ஜனாதிபதி அனுரவின் யாழ் விஜயம் மக்கள் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்ய முயற்சி !

ஜனாதிபதி அனுரவின் யாழ் விஜயம் மக்கள் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்ய முயற்சி !

ஜனாதிபதி அனுராவின் யாழ் விஜயத்தின்போது யாழ் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கான விடயங்கள் கேட்டறியப்பட்டு அதற்கான செயற்திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களுடைய போக்குவரத்தப் பிரச்சினைக்கு பஸ்களை வழங்குவது, தெருக்களைப் புனரமைப்பது, மருத்துவமனை வெற்றிடங்களை நிரப்புவது, யாழ் மக்களுடைய குடிநீர் பிரச்சினை, பொலிஸாரின் குற்றச்செயல்களுக்குத் துணைபோகும் நடவடிக்கை எனப் பல்வேறு விடயங்களும் பேசப்பட்டது. தீர்வுகளும் முன்வைக்கப்பட்டது.

ஜனாதிபதி அநுரவின் தலைமைத்துவத்தின் மீது வடக்கு மக்கள் நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் வைத்திருக்கின்றார்கள் என வடக்கு மாகாண ஆளுநர் ஆளுநர் நா.வேதநாயகன் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தெரிவித்தார்.

வடக்கு மக்கள் சார்பாக ஜனாதிபதியை வரவேற்பதாகக் குறிப்பிட்ட ஆளுநர்,  ஜனாதிபதியின் தலைமைத்துவத்தில் இந்தப் பிரதேசத்தில் மிகப் பெரிய மாற்றம் நடைபெறும் என எதிர்பார்ப்பதாகவும்,  இந்தப் பகுதி மக்கள் அவர் மீது அதற்காக நம்பிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *