வாக்குரிமையிருந்தும் வாக்களிக்காத தமிழர்கள் எதிர்காலத்திலே தமது வாக்குரிமையை இழக்கவேண்டிய ஒரு நிலைமை உருவாகும். கொழும்பிலே நிரந்தரமாக வாழ விரும்பும் தமிழர்கள் தமது இருப்பை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு வாக்குரிமை மிகவும் அவசியமாகும். வாக்குரிமையில் அக்கறை கொண்டு ஒவ்வொரு வருடமும் தொடர்ச்சியாக எமது பெயர்களை வாக்காளர் பதிவேட்டிலே இடம்பெறச்செய்யவேண்டும். அதேபோல் தமது வாக்குகளை ஒவ்வொரு தேர்தலிலும் தமிழ் வாக்காளர்கள் பயன்படுத்தவேண்டும். இந்த அடிப்படை ஜனநாயக உரிமையை பயன்படுத்தாதவர்களை வரலாறு மன்னிக்காது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் எம்.பி. கொழும்பு கொச்சிக்கடை செல்லையா தோட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.