2024

2024

இலங்கையனும் இல்லை இந்தியனும் இல்லை – மண்டியிட்டு கதறிய யாழ் இளைஞர்

இலங்கையனும் இல்லை இந்தியனும் இல்லை – மண்டியிட்டு கதறிய யாழ் இளைஞர்

தமிழ்நாடு இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன் முழங்காலில் இருந்து கதறிய யாழ்ப்பாண இளைஞன். இலங்கையில் யுத்தம் நடந்த போது ஜோய் கே என்றழைக்கப்படும் இவ் இளைஞன் 8 வயதில் பெற்றோரால் படகு மூலம் தமிழ்நாடு அனுப்பிக்க வைக்கப்பட்டுள்ளார். மண்டபம் வந்தடைந்த ஜோய் அங்கே இலங்கை அகதிகளுக்கான மறுவாழ்வு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளார். முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள அவருக்கு இதுவரை இந்திய அரசாங்கத்தினுடைய எந்தவித அடையாள அட்டையும் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகின்றது.

தற்போது 22 வருடங்கள் கடந்த நிலையில் சாதாரண வாழ்க்கை நடத்துவதற்கு கூட உரிய அடையாள ஆவணங்கள் வழங்கப்படாததால் தனது பெற்றோர் வசிக்கும் இலங்கைக்கு திருப்பி அனுப்புமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

மேலும் அந்த இளைஞர் இதுவரை தான் 10க்கும் மேற்பட்ட மனுக்களை மாவட்டச் செயலகத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும் ராமநாதபுரம் மாவட்டச் செயலக அதிகாரி தன்னை இலங்கைக்கு அனுப்ப மறுப்பதாகவும், தன்னை இந்தியக் குடிமகனாக அங்கீகரித்து எந்த ஆவணமும் வழங்கவில்லை என்று தன்னை சமாதனப்படுத்த முற்பட்ட பொலிஸ் அதிகாரிகளிடம் முறையிட்டார். இவ்வாறு இந்தியாவிற்கு இலங்கையிலிருந்து அகதியாக சென்ற இலங்கைத் தமிழ்மக்கள் 3 தலைமுறை கடந்தும் இரண்டாம் தர பிரஜைகளாகவே தமிழ்நாட்டில் நடத்தப்படுகிறார்கள். அடிப்படை வசதிகள் குறைந்த முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.

ஈழத்தமிழர்களுக்கு தனிநாடு வாங்கிக் கொடுத்தே தீருவேன் என பிழைப்பு அரசியல் நடத்தும் சீமானும் தமிழ்நாட்டில் வாழும் இலங்கை அகதிகளை கண்டுகொள்ளவில்லை.

இந்திய மத்திய அரசாங்கம் திபேத் அகதிகளுக்கு வழங்கி வரும் ஆதரவை அங்கீfhuத்தை இலங்கை அகதிகளுக்கு வழங்கவில்லை. இந்தியா இலங்கைத் தமிழருக்கு தீர்வு பெற்றுத்தரும் என நப்பாசையில் இருக்கும் தீவிர தமிழத் தேசியம் பேசும் கட்சிகளும் இவர்களுக்காக குரல் கொடுக்கவில்லை.

அப்படியிருக்க ‘எக்ஸ்’ தளத்தில் வெளியாகிய குறித்த காணொலியை பகிர்ந்து கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இலங்கை அரசு இந்திய அரசுடன் இணைந்து உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த இளைஞனை இலங்கைக்கு அழைத்து வந்து அவருக்கு உரிய அங்கீகாரத்தை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். போரின் விளைவுகளால் இனி எந்த ஒரு இளைஞர் வாழ்க்கையும் எதிர்காலKம் மறுக்கப்படக்கூடாது. தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாமல் கூட வேதம் ஓதும் போது இலங்கைத் தமிழ் மக்களின் மீட்பர்களாக காட்டிக்கொள்ளும் நடப்பு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் நித்திரையில் இருக்கிறார்கள்.

இதற்கிடையே கடற்தொழில் அமைச்சரை சந்தித்ததாக இந்திய உயர்ஸ்தானிகர் ஆலயம் தனது எக்ஸ் பதிவில் செய்தி வெளியிட்டுள்ளது. இச்சந்திப்பில் மீனவர் பிரச்சினையை மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும் எனப் பேசப்பட்டதாகவும் அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி அனுர டிசம்பர் 15இல் டெல்லி செல்ல உள்ளார். அப்போதும் இப்பிரச்சினை பேசப்பட்டு நிரந்தர தீர்வு எட்டப்பட வேண்டும் என கடற்தொழிலாளர் சங்கம் கோரிக்கைவிட்டுள்ளது.

தன்னுடைய நாட்டுப் பணிப் பெண்ணை அடிமையாக்கிய இலங்கைப் பெண் ராஜதந்திரிக்கு சர்வதேச தொழில் அமைப்பில் நியமனம்!

தன்னுடைய நாட்டுப் பணிப் பெண்ணை அடிமையாக்கிய இலங்கைப் பெண் ராஜதந்திரிக்கு சர்வதேச தொழில் அமைப்பில் நியமனம்!

அவுஸ்திரேலியாவில் இலங்கைக்கான பிரதி உயர்ஸ்தானிகராக இருந்த ஹிமாலி அருணதிலக்க, தன்னுடைய பதவியைப் பயன்படுத்தி தன்னுடைய வீட்டு வேலைக்கு அழைத்து வந்த பெண்ணை அடிமையாக வைத்து, வேலை வாங்கியமைக்காக, அவருக்கு 6,50,000 அவுஸ்திரேலிய டொலர்கள் செலுத்த, அவுஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரு குழந்தைகளின் தாயான பிரியங்காவை வேலைக்குக் கூட்டிவந்து அவரை ஒரு நாளைக்கு பதின்நான்கு மணிநேரம், வாரத்தில் ஏழு நாட்களும் வேலை வாங்கிவிட்டு, ஒரு மணி நேரத்துக்கு ஒரு டொலர் வரையே சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. பிரியங்கா, ஹிமாலியிடம் 2015 முதல் 2018 வரை பணியாற்றியுள்ளார். அதுமட்டுமல்லாது அவருடைய கடவுச்சீட்டையும் இந்த ராஜதந்திரி கைப்பற்றி வைத்திருந்தார். சிங்களம் தவிர வேறுமொழி தெரியாத பிரியங்கா வீட்டிற்குள்ளேயே பூட்டி வைக்கப்பட்டுள்ளார். யாருடனும் பழக அனுமதிக்கப்படவில்லை.

இவ்வளவு கொடுமைகளைப் புரிந்ததற்காக பிரியங்காவுக்கு வழங்க வேண்டிய சம்பளம் அதற்கான வட்டி எல்லாவற்றையும் மதிப்பீடு செய்து, ஹிமாலி அருணதிலக்க 5,50,000 அவுஸ்திரேலிய டொலர்கள் செலுத்த வேண்டும் என்று ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தற்போது அவரை அடிமையாக தடுத்து வைத்திருந்த குற்றத்திற்கு மேலும் 1,00,000 அவுஸ்திரேலிய டொலர்கள் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதே போன்றதொரு சம்பவம் பிரித்தானியாவில் அண்மையில் இடம்பெற்றது. ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளும் பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கு எதிராக வைக்கப்பட்டிருந்தது. பிரித்தானியாவிலும் இவர்கள் ஒருவரைத் தடுத்துவைத்திருந்து கொடுமைப்படுத்தியது தொடர்பில் பிரித்தானிய பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்து இருந்தனர். இலங்கையில் ஆட்சி மாற்றமும் நிகழ்ந்தது. இந்த ராஜதந்திரிகள் இலங்கைக்கு மீள அழைக்கப்பட்டனர்.

