தையிட்டி விகாரையை உடைக்க வேண்டும் ! பா உ கஜேந்திரகுமார் – கட்டிய தையிட்டி விகாரையை உடைக்க முடியாது, இதை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் ! பா உ அர்ச்சுனா

தையிட்டி விகாரையை உடைக்க வேண்டும் ! பா உ கஜேந்திரகுமார் – கட்டிய தையிட்டி விகாரையை உடைக்க முடியாது, இதை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் ! பா உ அர்ச்சுனா

தையிட்டி விகாரை விவகாரம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் இடையில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முரண்பாடு ஏற்பட்டது. தையிட்டியில் கட்டப்பட்ட விகாரை சட்;டவிரோதமானது என்றும் அதனை உடைத்து அப்புறப்படுத்தி காணியை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யாழ் மாவட்ட அபிவிவிருத்திக் கூட்டத்தில் தெரிவித்தார். அதனை உடனடியாக நிராகரித்து, எந்த மதமாக இருந்தாலும் கட்டிய வழிபாட்டுத்தலத்தை உடைப்பது தவறு என்றும் தையிட்டி விகாரையை வைத்து அரசியல் செய்வதை நிறுத்தமாறு பா உ அர்ச்சுனா இராமநாதன், பா உ கஜேந்திரகுமாருக்குத் தெரிவித்தார். அத்தோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்கி பிரச்சினையைத் தீர்க்குமாறும் இதையெல்லாம் தங்களுடைய அரசியல் கட்சி நலன்கனுக்குப் பயன்படுத்த வேண்டாம் என்றும் கோரினார்.

தையிட்டி விகாரை தொடர்பில் தேசம்நெற்க்கு நேர்காணல் வழங்கிய வணக்கத்துக்குரிய மாத்தளை சுனித்தா ஹமத்துரு அவர்களும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமே இனங்களிடையே முரண்பாடுகளை வளர்ப்பதாகவும், தான் தையிட்டி விகாரைக்கு நியமிக்கப்பட்டால் மக்களோடு பேசி அவர்களுக்கான நஸ்டஈட்டைப் பெற்றுக்கொடுத்து இப்பிரச்சியைனைத் தீர்த்து வைப்பேன் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தையிட்டியில் விகாரைக்கு உரித்தான காணி இருந்தும் 6 ஏக்கர் தனியார் காணி ஆக்கிரமிக்கபட்டு விகாரை கட்டப்பட்டுள்ளது. அனுமதியில்லாமல் வீடு கட்டினால் இடிக்க சொல்லுகின்றனர். ஆனால் விகாரை விவகாரம் தொடர்பில் கட்ட முன்பே சொல்லப்பட்டும் அது கட்டப்பட்டுள்ளது. எனவே இதை விவகாரத்தை கவனத்தில் எடுக்க வேண்டும் என கஜேந்திரகுமார் தெரிவித்தார். இந்தியப் பிரதமர் மோடி சங்கிகளின் துணையோடு பள்ளிவாசலை உடைத்து இராமர் கோயில் கட்டிய பாணியில் ஒரு இன மதக் கலவரத்தை கஜேந்திரகுமார் மனக்கண்ணில் ஓட்டுகின்றார் என்கிறார் பாரிஸ் அரசியல் சமூகச் செயற்பாட்டாளர் சோலையூரான்.

இதற்கு பதிலளித்த ஆளுநர்.நா வேதநாயகன் விகாரை தொடர்பில் பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடினேன். அவர்கள் விகாரைக்குரிய காணியை மாற்றீடாக ஏற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளனர். இதை சுமூகமாக தீர்க்க வேண்டும் என்றார்.

ஆனால் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அதை ஏற்க மறுத்ததுடன் அந்த விடயம் தொடர்பில் இன்னும் ஆழமாக மக்களுடன் தங்கள் முன் கலந்துரையாட வேண்டும் என்றார்.

இதன் போது குறுக்கிட்ட இராமநாதன் அர்ச்சுனா, இவர்கள் தையிட்டி விகாரையை வைத்து அரசியல் செய்துகொண்டிருக்கின்றார்கள். முடிந்த கோவிலை இடிக்கச் சொல்வது முட்டாள்தனமானது. கட்டிய கோவிலை அப்படியே வைத்துக்கொண்டு அதற்குரிய நட்டஈட்டைக் வழங்கி விகாரைக்குரிய காணியை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும். அத்தோடு இந்த தையிட்டிப் பிரச்சினை முடிந்ததும் இவர்களுடைய பாராளுமன்றக் கதிரை பறிக்கப்படும் என்றார். அர்ச்சுனாவுடைய கருத்தை ஜனாதிபதி சிரித்தபடி கேட்டமையை அவதானிக்க முடிந்தது.

பா உ கஜேந்திரகுமார் இனவாதத்தைத் தூண்டி இன்னுமொரு இன, மதப் பிரச்சினையை உருவாக்கி அதில் குளிர்காய நினைக்கின்றார் என்றும் சமூக செயற்பாட்டாளர் சோலையூரான் தெரிவித்தார். தமிழ் மக்கள் எந்த ஒரு சமூகத்திற்குமோ மதத்திற்குகோ எதிராகச் செயற்படவில்லை. தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தகிறோம் என்ற பெயரில் அரசியல்வாதிகள் தான் இனவாதத்தை தூண்டிவிடுவதற்கு நேரம்பார்த்துக்கொண்டுள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *