2024

2024

புதிய அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய்க்கு முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வாழ்த்து !

புதிய அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய்க்கு நாமல் ராஜபக்ஷ வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜயின் அரசியல் பிரவேசத்திற்கும் அவர் ஆரம்பித்துள்ள புதிய அத்தியாயத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதாக நாமல் ராஜபக்ஷ X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் விஜய் கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளதுடன், ‘தமிழக வெற்றி கழகம்’ என அதனை பதிவு செய்துள்ளார்.

டெல்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு சென்ற நடிகர் விஜயின் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், அதனை கட்சியாக உத்தியோகபூர்வமாக பதிவு செய்துள்ளார். இதனை நடிகர் விஜய் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு திட்டம்!

ஆங்கிலேயரின் பிடியிலிருந்து விடுபட்டு சுதந்திரம் எனும் காற்றை சுவாசித்த எமது நாடு அதன் பின்னரான நான்கு தசாப்தங்களாக முகங்கொடுத்த யுத்தத்திலிருந்து மீண்டு ஆறுதல் அடைந்தாலும் கூட பூரணமாகத் தீர்க்கப்படாத பல பிரச்சினைகளையோ அல்லது தேவைகளையோ நாம் காணக் கூடியதாக இருந்தது.

 

இவ்வாறான கால கட்டத்தில் கடந்த ஒன்றரை வருடங்களாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சை பொறுப்பேற்ற அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசம் தற்போது நன்றாக அபிவிருத்தி அடைந்து வருவதைக் காணக் கூடியதாகவுள்ளது.

 

வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் முக்கியமான ஒன்றுதான் இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியயேற்றுதல் ஆகும்.

 

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் மீள்குடியேற்றப் பிரிவினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

 

வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட மோதல் காரணமாக இடம் பெயர்ந்தவர்களை மீள் குடியேற்றி அவர்களுக்குத தேவையான நிவாரணங்களை வழங்கி மக்கள் வாழ்வை மேம்படுத்தக்கூடிய செயல் திறனான பயனுள்ள அபிவிருத்தித் திட்டங்களை அமுல்படுத்துவதன் மூலம்; கௌரவமான பாதுகாப்புமிக்க மக்கள் சமூகம் ஒன்றை உறுதிப்படுத்தல் இதன் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.

 

அதில் முக்கியமான திட்டமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு கல் மற்றும் சாந்தைப் பயன்படுத்தி நிரந்தர வீடை நிர்மாணிக்கும் வேலைத் திட்டத்தைக் கூறலாம்.

 

அதனடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 27,322 வீடுகளும் கிளிநொச்சி மாவட்டத்தில் 28,619 வீடுகளும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 29, 762 வீடுகளும் வவுனியா மாவட்டத்தில் 23,068 வீடுகளும் மன்னார் மாவட்டத்தில் 16,227 வீடுகளும் திருகோணமலை மாவட்டத்தில் 10,039 வீடுகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 12,098 வீடுகளும் அம்பாறை மாவட்டத்தில் 1,713 வீடுகளுமாக மொத்தம் 148,848 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இந்த நிரந்தர வீடமைப்புத் திட்டத்தில் பயனாளர்களினால் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்படும். இதற்கான கண்காணிப்பு மற்றும் தொழிநுட்ப ஒத்துழைப்பு பிரதேச செயலகத்துடன் இணைந்து பணியாற்றும் தொழிநுட்ப அதிகாரியினால் வழங்கப்படும்.

 

இந்த செயற்றிட்டத்தின் கீழ் இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்திற்கு 600,000 ரூபாயும் இரண்டு உறுப்பினர்களை விட அதிகமான உறுப்பினர்களை கொண்ட குடும்பங்களுக்கு 1,000,000 ரூபாயும் வழங்கப்படும்.

 

அதற்கமைய யாழ்ப்பாண மாவட்டத்தில் 7,671 வீடுகளும் கிளிநொச்சி மாவட்டத்தில் 952, முல்லைத்தீவு மாவட்டத்தில் 223 வீடுகளும் வவுனியா மாவட்டத்தில் 2,183 வீடுகளும் மன்னார் மாவடத்தில் 526 வீடுகளும் திருகோணமலை மாவட்டத்தில் 3,500 வீடுகளும் மட்டக்களப்பு 3,214 வீடுகளும் அம்பாறை மாவடத்தில் 2,007 வீடுகளுமாக நிர்மாணிக்க வேண்டிய வீடுகளின் மொத்த எண்ணிக்கை 20,276 ஆகும்.

 

2024 ஆம் ஆண்டில் இந்த செயற்றிட்டத்திற்காக 1,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் இந்த ஒதுக்கீட்டை அடிப்படையாகக் கொண்டு 600 ,000 ரூபாய் பெறுமதியான 833 வீடுகளும் 1,000,000 ரூபாய் பெறுமதியான 1000 வீடுகளையும் நிர்மாணிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

 

யாழ்ப்பாண மாவட்டத்தில் 694 வீடுகளும், கிளிநொச்சி மாவட்டத்தில், 86 வீடுகளும் முல்லைத்தீவு மாவட்டத்தில், 20 வீடுகளும் வவுனியா மாவட்டத்தில் 197 வீடுகளும், மன்னார் மாவட்டத்தில் 48 வீடுகளும், திருகோணமலை மாவட்டத்தில் 316 வீடுகளும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 291 வீடுகளும், அம்பாறை மாவட்டத்தில் 181 வீடுகளுமாக மொத்தம் 1,833 வீடுகள் 2024 ஆம் ஆண்டில் நிர்மாணிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டிருக்கின்றது.

 

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் மீள்குடியேற்றப் பிரிவினால் நடைமுறைப்படுத்தப்படும் இரண்டாவது செயற்றிட்டமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த குடும்பங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத் திட்டத்தை கூறலாம்.

 

2009 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த குடும்பங்களின் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நிரந்தர வீடு நிர்மாணிக்கும் செயற்றிட்டத்திற்கு சமாந்தரமாக அவர்களை மீள்குடியேற்றும் போது அத்தியாவசிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன்படி, 2009 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை பூர்த்தி செய்யப்பட்டிருக்கும் செயற்றிட்டங்களின் எண்ணிக்கை 90,270 ஆகும். இதற்காக 10,848,92 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

 

குடி நீர் இணைப்பு, குழாய் கிணறு நிர்மாணிப்பு, பொதுக் கிணறு நிர்மாணித்தல், விவசாயக் கிணறு நிர்மாணித்தல், வீட்டு மின் இணைப்பு, வாழ்வாதார அபிவிருத்தித் செயற்றிட்டம், மலவசலகூட வசதிகள், கல்விச் செயற்றிட்டம், உள்ளக வீதி, சுகாதாரம், சிறு குளங்களின் மறுசீரமைப்பு, ஏனைய செயற்றிட்டங்கள், காணி கொள்வனவு, TFR செயற்றிட்டம், ஆகிய அத்தியாவசிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி செயற்றிட்டத்தினுள் அடங்கும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் வாழும் பிரதேசங்களில் சிறுநீரக நோயாளர்கள் அதிகளவில் பதிவாவதாக சுகாதாரப் பிரிவினால் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த நிலையிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கு சுத்தமான குடிநீர் வழங்கும் வேலைத் திட்டத்தை ஆரம்பிப்பது மிகவும் பிரதான காரணம் என இனங்காணப்பட்டுள்ளது.

 

“அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர்” என்ற அரசின் கருத்தின் கீழ் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் நிதிப் பங்களிப்பில் சுத்தமான குடிநீர் வழங்குவதற்கு 50 நனோ தொழில்நுட்ப நீர் சுத்திகரிப்பு கட்டமைப்புகளை நிர்மாணிக்கும் செயற்றிட்டம், அந்த தொழில்நுட்ப வசதி உள்ள தேசிய நீர் வழங்கல் திணைக்களத்தினால் முன்னெடுப்பதற்கு 2021 ஆம் ஆண்டில் முதல் கட்டமாக வடக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த செயற்றிட்டத்தின் ஊடாக 27,444 குடும்பங்கள் பயனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

அதனடிப்படையில; கிளிநொச்சி மாவட்டத்தில் 23, வவுனியா மாவட்டத்தில் 23, முல்லைத்தீவு மாவட்டத்தில் நான்குமாக நனோ தொழில்நுட்ப நீர் சுத்திகரிப்பு கட்டமைப்பின் மொத்த எண்ணிக்கை 50 ஆகும். இதில் முழுமையாகப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்ட 25 நனோ நீர் சுத்திகரிப்பு கட்டமைப்புகள் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளன. இந்த செயற்றிட்டத்திற்காக திட்டமிடப்பட்ட முழு ஒதுக்கீடு 211,669,403.67 ரூபாவாகும். இதுவரை செலவிடப்பட்ட முழுத்தொகை 125,678,182.44 ரூபாய் ஆகும். எஞ்சியிருக்கும் 25 நீர் சுத்திகரிப்பு கட்டமைப்புகளின் பணிகளை நிறைவுசெய்து இந்த வருட இறுதிக்குள் மக்கள் மயப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்கள் தொடர்பில் அமெரிக்க செனட் சபையில் முறைப்பாடு – மன்னிப்பு கோரினார் மார்க் சக்கபேர்க் !

மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் சக்கபேர்க் மன்னிப்பு கோரியுள்ளார்.

அமெரிக்க செனட் சபையில் ஏராளாமான பெற்றோர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றால் தங்களது குழந்தைகள் பாலியல் தொந்தரவிற்கு ஆளாகி தற்கொலை செய்துகொள்வதாக கண்ணீர் வடித்திருந்தனர். மேலும், தங்களின் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய என்ன செய்திருக்கிறீர்கள் என கேள்வியும் எழுப்பினர்.

சமூக வலையத்தளங்கள் மூலம் சிறுவர்கள் பாதிக்கப்படுவதாக அமெரிக்க செனட் சபையில் குற்றச்சாட்டு முன்வைத்த குடும்பத்தினரிடமே அவர் இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “ நீங்கள் அனைவரும் அனுபவித்த அனைத்து விதமான பிரச்னைகளுக்கும் நான் மனம் வருந்தி மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இனி இதுபோன்ற விஷயங்களை யாரும் கடந்து செல்லக்கூடாது. குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான தொழில்துறை அளவிலான முயற்சிகளில் மெட்டா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த விடயம் தொடர்பான விசாரணை அமெரிக்க செனட் சபையில் இடம்பெற்றது.

மார்க் சக்கபேர்க் மற்றும் TikTok, Snap, X ஆகிய சமூக ஊடக நிறுவனங்களின் தலைவர்களும் குறித்த விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தனர்.

அனோஜனின் மரணம்: 25வது வயதைத் தொடமல் மரணத்தை தழுவும் இளைஞர்கள்! லண்டனின் சோகக் கதை !

பெப்ரவரி 1 நாளை கத்திக்குத்துக்கு இலக்காகி மரணித்த அனோஜன் ஞானசேகரனின் (21) இறுதிநிகழ்வுகள் லண்டனில் நடைபெறவுள்ளது. ஜனவரி 8 இரவு பல்கலைக்கழகம் முடிந்த பின் வீடு திரும்பிக்கொண்டிருக்கின்ற போதே இச்சம்பவம் இரவு 11:50 அளவில் ஸ்ரோபரி கில் ரெயில்நிலையம் அருகில் இடம்பெற்றுள்ளது. இவருடைய பிரிவுத் துயரால் அவருடைய அவருடைய பெற்றோரும் சசோதரனும் தீராத மனவேதனையில் உள்ளனர்.

யாழ்ப்பாணம் காரைநகரைச் சேர்ந்த ஞானசேகரன் தம்பதிகளின் புல்வனான அனோஜன் இங்கிலாந்தில் பிறந்தவர். கணக்கியல் துறையில் மூன்றாம் ஆண்டில் கற்றுக்கொண்டிருந்தார்.

இது பற்றிய தேசம் திரை காணொளி காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..!

 

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு ( Bushra Bibi) 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. எனினும், அந்த வழக்குகள் அரசியல் பழிவாங்கல் காரணமாக தொடரப்பட்டிருப்பதாக இம்ரான் கான் தரப்பில் கூறப்பட்டு வருகிறது.

தோஷகானா ஊழல் வழக்கில் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தண்டனையை எதிர்த்து இம்ரான் கான் மேன்முறையீடு செய்துள்ள நிலையில், மற்ற வழக்குகளில் பிணை கிடைக்கவில்லை.

இதற்கிடையே, அரச இரகசியங்களை கசியவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில், இம்ரான் கான் மற்றும் அவரது உதவியாளர் ஷா முகமது குரேஷி ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நேற்று (30) நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், இன்று மேலும் ஒரு ஊழல் வழக்கில் இம்ரான் கான், அவரது மனைவிக்கு தலா 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இம்ரான் கான் பிரதமர் பதவியில் இருந்த போது, அவருக்கும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கும் கிடைத்த பரிசுப்பொருட்களை அரசிடம் ஒப்படைக்காமல் ஊழல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இதன்போது, இருவருக்கும் தலா 14 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும் இருவரும் 10 ஆண்டுகளுக்கு அரச பதவிகளை வகிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனைக்குள் நுழைந்து மூன்று பாலஸ்தீனிய இளைஞர்களை சுட்டுக்கொன்ற இஸ்ரேலிய படையினர் !

மருத்துவமனை பணியாளர்கள் போல உடையணிந்த இஸ்ரேலிய படையினர் மேற்குகரையில் மருத்துவமனையொன்றிற்குள் நுழைந்து மூவரை சுட்டுக்கொன்றுள்ளனர்.

Israel’s war on Gaza live: Israeli forces kill 3 in West Bank hospital | Israel War on Gaza News | Al Jazeera

மேற்குகரையின் ஜெனின் நகரில் உள்ள இபின் சின மருத்துவமனைக்குள் மருத்துவர்கள் மருத்துவ பணியாளர்கள் போல நுழைந்த இஸ்ரேலிய படையினர் மூன்று பாலஸ்தீனிய இளைஞர்களை சுட்டுக்கொன்றனர் என இஸ்ரேலிய பாலஸ்தீன தகவல்கள் தெரிவித்துள்ளன.

தாதிமார்கள் ஹிஜாப்அணிந்த பெண்கள் மருத்துவர்கள் போல உடையணிந்த இஸ்ரேலிய விசேட படைப்பிரிவினர் மருத்துவமனைக்குள் நுழைவதை சிசிடிவி காட்சிகள் காண்பித்துள்ளன.

ஒருவர் சக்கரநாற்காலியை தள்ளிக்கொண்டு செல்கின்றார் மற்றுமொருவர் குழந்தைகள் நாற்காலியுடன் காணப்படுகின்றார்.

மருத்துவமனைகள் நுழைந்த இஸ்ரேலிய படையினர் பின்னர் ஒவ்வொருவராக மூன்றாவது தளத்திற்கு சென்று இரண்டு இளைஞர்களை கொலை செய்தனர் என மருத்துவமனைக்குள் காணப்பட்டவர்களை மேற்கோள்காட்டி பாலஸ்தீன அரச செய்தி முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிகாத் அமைப்பை சேர்ந்தவர்களே கொல்லப்பட்டுள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது இஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் இந்த நடவடிக்கையை பாராட்டியுள்ளார்.

சமீபத்தில் குறிப்பிடத்தக்க பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்குவிப்பதில் ஈடுபட்ட மருத்துவமனைக்குள் மறைந்திருந்த  முகமட் ஜலாம்னே என்பவரே கொல்லப்பட்டார் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய படையினர் மீதான தாக்குதல்கள் உட்பட பலதாக்குதல்களில் ஈடுபட்டுள்ள ஜெனின் பட்டாலியனை சேர்ந்த ஜெனின் முகாமை சேர்ந்த முகமட் அல் கஜாவியும் அவரது சகோதரரும் கொல்லப்பட்டனர் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

வரலாறு காணாத அளவிற்கு 2023ஆம் ஆண்டில் ஆயுதங்களை விற்றுத்தள்ளிய அமெரிக்கா !

கடந்த வருடம் (2023) அண்டை நாடுகளுக்கு அமெரிக்கா விற்பனை செய்துள்ள இராணுவ தளவாடங்களின் மதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2022இல் ரஸ்யா உக்ரைன் போர் ஏற்பட்டதையடுத்து உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் களமிறங்கின.

இந்நிலையில் தீவிரமாக போரிட்டு வரும் உக்ரைனுக்கு அமெரிக்கா பெருமளவில் இராணுவ தளவாடங்கள் மற்றும் உபகரணங்களை தொடர்ந்து வழங்கி வருகிறது.

இதற்கமைய, 2023க்கான கணக்கெடுப்பின்படி இதுவரை இல்லாத அளவிற்கு $238 பில்லியன் அமெரிக்க ஆயுதங்கள் வெளிநாடுகளுக்கு விற்பனை ஆகி உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவை மையமாக கொண்ட லாக்ஹீட் மார்டின், ஜெனரல் டைனமிக்ஸ், நார்த்ராப் க்ரம்மேன் உள்ளிட்ட தனியார் ராணுவ தளவாட நிறுவனங்கள் செய்த விற்பனையும் அமெரிக்க அரசு நேரடியாக $81 பில்லியன் விற்பனையும் இதில் அடங்கும்.

அமெரிக்கா அதிகளவில் ராணுவ தளவாடங்களை விற்பனை செய்த நாடுகளில் போலந்து ($29.75 பில்லியன்) முன்னணியில் உள்ளது.

ஜெர்மனி ($8.5 பில்லியன்), பல்கேரியா ($1.5 பில்லியன்), நார்வே ($1 பில்லியன்), செக் குடியரசு ($5.6 பில்லியன்) உள்ளிட்ட நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

ஐரோப்பிய நாடுகளை தவிர, தென் கொரியா ($5 பில்லியன்), ஆஸ்திரேலியா ($6.3 பில்லியன்), ஜப்பான் ($1 பில்லியன்) ஆகிய நாடுகளும் குறித்த பட்டியலில் உள்ளன.

“பிராந்திய மற்றும் உலக பாதுகாப்பிற்கு நீண்டகால அடிப்படையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ராணுவ பாதுகாப்புக்கான வர்த்தகமும், ஆயுத விற்பனையும் அமெரிக்காவின் வெளியுறவு கொள்கையில் முக்கியமான அம்சம்” என அமெரிக்கா தொடர்ந்தும் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஹமாஸிற்கு உதவிய பாலஸ்தீன அகதிகளிற்கான ஐ.நா அமைப்பு – நிதி உதவியை இடைநிறுத்திய உலக நாடுகள் !

ஹமாஸின் ஒக்டோபர் 7ஆம் திகதி தாக்குதலிற்கு  பாலஸ்தீன அகதிகளிற்கான ஐ.நா அமைப்பு உதவியதாக தெரிவித்து அந்த அமைப்பிற்கான நிதி உதவியை உலக நாடுகள் இடைநிறுத்தியுள்ளன.

பிரிட்டன் உட்பட எட்டு நாடுகள் பாலஸ்தீனத்தின அகதிகளுக்கான ஐநா அமைப்பிற்கான நிதி உதவியை நிறுத்தியுள்ளன. உலகநாடுகளின் இந்த நடவடிக்கையை ஐநா அமைப்பு கண்டித்துள்ளது.

உலகநாடுகளின் இந்த முடிவு அதிர்ச்சியளிப்பதாக ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது.

யுஎன்ஆர்டபில்யூஏ என்பது பிரதானமாக காசாவிற்கான மனிதாபிமான அமைப்பு இரண்டு மில்லியனிற்கும் மேற்பட்ட மக்கள் உயிர்வாழ்வதற்காக அந்த அமைப்பினை நம்பியிருக்கின்றனர் என அந்த அமைப்பின் தலைவர் பிலிப்பே லசாரினி தெரிவித்துள்ளார்.

சிறிய எண்ணிக்கையிலான பணியாளர்களிற்கு எதிரான குற்றச்சாட்டுகளை அடிப்படையாக வைத்து நிதி இடைநிறுத்தப்பட்டுள்ளமை அதிர்ச்சியளிக்கின்றது  என தெரிவித்துள்ள அவர் ஏற்கனவே குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நாங்கள் சில பணியாளர்களை இடைநிறுத்தியுள்ளோம்  விசாரணைகள் தொடர்கின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

பிராந்தியத்தில் யுத்தம் இடம்பெயர்வு அரசியல் நெருக்கடிகள் காணப்படும் சூழ்நிலையில் இந்த தடைகள் பொருத்தமற்றவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

றோ இருக்கப் பயமேன்! தமிழீழம் மலரும்!! : ஈழம் வரையல்ல லண்டன் வரை பாயும் மோடியின் கோமியம்!!! – தேசம்திரை காணொளி

மரபுத் திங்களாக அறிவிக்கப்பட்ட தை மாதம் 28இல் நோத் ஹரோவில் “மாறிவரும் உலக ஒழுங்கில் ஈழத்தமிழர்களும் இந்தியாவும் மேற்குலகமும்” என்ற தலைப்பிலான சந்திப்பை சிறு துளிகள் என்ற அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. சிறு துளிகள் மற்றும் மள்ளர் மீட்புக் களம் ஆகிய அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. சிறு துளிகள் ஒரு உதவி அமைப்பாக தன்னை முன்னிலைப்படுத்தினாலும் அதன் செயற்பாடுகள் அது ஒரு அரசியல் அமைப்புப் போலவே உள்ளது. இக்கூட்டத்திற்கு இவர்கள் விடுத்துள்ள அழைப்பிதழில் ஒரு கையேட்டை இணைத்துள்ளனர். அதனை வாசித்துவிட்டு வரும்படியும் கோரியுள்ளனர். இக்கையேடானது ஏற்பாட்டாளர்களின் அரசியல் முகத்தை வெளிப்படுத்தி நிக்கின்றது. இலங்கையில் 1970களின் நடுப்பகுதியில் தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது முதல் அதன் உச்ச கட்டத்தை அது எட்டிய 1980களின் நடுப்பகுதி வரை முக்கியமான ஐந்து விடுதலை இயக்கங்கள் உட்பட 40 விடுதலை இயக்கங்கள் உருவாகி இருந்தன. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் துப்பாக்கியின் நிழலில் ஓரளவு கட்டுக்கோப்பாக இருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, அவரும் ஆயதங்களும் மௌனிக்கப்பட்ட பின் எண்ணற்ற பிரிவுகளாகின. இப்பிரிவுகள் நாட்டுக்கு நாடு வெவ்வேறு குழுக்களாக செயற்படுகின்றன. அவ்வாறான குழக்களில் ஒன்று தலைவர் இருக்கின்றார் என்று சொல்லியும் தங்கை துவாரகா உயிர்த்தெழுந்து வந்துவிட்டார் என்று சொல்லியும் எழுச்சி கொண்டுள்ளனர். இன்னும் சில பிரிவுகள் இலங்கை, இந்திய புலனாய்வுப் பிரிவுகளுடன் தங்களை இணைத்துக்கொண்டு செயற்படுகின்றனர்.

இது தொடர்பான தேசம் திரை காணொளியை காண கீழே உள்ள லிங்க்ஐ கிளிக் செய்யுங்கள்..

இஸ்ரேல் மீது தென்னாபிரிக்கா பதிவு செய்த இனப்படுகொலை வழக்கு – சர்வதேச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு !

இஸ்ரேலுக்கு எதிராக தென்னாபிரிக்காவினால் பதிவு செய்யப்பட்ட இனப்படுகொலை வழக்கிற்கு சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குறித்த வழக்கானது, இன்று(26) சர்வதேச நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. காசா மீதான தாக்குதலில் இனப்படுகொலை செய்ததாக தென்னாபிரிக்கா இஸ்ரேல் மீது வழக்குத் தாக்கல் செய்தது.

இந்நிலையில், காசாவில் இஸ்ரேல் நடத்தும் போரில் இனப் பேரழிவு தொடர்பான உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பின் சர்வதேச நீதிமன்றம் இன்று (26) இஸ்ரேலுக்கு தீர்ப்பளித்துள்ளது.

அத்தோடு, பலஸ்தீனர்களுக்கு இனப் பேரழிவு நடவடிக்கைகளின் போது தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை இருப்பதாகவும் சர்வதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், இனப் பேரழிவுக்கு எதிரான சட்டத்தின் கீழ் அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டிய பிரிவினர் என்றும் சர்வதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வரும் போரில் இஸ்ரேல் காசாவின் பெரும்பகுதியை தரைமட்டமாக்கி விட்டதுடன், 1.9 மில்லியன் மக்களை தங்கள் இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றிய நிலையில், குறைந்தது 25,900 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.