் எம்.பி. அன்வர் உசேன் மீது வாக்காளர்கள் காலணிகளை வீசியும், கற்களை வீசியும் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்ப்பட்டது. துப்ரி தொகுதியின் தற்போதைய எம்.பி. அன்வர் உசேன். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் ஜெயித்த பின்னர் தொகுதிப் பக்கம் செல்லமையினால் கடந்த தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளையும் அவர் நிறைவேற்றவில்லை.

துப்ரி தொகுதியில் போட்டியிடும் அன்வர் உசேன். அத்தொகுதிக்குட்பட்ட கான்பாரி என்ற இடத்தில் காங்கிரஸ் சார்பில், தேர்தல் பிரசார நடைபெற்ற போது இதில் அன்வர் ஹூசேன் கலந்து கொண்டார். அப்போது அன்வர் மீது ஆத்திரத்தில் இருந்த வாக்காளர்கள், திடீரென பாதணிகளை, கழற்றி அவர் மீது எறிந்தனர். மேலும் கற்களையும் வீசினர்.பொலிஸார் அன்வர் உசேனை அங்கிருந்து பத்திரமாக அழைத்துச் சென்றனர்.இந்த சம்பவத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டது 

தமிழர் தேசிய இயக்க தொண்டர் தீக்குளித்து சாவு

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்தும், போர் நிறுத்தம் ஏற்பட இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் வேண்டும் என்று கோரியும் சென்னையில் தமிழர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்த தொண்டர் ஒருவர் தீக்குளித்து இறந்தார். சிவானந்தன் (46) என்ற அந்தத் தொண்டர் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனின் தீவிரமான ஆதரவாளராவார். சிவானந்தனுக்கு திருமணம் ஆகவில்லை. சென்னை வடபழனியில் தங்கியிருந்து பெயிண்டர் வேலை செய்து வந்ததார்.

ஈழத்துக்கு ரூ10000 கோடி புனரமைப்பு திட்டம்-ஜெயலலிதா

jayalalitha.jpgமத்தியில் அதிமுக உதவியுடன் அமையும் ஆட்சியில், இலங்கைத் தமிழர்களின் மறு புனரமைப்புக்கு ரூ. 10 ஆயிரம் கோடியில் பெரும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்கினார்.

இன்று காலை தனி விமானம் மூலம் தூத்துக்குடிக்கு அவர் சென்றார். பின்னர் அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் நெல்லைக்குப் புறப்பட்டார் பின்னர் நெல்லை டவுன், வாகையடி முனை என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசி தனது பிரசாரத்தை தொடங்கினார்.

அப்போது, இலங்கையில், உள்ள தமிழர்களுக்கு ரூ. 10 ஆயிரம் கோடி மதிப்பில் மறு புனரமைப்புக்கு ஏற்பாடு செய்வோம். தமிழர்களுக்கு முழு சுயாட்சியோ அல்லது சுய நிர்வாகமோ அல்லது தனி ஈழமோ எதுவாக இருந்தாலும் அது கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும், மத்திய அரசின் மூலமாக தமிழர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வைப்பேன். இந்திய அரசால், இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுக்கப்பட்ட கச்சத்தீவை மீட்போம் என்றார்.

ஐ.நாவினால் விடுக்கப்பட்ட தற்காலிக போர் நிறுத்த அவகாசம் அதிகரிப்பது தொடர்பான கோரிக்கை அரசினால் நிராகரிப்பு

ஐ.நாவினால் விடுக்கப்பட்ட தற்காலிக போர் நிறுத்த அவகாம் அதிகரிப்பது தொடர்பிலான கோரிக்கையை இலங்கை அரசு நிராகரித்துள்ளது என இலங்கை பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள தற்காலிக போர் நிறுத்த அவகாசத்தை அதிகரிக்குமாறும், மோதல் தவிர்ப்பை மேலும் அதிகரிப்பதன் ஊடாக, பொது மக்களின் நடமாட்ட சுதந்திரத்தை உறுதி செய்து, அவர்களைப் பாதுகாப்பான பிரதேசங்களுக்கு வரவழைக்கலாம் என ஐரோப்பிய ஒன்றிய தலைமையகம் கடந்த வாரம் கோரிக்கை விடுத்திருந்தது.

இதேவேளை இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் பிரதிநிதியான விஜய் நம்பியார்யாருடன் அரச அதிகாரிகளின் சந்திப்பை அடுத்து இத்தீர்மானம் அரசினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பி.பி.சி செய்தி தெரிவித்துள்ளது.

மேலும் ஐ. நா செயலாளர் நாயகத்தின் பிரதிநிதியான விஜய் நம்பியார்யாருடன் சந்திப்பின் போது “தற்காலிக போர் நிறுத்தத்தை அதிகரிப்பது தொடர்பில் எவ்வித மாற்றங்களும் இல்லை என தான் தெளிவாக ஐ.நா பிரதிநிதியிடம் தெரிவித்ததாகவும் முன்னார் மேற்கொள்ளப்பட்ட தற்காலிக போர் நிறுத்தத்தினால் எவ்வித பயனும் ஏற்படவில்லை எனவும் ,சிலியன்களை விடுவிக்குமாறும் சர்வதேசம் விடுதலைப்புலிகளுக்கு விடுத்த கோரிக்கைகளுக்கு அவர்கள் செவிசாய்க்கவில்லை எனவும்” இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷ பி.பி.சி செய்தி ஸ்தாபனத்திற்கு அளித்த விசேட செவ்வியில் தெரிவித்துள்ளார்

குருநாகலில் இருந்து ஹபரணை வரை புதிய ரயில் பாதை!

sri-lanka-railway.jpgகுருநாகல் நகரிலிருந்து தம்புள்ள ஊடாக ஹபரணை வரை புதிதாக 85 கிலோ மீற்றர் தூரம்கொண்ட ரயில் பாதையொன்றை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மாத்தளை மாவட்டத்திலுள்ள தம்புள்ள நகரம் கடந்த 20 வருட காலத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகவும் துரிதமாக அபிவிருத்தியடைந்து வரும் நகரமாகவும் மாறியுள்ளது.

இங்குள்ள பொருளாதார அபிவிருத்தி மையத்தை அடிப்படையாகக் கொண்டு இன்று நாட்டின் பல்வேறு இடங்களில் பொருளாதார அபிவிருத்தி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இரவு பகலாக நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் காய்கறிகள் உட்பட பல்வேறு உணவு வகைகள் தம்புள்ள நகருக்குக் கொண்டுவரப்பட்டு நாட்டின் நாலா பகுதிகளுக்கும் விநியோகிக்கப்படுகின்றன. எனினும் தம்புள்ளைக்குச் செல்வதற்கு ரயில் மார்க்கம் ஒன்று இதுகாலவரை இருக்கவில்லை.

இங்குள்ள வர்த்தக முயற்சிகளை மேலும் விரிவு படுத்தும் நோக்கிலேயே குருநாகலில் இருந்து கலேவெல, மற்றும் தம்புள்ள ஊடாக ஹபரணை வரை ரயில் பாதையை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு 60 கோடி ரூபாவை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கியுள்ளது. இப்புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்தின் கீழ் குருநாகலுக்கும் தம்புள்ளைக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் 20 ரயில் நிலையங்களை அமைக்கவும் அரசு முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.