ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் ஒட்ரி அசுலே இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் அழைப்புக்கிணங்க இந்த பயணம் மேற்கொள்ளப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, ஒட்ரி அசுலே எதிர்வரும் 16 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒட்ரி அசுலேவின் இந்த மூன்று நாள் பயணத்தின் போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய ஆகியோரையும் அவர் சந்திக்கவுள்ளார்.
இதனை தொடர்ந்து, இலங்கை மற்றும் ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோவுக்கிடையிலான 75 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நடைபெறவுள்ள நிகழ்விலும் அவர் பங்கேற்கவுள்ளார்.
மேலும், இலங்கையில் உள்ள உலக பாரம்பரிய தளங்களையும் ஒட்ரி அசுலே பார்வையிட உள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று யூலை 12 என்னுடைய அண்ணன் பிரகாஷின் பிறந்த தினம். டொக்டர் அர்ச்சுனா போன்ற ஒருவர் அன்று தெல்லிப்பளை வைத்தியசாலையிலோ யாழ் போதனா வைத்தியசாலையிலோ இருந்திருந்தால் இன்று நான் என் அண்ணனுக்கு தொலைபேசியில் அழைத்து வாழ்த்துச் சொல்லியிருப்பேன். என்னைப் போல் பல நூற்றுக்கணக்கானவர்களும் டொக்டர் அர்ச்சுனா போன்ற மனிதநேயம் மிக்க மருத்துவர்கள் இல்லாததால் தங்கள் உறவுகளை இழந்து தவிக்கின்றனர்.
வடக்கு – கிழக்கு தமிழ் மக்களில் பலருக்கு என்னைப் போல் கரடுமுரடான வாழ்வு தான். எங்கள் இளமைக் காலங்கள் யுத்தத்திலும் அதன் பாதிப்பிலும் கடந்து போனது. எனது தாயும் தந்தையும் தங்கள் முதுமைவரை வாழ்ந்து இயற்கை எய்தினர். அது இயற்கை. தவிர்க்க முடியாதது. யுத்தம் காரணமாக வவுனியா நெலுக்குளம் முகாமில் தங்கியிருந்த போது 1997 செம்ரம்பர் 20 நான் என் தங்கை மிதுலா என் சினேகிதி மூவரும் வெளியே சென்றிருந்த போது பெரும் விபத்து ஏற்பட்டது. குடிபோதையில் லொறியை ஓட்டி வந்த வின்சன் என்றழைக்கப்பட்ட கந்தையா அகிலன் லொறியை எங்கள் மீது ஏற்றிவிட்டார். தங்கை மிதுலா அவளுடைய பதின்மூன்றாவது வயதில் அவ்விடத்திலேயே உயிரிழந்தாள். அவ்விபத்தில் எனக்கும் எங்களோடு வந்த இன்னுமொரு தோழிக்கும் தலையுட்பட பலத்தகாயங்கள் ஏற்பட்டது. அப்போது அலறி அடித்துக்கொண்டு ஓடிவந்த என் அண்ணன் பிரகாஷ் என்னைத் தூக்கி, மற்றவர்களுமாக ஒரு மணி நேரத்திற்குள் ஆறு கிலோமீற்றருக்கு அப்பால் இருந்த வவுனியா வைத்தியசாலைக்கு விரைந்து கொண்டு சென்றனர். நான் சில நாட்களிலேயே சிகிச்சை முடிந்து வீடு திரும்பினேன். என் தோழி ஒன்றரை மாதங்கள் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று பின் கொழும்பு கொண்டு சென்று மேலதிக சிகிச்சைகள் பெற்று குணமடைந்தாள். இப்போது நாங்கள் இருவருமே ஜேர்மனியில் வாழ்கின்றோம். மதுபோதையில் வாகனத்தை ஓட்டியவரும் ஜேர்மன் வந்தாலும் அவர் எந்தப் பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை. தொடர்ந்தும் குடிக்கு அடிமையாகி குடும்பத்தைப் ;பிரிந்து குடித்தே மாண்டார். அவர் இறந்து சில நாட்களின் பின்னரேயே அவர் இறந்த விடயமும் தெரியவந்தது. நிற்க. இனி வருபவை நான் 2021 பெப்ரவரியில் எனது ஆதங்கத்தை, விமர்சனத்தை அண்ணனின் நினைவாக எழுதி ஊடகங்களுக்கு அனுப்பி வைத்தேன்.
“எனது குடும்பத்தில் எனக்கிருந்த சொந்தம் என்னைத் தூக்கி விளையாடி, சிராட்டி, பாராட்டிய எனது அண்ணன் பிரகாஷ். பனையால் வீழ்ந்தவனை மாடேறி மிதித்தது போல் அல்ல, டிப்பர் அடித்தவனை டொக்டர் ஏறி மிதித்த கதையானது, எனது கதை. 2021 பெப்ரவரி 5 இந்த நாள் குடும்பத்தின் மற்றுமொரு மறக்க முடியாத பேரிடர் நிகழ்ந்த நாள். அன்று தான் என்னுடைய ஆருயிர் சகோதரன் இராசரத்தினம் பிரகாஷ் டிப்பர் என்னும் வாகனத்தால் சுண்ணாகம் சந்திக்கு அருகாமையில் விபத்தை சந்தித்த நாள். விபத்து எப்படி நடந்தது? மற்றும் அதனுடன் தொடர்புடைய சம்பங்கள் பற்றி ஒரு மனிதர் படங்களுடன் பெரிதும் பரிச்சயம் அற்ற இணையத் தளத்தில் வெளியிட்ட செய்தி, முகநூல் ஊடாக பகிரப்பட்டு, எங்களுக்கும் வந்து சேர்ந்தது. அந்தச் செய்தியும் இடம்பெற்று இருந்த படங்களும் எங்கள் மனங்களில் வாழ் நாள் முழுமைக்கும் ஆறாத இரணத்தை ஏற்படுத்தி விட்டது. எங்கள் உள்ளங்களில் பல்வேறு கேள்விகளையும் கொந்தளிப்புகளையும் உருவாக்கி விட்டிருக்கின்றன.
இந்த கல்வெட்டின் ஊடாக ஒரு விழிப்புணர்ச்சி மற்றும் ஒரு சமூக மாற்றத்தை நோக்கிய நகர்வை ஏற்படுத்த முற்படுகின்றேன். மற்றும் எமது உறவின் இழப்பிற்கு தெரிந்தோ, தெரியாமலோ நேரடியாகவே மற்றும் மறைமுகமாகவோ காரணமாக இருந்தவர்களின் மனச் சாட்சியை நோக்கியோ எங்கள் ஆதங்கம் மற்றும் கோபம் வெளிப்படுகிறது.
முதலாவது நாங்கள் விபத்து எவ்வாறு இடம் பெற்றது என்கின்ற வீடியோவைப் பார்த்து விட்டுத் தான் கேட்கின்றேன். மோட்டார் வாகனம் செலுத்தும் பாதையிலே தனது வாகனத்தை செலுத்திய எங்கள் சகோதரனின் வண்டியை போக்குவரத்து விதிமுறைகளை சரியாக கடைப்பிடிக்காது இடித்து தள்ளி விட்டு வாகனத்தை நிறுத்தாது மேற் கொண்டு செலுத்தி சென்ற சாரதியின் மனநிலை மற்றும் போக்கு, எவ்வாறு அச்சாரதி வாகனம் செலுத்தும் அனுமதியை பெற்றுக் கொண்டார். விபத்தை ஏற்படுத்தி விட்டு விபத்து நடந்த இடத்தில் இருந்து தப்பிச் செல்லுதல் வளர்ச்சி அடைந்த மேற்கு நாடுகளில் பெரும் குற்றவியல் குற்றமாக கருதப்படுவதோடு வாகன ஓட்டுநனரின் சாரதி அனுமதிப் பத்திரம் கூட பறிமுதல் செய்யப்படும். மற்றும் சிறைத்தண்டனை உட்பட தண்டப் பணமும் செலுத்த வேண்டும். அது மட்டுமல்ல அசாதாரணமான சூழ்நிலைகளில் (விபத்து, பேரிடர், இயற்கை அனர்த்தம்…) உதவி புரியாது வேடிக்கை பார்ப்பதும் உரிய நேரத்திற்கு காயப்பட்டவர்களை வைத்திய சாலைக்கு கொண்டு போகாமல் ஒரு உயிர் இறப்பதற்கு மறைமுகமாக காரணமானவர்களை குற்றவாளிகளாக மேற்கு நாடுகளில் குற்றவியல் சட்டத்தின் படி தண்டனைக்கு உட்படுத்தும் சட்டங்கள் அமுலில் உள்ளன. வேடிக்கை பார்த்தவர்கள் மீது சமூக கடமையை செய்ய தவறிய குற்றத்திற்காக சட்டம் தன் கடமையை செய்யும். தன்னலம் சார்ந்து தமது தனிப்பட்ட நலன்களை முன்னிலைப்படுத்தி செயற்படும் சமூக கட்டமைப்பையும் கல்வித் திட்டத்தையும் வடிவமைத்து இருக்கிற மேற்கு நாடுகளில் தங்கள் குடிமக்கள் பொதுவெளியில் பெருந்தன்மையோடும் சமூகப் பொறுப்போடும் நடக்க வேண்டும் என்று சட்டம்; மக்களை கட்டாயப்படுத்துகின்றது.
ஆனால் நாங்கள் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக சிவில் யுத்தத்தின் அனைத்து கோர முகங்களையும் கண்டு அனுபவித்து விட்டு, ஒரு விபத்து நிகழும் போது முதலுதவி கூட சரியாக செய்ய தெரியாமல் இருக்கின்றோம் என்றால் எப்படி என்று விளங்கவில்லை. காயப்பட்ட ஆளை நீளமாக படுக்க வைத்து மூளைக்கு இரத்தம் சீராக கிடைப்பதை உறுதி செய்யாமல். பிழையான முதலுதவி மற்றும் காலம் தாழ்த்தி வைத்திய சாலைக்கு கொண்டு சென்றமை என பல அசாதாரணமான நடவடிக்கைகளே என் அண்ணன் உயிரிழக்கக் காரணம்.
அது மட்டும் அல்ல. என் அண்ணன் பிரகாஷ் 1990க்களில் நடைபெற்ற ஆனையிறவுத் தாக்குதலில் கையில் காயப்பட்டு சிறிது காலம் யாழ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று சுகமடைந்தவர். அன்றைய யுத்த சூழலில் யாழ் வைத்தியசாலை காயப்பட்டவர்களால் நிரம்பி வழிந்து கொண்டிருந்த காலகட்டம். ஆனாலும் மருத்துவர்கள் நவீன உபகரணங்களோ அத்தியவசியமான உபகரணங்களோ கூட இல்லாத நிலையில் கடமையாற்றி உயிருக்காகப் போராடிய பலரை தங்கள் சேவை மனப்பான்மையால் போராடி அவர்களை மீள உயிர்ப்பித்துக் கொடுத்தனர். நன்றியைக் கூட பெற்றுக்கொள்ள அன்று மருத்துவர்களுக்கு நேரம் இருக்கவில்லை.
ஆனால் இன்று யுத்தத்திற்குப் பின்னர் வைத்தியம் பார்க்கும் தொழில் உயிர் காக்கும் பணி என்ற நிலைமையை தாண்டி பணம் பண்ணும் தொழிலாக மாறி விட்டது. இதனைக் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் கண் கூடாக பார்க்க முடிகிறது. சுண்ணாகம் சந்தியில் விபத்து நடந்தது மாலை ஆறு மணியளவில். அவருடைய கையில் இருந்து இரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது. சன நெருக்கம் இருந்த நேரம். பலரும் வேடிக்கை பாரத்த்துக் கொண்டிருந்தனர். இன்னும் சில இளைஞர்கள் அடித்து விட்டு நிறுத்தாமல் சென்ற டிப்பரை கலைத்துச் சென்று மருதனாமடத்தில் வைத்துப் பிடித்தனர். ஆனால் விபத்துக்கு உள்ளானவருக்கு இரத்தம் சொட்டிக்கொண்டிருந்த போதும் யாரும் ஒரு கட்டுப் போட்டு குருதிப் பெருக்கை நிறுத்த முன்வரவில்லை. காயப்பட்டவரை மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கவும் முன்வரவில்லை. மருத்துவ வண்டி வரும்வரை காத்திருந்தனர். ஆனால் அவர் விபத்துக்குள்ளானதை படம் எடுத்து செய்தியை முகநூலில் பதிவேற்றிவிட்டார்கள்.
மருத்துவ வண்டி வந்ததும் அண்ணாவை அருகிலிருந்த தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். அங்கும் எவ்வித சிகிச்சையும் வழங்கப்படவில்லை. சிகிச்சையல்ல இரத்தப் போக்கைக்கூட நிறுத்த முயற்சிக்கவில்லை. அங்கிருந்து அண்ணா யாழ் போதனா வைத்தியசாலைக்கு கெர்ண்டு செல்லப்பட்டார். அங்கும் அதிகாலை வரை மருத்துவர்கள் பார்க்கவில்லை இரத்தப் போக்கும் கட்டுப்படுத்தப்படவில்லை. பெரும்பாலும் மருத்துவர்கள் பெரும்பாலானவர்கள் தனியார் மருத்துவமனைக்குச் சென்றுவிடுவதால் யாழ் வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசரசத்திர சிகிச்சைப் பிரிவுகளில் அதற்கான மருத்துவர்கள் இருப்பதில்லை. தெல்லிப்பளை வைத்தியசாலையிலும் யாழ் வைத்தியசாலையிலும் ஏற்படுத்தப்பட்ட கால தாமதம் கையில் ஏற்பட்ட காயம் தொடர்ச்சியான குருதி இழப்பால் உயிரழப்பிற்கு இட்டுச் சென்றது.
தெல்லிப்பளை வைத்திய சாலையின், யாழ்ப்பாண வைத்திய சாலையின் இந்த அலட்சியத்தை அநியாயத்தை யாரிடம் முறையிடுவது. அரசாங்க பணத்தில் இலவசமாக மருத்துவம் படித்து விட்டு வெளிநாடுகளில் பணம் உழைக்க போவது ஒரு பக்கம், தனியார் வைத்திய சாலைகளை நிறுவி, அரசமருத்துவமனைகளை சீரழித்து வினைத்திறனற்றதாக்கி தனியார் வைத்தியசாலைகளுக்கு மக்களை வலுக்கட்டாயமாக வரப்பண்ணி பணம் புடுங்கும் சுரண்டல் ஒரு பக்கம் என இன்று தமிழர் வாழ்விடங்களில் வைத்திய துறை ஊழலும் முறைகேடுகளும் நிறைந்ததாக மாறி விட்டது. விதி விலக்கான வைத்தியர்கள் இல்லாமல் இல்லை. இங்கே ஒட்டு மொத்தமாக யாரும் குற்றம்சாட்டப்பட வில்லை.
இலங்கையில் மக்களின் வரிப்பணத்தில் ஒரு மாணவர் இலவசமாக மருத்துவம் படிக்க 50 இலட்சத்திற்கும் மேல் செலவு செய்யப்படுகிறது. இந்த இலவச முதலீட்டை வழங்கிய மக்களின் முதுகில் இந்த வைத்தியர்களால் எப்படிக் குத்த முடிகின்றது. எப்படிக் கூச்சம் இல்லாமல் இந்த சலுகையை பெற்ற மனிதர்கள் தனியார் வைத்தியசாலையில் அதிக கட்டணத்தில் சிறந்த சேவையையும் அரசாங்க வைத்தியசாலையில் சம்பளத்தையும் எடுத்துக்கொண்டு ஓய்வுகாலத்து ஊதியத்தை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்துவிட்டு அக்கறை அற்ற சேவையையும் புரிய முடிகிறது. யாழ்ப்பாண வைத்தியசாலை தொடர்பான குற்றச்சாட்டுகளை ஏன் உள்ளூர் தமிழ் பத்திரிகைகளோ அல்லது தேசிய பத்திரிகைகளோ சுட்டிக் காட்டுவது இல்லை.
தமிழ் மக்களுக்கு சம உரிமை, தன்னாட்சி வாங்கிக் கொடுக்க என்று கூவிக் கொண்டு அரசியலில் ஈடுபடும் தமிழ் அரசியல் வாதிகள் கண்களுக்கு ஏன் இவை எவையும் தெரியவில்லை. விபத்து நடக்கக் காரணமான சாரதி பிணையில் வெளியே, உயிரை விட்டவர் குடும்பம் நியாயம் யாரிடம் கேட்பது எனத் தெரியாது பதறி நிற்கிறது.
எங்கள் சகோதரனுக்கு நடந்த மாதிரி எந்த ஒரு மனிதனுக்கும் நடக்க கூடாது. எங்கள் முயற்சி தொடரும். அதில் ஒரு சிறிய முயற்சியாக இந்த முதலுதவி கையேடு. தயவு செய்து கருத்தூன்றி படிப்பதோடு மற்றவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்!” இது முன்னர் குறிப்பிட்டது போல் 2021 பெப்ரவரியில் எழுதியது.
இந்தக் கட்டுரையை யாழில் உள்ள முன்னணி ஊடகங்கள் அனைத்திற்கும் அனுப்பி இருந்தேன். எந்தவொரு ஊடகமும் அதனைப் பிரசுரிக்கவில்லை. அதனால் என் அண்ணனின் 31ம் நாள் அந்தியட்டி நிகழ்வுகளுக்காக அவருடைய கல்வெட்டில் பிரசுரிப்புக்க வழங்கினேன். கல்வெட்டில் முதலுதவிக் குறிப்புகளுடன் இக்கட்டுரையையும் இணைத்திருந்தேன். அதற்காக 65,000 ரூபாய் கட்டணமும் செலுத்தப்பட்டது. ஆனால் யாழ் வைத்தியசாலையின் மருத்துவர்களின் செயற்பாடுகளை விமர்சிக்கும் இக்கட்டுரையை பதிப்பித்தால் தங்களுக்கு அழுத்தங்கள் வரும் சிக்கல்கள் ஏற்படும் என்பதால் எனது கட்டுரையை கல்வெட்டிலும் பிரசுரிக்கவில்லை. இலங்கை அரசாங்கத்தை, இராணுவத்தை, பொலிசாரை விமர்சிக்க முடிந்த என்னால் யாழ் மருத்துவர்களை விமர்சிக்க ஒரு ஊடகம் இருக்கவில்லை. யாழ் மருத்துவர்கள் – தனியார் வைத்தியசாலைகள் ஒரு பெரும் மாபியா உலகமாகவே உள்ளனர். இவர்கள் என் அண்ணணைப் போன்ற பலருடைய அன்புக்குரிய உறவுகளை தினமும் சத்தமில்லாமல் படுகொலை செய்கின்றனர். அங்கு படுகொலை செய்யப்பட்டவர்களினது உடலை வைத்தும் போஸ்மோட்டம் என்ற பெயரில் லாபம் சம்பாதிக்கின்றனர்.
Jaffna (Sri Lanka) Government Medical Officers Association என்ற அமைப்பு தமிழ் மக்களை நோயாளிகளாக்கி படுகொலை செய்யும் நோக்கோடு தான் இயங்குகிறதா? இந்த அமைப்பில் கிரிமினல் குற்றம்சுமத்தப்பட்டவர்கள் மீது ஏன் இன்னமும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? டொக்டர் கேதீஸ்வரன், டொக்டர் மயூரன், டொக்டர் இந்திரகுமார், டொக்டர் கமலா ஆகியோர் மக்கள் நலன் மற்றும் பாதுகாப்புக் கருதி உடனடியாக இடைநிறுத்தப்பட்டு மருத்துவக்குழுவால் அல்ல ஓய்வுபெற்ற நன்மதிப்புடைய யாழ்ப்பாணம் சாராத சுயாதீன் விசாரணைக்குழவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். மேலும் Jaffna (Sri Lanka) Government Medical Officers Association தங்களுடைய அமைப்பில் உள்ள கிரிமினல் டொக்டர்களைக் கண்டறிந்து அவர்களை மருத்துவ சேவையிலிருந்து முற்றாக இடைநிறுத்தாவிடில், இது அந்த அமைப்பை ஒரு மருத்துவ மாபியா என்ற நிலைக்கே கொண்டு செல்லும். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் டொக்டர் அர்சுனா தட்டியது ஒரு சிறுபொறியே. இந்தப் பொறி இலங்கை முழுவதும் நடைபெறும் ஊழல்கலைச் சுட்டெரிக்கும் பெருநெருப்பாகும். மருத்துவர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் நீங்கள் யார் பக்கத்தில் நிற்கின்றீர்கள் என்பதை விரைவில் தீர்மானித்துக்கொள்ளுங்கள். மக்களுடைய பக்கமா? மாபியாக்களின் பக்கமா? டொக்டர் அர்ச்சுனா தமிழ் மக்களுக்கு வேண்டும்!
துர்க்காபுரம் மகளிர் இல்ல/சிவபூமி விவகாரம் பின்வரும் முகநூல் முதல் பட பதிவிலிருந்தே ஆரம்பிக்கிறது. இவ்வாண்டு மேமாதத்தில் மலையகத்தில் க/பொ/த சாதாரண தரத்தில் சிறப்பாகத் தேறிய 29 மலையக மாணவிகளை யாழ்ப்பாணத்தில் A/L படிக்க ஏற்பாடு செய்து தருவதாகக் கூறி சிவபூமி அறக்கட்டளை அவர்களை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவருகிறது. அவர்களை துர்க்காபுரம் மகளிர் இல்லத்தில் தங்கவைக்கிறது.
சேர் பொன் ராமனாதன் காலத்து மலையகம் இப்ப இல்லை என்பது சிவபூமி அறக்கட்டளைக்கு தெரியாது. அவளவை தோற்றத்தில் மட்டும் அழகிகள் இல்லை.
இந்த 29 மகளிர்தாம் மூடிய குளியலறையில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டவர்கள். முதல் நாளே ஸ்மாட்டான 5 பெண்கள் தாங்கள் குளிக்க அனுமதிக்கப்பட்ட திறந்த வெளியை ஒரு கமெரா கண்காணிப்பதை கண்டு கிளர்ச்சி செய்து வெளியேறினார்கள். அவர்கள் கேட்டது உள்ளேயுள்ள மூடிய குளியல் அறைகளில் தங்களை குளிக்க அனுமதிக்கவே. அது மறுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்கள்.
யாழ்ப்பாணத்திலிருந்து பதுளைக்கு இரண்டு பஸ்களே உண்டு. காலை ஆறு மணிக்கும் இரவு எட்டு மணிக்கும். முதல் பஸ்ஸை தவறவிட்ட பெண்கள் மீது அனுதாபங்கொண்ட யாழ்ப்பாண பொதுசனம் அவர்களை விசாரித்தது. அப்போதுதான் பொதுவெளியில் குளிக்க விடப்பட்டது, கமெரா இருப்பது யாழ் பொதுசனத்திற்கு தெரியவந்தது. யாழ்ப்பாண பொதுசனமும் இப்போ சேர் ராமநாதன் காலத்தில் இல்லை. நிலமை மோசமாவதாக யாரோ சிவபூமிக்கு எச்சரித்தார்கள். சிவபூமி ஒரு றைவரை அனுப்பிவைத்தது. அக்குழந்தைகள் தமக்கு அநீதி இழைக்கப்பட்ட மகளிர் இல்லத்திற்கு திரும்பிச் செல்ல மறுத்தார்கள். அந்த றைவரிடம் “அவர்களைக் கட்டாயப் படுத்தாமல் அவர்களின் விருப்பப்படியே விடுமாறும் சொன்ன ஒரு யாழ் பொது சனத்தை றைவர் தாக்கினார். இப்படித்தான் அது ஒரு விவகாரமானது. இருந்தும் ஒரு மாதமானது அது செய்தியாக.
பொதுசனங்கள் ஜூன் மாதம் 2ம் திகதி கொடுத்த முறைப்பாட்டை அடுத்து தெல்லிப்பளை பிரதேச சபை அதிகாரிகள் துர்காபுரம் மகளிர் இல்லத்திற்குச் சென்று விசாரணை செய்தார்கள். நடந்த அநீதிகளைக் கண்டுகொண்டார்கள். இவ்விடயத்தை பொலீசாரிடம் முறையிடுவது ஆறுதிருமுருகனின் செல்வாக்கால் தடுக்கப்பட்டது.
இரண்டாம் முறையாக பொதுசனங்கள் முறையிட்டபோது அது ஆளுநரின் கவனத்திற்கு வந்தது. துர்காபுரம் மகளிர் இல்லம் சிறுவர் இல்லமாகப்பதிவு செய்யப்படவில்லை. அங்கு சிறுமிகளைத் தங்கவைத்தது சட்டவிரோதமானது. ஆளுநரின் விசாரணைகளில் கமெரா விவகாரமும் பதிவு செய்யப்படாத வேறு சில சிறுவர் இல்லங்களும் யாழில் இருப்பது தெரியவந்தது. ஆளுநர் பதிவு செய்யப்படாத சிறுவர் இல்லங்களை மூடவும் கமெராவை அகற்றவும் துர்க்காபுரம் மகளிர் இல்லத்தில் அவமதிக்கப்பட்டு அநீதி இழைக்கப்பட்ட மலையக பெண்குழந்தைகளை அவர்களின் ஊர்களுக்கு திரும்பிச் செல்லவும் மிகச்சரியாக உத்தரவிட்டார்.
தெல்லிப்பளை பிரதேச செயலாளர் அப்போதும் அதிகாரிகள் கமெரா விவகாரத்தை பொலீசில் முறையிடுவதை தடுத்துக்கொண்டிருந்தார். அதிகாரிகளோ விடாது போராடி ஜூலை 4ம் திகதியை இவ்விவகாரத்தை பொலிசில் முறைப்பாடு செய்தார்கள்.
இப்போது உதயன் செய்தித்தாளை குற்றவாளியாக்கிறார்கள். உதயன் ஊத்தை மீடியாத்தான். ஆனால் உதயன் போட்ட செய்தி முற்றிலும் Fake இல்லை. உதயனுக்கும் சிவபூமிக்கும் இடையில் இருக்கிற காணிப்பிரச்சனை வேறு. மலையக பெண்குழந்தைகள் மீது துர்க்காபுரம் மகளிர் இல்லத்தால் இழைக்கப்பட்ட அநீதிகள் வேறு. இரண்டுக்கும் முடிச்சுப்போட்டு பிரச்சனையை திசைதிருப்புவதும் ஆறுதிருமுருகனை காப்பாற்றுவதும் மகா தவறு.
யாழ்ப்பாணம் ஈரானிய இறையாட்சி போன்ற சிவபூமி கிடையாது. யாழ்ப்பாணம் ஸ்ரீலங்கா சோசலிசக் குடியரசின் ஒரு நகரம். சிவபூமியின் தலைவர் ஆறுதிருமுருகன் ஈரானிய பெரும்மதத்தலைவர் ஆயத்துல்லா கொமேனி போன்ற சட்டத்திற்கு அப்பாற்பட்ட புனிதர் கிடையாது. அவரது தொண்டூழிய நிறுவனங்கள் ஸ்ரீலங்கா சட்டதிட்டங்களுக்கு அமைவாகவே இருக்கவேண்டும்.
பிரச்சனையின் உக்கிரத்தை விளங்கிக்கொள்ளாது தெல்லியூர் சி. ஹரிகரன் ஆளுநர் சாள்சையும் உதயன் பத்திரிகையையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுகிறார். இங்கு குற்றவாளிக் கூண்டில் ஏறவேண்டியவர் ஆறு திருமுருகனே.
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கலாநிதி விக்கி விக்னேஸ்வரன் என்ற தமிழ் அகதிகளுக்கான அமைப்பை நடாத்தும் ஒருவர் “அவரை நான் நம்புகிறேன்” என்று ஆறுதிருமுருகனுக்கு நற்சான்றிதழ் வழங்குவதோடு “மஹாஜனாக் கல்லூரியின் முன்னாள் அதிபரான திருமதி சிவமலர் அனந்தசயனனின் மேற்பார்வையில் இயங்கும் துர்க்காபுரம் மகளிர் இல்லத்தில் தவறுகள் நடக்க வாய்ப்பில்லை” என்று முகநூலில் எழுதுகிறார். விக்கி விக்னேஸ்வரன் அறிய வேண்டியது என்னவென்றால் இந்த திருமதி சிவமலர் அனந்தசயனன் தான் மலையகச் சிறுமிகளுக்கு மூடிய குளியலறையில் குளிக்க அனுமதி மறுத்து அவர்களை கமெராவின் வீச்சுக்குள் உட்பட்ட திறந்த வெளியில் குளிக்க கட்டாயப்படுத்தியவர். அவர்கள் தம் மலையகப் பெற்றோரோடு செல்போனில் பேச அனுமதி மறுத்தவர். இச்சிறுமிகள் சுன்னாகம் திருமகள் அச்சகத்தில் கட்டணம் இல்லாத வேலை செய்யப்பணிக்கப்பட்ட குற்றச்சாட்டும் உண்டு. இவை அனைத்துக்கும் பொறுப்பு கூறவேண்டியவர்.
இன்றைய யாழ்ப்பாணத்தில் மிக அதிகளவிலான அதிகாரங்கள் குவிக்கப்பட்ட ஒரு இந்து மதத் தலைவராக ஆறுதிருமுருகன் இருக்கிறார்.
1. மிகப்பிரபல்யமான துர்க்கை அம்மன் கோயிலின் அறங்காவலர். தலைவர். இக்கோயிலின் மேற்பார்வையின் கீழேயே துர்க்காபுரம் மகளிர் இல்லம் வருகிறது.
2. யாழ்ப்பாணத்தின் மிகப்பெரிய இந்து அறக்கட்டளையான சிவபூமியின் தலைவர். இவ்வறக்கட்டளையின் உறுப்பினர்களும் பணியாளர்களும் ஆறுதிருமுருகனின் உறவினர்கள் மற்றும் நண்பர்களே
3. எந்த அரசாங்கம் இலங்கையில் ஆட்சியிலிருந்தாலும் ஒரு சைவமதப்பிரதிநிதி யாழ் பல்கலைக்கழக செனற் சபையிலிருக்கவேண்டுமென்பதற்காக எப்போதும் செனற் உறுப்பினராக நியமிக்கப்படுபவர்.
4. இதைவிட பல சைவமத சங்கங்களின் செல்வாக்கான உறுப்பினர்.
ஆறுதிருமுருகனின் குற்றங்கள்/தவறுகள் என்ன?
1. சிறுமிகளான மலையக மாணவிகளை சட்டவிரோதமாக துர்க்காபுரம் மகளிர் இல்லத்தில் தங்கவைத்தது. அது மகளிர் இல்லமாகவே பதிவு செய்யப்பட்டது. மகளிர் இல்லமாகப் பதிவு செய்யப்பட்டதாயின் 16, 17 வயதான அச்சிறுமிகள் செல்போன் வைத்திருந்து தம் பெற்றோரோடு பேச அனுமதியுண்டு. அதனை தடுத்தது.
2. உள்ளே முடிய குளியல் அறைகள் இருந்தும் CCTV வீச்சுக்கு உட்பட்ட திறந்த வெளியில் குளிக்க கட்டாயப் படுத்தப்பட்ட அச்சிறுமிகளின் முறைப்பாட்டை கவனத்தில் எடுக்காதது.
3. தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவு அதிகாரிகள் “கிரிமினல்” குற்றமான கமெரா விவகாரத்தை பொலீசில் முறையிடுவதை தன் “அதிகாரத்தால்” தடுத்தது. இது Perverting the course of Justice” என்கிற குற்றமாகும்.
4. ஒரு மாதத்தின் பின் ஆறுதிருமுருகனின் “அதிகாரத்தையும்” மீறி யாழ் பொதுசனங்களால் இவ்விடயம் வடமாகாண ஆளுநரின் கவனத்திற்கு சென்றபின்னரும் குற்றங்களின் உக்கிரத்தை அறியாது நடந்த தவறுகளுக்கு துர்க்காபுரம் மகளிர் இல்லத்தின் அல்டிமேற் தலைவரான ஆறுதிருமுருகன் மன்னிப்பு கேட்காது பிரச்சனையை மூடிமறைக்கவும் திசை திருப்பவும் தன் ஆதரவாளர்களையும் பூத கணங்களான தன் சமூக வலைத்தள Fake Account களையும் ஏவிவிட்டது. கடந்த வியாழக்கிழமை நான் போட்ட முகநூல் பதிவை திசைதிருப்ப ஆறுதிருமுருகனின் பூதகணங்களான 40 முகநூல் Fake கணக்குகளும் Locked in போலி முகநூல் கணக்குகளும் முயற்சி செய்தன. கடந்த 72 மணித்தியாலங்களாக நான் முறையாகத் தூங்காமல் விழித்திருந்ததால் இந்த அநியாயத்தை தடுக்கமுடிந்தது.
5. ஆறுதிருமுருகனுக்கு தன் அதிகாரத்தின் எல்லைகள் தெரியாது. அவரது “அதிகாரத்தை” மீறி இரண்டாம் தடவை யாழ் பொதுசனங்களால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளின் விளைவுகளின் போது ஒரு மகத்தான மதத்தலைவராக அவர் மன்னிப்பு கேட்டிருந்தால் ஊத்தை மீடியா உதயனுக்கு மெல்ல அவல் கிடைத்திருக்காது. அந்த பெருந்தன்மை ஆறுதிருமுருகனிடம் கிடையாது. இது ஆறுதிருமுருகனின் பெருந்தவறு.
6. உதயன் செய்தியை பொய்யென்று சொல்கிற ஆறுதிருமுருகன் இப்போது செய்வதென்ன? இன்னொரு ஊத்தை மீடியாவான வலம்புரியில் தன்னைப் பாதுகாக்க தன்னைப்பற்றி மகத்துவப்படுத்திய Fake செய்திகளை வெளியிடுகிறார்.
7. வரலாற்றில் யாழ்ப்பாணத்தார் மலையக மக்களுக்கு செய்த அநியாயங்கள் பல. இப்போது நிலமை மிக்க சீர்பெற்றிருப்பினும் மலையக மக்கள் இதனை ஒருபோதும் மறக்கமாட்டார்கள். இது மிக சென்சிற்றான விடயம்.
இதுபற்றிய புரிதல் ஆறுதிருமுருகனுக்கும் கிடையாது. அவருக்கு முதுகுசொறியும் சீதையின் மார்பழகையும் தொடையழகையும் ஆராய்ச்சி செய்யும் கட்டைப் பிரம்மச்சாரியான கம்பவாருதிக்கும் கிடையாது. இவர்கள்தான் யாழ்மையவாத சைவ வேளாரர் ஆச்சே. ஆறுதிருமுருகன் மிக நீண்டகாலம் யாழ் பல்கலைக்கழக செனற் உறுப்பினராக இருக்கும் அவர் யாழ் பல்கலைக்கழக செனற் கலந்துரையாடல்களில் அநியாயங்களுக்கெதிராக வாய்திறந்து பேசுவதே இல்லை. 40 தடவைகள் தன் வீட்டு Servant ஆன மலையகச் சிறுமியை வன்புணர்ந்த கே.ரி. கணேசலிங்கம் இன்று பேராசிரியராக யாழ் பல்கலைக் கழகத்திலிருக்கிறான். இது பற்றி ஆறுதிருமுருகன் செனற் சந்திப்புக்களில் எந்த கேள்வியும் எழுப்பியதில்லை. பல பாலியல் குற்றங்களைச் செய்த முன்னாள் யாழ் பல்கலைக்கழக துணை வேந்தரான சடையன் சண்முகலிங்கன் ஆறுதிருமுருகனின் நெருங்கிய நண்பர்.
பிலிப்பைன்சில் ஆங்கிலத்தில் Ph.D பட்டம்படிக்கமுடியாமல் ஊருக்கு திரும்பிய சடையன் துர்க்கை அம்மன் கோயிலை வைத்து தமிழிலேயே யாழ் பல்கலைக்கழகத்தில் தன் மொக்கை Ph.D ஆய்வை செய்து கலாநிதியானான். இதற்கு நன்றிக்கடனாக வெறும் வாத்தியாக இருந்த ஆறுதிருமுருகனுக்கு யாழ் பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதிப் பட்டம் கொடுத்தது. இந்த ஆறுதிருமுருகனிடமிருந்து மலையக மக்கள் எப்படி நியாயம் எதிர்பார்க்க முடியும்?
யாழ் லாயர் குருபரன் குமாரவடிவேல் மூலமாக உதயனுக்கு ஒரு மிரட்டல் கடிதத்தை அனுப்பியதன் மூலம் தன் மகா தவறுகள் குற்றங்களிலிருந்து மீளலாம் என்பது ஆறுதிருமுருகனின் கடைசி ஆயுதம். உதயன் இதுபோன்ற எத்தனையோ மானநஷ்ட மிரட்டல் கடிதங்களைக் கண்டது. பனங்காட்டு நரி உதயன் சலசலப்புக்கு அஞ்சுமா? இனிமேல் தான் இதுகாலம் வரையும் ஊத்தை பத்திரிகையாக இருந்த உதயனிடமிருந்து உன்னத ஊடகக் கட்டுரைகளை எதிர்பார்க்கலாம். ஆம் ஆறுதிருமுருகனின் உண்மை வரலாற்றை உதயன் இனி அலசி ஆராய்ந்து போட்டுடைக்கப் போகிறது. ஒரு சக பத்திரிகையாளராக இது சம்பந்தமாக உதயன் பத்திரிகைக்கு வேண்டிய தகவல் மற்றும் பிற உதவிகளுக்கு நான் உதவத்தயாராக இருக்கிறேன்.
அது சரி யார் இந்த லாயர் குருபரன் குமாரவடிவேல்? ஒரு காலத்தில் மனித உரிமைகளுக்காகப் போராடுகிற ஒரு யாழ் பல்கலைக்கழக சட்ட விரிவுரையாளராக இருந்தார். இப்போது பணத்துக்காக கணவனுக்கு விசுவாசமாக இல்லாது பஸ் றைவர்களோடும் தனது தொண்டு நிறுவன வாகன றைவர்களோடும் உடலுறவு கொண்ட பெண்களின் கேஸ்களில் ஆஜராகுபவர். அது அவர் தொழில் தர்மம். இவர் தான் கள்ள உறுதி முடிக்கும் சட்டத்தரணிகள் மீது பொலிஸாரை நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று கேட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கமூலம் சட்டமா அதிபரைச் சந்தித்து கள்ள உறுதி எழுதுகின்ற கூட்டுக்களவானிகளைக் காப்பாற்றியவர்.
இலங்கையில் யாரும் கடமையைச் சரிவரச் செய்தால் கைது செய்யப்படலாம், விரட்டப்படலாம் என்ற நிலை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நடந்துகொண்டிருக்கும் சம்பவங்கள் மூலம் வெளிவந்து கொண்டிருக்கின்றது. 15 வருடங்களாக நடைபெற்றுக்கொண்டிருந்த மோசடி, ஊழல் என்பவற்றை வெளிக்கொண்டுவந்த டொக்டர் ராமநாதன் அர்ச்சுனாவைக் கைது செய்ய பிடியாணை பிறப்பித்துள்ளது இலங்கை அரசு. அவரை உடனடியாக இடமாற்றி விரட்டி அடிக்குமாறு ஐக்கிய தேசிய மக்கள் முன்னணித் தலைவர்களில் ஒருவரான செல்வராஜா கஜேந்திரன் ஆளுநரைக் கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கை அரசும் தமிழ் தேசியமும் யாழ் மெடிக்கல் மாபியாக்களும் கூட்டாக இணைந்து மக்களுக்காகச் சேவையாற்றிய டொக்டர் அர்ச்சுனாவை கைது செய்ய சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையை நோக்கிப் படையெடுக்க தன்னெழுச்சியாக மக்கள் திரண்டு வைத்தியசாலையை முற்றுகையிட்டு, டொக்டர் அர்ச்சுனா கைது செய்யவிடமாட்டோம் என்று போராடி வருகின்றனர்.
‘We want Dr Archuna’ என்று சிங்களப் பொலிஸாருக்கும் தமிழ் தேசிய முன்னணி சட்டத்தரணிக்கும் விளங்கும் வகையில் உரத்துக் கோசம் எழும்பினார்கள் எழுச்சிகொண்ட தென்மராட்சி மக்கள். மேலும் ஆங்கிலத்தில் பொலிஸாருக்கு நிலைமையைச் சொல்லிய ஒருவர், “நீங்கள் ஏன் மக்களுக்கு சேவை செய்யும் ஒருவரை கைது செய்யப்பட்டாளமாக வந்திருக்கிறீர்கள். நீங்கள் கைது செய்ய வேண்டியது மக்களுக்குச் சேரவேண்டிய பொதுச் சொத்துக்களை சேவைகளை கொள்ளையடிக்கும் மருத்துவ மாபியாக்களைத் தான். அவர்களைப் போய் கைது செய்யுங்கள்’’ என்று தெரிவித்தார். அப்போராட்டத்திற்கு வந்திருந்த இன்னுமொருவர் தேசம்நெற்க்குத் தெரிவிக்கையில் “எங்கள் பணத்தில் படித்து டொக்டரானவர்கள் எங்களையே கொள்ளையடிக்கின்றனர்” என்று குறிப்பிட்டதோடு “இவ்வாறான கொள்ளையர்கள் நாடுபூராவும் இருக்கின்றனர். மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும். டொக்டர் அர்ச்சுனா உண்மையிலேயே ஒரு மக்கள் போராளி. அவரைக் கைது செய்ய அனுமதிக்க மாட்டோம்” எனத் தெரிவித்தார். இச்செய்தி எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் போது இலங்கை நேரம் அதிகாலை இரண்டு மணி அப்போது வைத்தியசாலையில் 1000 பேருக்கு மேற்பட்ட பொதுமக்கள் கூடி டொக்டர் அர்ச்சுனாவை கைது செய்ய முடியாதவாறு தடுத்து நின்றனர்.
விடிந்தால் தென்மராட்சி பொது மக்கள், வர்த்தக சங்கம் உட்பட்ட 30 வரையான பொது அமைப்புகள் டொக்டர் அர்ச்சுனாவுக்கு ஆதரவாகவும் யாழ் மெடிக்கல் மாபியாக்களுக்கு எதிராகவும் கண்டனக் கடையடைப்புப் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் போராட்டம் திட்டமிடப்பட்டதற்கு மாறாக முதல்நாள் யூலை 7 இரவே ஆரம்பமாகிவிட்டது. விடிவதற்குள் டொக்டர் அர்ச்சுனாவைக் கைது செய்து அவரை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றத் திட்டமிட்டனர். தனியார் மருத்துவமனைகளை நடத்துகின்ற அதில் பணியாற்றுகின்ற மருத்துவ மாபியாக்கள் அரச படைகளோடு கூட்டாக இணைந்து இரவோடு இரவாக டொக்டர் அர்ச்சுனாவைக் கைது செய்து விரட்டியடிக்க எடுத்த முயற்சியை தென்மாராட்சி மக்கள் வெற்றிகரமாகத் தடுத்துள்ளனர். ஆனால் அவர்களால் இந்த மாபியாக்களின் அதிகாரப் பலம் பொலிஸ்பலம் என்பவற்றுக்கு முன்னால் தொடர்ந்து போராட முடியுமா என்பது கேள்விக்குறியே.
காலிமுகத்திடலில் எழுந்த மேல்தட்டு மக்களின் போராட்டத்துக்கு மாறாக சாவகச்சேரி தென்மராட்சியில் அரச அதிகாரம், பொலிஸ், மெடிக்கல் மாபியாக்களுக்கு எதிராக மக்கள் தன்னெழுச்சியோடு இரவோடு இரவாக வீறுகொண்டெழுந்துள்ளனர். காலையில் தென்மராட்சி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைப் போராட்டத்தில் பங்கெடுப்பது நாட்டில் உள்ள ஒவ்வொரு பிரஜையின் கடமை எனப் போராட்டகார்கள் சமூக வலைத்தளங்களினூடாக அழைப்பு விட்டு வருகின்றனர்.
இந்த மெடிக்கல் மாபியாக்களுக்கும் கைது செய்ய வந்திருக்கும் பொலிஸாருக்கும் ஆதரவாக தமிழ் தேசிய முன்னணியின் முன்னணித் தலைவர் செல்வராஜா கஜேந்திரன் கருத்து வெளியிட்டது போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதுடன் அங்கு வந்திருந்த தமிழ் தேசிய முன்னணியின் தலைவர் சுபாசை சொற்கற்களால் தாக்கினர். ‘எங்கள் போராட்டத்தை குழப்புவதற்காக இங்கு வந்தீர்கள், உங்களுக்கு இங்கு என்ன வேலை என்று அவரை வார்த்தைகளால் நையப்புடைத்து திருப்பி அனுப்பினர்.
தென்மராட்சி மக்களின் இந்தத் தன்னெழுச்சி தமிழ், சிங்கள அதிகாரத் தலைமையையும் அரசியல் கட்சிகளையும் உலுப்பியுள்ளது. கடந்த பதினைந்து ஆண்டுகளில் இந்த மெடிக்கல் மாபியாக்கள் செய்த மோசடி ஊழல் மற்றும் மௌ;ளமாரித் தனங்களால் பல நோயாளர்கள் அநீயாயமாக இறந்துள்ளனர். அல்ல கொல்லப்பட்டுள்ளனர். இதன் உண்மைப் புள்ளிவிபரங்கள் வெளிவந்தால் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை சீராக இயங்காததால் பல பத்து நோயாளர்கள் இறந்திருக்கலாம் என்ற உண்மை வெளிவரும் என்றும் மேலும் இவர்கள் யாழ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதால் மக்களுக்கு ஏற்பட்ட இழப்பு பல கோடிகளைத் தாண்டும் எனவும் தன்னுடைய பெயரைக் குறிப்பிட விரும்பாத அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு நெருங்கிய ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்த நேற்று யூலை 7 சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குச் சென்றிருந்த போது உறுதியான எந்தக் கருத்துக்களையும் தெரிவித்திருக்கவில்லை.
ஏனைய வடக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் கள்ள மௌனம் சாதித்து வருகின்றனர். தமிழ் தேசியம் பேசியவர்கள் பெரும்பாலும் மெடிக்கல் மாபியாக்களின் பக்கம் நிற்கின்றனர். கள்ள மௌனம் காக்கின்றனர். தமிழ் தேசிய முன்னணி செல்வராஜா கஜேந்திரன் மட்டும் டொக்டர் அர்ச்சுனாவுக்கு எதிராகவும் தென்மாராட்சி மக்களுக்கு எதிராகவும் வெளிப்படையாகப் பேசி தன் விசுவாசத்தை மெடிக்கல் மாபியாக்களுக்கும் பொலிஸாருக்கும் வழங்கி இருந்தார். அங்கஜன் ராமநாதன் சில சமயம் இளைஞர் என்றளவில் டொக்டர் அர்ச்சுனாவுக்கு சாதகமாக ஊழல்கள் மோசடிகள் இடம்பெறுதைச் சுட்டிக்காட்டி இருந்தார்.
டொக்டர் என்றும் கடவுளுக்கு நிகரானவர்கள் என்றும் மதிப்பளித்த மக்களுக்கு யாழ் மெடிக்கல் மாபியாக்கள் செய்த அநியாயங்கள், மோசடிகள் பலருடைய மரணத்துக்கு காரணமாக இருந்ததுள்ளது. அவ்வாறு மரணித்தவர்களின் உடலையும் வைத்து பிழைப்பு நடத்திய மக்கள் பணத்தில் படித்துப் பட்டம் பெற்றவர்களின் ஈனத்தனம் தற்போது டொக்டர் அர்ச்சுனா என்ற ஒரு மக்கள் போராளியால் வெளிவந்துள்ளது. தங்களை டொக்டர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களின் அநாகரிகமான உரையாடல்கள், சண்டித்தனம், அவர்கள் முழப் புசணிக்காயை ஒரு பிடி சோற்றுக்குள் மூட எடுக்கும் முயற்சிகள் இந்த தொழிற்துறையினர் மீதிருந்த நன்மதிப்பை அவர்களே அம்மணமாவதை வெளிப்படுத்தி நிற்கின்றது. ஆனால் டொக்டர் அர்ச்சுனா போன்று இலைமறை காயாக, மக்கள் சேவையை மகேசன் சேவையாக செய்பவர்களும் உள்ளனர். இந்த மெடிக்கல் மபியாக்கள் எமது சமூகத்தின் புற்றுநோய். இவர்களைப் போன்ற மாபியாக்கள் அனைத்துத் துறைகளிலும் உள்ளனர். இவர்கள் வேரறுக்கப்பட வேண்டும். இல்லாவிடடில் இவர்கள் சமூகத்தைச் சீரழித்துவிடுவார்கள்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை விடயம் தொடர்பில் பெரும்பாலான மருத்துவர்கள் மௌனம் காக்கின்றனர். பேசுபவர்கள் பெரும்பாலும் டொக்டர் அர்ச்சுனாவுக்கு எதிரான பொது மக்களுக்கு எதிராக கருத்துக்களை முன்வைக்கின்றனர். இது கிட்டத்தட்ட இறுதியுத்தத்தில் இராணுவம் யுத்தக் குற்றங்கள் எதுவும் செய்யவில்லை என்று இலங்கை இராணுவமும் அரசும் ஒற்றைக்காலில் நிற்பது போன்ற செயலே. மருத்துவத்தை மக்கள் சேவையாக எண்ணுபவர்கள் டொக்டர் அர்ச்சுனாவின் பக்கம் மக்களின் பக்கம் நிற்க வேண்டும்.
யாரும் தனியார் மருத்துவத்துறையில் பணியாற்ற வேண்டாம் என்று சொல்லவில்லை. நீங்கள் பெறும் சம்பளத்துக்கான கடமையை உங்கள் கடமை நேரத்தில் சரியானபடி செய்யுங்கள் என்று தான் கேட்கின்றார்கள் மக்கள். ஆனால் அரச மருத்துவத்தைச் சீரழித்து உங்கள் பிரைவேட் கிளினிக்குக்கு பலாத்காரமாகச் செல்ல வைப்பதையே மக்கள் எதிர்க்கின்றனர். வயிற்றுக் குத்து என்று வருபவர்களிடமே எல்லா ஸ்கானையும் எடுக்கச் சொல்கிறீர்கள் எல்லா ரிப்போட்டும் எடுக்கச் சொல்லி லட்சக்கணக்கில் கொள்ளை அடிக்க வேண்டாம் என்று தான் மக்கள் கேட்கிறார்கள். பிணத்தை வைத்துக் கொண்டு சொந்த மக்களிடமே பணம் பறிக்கும் ஈனத்தனம் மிக அருவருப்பானது. மருத்துவர்களே நீங்கள் எந்தப் பக்கள் நிற்கப் போகின்றீர்கள்? மக்களின் மக்கமா மாபியாக்களின் பக்கமா?
மக்களை வழிநடத்த வேண்டியவர்கள் அரசியல் கட்சிகள். ஆனால் வடக்கில் எந்தவொரு அரசியல் கட்சியும் மக்கள் நலன்சார்;ந்து இயங்கவில்லை என்பதை தென்மராட்சி மக்கள் நிரூபித்துள்ளனர். தற்போது மக்கள் புரட்சிகரப் பாதையை தேர்ந்தெடுத்துள்ளனர், ஆனால் அவர்களுக்கு தலைமை தாங்கும் தகுதியுள்ள ஒரு கட்சி தமிழ் பிரதேசத்தில் இல்லை. வடக்கில் உள்ள அரசியல் கட்சிகளிலும் பார்க்க தெளிவான அரசியலை மக்கள் முன்னெடுக்கின்றனர். தென்மாராட்சி மக்களை முன்னுதாரணமாகக் கொண்டு சகலதுறைகளிலும் உள்ள மோசடிகள், ஊழல்களைக் களைந்து புதிய அரசியல் மாற்றத்திற்காக மக்கள் இவ்வாறான தன்னெழுச்சிப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். தத்தம் பிரதேசங்களில் உள்ள அரசியல் வாதிகளுக்கும் தங்கள் பலத்தைக் காட்டவேண்டும். தமிழ் தேசியம் பேசிக் கொண்டு மக்கள் விரோதச் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் அரச இயந்திரத்தை யார் மக்களுக்கு எதிராகத் திருப்பினாலும் மக்கள் போராடத் தயாராக வேண்டும். வெல் டன் தென்மாராட்சி !
“தனியார் மருத்துவமனைகளை வளர்ப்பதற்காக அரச மருத்துவமனைகளை முடக்கும் நடவடிக்கையில் சில யாழ் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர், இவர்கள் சாவகச்சேரிச் சிறுமியின் உடலைக் கூட மூன்று லட்சம் பெற்றுக்கொண்டே ஒப்படைத்துள்ளனர், பெரும்பாலும் தனியார் துறைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் அரச மருத்துவமனைகளில் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வதில்லை” எனப் பேராதனையில் மருத்துவராகக் கடமையாற்றி தற்போது தான் பிறந்த மண்ணுக்கு சேவையை வழங்க வந்துள்ள டொக்டர் ராமநாதன் அர்ச்சுனா தேசம்நெற்க்குத் தெரிவித்தார். இப்பதிவுகள் அவருடைய முகநூல் பதிவிலும் காணொலியாக உள்ளது. இவர் யூன் 14 அன்று பொறுப்பதிகாரியாக நியமனம் பெற்று வந்தார்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையைக் கட்டியெழுப்பும் அவாவோடு வந்திருந்த டொக்டர் அர்ச்சுனா அங்கு 15 ஆண்டுகளாக இடம்பெற்று வரும் ஊழல்களையும் மோசடிகளையும் தட்டிக் கேட்டதற்காக மருத்துவ மாபியா ரவுடிகளால் தாக்கப்பட்டார். தங்களுடைய வருமானத்தில் மண் வீழ்ந்துவிட்டது என்றும் தாங்கள் அம்பலமாகப் போகின்றோம் என்றும் கொதித்து எழுந்த மருத்துவ மாபியாக் கும்பலைச் சேர்ந்த டொக்டர் மயூரன், டொக்டர் இந்திரகுமார், மருத்துவக் கல்வியில் பயிலும் தர்சன் மற்றும் டொக்டர் கமலா யோகுவின் கணவர் ஆகியோர் இணைந்து இத்தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இந்தப் பிரச்சினையில் முக்கிய பங்குவகிக்கும் டொக்டர் ஆறுமுகம் கேதீஸ்வரன் மருந்தக மோசடிகள் தொடர்பிலும் குற்றம்சாட்டப்பட்டவர் என்பது மிக முக்கியமானது. இவர் டொக்டர் அர்ச்சுனாவின் அதிரடி நேர்மையை ஏற்கனவே அறிந்திருந்ததால் அர்ச்சுனா யாழ்ப்பாணத்திற்கு வந்து கடமையாற்றுவதை விரும்பியிருக்கவில்லை. அதனால் டொக்டர் அர்சுனா சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு வருவதை தடுப்பதற்கு பல கைங்கரியங்களை மேற்கொண்டிருந்தார். ஆனாலும் அவை பலிக்கவில்லை. மத்திய சுகாதார அமைச்சு டொக்டர் அர்ச்சுனாவை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு பதில் பொறுப்பதிகாரியாக நியமித்தது. டொக்டர் அர்சுனா நேர்மையாக மின்னல் வேகத்தில் 15 ஆண்டுகளாக முடக்கப்பட்டிருந்த சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையை 15 நாட்களில் சீரமைக்க முற்பட்டார்.
டொக்டர்கள் என்ற பெயரில் திரிந்த யாழ் மருத்துவ மாபியாக் கும்பல் கதி கலங்கியது. மக்களுடைய, தொழிலாளர்களுடைய நலன்களுக்காகப் போராட வேண்டிய தொழிற்சங்கம் மக்களுக்கு எதிராகவும் மக்கள் நலனைப் பேண வேண்டும் என்று கோரும் மருத்துவர் டொக்டர் அர்ச்சுனாவுக்கு எதிராகவும் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கினர். இது பற்றி முகநூலில் கருத்து வெளியிட்ட ரவீந்திரன் ரட்ணசிங்கம் “பணி செய்தால் தானே பணிப் புறக்கணிப்பு செய்ய வேண்டும்” என்று எழுதியுள்ளார். இந்த மருத்துவ மாபியாக் கும்பலின் விளக்கங்கள் நகைச்சுவையாகவும் நளினமாகவும் மக்களால் சமூகவலைத்தளங்களில் பகிரப்படுகின்றது. டொக்டர் அர்ச்சுனாவிற்கான ஆதரவு மக்கள் மத்தியிலும் பல்வேறு தளங்களிலும் பெருகிவருகின்றது.
இந்நிலை தொடர்பாக நிலைமையை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் தோழர் டக்ளஸ் தேவானந்தா, அவருடைய ஆலோசகர் எஸ் தவராஜா ஆகியோர் நேற்று யூலை 7 சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குச் சென்று டொக்டர் அர்ச்சுனாவின் குற்றச்சாட்டுகளைக் கேட்டறிந்தனர். இதற்கு முன்னதாக டொக்டர் அர்ச்சுனாவை தாங்கள் இடமாற்றி உள்ளதாக மருந்தக மோசடிகளில் சம்பந்தப்பட்ட வட பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் டொக்டர் அறுமுகம் கேதீஸ்வரன் கடிதம் அனுப்பி உள்ளார். ஆனால் தான் சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டபடியால் அவர்களின் முடிவின்படியே செயற்படமுடியும் என டொக்டர் அர்ச்சுனா தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.
வடமாகாணத்தில் உள்ளவர்களுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்று புலம்பும் தேசிய சோம்பேறிகளுக்கு அங்குள்ள மக்களுக்கு சேவைகளை வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் வந்தால், எப்படியாவது அவர்களை தமிழ் பிரதேசங்களைவிட்டு கலைப்பதற்கான அதிகாரம் மட்டும் எப்படியோ வந்துவிடும். தங்களுக்குள்ள அவ்வளவு அதிகாரங்களையும் பயன்படுத்தி சாதிய ஒடுக்குமுறைகளைச் செய்வது, சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவது, அர்ப்பணிப்புள்ளவர்களை தங்களுக்கு வேண்டாதவர்களை தமிழ் பிரதேசங்களைவிட்டு கலைப்பது போன்றவற்றுக்கு பொலிஸாரோடு கைகோர்த்து தங்கள் அதிகாரங்களை நிலைநாட்டுவார்கள். வட பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன், சுகாதார அமைச்சை மீறி வழங்கிய இடமாற்றக் கடிதம் அவ்வாறானதே.
டொக்டர் அர்ச்சுனா மருத்துவத்துறையில் உள்ள மோசடிகளை மட்டும் அம்பலப்படுத்தி உள்ளார். இதே மாதிரியான மோசடிகள் ஏனைய துறைகளிலும் பரந்துள்ளது. இலங்கையின் ஏனைய பிரதேசங்களிலும் நடைபெறுகின்றது. மேலும் அரசியல் வாதிகள் அளவுக்கு அல்லது அவர்களைக் காட்டிலும் அதிகாரிகளும் மிக மோசமான மோசடிகளிலும் சுரண்டல்களிலும் அதிகார துஸ்பிரயோகங்களிலும் ஈடுபட்டு வருகின்றன். அவர்கள் ஊதியம் பெறுவதற்கான உழைப்பை வழங்கத் தயாராகவில்லை. கிளிநொச்சி இரணைமடு குளத்தை விஸ்தரித்து அதன் நீர்க்கொள்வனவை அதிகரிக்க உலக வங்கியிடம் இருந்து 150 மில்லியன் டொலர் வேலைத் திட்டத்துக்கான நிதியை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பெற்றுக்கொடுத்திருந்தார். ஆனால் அதில் பணியாற்றிய வடமாகாணத்தைச் சேர்ந்த அரச அதிகாரிகளின் அசமந்த நடவடிக்கையால் அத்திட்டம் கைநழுவிச் சென்றதுடன் அவ்வளவு தொகையும் உலக வங்கியால் மீளப் பெறப்பட்டது.
மருத்துவ மாபியாக்களின் பிரச்சினை யுத்தம் முடிவுக்கு வந்த கையோடு ஆரம்பமாகிவிட்டது. மருத்துவத்துறையின் பல்வேறு முறைகேடுகள் பெரும்பாலும் ஒழித்து மறைக்கப்பட்ட போதும் அவ்வப்போது அவை வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றது.
அரச மருத்துவமனைகளைச் சீரழிப்பதன் மூலம் அரச ஆஸ்பத்திரிக்குப் போனால் இழுத்தடிப்பார்கள், ஒழுங்காகச் சிகிச்சை அளிக்கமாட்டார்கள், அங்கு தரும் மருந்துகளும் குணமாக்காது, அங்கு தேவையான உபகரணங்களும் இல்லை என்று எல்லோரும் குற்றம்சாட்டும் நிலையை அரச மருத்துவமனைகளில் பணியாற்றிக்கொண்டு தனியார் மருத்துவமனைகளை இயக்கும் உரிமையாளர்களான மருத்துவர்களும் அங்கு மருத்துவர்களாக பணியாற்றும் மருத்துவர்களும் ஏற்படுத்தி உள்ளனர். யாழில் பார்மசிகளில் மருத்துவமனைகளின் பிரச்சினைகளை ஒடுக்கப்பட்ட சமூகத்தின் குரலாக விளங்கிய எழுத்தாளர் டானியலின் மகன் சாம் ஏற்கனவே வெளிக்கொண்டு வந்துள்ளார்.
2009 யுத்தம் முடிவுக்குப் பின் டென்மார்க்கைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் குளொபல் மெடிக்கல் எய்ட் என்ற நிறுவனம் மூன்று மில்லியன் டொலர்கள் பெறுமதியான அத்தியவசிய மருந்துப் பொருட்களை யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நோயைக் குணமாக்கும் நோக்கோடு அரச அனுமதி பெற்று, அரச சுற்று நிருபத்தோடு வடக்கு கிழக்கில் உள்ள மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்பட்டது. ஆனால் வடக்கில் இலவசமாக வழங்கப்பட வேண்டிய இந்த மருத்துகளை மருத்துவர்கள் நோயாளிகளுக்கு பரிந்துரை செய்யவும் இல்லை. வழங்கவும் இல்லை. இதற்கு இலங்கையின் மருத்துவமனையொன்றில் பணியாற்றும் மருத்துவ அதிகாரி தந்த விளக்கம் அதிர்ச்சியானது. “இலவச மருந்துப்பொருட்களை யுத்தத்தின் விலியிலிருந்த மக்களுக்கு வழங்கினால் அவர்கள் மனதார வாழ்த்துவார்கள், ஆனால் அதனை வழங்கிய மருத்துவருக்கு எவ்வித பலனும் இல்லை. ஆனால் மெடிக்கல் ரெப் கொண்டுவரும் புதுப்புது மருந்துகளை மருத்துவர் நோயாளிக்குப் பரிந்துரை செய்தால் அவருக்கு கொமிஸன் கிடைக்கும், விடுமுறையை வெளிநாட்டில் களிப்பதற்கு விமானச்சீட்டு ஹொட்டல் ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும். அதனால் குளொபல் மெடிக்கல் எய்ட் வழங்கிய மருந்துப் பொருட்கள் பாவனைக் காலம் முடியும்வரை இருப்பில் வைக்கப்பட்டு இறுதியில் காலாவதியாகி குப்பைக்குள் போடப்பட்டது. பாவம் மக்கள்” எனத் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.
இலங்கையில் பல்மருத்துவராகக் கடமையாற்றி தற்போது பிரத்தானியாவில் கடமையாற்றும் மருத்துவகலாநிதி தேசம்நெற்க்குத் தெரிவிக்கையில் டொக்கடர் அர்சுனாவின் பதிவுகளைத் தொடர்ந்தும் பார்த்து வருவதாகவும் அவை நூறு சதவீதம் உண்யென்றும் அவருக்கு எதிராகக் கிளம்பியுள்ளவர்கள் உண்மையிலேயே மருத்துவ மாபியாக்களாகத்தான் இருக்க முடியும் எனவும் தெரிவித்தார். பிரித்தானியாவில் பல்மருத்துவர்கள் லட்சங்களில் சம்பாதிக்கும் போதும் 15 பவுண் 20 பவுண் மருத்துவராக உள்ள இவரிடம் நீங்கள் ஏன் இந்தக் கருத்தை வெளிப்படையாகச் சொல்லத் தயங்குகிறீர்கள் என்ற போது பிழையெனத் தெரிந்திருந்தாலும் அதனைச் சுட்டிக்காட்டும் தகுதி எனக்கில்லை. ஏனென்றால் இலவசக் கல்வியில் கற்ற நான் இப்போது பிரித்தானியாவில் வாழ்கின்றேன் அதனைச் சுட்டிக்காட்டும் தகுதி எனக்கில்லை. ஆனால் அந்தத் தகுதியும் நேர்மையும் டொக்டர் அர்ச்சுனாவிற்கு உள்ளது. அதை என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை எனத் தெரிவித்தார். இவ்வாறான பதிவுகளை எமது வட்ஸ்அப் மருத்துவக் குழவில் பகிர்ந்தாலேயே அதனை நீக்கச்சொல்லி துசணத்தில் ஏசவார்கள் என்று தேசம்நெற்றுக்குத் தெரிவித்த அவர், மருத்துவத்துறை இலங்கையிலும் தான் பிரித்தானியாவிலும் தான் உலகம் பூராவும் தான் மருத்துவ மாபியாக்களின் கைகளுக்கு மாறிக்கொண்டுள்ளது. இதனை யாழில் தனியார் மருத்துவமனைக்கு தந்தையை அழைத்துச் சென்று சிகிச்சை பெற்றவரின் அனுபவத்தைக் கேளுங்கள்:
டொக்டர் அர்ச்சுனாவுக்கு இடமாற்றம் வழங்கி, வட மாகாணசபை சுகாதாரப் பணிப்பாளர் டொக்டர் ஆறுமுகம் கேததீஸ்வரனால் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டவர் டொக்டர் ரஜீவ். இவர் பொறுப்பதிகாரியாவதற்கான தகமையைப் பெறவில்லையென டொக்டர் அர்ச்சுனா குற்றம்சாட்டியிருந்தார். டொக்டர் அர்ச்சுனாவை மிரட்டி, அவரை அடித்து, தொழிற்சங்கப் போராட்டத்தை நடத்தி கரணம் போட்டும் அவர் பணியவில்லை. இந்த இயலாமையின் பிரதிபலிப்பாக இறுதியில் டொக்டர் ரஜீவையும் பொறுப்பதிகாரியாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இருக்க விரும்புகிறீர்களா என்று டொக்டர் அர்சுனாவிடம் மாகாண சுகாதார அத்தியேட்சகர் கேட்டுள்ளார்.