அவுஸ்திரேலிய நீதிமன்றம் ஹிமாலி அருணதிலக்கவுக்கு எதிராகத் தீர்ப்பளித்த போதும் முன்னைய இலங்கை அரசு அவரை ஜெனிவாவில் ஐக்கியநாடுகள் சபையின் நிரந்தர பிரிதிநிதியாக நியமித்துள்ளது. மேலும் சர்வதேச தொழிலாளர் அமைப்புக்கும் இவரது பெயர் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

தற்போது ஆட்சிக்கு வந்துள்ள ஊழலுக்கு எதிரான அரசாங்கம், நாட்டை சர்வதேச அரங்கில் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களின் நேர்மை, ஒழுக்கம் தொடர்பில் கூடிய கவனமெடுப்பதுடன் இவ்வாறானவர்களை அவர்களுடைய பொறுப்பிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்ற குரல்களும் ஓங்கி ஒலிக்கின்றது.

வேகமெடுக்கும் எலிக்காய்ச்சல் – வடக்கில் ஏழு பேர் பலி !

வடமாகாணத்தில் அடையாளம் காணப்படாத காய்ச்சலால் உயிரிழந்த 7 பேரிடம் எடுக்கப்பட்ட பல மாதிரிகளில் எலிக்காய்ச்சல் அல்லது லெப்டோஸ்பிரோசிஸ் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அதன் சமூக சுகாதார நிபுணர் டாக்டர் துஷானி பெரேரா இதனைத் தெரிவித்தார்.

உயிரிழந்த 7 பேரின் மாதிரிகள் தேசிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஆய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பல நோயாளிகளின் மாதிரிகள் எலிக்காய்ச்சல் என உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனைய ஆய்வுப் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட நாள் காய்சல், கண் சிவத்தல், உடல் சோர்வு, கடும் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறுதல், சிறுநீருடன் இரத்தம் கசித்தல் என்பன எலிக்காய்ச்சல் நோய்க்கான அறிகுறிகளாகும்.

எனவே இந்த நோய் அறிகுறிகள் காணப்படுபவர்கள் உடனடியாக வைத்தியரை நாடுவது அவசியமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“டிஜிட்டல் விவசாயம்” மற்றும் “டிஜிட்டல் பொது அடிப்படை வசதிகள்” தொடர்பில் Bill & Melinda Gates மன்றம் கவனம் !

Bill & Melinda Gates மன்றத்தின் இந்தியா மற்றும் தென்கிழக்காசியாவின் கொள்கை மற்றும் அரச தொடர்புகள், பிரதான பணிப்பாளர் ஹரி மேனன் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கிடையிலான சந்திப்பு பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.

சுகாதாரம் மற்றும் போஷாக்கு, விவசாயம், நகர்ப்புற சுகாதாரம் மற்றும் மகளிர் பொருளாதாரத்தை வலுவூட்டல் தொடர்பான மன்றத்தின் செயற்பாடுகள் பற்றி மேனன் இங்கு தெளிவுபடுத்தினார்.

அத்துடன் இலங்கையில் விசேடமாக “டிஜிட்டல் விவசாயம்” மற்றும் “டிஜிட்டல் பொது அடிப்படை வசதிகள்” ஆகியவற்றின் மேம்பாடு தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டது.

டிஜிட்டல் விவசாயத் திட்டங்களுக்கான நிதி வசதிகள் மற்றும் பொது அடிப்படை வசதிகளை விருத்தி செய்வதற்கான தொழில்நுட்ப ரீதியிலான ஒத்துழைப்பை வழங்குவது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

டிஜிட்டல்மயப்படுத்தல் மற்றும் போஷாக்கு குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்கான விடயங்கள் குறித்தான அரசாங்கத்தின் செயற்பாடுகள் பற்றி பிரதமர் இங்கு விளக்கமளித்தார்.

இக்கலந்துரையாடலில் Bill & Melinda Gates மன்றத்தின் உயர் அதிகாரிகள், பிரதமரின் செயலாளர் பிரதீப் ஹபுதன்த்ரி, மேலதிக செயலாளர் (அபிவிருத்தி) மஹிந்த குணரத்ன, மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க பிரிவுக்கான துணைப் பணிப்பாளர் தனுஜ மீகஹவத்த ஆகியோர் உள்ளிட்ட இலங்கை பிரதிநிதிகள் சமுகமளித்திருந்தனர்.

திருகோணமலையில் 15 வயது சிறுமி துஷ்பிரயோகம் – குற்றவாளிக்கு 30 ஆண்டு சிறை !

சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவருக்கு 30 வருட சிறைத்தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 இலட்சம் ரூபா நட்டயீடு வழங்குமாறும் திருகோணமலை மேல் நீதிமன்றம் நேற்று (11) தீர்ப்பு வழங்கியுள்ளது.

திருகோணமலை – சம்பூர் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 வயதான சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதான நபருக்கு எதிராக திருகோணமலை மேல் நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.

குறித்த வழக்கானது விசாரணைகள் முடிவுற்று நேற்று (11) தீர்ப்பு வழங்கப்பட்டபோதே மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லா குற்றவாளிக்கு எதிராக 30 வருட சிறைத்தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 இலட்சம் ரூபா நட்டயீடு வழங்குமாறு தீர்ப்பை வழங்கியிருந்தார்.

அத்துடன் குறித்த வழக்கில் பாதிக்கப்பட்டவரின் சார்பாக அரச சட்டத்தரணி நசிகேசன் முன்னிலையாகியிருந்தார். சம்பூர் பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபரினால் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ஆம் திகதியில் இருந்து மே மாதம் வரையான காலப்பகுதியில் குறித்த சிறுமி மூன்று முறை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்ததாகவும் விசாரணைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

அந்தவகையில் ஒருமுறைக்காக 10 வருடங்கள் சிறைத்தண்டனை என்ற அடிப்படையில் 30 வருடங்கள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நட்ட ஈடாக ஒரு குற்றத்திற்காக தலா ஒரு இலட்சம் வீதம் மூன்று இலட்சம் ரூபாய் நட்டயீடாக வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை !

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர நம்பிக்கை உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவின் கல்வித் தகுதியின் நம்பகத்தன்மையை தெளிவுபடுத்தத் தவறினால், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவது குறித்து ஆலோசித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சபாநாயகரின் கலாநிதி பட்டம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அல்லது சபாநாயகர் விளக்கம் அளிக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வாறு செய்யாவிட்டால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூடி கலந்துரையாடி சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவோம் என அவர் தெரிவித்தார்.

குரங்கின் கையில் தேங்காய்: தேங்காய் அரசியல் – தேசம்நெட் செய்தி தொகுப்பு 12.12.2024 !

இன்றைய செய்திகள்: 12.12.2024

உணவு உற்பத்தியில் தன்னிறைவை நோக்கி அடி எடுத்து வைக்கின்றது இலங்கை!

குரங்கின் கையில் தேங்காய்: தேங்காய் அரசியல்!

1) கொழும்பு துறைமுக அபிவிருத்தி திட்டம்: அமெரிக்க ஒப்பந்தத்தில் இருந்து அதானி குழுமம் விலகல்!

 

கொழும்பு துறைமுகக் கட்டுமானத்தை அதானி குழுமம் தொடருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த கால இலங்கையரசை வற்புறுத்திச் செய்து கொண்ட இந்த ஒப்பந்தத்தை புதிய தேசிய மக்கள் சக்தி அரசும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற அழுத்தத்தை இந்தியா வழங்கி வந்தது. ஆனால் அதானி குழுமம் இக்கட்டுமானத்தை மேற்கொள்ளத் தேவையான 553 மில்லியன் அமெரிக்க டொலர்களை அமெரிக்க வங்கியிலிருந்து கடன்பெற்றே அதனைச் செய்வதற்கு திட்டமிடப்பட்டு இருந்தது. தற்போது அமெரிக்க நீதிமன்றம் அதானி மோசடியான முறையில் நடந்துகொண்டதாகக் கூறி அதானிக்கும் அவருடைய குழுமத்தினருக்கும் பிடியாணை பிறப்பித்துள்ளதை அடுத்து, துறைமுகக் கட்டுமானத்திற்கான நிதியை வழங்க அமெரிக்க நிறுவனம் மறுத்துள்ளது. தற்போது அதானி குழுமம் தானாகவே கொழும்பு துறைமுகக் கட்டுமானத்திலிருந்து விலகிக்கொள்ள வாய்ப்புள்ளதாக பொருளியல் நிபுணர்கள் கருதுகின்றனர். இவர்கள் மன்னார் காற்றாலைத் திட்டத்திலிருந்தும் விலக வேண்டும் என இலங்கை மக்கள் குறிப்பாக மன்னார் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 

கொழும்பு துறைமுகத்தில், கொழும்பு மேற்கு சர்வதேச முனையம் (CWIT) எனப்படும் ஆழ்கடல் கொள்கலன் முனையத்தின் வளர்ச்சி, கட்டுமானம் மற்றும் இயக்கத்துக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதானி போர்ட்ஸ், இலங்கை கூட்டு நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபை (CWIT) ஆகியவற்றின் கூட்டமைப்பினால் CWIT உருவாக்கப்பட்டு ள்ளது.

 

அதானி குழுமத்தின் நிறுவனர் கவுதம் அதானி மற்றும் ஏழு பேர் மீதுஇ இந்திய அதிகாரிகளுக்கு 265 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலஞ்சமாக கொடுக்க சதி செய்ததாக அமெரிக்க சட்டமா அதிபர் திணைக்களம்இ இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்த பின்னணியில் இந்த ஒப்பந்தத்தில் இருந்து அந்த நிறுவனம் விலகியுள்ளது. அமெரிக்க நீதித்துறையின் குற்றச்சாட்டுக்களை ஆதாரமற்றவை என அதானி குழுமம் மறுத்துள்ளது. மேலும் சட்டப்படி இவ்விவகாரம் கையாளப்படும் என தெரிவித்துள்ளது.

 

இருப்பினும், மேற்கு முனையத்தின் அபிவிருத்திட்டத்திற்கு, அதானி குழுமம் அதன் உள் மூலதன கையிருப்பைப் பயன்படுத்தவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்காக நிறுவப்பட்ட நிறுவனத்தின் 51 சத வீத பங்கை வைத்திருக்கும் அதானி குழுமம் US IDFC இன் நிதியுதவியின்றி திட்டத்தை தொடர முடிவு செய்துள்ளதாக அதானி குழும வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

 

2. குரங்கின் கையில் தேங்காய்: தேங்காய் அரசியல்!

 

சடுதியாக தேங்காயின் விலை அதிகரித்துள்ள சூழலில் இதற்கான முழுமையான பொறுப்பும் அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் திட்டமிடப்படாத பொருளாதார கொள்கைகளின் விளைவே என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

 

அண்மைக்காலமாக இலங்கையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு நிலவி வருவதுடன் விலையும் உயர்வடைந்துள்ளமை குறித்து முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர கருத்து வெளியிட்டுள்ளார். வருடாந்தம் 20 மில்லியன் தேங்காய்களை குரங்குகள் அழித்தமையே தேங்காய் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

 

கடந்த அரசாங்கத்தின் போது, இந்த நிலைமையை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டமாக, இலங்கையில் அதீதமாக இனவிருத்தியடைந்துள்ள குரங்குகளின் ஒரு தொகுதியை சீன மிருகக்காட்சிசாலைகளுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டது. ஆனால், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நீதிமன்றத்திற்குச் சென்று தடுத்து நிறுத்தி, மரத்தில் புடவை கட்டுதல், தாள்களை தொங்கவிடுதல், நிலத்தின் ஒரு பகுதியை மீண்டும் புல்வெளிக்கு விடுதல் போன்ற நடைமுறைக்கு மாறான தீர்வுகளை வழங்கியதாக குறிப்பிட்டார்.

 

இந்த நிலையில் குரங்குகளை சீனாவுக்கு திருப்பி அனுப்ப இன்னும் வாய்ப்பு இருப்பதால், அந்த பிரேரணையை நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்ததின் பின்னர் அதிகரித்துள்ள குரங்குகளின் இனவிருத்தியினால் வடக்கு மக்களை குறிப்பாக வன்னி மாவட்ட மற்றும் தென்மராட்சி மக்களும் மிக அதிகமான சிரமங்களை எதிர்கொள்ளவதாக முறையிடுகின்றனர். கூட்டம் கூட்டமாக படையெடுத்து வரும் குரங்குகள் தேங்காய்களை மட்டுமல்ல, முருங்கைக்காய்கள், மாங்காய்கள், வாழைக்குழைகள் மற்றும் இதர உப பயிர்களையும் சேதப்படுத்தி அழிப்பதாகவும் மக்கள் முறையிடுகின்றனர். இன்று நாடு எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியில் இயற்கையும் மிருங்களும் கூட மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதிக்கின்றன.

 

இப்பிரச்சினைகளை மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து சூழலியல் ஆர்வலர்களும் இணக்கமான ஒரு தீர்வுக்கு வர வேண்டும்.

 

3. அபிவிருத்தியும் இல்லை வேலையும் இல்லை: புலம்பெயரும் இளையதலைமுறை !

 

உள்ளூராட்சி சபைகளை பலப்படுத்துவதன் மூலம் நாட்டை விட்டு வெளியேறும் இளைஞர்களை தடுக்கலாம் என்கின்றார் வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன். அதற்கு வடக்கு மாகாணத்தை அபிவிருத்தியடைய செய்யும் முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் எமது உள்ளூராட்சி மன்றங்களும் மாற்றமடையவேண்டும் எனவும் தெரிவிக்கின்றார்.

 

பருத்தித்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில் டிசம்பர் 11 இல் இடம்பெற்ற பண்பாட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “எமது மாகாணத்தின் இளையோர் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கான வேலை வாய்ப்புக்களை நாம் எமது மாகாணத்தில் உருவாக்கிக் கொடுக்கவேண்டும். அதற்கு முதலீடுகளை இங்கு ஊக்குவிக்க வேண்டும். நான் யாழ். மாவட்டச் செயலராகப் பணியாற்றிய காலத்தில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு சிலர் வந்தார்கள். ஆனால் அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டார்கள். அவர்களிடம் கேட்டபோது, முதலீடுகளை மேற்கொள்வதற்கு அதிகாரிகள் கையூட்டு எதிர்பார்க்கின்றார்கள் என்று சொன்னார்கள். அது அன்றைய நிலைமை. ஆனால் தற்போதைய அரசாங்கம் அவற்றுக்கு முற்றிலும் எதிரானது. பல முதலீட்டாளர்கள் இங்கு வருவதற்கு விரும்புகின்றார்கள். அவர்களை நாங்கள் வரவேற்க வேண்டும். எமது உள்ளூராட்சி மன்றங்கள் முதலீட்டாளர்களுக்கு உதவும் வகையில் செயற்படவேண்டும். அவர்களை அலைக்கழிக்கக்கூடாது. எமது மாகாணத்தை நாம் அபிவிருத்தியடைந்த மாகாணமாக மாற்றும் இலக்கை நோக்கிப் பயணிக்க அனைவரும் ஒத்துழைத்து செயற்பட வேண்டும்” எனவும் அறைகூவல் விடுக்கின்றார்.

 

தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது மாகாண சபை முறைமைக்கு அப்பால் ஒவ்வோர் பிரதேசங்களும் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற தொனிப்பொருளில் இயங்குவதை அவதானிக்க முடிகிறது. ஏற்கனவே இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட மாகாண சபை முறைகள் அரசியல் கட்சிகளின் கெடுபிடிகளாலும், ஊழல்களாலும் நிறைந்துள்ளதாக பலத்த குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக வடக்கு மாகாண சபை ஊழலால் கவிழ்க்கப்பட்டதும் கடந்த கால வரலாறு. இந்த நிலையில் தேசிய மக்கள் சக்தியின் அபிவிருத்திக்கான கட்டமைப்பானது நாட்டின் அடிமட்டத்தில் இருந்து கட்டியெழுப்ப வேண்டும் என்ற நிலைப்பாட்டை கடந்த காலங்களிலும் வெளிப்படுத்தியிருந்தது. இந்த அடிப்படையிலேயே அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இதே போன்றதான ஓர் கருத்தையே ஆளுநர் வேதநாயகன் வெளிப்படுத்தியுள்ளமை கவனிக்கத்தக்கது.

 

 

4. சர்வதேச அளவில் சாதிக்கும் இலங்கைத்தமிழ் வீரன் புசாந்தன் !

 

சினிமா தொடங்கி விளையாட்டு வரை தென்னிந்திய ஊடகங்களும், இந்திய ஊடகங்களுமே கதி என இருக்கும் இலங்கை தமிழர்களுக்கு வடக்கு மாகாண ஆளுநரின் பெயர் தெரியுமோ இல்லையோ ஆனால் தென்னிந்திய அரசியலின் அத்தனை அசைவுகளையும் தெரிந்து வைத்திருப்பர். அது போலவே தான் எப்படி இந்தியாவில் கிரிக்கெட் என்கிற விளையாட்டு வணிகமயப்படுத்தப்பட்டு ஏனைய விளையாட்டுக்களும், திறமையானவர்களும் ஊடகங்களின் பார்வையில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டார்களோ அதே நிலை தான் இலங்கை தமிழர் மத்தியிலும் நீடிக்கிறது. கிரிக்கெட் விளையாட்டில் தமிழர்களுக்கு வாய்ப்பு இல்லை – இது ஓர் இனவாத நாடு என ஒரு தரப்பினர் கூறிக்கொண்டே இருந்தாலும் மறுபுறமாக திறமை உள்ள தமிழ் இளைஞர்கள் தேசிய சர்வதேச மட்டத்தில் சாதித்துக்கொண்டே இருக்கிறார்கள். இதற்கான சமீபத்திய எடுத்துக்காட்டு பளுதூக்கும் வீரர் சற்குணராசா புசாந்தன்.

 

அண்மையில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான (Power Lifting) பளு தூக்கல் போட்டிகளில், யாழ். சாவகச்சேரியைச் சேர்ந்த சற்குணராசா புசாந்தன் 3 பதக்கங்களைப் பெற்றிருந்தார். இது இலங்கை விளையாட்டுத்துறையின் பாரிய மைல்கல்லாக அமைந்ததுடன் தமிழ் வீரர்களுக்கான புதிய வாய்ப்புகளையும் இது திறந்து விட்டிருந்து.

 

இந்த நிலையில் தற்போது உஸ்பெஸ்கிஸ்தானில் நடைபெற்றுவரும் சர்வதேச ஆசிய பளுதூக்கல் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட புசாந்தன் 3ம் இடத்தினைப்பெற்று சாதனை படைத்துள்ளார். இவருடைய வெற்றியை பலரும் தற்போது கொண்டாடி வருகின்றனர்.

 

 

5. பணம் செலுத்தி இந்திய மீனவர்கள் வடகடலில் மீன்பிடிக்கலாம் முன்னாள் கடற்தொழில் அமைச்சரின் திட்டத்தை இந்நாள் அமைச்சர் நிறுத்தினார்!

 

அத்துமீறி இலங்கையில் மீன் பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வாக முன்னாள் கடல்த்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தாவால் கொண்டுவரப்பட்ட திட்டம் கைவிடப்பட்டதாக புதிய கடல்த்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வடமாகாண மீனவர் சங்க பிரதிநிதிகளிடம் உறுதியளித்தார்.

 

டக்ளஸ் தேவாநந்தா முன்னதாக அரசாங்கத்துடனும் கடல்த்தொழில் திணைக்களத்துடனும் கலந்திரையாடி வடகடலில் கட்டணம் செலுத்தி இந்திய மீனவர்கள் மீன் பிடிக்கலாம் என்ற திட்டத்தை முன்மொழிந்திருந்தார். இத் திட்டமானது இலங்கை மற்றும் இந்திய கடல்த்தொழில் பிரச்சணைகளுக்கு நிரந்தர தீர்வாகாது என்றும் கூறும் அமைச்சர் சந்திரசேகர் இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களிடையேயான நேரடியான கலந்துரையாடல் மூலம் இப் பிரச்சினைக்கு சுமூகமான தீர்வை காணலாம் என்கிறார்.

 

இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தர தீர்வு காணும் வரை கைதுகள் தொடரும். எல்லை தாண்டி அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்படுவார்கள் என வடக்கிலுள்ள கடற்தொழிலாளர் சங்கங்களுடன் கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

 

6. உணவு உற்பத்தியில் தன்னிறைவை நோக்கி அடி எடுத்து வைக்கின்றது இலங்கை!

 

இலங்கை உணவு உற்பத்தியில் தன்நிறைவை நோக்கி தனது முதலாவது அடியை எடுத்து வைத்துள்ளது. அரிசி இறக்குமதிக்கான வரியை 66 வீதம் வரை உயர்த்தி உள்ளது இலங்கை அரசு. இலங்கையின் உணவுப் பாதுகாப்பையும் போசாக்கு உணவையும் உறுதிப்படுத்தும் அமைப்பு ஒன்றையும் அரசாங்கம் உருவாக்கியுள்ளது. இறக்குமதிக்கான வரியை அதிகரித்து அதனை கமக்காரர்களுக்கு வழங்குவதனூடாக உள்ளுர் உற்பத்தியை மீள ஊக்குவிப்பதற்காகவே இந்த முயற்சி எடுக்கப்படுவதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். ஒரு தொன் அரசியை இறக்குமதி செய்ய 65,000 ரூபாய் வரி விதிக்கப்படுகின்றது. உள்ளுர் உற்பத்திகளுக்கு நியாயமான விலை கிடைப்பதற்காக இறக்குமதிகளுக்கு வரியை அதிகரிக்கும் காத்திரமான நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. கடந்த அரசுகளைப் போலல்லாமல் உள்ளுர் பொருளாதாரத்தை பாதுகாக்கின்ற கொள்கையின் அடிப்படையிலேயே அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

 

இன்னும் சில வாரங்களில் ஜனவரி யில் பதவியேற்க உள்ள டொனால் ட்ரம் பதவியேற்றவுடன் இறக்குமதிக்கான வரிகளை ரொக்கட் வேகத்தில் ஏற்றப்போவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டார். டொனால் ட்ரம்மின் இந்த மிரட்டல் வெறும் வாய்ச்சவடால் அல்ல. அவருடைய கடந்த ஆட்சிக் காலத்திலும் இதே போன்ற நடவடிக்கையில் அவர் குதித்து சீனாவோடு ஒரு வர்த்தகப் போரையே நடத்தினார். இம்முறை இவருடைய வர்த்தகப் போர் அமெரிக்காவின் நெருங்கிய நட்புநாடான பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனும் இருக்கும் என்பதையும் அமெரிக்க ஜனாதிபதியாக உள்ள டொனால் ட்ரம் தெரிவித்துள்ளார். தற்போது முதலாளித்து நாடுகளே சந்தைப் பொருளாதாரத்தை ஓரம்கட்டிவிட்டு தங்கள் தங்கள் நாட்டுப் பொருளாதாரத்தை பாதுகாப்பதில் குறியாக உள்ளன.

 

ஆனால் உலகப் பொருளாதாரச் சண்டியர்களான அமெரிக்காஇ சீனாஇ இந்தியாவுக்கு மத்தியில் குட்டி இலங்கையும் தன்னுடைய பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்ப இறக்குமதி வரியை அதிகரித்து இருப்பதை உள்ளுர் உற்பத்தியாளர்கள் வரவேற்றுள்ளனர்.

 

இலங்கையில் அரிசியின் விலையை நிர்ணயிப்பவர்களாக விரல்விட்டு எண்ணக் கூடிய இறக்குமதியாளர்கள் சிலர் உள்ளனர். இவர்கள் லட்சக்கணக்கான கமக்காரர்களின் அடிமடியிலிருந்து புடுங்கி லாபமீட்டுகின்றனர். தற்போது அரசுக்கும் அரிசி மாபியாக்களுக்குமிடையே ஒரு யுத்தம் போய்க்கொண்டுள்ளது. சிறிதுகாலத்துக்கு விலை விடயத்தில் நெருக்கடியைக் கொடுத்து அரசுக்கும் மக்களுக்கும் உள்ள தேன்நிலவுக்கு ஆப்புவைப்பதில் இந்த அரிசிஇ தேங்காய் மாபியாக்கள் தீவிரமாக உள்ளனர்.

 

 

7. நிதிமுகாமைத்துவ சந்தை நிபுணர்களை உருவாக்கு யாழ் பல்கலையோடு ஒப்பந்தம்!

இலங்கையின் எஸ்ஈசி – Securities and Exchange Commission யாழ் பல்கைலக்கழகத்துடனான தன்னுடைய ஒப்பந்தத்தை மீளுறுதி செய்துள்ளது. இதன்படி இலங்கையின் அடுத்த தலைமுறையினருக்கான நிதிச் சந்தை நிபுணத்துவத்தை உருவாக்குவதற்கு வழங்குவதற்கு இது உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2009 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த இணைந்து செயற்படும் முறையால் கல்வியல் ரிதியிலும் நிபுணத்துவ ரிதியிலும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. நிதி முகாமைத்தவத்தில் புதிய சிந்தனைகளைக் கொண்டுவருவதற்கும் புதிய கண்டுபிடிப்புகளுக்கும் இது வழிகோலும் என எதிர்பார்க்கப்டுகின்றது. இவ்வாறான ஒப்பந்தங்கள் ஏனைய பல்கலைக்கழகங்களோடு செய்யப்படுவதால் சிந்தனைப் பரிமாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் இது இட்டுச்செல்லுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

 

அண்மையில் சீனத் தூதுவர் செய்ய வந்த உதவியைத் தட்டிக்கழித்த யாழ் பல்பலைக்கழகம்இ அதற்குப் பின் இந்தியா வழங்கிய உதவியை கூடிப் பெற்று அதன் படங்களையும் வெளியிட்டுக் கொண்டாடினர். தற்போது பல்கலைக்கழகம் உள்ள கீழ் நிலையிலிருந்துஇ அது பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சமூகத்திற்குப் பயனுள்ளதாக மாற்றுவதற்கான எவ்வித முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லையெனஇ தன்னுடைய உயர்கல்விக்காக வெயிநாடு சென்றுள்ள விரிவுரையாளர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். கலைப்பீடத்தில் உள்ள பேராசிரியர்கள்இ விரிவுரையாளர்களில் பெரும்பான்மையானவர்கள் அதற்கான தகுதியைக் கொண்டிருக்கவில்லை எனத் தெரிவித்த அவர்இ அண்ணாமலை பல்கலைக்கழக கலாநிதிப் பட்டம் என்றால் அது சபாநயகர் ரத்வலவின் கல்லா நிதிப்பட்டம் போன்றது தான் என்றார்.

 

8. சந்தை நிலைமைகளும் தேசிய மக்கள் சக்தியுடன் தேன்நிலவில் உள்ளது!

 

ஜனாதிபதி அனுராவின் அமோக வெற்றியைத் தொடர்ந்தும்இ தேசிய மக்கள் சக்தியின் மிகப்பெரும்பான்மைப் பலத்தைத் தொடர்ந்தும் 12வது வாரமாக சர்வதேச முதலீட்டாளர்கள் இலங்கையின் அரச பங்குகளில் முதலிட்டு வருகின்றனர். கடந்த வாரம் மட்டும் 33 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலிடப்பட்டுள்ளது. கடந்த 12 வாரங்களில் நூறு மில்லயன் அமெரிக்க டொலர்கள் முதலிடப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் பண வீக்கத்தை குறைக்கும் கொள்கைகள் சாதகமான பொருளாதார நிலைமைகளை ஏற்படுத்துதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். மேலும் வட்டி வீதத்தை குறைத்ததும் அதனை மேலும் குறைப்பதற்கான நடவடிக்கைகளும் ரூபாயின் பெறுமதியை அதிகரிக்கச் செய்துள்ளது.

டிஜிற்றலைசேசன் மூலம் என்ன தேவை என்பதையும் எங்கே பதுக்கப்படுகின்றது என்பதையும் அறியமுடியும்! நாட்டையும் மீளக் கட்டியெழுப்புவோம் – அருள்கோகிலன் 

டிஜிற்றலைசேசன் மூலம் என்ன தேவை என்பதையும் எங்கே பதுக்கப்படுகின்றது என்பதையும் அறியமுடியும்! நாட்டையும் மீளக் கட்டியெழுப்புவோம் – அருள்கோகிலன்

அண்மையில் இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இலங்கையின் டிஜிட்டல் அமைச்சராக பொறுப்பேற்றதன் முக்கியத்துவம் என்ன..? டிஜிட்டல் பொருளாதாரம் என்பது இலங்கைக்கு ஏன் முக்கியமானது..? அதன் அடிப்படையில் உள்ள வாய்ப்புக்கள் அபிவிருத்தி திட்டங்கள் என்ன..? அனைத்து துறைகளையும் Digitalisationஆக்குவதன் நோக்கம் என்ன என ஆக்கப்பூர்வமான பல விடயங்களை தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் வடமாகாண இணைப்பாளர் மருத்துவ கலாநிதி அருள் கோகிலன் தேசம் திரையின் இந்த நேர்காணலில் பகிர்கிறார்.

பாராளுமன்ற உறுப்புரிமையை துஸ்பிரயோகம் செய்யும் ஊசி அர்ச்சுனா! யாழ் போதனா வைத்தியசாலையில் சாதியத் திமிர்!

கனடா மோகத்தால் தொடரும் கொள்ளைகள்!

பாராளுமன்ற உறுப்புரிமையை துஸ்பிரயோகம் செய்யும் ஊசி அர்ச்சுனா! யாழ் போதனா வைத்தியசாலையில் சாதியத் திமிர்!

 

1. கனடா மோகத்தால் தொடரும் கொள்ளைகள்!

கனடாவிற்கு அனுப்புவதாக 1 கோடி 10 இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த சம்பவத்தில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா, மன்னார், மாங்குளம், கிளிநொச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் வசித்து வந்தவர்களிடம் கனடாவில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்கு வேலைக்கு அனுப்புவதாகவும், முதல் கட்டமாக ஒரு தொகைப் பணத்தை தருமாறும், மிகுதிப் பணத்தை கனடா சென்று வேலை செய்து கொடுக்கலாம் எனவும் கூறி பலரிடம் பணம் பெற்றுள்ளார்.

 

ஒவ்வொருவரிடமும் 5 இலட்சம் தொடக்கம் 10 இலட்சம் ரூபாய் வரை 16 பேரிடம் பணம் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட 16 பேர் வவுனியா பொலிசில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரை நீதிமன்றில் முற்படுத்தியதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

கனடா செல்வதற்காக பல லட்சம் பணத்தை பணமாற்று முகவரிடம் பெற்றுத் திரும்பிய இளைஞர் வவுனியாவில் படுகொலை செய்யப்பட்டசம்பவம் இவ்வாண்டு ஓகஸ்டில் இடம்பெற்றது தெரிந்ததே.

 

2. பாராளுமன்ற உறுப்புரிமையை துஸ்பிரயோகம் செய்யும் ஊசி அர்ச்சுனா! யாழ் போதனா வைத்தியசாலையில் சாதியத் திமிர்!

 

மலையகம் 200 ஆண்டு கடந்த பின்னும் சாதியத் திமிரோடு திறந்திருந்த வைத்தியசாலைக்குள் நுழைந்து ‘சேர்’ என்று அழைக்கும்படி பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூரத்தியிடம் குலைத்தார் ஊசி அர்ச்சுனா, ஊசி அர்ச்சுனாவின் உயர்வுச் சிக்கல் மிகக் கீழ்த்தரமாகிக் கொண்டு செல்கின்றது. என்னை ‘சேர்’ என்று கூப்பிட வேணும், ‘நீர் எனக்குக் கீழ்’, ‘நான் கேட்கிறதுக்கு பதில் சொல்ல வேணும்’ என்றெல்லாம் ஊசி அர்ச்சுனா குலைத்ததும் இவ்வாறே குலைத்து வருவதும் அவரது சாதிய, பிரதேச வாதத் திமிரையும் மிடுக்கையும் காட்டுவதாகவே இருந்தது.

 

யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளரதன்னை ‘சேர்’ என அழைக்குமாறு கூறி தர்க்கம் செய்துள்ளார் ஊசி அர்ச்சுனா என வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி குற்றம்சாட்டியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீண்டும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு குழப்பம் விளைவிக்க வருவாரெனின், வாசலிலேயே வைத்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் அவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுவார் என்று யாழ். போதானா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி ஊசி அர்ச்சுனாவை எச்சரித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

 

தொடர்ந்தும் தெரிவிக்கையில், ‘சேர் ‘ என்று அழைக்க முடியாது என்று பதிலளித்ததற்கு, என்னை யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் பதவியில் இருந்து அகற்றுவேன் எனவும், பாராளுமன்றத்திற்கு அழைத்து கேள்வி கேட்பேன் என்றும் அர்ச்சுனா மிரட்டியதாக கூறினார் சத்தியமூர்த்தி.

 

டொக்டர் பிரணவனுக்கும் அர்ச்சுனாவுக்கும் நடந்த உரையாடலில் பிரணவன் தன்னை சேர் என்று அழைக்குமாறு ஊசி அர்ச்சுனாவுடன் முரண்டுபிடித்த ஒலிப்பதிவை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள். ஊசி அர்ச்சனா தற்போது தன்னை ‘சேர்’ என்று அழைக்கும்படி தன்னுடைய சாதியத் திமிரை வெளிப்படுத்தியுள்ளார். பாராளுமன்ற உறுப்புரிமையைப் பயன்படுத்தி மேற்கு நாடுகளில் உத்தியோகத்தர்களை இவ்வாறு மிரட்டியிருந்தால் அப்பாராளுமன்ற உறுப்பினர் உறுப்புரிமையை ராஜினாமாச் செய்யும் அளவுக்கு அழுத்தங்கள் அதிகரித்திருக்கும். இந்த சாதியத் திமிருக்கு தனக்கு பாதுகாப்புக்கு துப்பாக்கி தரப்படவில்லை என்று வேறு இவர் புலம்புகின்றார். இவருக்கு அப்படித் துப்பாக்கி வழங்கப்டுவதாக இருந்தால் இவருடைய மனநிலையை பரிசோதித்து உறுதிப்படுத்திய பின்னரே அதனை வழங்க வேண்டும் என்கிறனர் இவருடைய சகாக்கள்.

 

3. ‘’தொடுக்கப்பட்ட ஊழல் வழக்குகள் மீளப்பெறப்பட்டது ஏன்?’’ ஜனாதிபதி அனுர

 

69 தாக்கல் செய்யப்பட்ட ஊழல் வழக்குகளில் 40 வழக்குகள் மீளப்பெறப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஜனாதிபதி அனுரா. பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் டிசம்பர் 9ஆம் திகதி நடைபெற்ற 2024 சர்வதேச ஊழல் எதிர்ப்பு தின தேசிய நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இக்கேள்வியை எழுப்பினார். 2013 சர்வதேச சுட்டெண்ணில் 79 ஆவது இடத்தில் இருந்த இலங்கை 2023 ஆம் ஆண்டளவில் 115 வது இடத்தைப் பிடித்துள்ளது. எனவே சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் ஏன் கொண்டாடப்படுகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 

ஊழல் வழக்குகள் மீளப் பெறப்பட்டமைக்கான காரணம் மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும். விசாரணை அதிகாரிகள் வழக்குகளில் சாட்சிகளாகாதது ஏன் என்பதற்கான காரணங்களை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 

ஒரு வருடமொன்றில் இரண்டு கான்ஸ்டபிள்கள், ஒரு கிராம உத்தியோகஸ்தர் மற்றும் ஒரு எழுதுவினைஞர் ஆகியோர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தண்டிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் சட்டம் சிலந்தி வலையைப் போன்று செயற்படுவதாக மக்கள் கருதுகின்றனர். அந்த வலையில் சிறிய விலங்குகள் சிக்குகின்றன. பெரிய விலங்குகள் சிலந்தி வலையை சேதமாக்கி தப்பிச் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

4. அமெரிக்கா: அதானி வரிசையில் இரண்டு முன்னாள் இலங்கை அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு

ரஸ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க மற்றும் ஶ்ரீ லங்கன் எயர்லைன்சின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன இருவரும் கடுமையான ஊழல்களில் ஈடுபட்டதாக அமெரிக்கா குற்றச்சாட்டியுள்ளது. அத்துடன் ஒரு படி மேலே போய் இவ்விரு அதிகாரிகளுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் அமெரிக்காவுக்கான பயணத்தடையை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் விதித்துள்ளது.

 

உதய வீரதுங்க இலங்கைக்கு மிக் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்ட போது ஊழல் நடவடிக்கையை திட்டமிட்டு முன்னெடுத்ததாகவும், கபில சந்திரசேன ஶ்ரீ லங்கன் எயர்லைன்சின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக பணியாற்றிய போது இலங்கை எயர்பஸ்ஸை அதிக விலைகொடுத்து வாங்குவதற்காக இலஞ்சம் வாங்கியதாகவும் அமெரிக்கா குற்றஞ் சாட்டுகிறது.

 

சமீபத்தில் அதானி குழுமத்தின் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்திய அமெரிக்கா அதானி மற்றும் அவரது மருமகனையும் நேரடியாக அமெரிக்காவிற்கு வந்து விளக்கம் அளிக்கும்படி அழைப்பாணையும் அனுப்பியுள்ளது. அமெரிக்க இராஜங்க திணைக்களம் மேலும் கூறியுள்ளதாவது. ஊழலிற்கெதிரான சர்வதேச தினம் மற்றும் சர்வதேச மனித உரிமைதினத்தை முன்னிட்டு உலகில் ஊழல், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை பொறுப்புக்கூறலிற்கு உட்படும் வகையில் அமெரிக்கா காத்திரமான நடவடிக்கையை எடுப்பதாக குறிப்பிட்டது.

 

ஹாசாவில் 65,000 பேருக்கு மேல் அப்பாவி மக்கள் இஸ்ரேலினால் இனப்படுகொலை செய்யப்பட்ட பின்னரும் கூட இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்து வருகிறது. இஸ்ரேல் லெபனான் மீது மேற்கொண்டு வரும் தாக்குதலையும் கண்டிக்கவில்லை. இஸ்ரேலின் நடப்பு அதிபர் நெத்தன்யாகு உள்நாட்டில் பாரிய ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்பவர். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் இனப்படுகொலை குற்றத்திற்காக சர்வதேச பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட நபர். இதுவரை அமெரிக்கா தன்னுடைய நெருங்கிய நண்பனுக்கெதிராக ஊழல் குற்றத்திற்காக பயணத்தடையும் விதிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. நெத்தன்யாகு தலைமையிலான இஸ்ரேல் அரசை பாதுகாத்தும் வருகிறது.

 

 

5. கனடாவில் தமிழ் துப்பாக்கித் தம்பதிகள் கைது!

 

இளம் தமிழ்த் தம்பதியொன்று இரண்டு துப்பாக்கிகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் ரொறன்டோ ஸ்காபுரோவில் கைது செய்யப்பட்டுள்ளனர். ரொறன்ரோவை சேர்ந்த 37 வயதான தனராஜ் தங்கராஜா மற்றும் 37 வயதான கிஷானி பாலச்சந்திரன் ஆகிய இருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர். கணவன் மீது 8 குற்றச்சாட்டுகளும் மனைவி மீது 3 குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்பட்டுள்ளன. டிசம்பர் 3 திகதி மார்க்கம் வீதி மற்றும் ஷெப்பர்ட் அவென்யூ பகுதியில் பொலிஸார் சுற்றிவளைப்பில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்றை சோதனை செய்த போது இந்த தம்பதிகள் சிக்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

கொழும்பிலிருந்து யாழுக்கு சொகுசு காரில் வந்து கொள்ளையிட்டுச் செல்லும் தம்பதிகளைப் பொலிஸார் தேடிவருகின்றமையை தேசம்நெற் நேற்றைய செய்தியில் வெளியிட்டு இருந்தது. கணவன் மாட்டிக்கொண்டார். மனைவி தப்பித்துக்கொண்டார்.

 

இதேபோன்று இரண்டு வருடங்களுக்கு முன்னரும் துப்பாக்கிககள் வைத்திருப்போர் தொடர்பான விசாரணைகளின் போது பிரம்டனில் இரண்டு சகோதரர்கள் கனேடிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 29 வயதான ஜோன்சன் ஜெயகாந்தன் மற்றும் 30 வயதான ஜெய்சன் ஜெயகாந்தன் ஆகிய இருவரும் சட்டவிரோதமாக பெறப்பட்ட துப்பாக்கிகளை வைத்திருந்தமைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது மேலும் பல குற்றச்சாட்டுகள் உள்ளன.

 

புலம்பெயர் நாடுகளில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட இளையோர் இடையே பெருகிக் கொண்டுவரும் வன்முறைக் குற்றங்கள் தொடர்பில் புலர்பெயர் தமிழ் அமைப்புக்கள் காத்திரமான கருத்தாடல்களை ஆரம்பிக்க வேண்டும். ஈழத்தமிழர்கள் மேற்கு நாடுகளை நோக்கி புலம்பெயரத்தொடங்கிய காலந்தொட்டு புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களிடையே வன்முறை குழுக்கள் செயற்பட்டிருக்கின்றன. பெரும்பாலும் அக் குழுக்கள் நாட்டில் செயற்பட்டுக் கொண்டிருந்த ஆயுத அமைப்புக்களின் நீட்சியாகவே இருந்தன.

 

ஆனால் தற்போது புலம் பெயர் தமிழ்மக்களிடையே புலம்பெயர் நாடுகளிடையே காணப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறைக் குழுக்கள் பெரும்பாலும் இரண்டாம் தலைமுறையை உள்ளடக்கியதாக உள்ளன. இவ்வாறான குழுக்கள் கனடா மற்றும் பிரான்ஸில் அதீத செல்வாக்குடையனவாக காணப்படுகின்றன. அது மட்டுமல்ல நாட்டில் போராட்டத்தின் முடிவின் பின் வெடித்த வாள் வெட்டுக்குழுக்கள் குறிப்பாக ஆவா குழு போன்ற வன்முறைக் குழுக்கள் புலம் வரை தமது ஆதிக்கத்தை செலுத்துகின்றன. அந்தவகையில் கடந்த வாரம் லார்க்கூனேயில் 1995இல் பிறந்த

ஒரு தமிழ் இளைஞன் சிவராஜா தனுசன் கலிபர் வகை துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

6. தராக்கி சிவராமின கொலையாளிகள் சட்டத்தின்முன் நிறுத்தப்படுவார்கள்! கொலை செய்யப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கிடைக்கும் – அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ

 

படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியாளர் மாநாட்டில், இலங்கையில் யுத்த காலத்தில் படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா என ஊடகவியலாளர் ஒருவரினால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தராக்கி சிவராமின் கொலை தொடர்பில் புளொட் சம்பந்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் முன்னாள் பா உ தர்மலிங்கம் சித்தார்த்தன் விசாரணைக்குட்படுத்தாலாம் எனவும் தெரியவருகின்றது.

 

அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தொடர்ந்தும் குறிப்பிடுகையில், “தமிழ் ஊடகவியலாளர்கள் மாத்திரம் அல்ல. சிங்கள மற்றும் முஸ்லிம் ஊடகவியலாளர்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். நாட்டில் உள்ள அனைத்து ஊடகவியலாளர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் முன்னிக்கிறது. ஊடகவியலாளர் லசந்த விக்கிரமசிங்க படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. படுகொலை செய்யப்பட்ட அல்லது காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பல உயர் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டனர் அல்லது நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார். தற்போது இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

 

7. கலாநிதிகளும் கல்லாநிதிகளும் இலங்கைப் பாராளுமன்றத்திலும் சர்ச்சை

 

பத்தாவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தெரிவு செய்யப்பட்ட அசோக சபுமல் ரன்வலயின் கலாநிதிப் பட்டம் தொடர்பில் சர்ச்சை வலுப்பட ஆரம்பித்துள்ளது. தேர்தல்கள் திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவும் அசோக சபுமல் ரன்வல தனது கல்வித் தகமையை நிரூபிக்க வேண்டும் என சவால் விடுத்துள்ளார். அவ்வாறு நிரூபிக்கத் தவறினால் அவர் பதவி விலகவேண்டும் அல்லது என்.பி.பி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

 

இவ்வாறான கல்லாநிதிகளின் கலாநிதிப்பட்டம் மேற்கு நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் மத்தியிலும் அதிகரித்துள்ளது. இந்தியா, அமெரிக்காவில் உள்ள சில பல்கலைக்கழகங்கள் கௌரவப்பட்டங்கள் வழங்குகிறோம் என்ற பெயரில் ஒரு நூறுபவுண்களுக்கே பட்டத்தை வழங்குகின்றன. லண்டனில் நடைபெற்ற இவ்வாறான பட்டமளிப்பை லண்டன் வெஸ்மினிஸ்ரர் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்திருந்தனர். இதனை தேசம்நெற் அம்பலப்படுத்தி அந்நிகழ்வு இடைநிறுத்தப்பட்டது. ஆனாலும் அதன் பின்னர் அப்பட்டமளிப்பு நிகழ்வு இரகசியமாக மேற்கொள்ளப்பட்டது. யாழ் பல்கலைக்கழககத்தின் கலைப்பிரிவில் உள்ள கலாநிதிகள் பெரும்பாலும் கள்ளநிதிகளே. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் குதிரையோடிப் பெற்ற பட்டங்களே.

 

அசோக சபுமல் ரன்வலவுக்கு சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட கலாநிதி பட்டம் இல்லை என சமூக வலைதளங்களில் சர்ச்சை கிளம்பியதையடுத்து நாடாளுமன்ற இணையத்தளத்தில் அசோக சபுமல் ரன்வலயின் பெயருக்கு முன்னாலிருந்த டாக்டர் பட்டம் நீக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் மேலும் சந்தேகங்களை வலுப்படுத்தியுள்ளது. இதேவேளை விக்கிப்பீடியாவிலும் அவரது கல்வித் தகைமைகள் தொடர்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அவரது டாக்டர் பட்டம் நீக்கப்பட்டுள்ளது.

 

இலங்கையில் போலிக் கல்வித் தகைமைகளின் தாக்கம் அதிகளவில் உள்ளது. குறிப்பாக பணம் கொடுத்து பட்டங்கள் வாங்குதல், அங்கீகாரம் இல்லாத பல்கலைக்கழகங்களிடம் பட்டம் பெறுதல், கௌரவ கலாநிதிகள் எனும் பெயரில் போலிக் கலாநிதிப் பட்டங்களை பெயருக்கு பின்னால் பயன்படுத்தல் போன்றன இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

8. மீண்டும் துவங்கிய இடத்துக்கே ரிஎன்ஏக்கு வருவோம் – ரெலோ செல்வம்!

 

இனம்சார்ந்த விடுதலையினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற வகையில் நாம் தமிழ்தேசிய கூட்டமைப்பாக ஒன்றிணைய வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒற்றைப் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அடைக்கலநாதன் மேலும் தெரிவிக்கையில், “பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாருடன் கலந்துரையாடல் ஒன்றை நடாத்துவதற்கு தீர்மானித்திருக்கிறோம். எமது பாராளுமன்றக் குழுவில் ஒரு ஒற்றுமை வேண்டும் என்று நினைக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

 

பாராளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதனின் கட்சிக்குள்ளேயே ஒற்றுமை இதுவரை இல்லை. ரெலோ குழுவினர் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறி சங்கு அரியத்தாரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தினர். ஏமாற்றமே மிஞ்சியது. அதிலும் அடைக்கலநாதனின் கட்சியில் இருந்த வினோநோகரலிங்கம் குறித்த தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். கூட்டமைப்பை உடைத்துக்கொண்டு தங்களுடைய நலன்களுக்காக அடைக்கலநாதன் உள்ளிட்டோர் வெளியேறிய போதும் கூட தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் தேர்தல் நிலவரங்களை அவதானித்து இணைவதற்காக இவர்களுக்கான கால அவகாசகத்தை வழங்கிய போதும் கூட அரியத்தாருக்கு கிடைத்த இரண்டு லட்சம் ஓட்டுக்களின் வீரியத்தை கூறி சுயலாப அரசியலால் இணைவதற்கு தயாராகவில்லை. முடிவில் சங்கு சின்னம் அடிவாங்கியதுடன் வன்னி தேர்தல் மாவட்டத்தில் ஆகக்குறைவான வாக்குகளை பெற்றது வரலாறாகிவிட்டது.

 

இதேவேளை கூட்டமைப்பை முதன்முதலில் உடைத்து துண்டாடிய பொன்னம்பலம் கஜேந்திரகுமார்; இதற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளார். சிறிதரனும் – கஜேந்திரகுமாரும் ஏற்கனவே சிறிதரனின் இல்லத்தில் சந்தித்துவிட்டனர். தற்போது கஜேந்திரகுமார், செல்வம் அடைக்கலநாதனை மன்னாரில் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த ஒற்றுமை வேள்விக்கு புத்தளத்தில் ஒரு வயோதிப மாதுவை பலிகொடுத்தாச்சு. இனி தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கி யூலி சங்குடன் ஜிங்கு ஜிங்கு என்று ஆடுவது தான் பாக்கி.

 

9. உலக அரசாங்கங்களின் மாநாட்டில் உரையாற்ற ஜனாதிபதி அனுரவுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் அழைப்பு!

 

2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள உலக அரசாங்கங்களின் மாநாட்டில் உரையாற்றுமாறு இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி அழைப்பு விடுக்கவிருப்பதாகவும் இலங்கைக்கான தூதுவர், சபாநாயகரிடம் தெரிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டு நடைபெற்ற உலக அரசாங்கங்களின் மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியிருந்ததாகவும், அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் குறித்த மாநாட்டில் இலங்கை ஜனாதிபதி உரையாற்றுவதை தாம் விரும்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். ஜனாதிபதி அனுரவின் டிஜிற்றல் பொருளாதாரத்திற்கு வலுச்சேர்க்கின்ற வகையில் இந்த அழைப்பு அமைந்துள்ளது.

 

அரசாங்க சேவையை ஒன்லைன் முறைக்கு மாற்றுவதே ஊழலுக்கு எதிராகப் போராடுவதற்கு சிறந்த முறைமையென்று, ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் காலத் நசீர் அல்அமேரி முhயடநன யேளளநச யுடயுஅநசi தெரிவித்தார். இது விடயத்தில் இலங்கையுடன் தமது நிபுணத்துவத்தைப் பகிர்ந்துகொள்ள ஐக்கிய அரபு இராச்சியம் தயாராக இருப்பதாகவும் அந்நாட்டுத் தூதுவர் சுட்டிக்காட்டினார். சபாநாயகர் (கலாநிதி) அசோக ரன்வலவை நேற்று (டிசம்பர் 09)மரியாதையின் நிமித்தம் சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார். இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார். மேலும், வெளிப்படையான மற்றும் ஈர்க்கக்கூடிய முதலீட்டு நடைமுறையை உருவாக்குவதன் முக்கியத்துவம் குறித்தும் இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.

 

ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிக்கும் இலங்கையர்கள் தொழில்துறை சார்ந்தவர்களாகவும், அமைதியான சமூகத்தினராகவும் வாழ்வது தொடர்பில் நன்மதிப்பைக் கொண்டிருப்பதாகவும் அந்நாட்டுத் தூதுவர் சுட்டிக்காட்டினார். தொழில்நுட்பம் மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் துறைகளை முன்னேற்ற வேண்டியதன் அவசியம் குறித்தும் இரு தரப்புக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டது. முதலீடுகளை விஸ்தரிப்பது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

 

இலங்கை – ஐக்கிய அரபு இராச்சிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தை மீளவும் ஸ்தாபித்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளைப் பலப்படுத்துவது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

 

 

10. உண்மைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்! வலிந்து காணாமலாக்கப்பட்டோரை போராடி மீண்டெழ வைக்க முடியாது!

 

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இதன் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவருடைய உறவினர்கள், சிவில் அமைப்பினர், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

 

அண்மையில் இந்த அமைப்புகள் தாங்கள் உள்ளக பொறிமுறையை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் சர்வதேசம் தான் தங்களுக்கு நீதியைப் பெற்றுத் தரவேண்டும் என்று அடம்பிடிக்கின்றனர். அதே சமயம் சர்வதேசம் தங்களை கண்டுகொள்வதில்லை என்றும் தங்கடைய மன வருத்தத்தை வெளியிட்டனர்.

“வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் திரும்பி வரமாட்டார்கள் என்பது நன்கு தெரிந்திருந்தம் அவர்களை வைத்து அரசியல் செய்வது மிகமோசமான அரசியல்” என முன்னாள் போராளியும் மாவீரர்களின் தாயுமான தமிழ்கவி தேசம்நெற்க்குத் தெரிவித்தார். தன்னுடைய பிள்ளையும்தான் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டது எனத் தெரிவித்த தமிழ்கவி “அவர்கள் யாரும் திரும்பி வரப்போவதில்லை” என்பது அந்த உறவுகள் அனைவருக்கும் தெரியும். இதனை அரசியலாக்குபவர்களிடம் நான் செல்வதில்லை” என்றும் தெரிவித்தார்.

 

தமிழ்கவியுடைய கருத்தை வலிந்து காணாமலாக்கப்பட்டவரின் மனைவி அனந்தி சசிதரனும் தெரிவிக்கின்றார். வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் அமைப்பு பலவாகச் சிதைவுண்டு பலராலும் இயக்கப்படுகிறது. சர்வதேச நாடுகளும் இவர்களை நேரடியாகவும் இயக்குவதாக அவர் தெரிவித்தார். இப்ப நடப்பது வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை வைத்து செய்கின்ற அரசியல் வியாபாரம் என்றும் அனந்தி சசிதரன் குற்றம்சாட்டியிருந்தார்.

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய மேம்பாட்டு கடன் ஒப்பந்தம் – விலகியது அதானி குழுமம்!

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை மேம்படுத்துவதற்காக அமெரிக்காவுடனான 553 மில்லியன் டொலர் கடன் ஒப்பந்தத்தில் இருந்து அதானி குழுமம் விலகியுள்ளது.

அதானி குழுமத்தின் நிறுவனர் கவுதம் அதானி மீது அமெரிக்க சட்டமா அதிபர் திணைக்களம், இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்த பின்னணியில் இந்த ஒப்பந்தத்தில் இருந்து அந்த நிறுவனம் விலகியுள்ளது.

இருப்பினும், மேற்கு முனையத்தின் அபிவிருத்தியை அதானி குழுமம் அதன் உள் மூலதன கையிருப்பைப் பயன்படுத்தி மேற்கொள்ளவுள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்திற்காக அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதி கூட்டுத்தாபனம் எதிர்பார்த்திருந்த 553 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தம் கைவிடப்பட்டுள்ளதாக அதானி துறைமுகங்கள் மற்றும் விசேட பொருளாதார வலய நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதானி குழுமம் தனது உள் மூலதன இருப்புக்களை கொழும்பு மேற்கு சர்வதேச முனைய திட்டத்திற்கு பயன்படுத்தவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்காக நிறுவப்பட்ட நிறுவனத்தின் பெரும்பங்கு அதானி குழுமத்திற்கு சொந்தமானது.

இந்த திட்டத்திற்கு நிதியுதவி அளிக்க அமெரிக்கா கடந்த ஆண்டு ஒப்பந்தம் செய்தது. ஆனால் அதானி குழுமத்தின் நிறுவனர் கவுதம் அதானி மீது அமெரிக்க அமெரிக்க சட்டமா அதிபர் திணைக்களம், இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ததால், அதற்கான நிதி உதவி பெறுவதில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டது.

இத்தகைய பின்னணியில், உரிய கடன் ஒப்பந்தத்தில் இருந்து அதானி குழுமம் விலகியுள்ளது.