February

February

ஒரு நாளைக்கு 9 குழந்தைகள் மரணம் ! ஆண்டுக்கு 3,300 குழந்தைகள் மரணிக்கின்றன !

ஒரு நாளைக்கு 9 குழந்தைகள் மரணம் ! ஆண்டுக்கு 3,300 குழந்தைகள் மரணிக்கின்றன !

இலங்கையில் எடை குறைந்த குழந்தைகளின் பிறப்பு வீதம் உயர்வடைந்துள்ளதுடன்இ பிறந்து ஒரு வயதை அடைவதற்கு முன்னரே சுமார் 2,500 குழந்தைகள் வருடாந்தம் உயிரிழப்பதாக சமூக வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் சமூக வைத்திய நிபுணர் கபில ஜயரத்தன தெரிவித்தார்.

இதன்போது வைத்தியர் மேலும் தெரிவிக்கையில்இ வருடாந்தம் 3 இலட்சத்து 13 ஆயிரம் தாய்மார்கள் கர்ப்பம் தரிப்பதுடன்இ 2 இலட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் பிறக்கின்றன. எனினும் அவ்வாறு பிறக்கும் அனைத்துக் குழந்தைகளும் நல்ல தேகாரோக்கியத்துடன் பிறப்பது பிறப்பது இல்லை. ஆண்டு தோரும் 5 வயதுக்கும் குறைந்த 3,300 குழந்தைகள் உயிரிழக்கின்றனர். கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது பிறப்பு வீதம் குறைவடைந்து செல்வதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

பொருளாதார சுமை, கருத்தரித்தல் தொடர்பில் போதியளவான தெளிவின்மைஇ வாழ்க்கை சூழல் போன்றன இதற்கு காரணமாக உள்ளன. மேலும் இந்நாட்டின் சுகாதார சேவையின் தரம் வீழ்ச்சி கண்டிருப்பதும் இதில் தாக்கம் செலுத்தியுள்ளது.

மேலும் ஊனக் குறைபாட்டுடன் கூடிய கருக்கலைப்புக்கு இந்தியா போன்ற நாடுகள் அனுமதி வழங்கியுள்ளன. எனினும் இலங்கையில் அச்சட்டத்தை கொண்டு வருவதற்காக சுமார் 20 வருடங்களாக போராடி வருகின்ற போதிலும்இ இதுவரை சாத்தியப்படவில்லை என்றார்.

ஜனாதிபதி அனுரவின் யாழ் விஜயம் மக்கள் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்ய முயற்சி !

ஜனாதிபதி அனுரவின் யாழ் விஜயம் மக்கள் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்ய முயற்சி !

ஜனாதிபதி அனுராவின் யாழ் விஜயத்தின்போது யாழ் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கான விடயங்கள் கேட்டறியப்பட்டு அதற்கான செயற்திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களுடைய போக்குவரத்தப் பிரச்சினைக்கு பஸ்களை வழங்குவது, தெருக்களைப் புனரமைப்பது, மருத்துவமனை வெற்றிடங்களை நிரப்புவது, யாழ் மக்களுடைய குடிநீர் பிரச்சினை, பொலிஸாரின் குற்றச்செயல்களுக்குத் துணைபோகும் நடவடிக்கை எனப் பல்வேறு விடயங்களும் பேசப்பட்டது. தீர்வுகளும் முன்வைக்கப்பட்டது.

ஜனாதிபதி அநுரவின் தலைமைத்துவத்தின் மீது வடக்கு மக்கள் நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் வைத்திருக்கின்றார்கள் என வடக்கு மாகாண ஆளுநர் ஆளுநர் நா.வேதநாயகன் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தெரிவித்தார்.

வடக்கு மக்கள் சார்பாக ஜனாதிபதியை வரவேற்பதாகக் குறிப்பிட்ட ஆளுநர்,  ஜனாதிபதியின் தலைமைத்துவத்தில் இந்தப் பிரதேசத்தில் மிகப் பெரிய மாற்றம் நடைபெறும் என எதிர்பார்ப்பதாகவும்,  இந்தப் பகுதி மக்கள் அவர் மீது அதற்காக நம்பிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

டொலர் வேண்டாம் என்றால் அமெரிக்காவுடன் உள்ள உறவையும் துண்டித்துக் கொள்ளுங்கள் – டிரம்ப்

டொலர் வேண்டாம் என்றால் அமெரிக்காவுடன் உள்ள உறவையும் துண்டித்துக் கொள்ளுங்கள் – டிரம்ப் பிரிக்ஸ் நாடுகளுக்கு எச்சரிக்கை !

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க டொலருக்கு பதிலாக மற்றொரு நாணயத்தை உருவாக்கவோ அல்லது ஆதரிக்கவோ கூடாது என இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் உறுப்பு நாடுகளை எச்சரித்துள்ளார்.

அமெரிக்க டொலருக்கு மாறாக செயல்படும் நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்கப்படும். பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் புதிதாக எந்த நாணயத்தையும் உருவாக்கக் கூடாது. ஏற்கனவேஇ இருக்கும் வேறு நாட்டு நாணயத்தையும் பயன்படுத்த கூடாது என தெரிவித்துள்ள டிரம்ப், சர்வதேச வியாபாரங்களுக்கு பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்க டொலரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவர்களுக்கு வேறொரு ஏமாளி கிடைத்தால் அவர்களுடன் வியாபாரம் செய்யட்டும். டொலர் வேண்டாம் என்றால் அமெரிக்காவுடன் உள்ள உறவையும் துண்டித்துக் கொள்ளுங்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளைஇ இலங்கை BRICKS அமைப்பில் இணைவதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்திஇ 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் BRICKS மற்றும் புதிய அபிவிருத்தி வங்கியில் உறுப்புரிமைக்காக விண்ணப்பித்திருந்ததும் கவனிக்கத்தக்கது.

தையிட்டி விகாரையை உடைக்க வேண்டும் ! பா உ கஜேந்திரகுமார் – கட்டிய தையிட்டி விகாரையை உடைக்க முடியாது, இதை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் ! பா உ அர்ச்சுனா

தையிட்டி விகாரையை உடைக்க வேண்டும் ! பா உ கஜேந்திரகுமார் – கட்டிய தையிட்டி விகாரையை உடைக்க முடியாது, இதை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் ! பா உ அர்ச்சுனா

தையிட்டி விகாரை விவகாரம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் இடையில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முரண்பாடு ஏற்பட்டது. தையிட்டியில் கட்டப்பட்ட விகாரை சட்;டவிரோதமானது என்றும் அதனை உடைத்து அப்புறப்படுத்தி காணியை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யாழ் மாவட்ட அபிவிவிருத்திக் கூட்டத்தில் தெரிவித்தார். அதனை உடனடியாக நிராகரித்து, எந்த மதமாக இருந்தாலும் கட்டிய வழிபாட்டுத்தலத்தை உடைப்பது தவறு என்றும் தையிட்டி விகாரையை வைத்து அரசியல் செய்வதை நிறுத்தமாறு பா உ அர்ச்சுனா இராமநாதன், பா உ கஜேந்திரகுமாருக்குத் தெரிவித்தார். அத்தோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்கி பிரச்சினையைத் தீர்க்குமாறும் இதையெல்லாம் தங்களுடைய அரசியல் கட்சி நலன்கனுக்குப் பயன்படுத்த வேண்டாம் என்றும் கோரினார்.

தையிட்டி விகாரை தொடர்பில் தேசம்நெற்க்கு நேர்காணல் வழங்கிய வணக்கத்துக்குரிய மாத்தளை சுனித்தா ஹமத்துரு அவர்களும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமே இனங்களிடையே முரண்பாடுகளை வளர்ப்பதாகவும், தான் தையிட்டி விகாரைக்கு நியமிக்கப்பட்டால் மக்களோடு பேசி அவர்களுக்கான நஸ்டஈட்டைப் பெற்றுக்கொடுத்து இப்பிரச்சியைனைத் தீர்த்து வைப்பேன் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தையிட்டியில் விகாரைக்கு உரித்தான காணி இருந்தும் 6 ஏக்கர் தனியார் காணி ஆக்கிரமிக்கபட்டு விகாரை கட்டப்பட்டுள்ளது. அனுமதியில்லாமல் வீடு கட்டினால் இடிக்க சொல்லுகின்றனர். ஆனால் விகாரை விவகாரம் தொடர்பில் கட்ட முன்பே சொல்லப்பட்டும் அது கட்டப்பட்டுள்ளது. எனவே இதை விவகாரத்தை கவனத்தில் எடுக்க வேண்டும் என கஜேந்திரகுமார் தெரிவித்தார். இந்தியப் பிரதமர் மோடி சங்கிகளின் துணையோடு பள்ளிவாசலை உடைத்து இராமர் கோயில் கட்டிய பாணியில் ஒரு இன மதக் கலவரத்தை கஜேந்திரகுமார் மனக்கண்ணில் ஓட்டுகின்றார் என்கிறார் பாரிஸ் அரசியல் சமூகச் செயற்பாட்டாளர் சோலையூரான்.

இதற்கு பதிலளித்த ஆளுநர்.நா வேதநாயகன் விகாரை தொடர்பில் பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடினேன். அவர்கள் விகாரைக்குரிய காணியை மாற்றீடாக ஏற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளனர். இதை சுமூகமாக தீர்க்க வேண்டும் என்றார்.

ஆனால் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அதை ஏற்க மறுத்ததுடன் அந்த விடயம் தொடர்பில் இன்னும் ஆழமாக மக்களுடன் தங்கள் முன் கலந்துரையாட வேண்டும் என்றார்.

இதன் போது குறுக்கிட்ட இராமநாதன் அர்ச்சுனா, இவர்கள் தையிட்டி விகாரையை வைத்து அரசியல் செய்துகொண்டிருக்கின்றார்கள். முடிந்த கோவிலை இடிக்கச் சொல்வது முட்டாள்தனமானது. கட்டிய கோவிலை அப்படியே வைத்துக்கொண்டு அதற்குரிய நட்டஈட்டைக் வழங்கி விகாரைக்குரிய காணியை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும். அத்தோடு இந்த தையிட்டிப் பிரச்சினை முடிந்ததும் இவர்களுடைய பாராளுமன்றக் கதிரை பறிக்கப்படும் என்றார். அர்ச்சுனாவுடைய கருத்தை ஜனாதிபதி சிரித்தபடி கேட்டமையை அவதானிக்க முடிந்தது.

பா உ கஜேந்திரகுமார் இனவாதத்தைத் தூண்டி இன்னுமொரு இன, மதப் பிரச்சினையை உருவாக்கி அதில் குளிர்காய நினைக்கின்றார் என்றும் சமூக செயற்பாட்டாளர் சோலையூரான் தெரிவித்தார். தமிழ் மக்கள் எந்த ஒரு சமூகத்திற்குமோ மதத்திற்குகோ எதிராகச் செயற்படவில்லை. தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தகிறோம் என்ற பெயரில் அரசியல்வாதிகள் தான் இனவாதத்தை தூண்டிவிடுவதற்கு நேரம்பார்த்துக்கொண்டுள்ளனர்.