அதற்குப் பதிலளித்துள்ள டொக்டர் அர்ச்சுனா இப்போது எல்லாமே மக்களிடம் ஒப்படைத்து விட்டேன் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்பு என்று தெரிவித்துள்ளார். தற்போது தென்மராட்சி மக்கள், வர்த்தக சங்கம், பொது அமைப்புகள் நலன்விரும்பிகள் அனைவரும் இணைந்து யாழில் உள்ள டொக்டர்கள் என்ற பெயரில் உலாவும் மருத்துவ மாபியாக்களுக்கு எதிராக கண்டனக் கடையடைப்புப் போராட்டத்தில் யூலை எட்டு அன்று ஈடுபடவுள்ளனர். மருத்துவ சேவை என்பது இலாபமீட்ட மட்டும் அல்ல. இந்த மருத்துவ மாபியாக்களின் மத்தியில் டொக்டர் அர்ச்சுனா மக்களின் பக்கம் நின்றதால் இன்று அவர் மக்களின் மீட்பராகி உள்ளார். தங்களை யார் நேசிக்கின்றார்களோ மக்கள் அவர்களை நிச்சயம் நேசிப்பார்கள்.
தன்னுடைய கட்டுப்பாட்டுப் பகுதியில் மக்களுக்கு சேவை வழங்கிய இராணுவ அதிகாரி மாற்றலாகிப் போன போது ஊர்மக்கள் கோலகலமாக கண்ணீரோடு பிரியாவிடையை ஏற்பாடு செய்தமை குறிப்பிடத்தக்கது. அதே போல் வடக்கின் கடல் எல்லையில் ஈழத்தமிழ் மீனவர்களுக்காக போராடி களப் பலியான கடற்படை வீரனுக்காக 3,000 மீனவர்கள் ஒரு வாரத்திற்கு முன் தன்னிச்சையாக அவருடைய மரணச் சடங்கிக்கு தென்பகுதி சென்றனர். தற்போது டொக்டர் அர்ச்சுனா ஈழத்தில் மக்களின் மனங்களில் இடம்பிடித்துள்ளார். அவருக்காகவும் வடக்கின் மாபியா கும்பலுக்கு எதிராகவும் மக்கள் போராடத்தயாராகிவிட்டார்கள்.
சாதி, மதம், இனம் என்று மக்களைக் கூறுபோட்டு குறும்தேசியவாதத்தையூட்டி பிரித்து வைத்தாலும் தங்களை நேசிப்பவர்களை மக்கள் ஒருபோதும் சாதி, மதம், இனம் பார்த்து கைவிடமாட்டார்கள். உண்மைகள் உறங்குவதில்லை. மக்களை சிறிது காலம் சில காலம் ஏமாற்றலாம். எல்லாக் காலத்திலும் எப்போதும் ஏமாற்ற முடியாது.
ஈரானுக்கான புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த மாதம் 28 ஆம் திகதி நடைபெற்றது. ஆனால் அன்றைய தினம் 40 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்ததாக ஈரானிய செய்திகள் தெரிவித்திருந்தன.
பதிவான வாக்குகளில் 42.5 சதவீத வாக்குகளை பெற்று சீர்திருத்தக் காட்சியைச் சேர்ந்த 69 வயதான ஈரான் முன்னாள் சுகாதார அமைச்சர் [2001-2005] மசூத் பெசெஸ்கியன் முன்னிலையில் இருந்தார். 38.6 சதவீத வாக்குகளை பெற்று தீவிர வலதுசாரி தலைவரான சயீது ஜலீலி இரண்டாம் இடத்தில் இருந்தார்
ஆனால் ஈரான் சட்டப்படி வெற்றி பெறுவதற்கு வேட்பாளர் குறைந்தது 50 சதவீத வாக்குக்கள் பெற்றிருக்க வேண்டும். எனவே முதல் இரண்டு இடத்தைப் பிடித்த இருவரையும் முன்னிறுத்தி நேற்று [ 5] இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
இந்த வாக்குகள் தற்போது எண்ணப்பட்ட நிலையில் மொத்தம் பதிவான கிட்டத்தட்ட 30 மில்லியன் வாக்குகளில் [49.8 சதவீதம்], பெசெஷ்கியன் 17 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளை[ சுமார் 56 சதவீதம்] வாக்குக்குகளைப் பெற்று தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
சயீது ஜலிலி 13 மில்லியன் வாக்குகளுடன் பின் தள்ளப்பட்டுள்ளார். எனவே ஈரான் அரசின் புதிய அதிபராக மசூத் பெசெஸ்கியன் பதவி ஏற்க உள்ளார். மசூத் பெசெஸ்கியன் தொழில்முறையாக இதய அறுவை சிகிச்சை நிபுணராக இருந்துள்ளார். இவர் ஈரானில் தற்போது கடுமையாக பின்பற்றப்பட்டும் வரும் பெண்கள் பர்தா அணியும் விதிகள் கட்டாயமாக்கப்பட்டதற்கு எதிரானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானிய பொதுத் தேர்தலில், தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட இலங்கை தமிழ்ப் பெண்ணான உமா குமரன் வெற்றிபெற்றுள்ளார்.
இவர், லண்டன் ஸ்டராட்ஃபோர்டு தொகுதியில் 19,145 வாக்குகளை பெற்று பெரும் வெற்றியடைந்துள்ள நிலையில், பிரித்தானிய வரலாற்றில் முதல் தமிழ் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையையும் தனதாக்கிகொண்டுள்ளார்.
உமா குமரன் ஈழத்து தமிழ்ப் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை , இந்த பொதுத்தேர்தலில் தொழிற்கட்சி அமோக வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் நிலையில், உமா குமரன் தன்னுடன் போட்டியிட்ட வேட்பாளர்களை விட பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளதுடன், அவருக்கு 19,145 வாக்குகள் கிட்டியுள்ளன.
இதன் மூலம், ஈழத்தமிழ் பூர்வீகத்தை கொண்ட புதிய நாடாளுமன்ற உறுப்பினராக கனடாவுக்கு அடுத்தபடியாக பிரித்தானியாவிலும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உருவாகியுள்ளார்.
இஸ்ரேல் மற்றும் காஸா இடையே போர் ஆரம்பமானதில் இருந்து காஸாவை சேர்ந்த பத்தில் ஒன்பது பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
பலஸ்தீன எல்லை பகுதியில் உள்ள ஐநா-வின் OCHA அமைப்பு தலைவர் andrea di domenico காசாவில் சுமார் 1.9 மில்லியன் பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று தெரிவித்தார்.
1.7 மில்லியன் பேர் இடம்பெயர வாய்ப்புள்ளதாக கணித்திருந்த போதிலும், கடந்த ஆண்டு ஒக்டோபரில் இருந்து இதுவரை காசா எல்லையில் பத்தில் ஒன்பது பேர் குறைந்தபட்சம் ஒருமுறையேனும் இடம்பெயர்ந்து இருக்கலாம் என்று கணித்துள்ளதாக தெரிவித்தார்.
இஸ்ரேல் போர் காரணமாக காசா இரண்டாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக வடக்கில் சுமார் 3 முதல் 3.5 லட்சம் பேர் வரை சிக்கிக் கொண்டு தெற்கிற்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய பொதுத்தேர்தல் தற்போது முடிவடைந்துள்ள நிலையில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி தற்போது முன்னிலை வகித்து வருகிறது.
தற்போது வரை கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) தலைமையிலான தொழிலாளர் கட்சி 43 ஆசனங்களையும் ரிஷி சுனக் (Rishi Sunak ) தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி இரண்டு ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.
மொத்தமாக 650 நாடாளுமன்ற ஆசனங்களை கொண்ட பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இந்த முறை தொழிலாளர் கட்சி பெரும்பாண்மையான ஆசனங்களை கைப்பற்றி ஆட்சியமைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இவ்வாறான நிலையிலேயே பிரித்தானியாவின் (UK) எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி, தற்போதைய கன்சர்வேடிவ் கட்சியை வீழ்த்தி, மிகப்பெரிய நாடாளுமன்ற பெரும்பான்மையை வெல்லும் என அண்மைய தரவுகளை அடிப்படையாக கொண்டு சர்வதேச ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.