பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்லும் புலம்பெயர் இலங்கை தமிழ்ப் பெண் உமாகுமரன் !

பிரித்தானிய பொதுத் தேர்தலில், தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட இலங்கை தமிழ்ப் பெண்ணான உமா குமரன் வெற்றிபெற்றுள்ளார்.

இவர், லண்டன் ஸ்டராட்ஃபோர்டு தொகுதியில் 19,145 வாக்குகளை பெற்று பெரும் வெற்றியடைந்துள்ள நிலையில், பிரித்தானிய வரலாற்றில் முதல் தமிழ் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையையும் தனதாக்கிகொண்டுள்ளார்.

உமா குமரன் ஈழத்து தமிழ்ப் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை , இந்த பொதுத்தேர்தலில் தொழிற்கட்சி அமோக வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் நிலையில், உமா குமரன் தன்னுடன் போட்டியிட்ட வேட்பாளர்களை விட பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளதுடன், அவருக்கு 19,145 வாக்குகள் கிட்டியுள்ளன.

இதன் மூலம், ஈழத்தமிழ் பூர்வீகத்தை கொண்ட புதிய நாடாளுமன்ற உறுப்பினராக கனடாவுக்கு அடுத்தபடியாக பிரித்தானியாவிலும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உருவாகியுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *