வரலாறு காணாத அளவிற்கு 2023ஆம் ஆண்டில் ஆயுதங்களை விற்றுத்தள்ளிய அமெரிக்கா !

கடந்த வருடம் (2023) அண்டை நாடுகளுக்கு அமெரிக்கா விற்பனை செய்துள்ள இராணுவ தளவாடங்களின் மதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2022இல் ரஸ்யா உக்ரைன் போர் ஏற்பட்டதையடுத்து உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் களமிறங்கின.

இந்நிலையில் தீவிரமாக போரிட்டு வரும் உக்ரைனுக்கு அமெரிக்கா பெருமளவில் இராணுவ தளவாடங்கள் மற்றும் உபகரணங்களை தொடர்ந்து வழங்கி வருகிறது.

இதற்கமைய, 2023க்கான கணக்கெடுப்பின்படி இதுவரை இல்லாத அளவிற்கு $238 பில்லியன் அமெரிக்க ஆயுதங்கள் வெளிநாடுகளுக்கு விற்பனை ஆகி உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவை மையமாக கொண்ட லாக்ஹீட் மார்டின், ஜெனரல் டைனமிக்ஸ், நார்த்ராப் க்ரம்மேன் உள்ளிட்ட தனியார் ராணுவ தளவாட நிறுவனங்கள் செய்த விற்பனையும் அமெரிக்க அரசு நேரடியாக $81 பில்லியன் விற்பனையும் இதில் அடங்கும்.

அமெரிக்கா அதிகளவில் ராணுவ தளவாடங்களை விற்பனை செய்த நாடுகளில் போலந்து ($29.75 பில்லியன்) முன்னணியில் உள்ளது.

ஜெர்மனி ($8.5 பில்லியன்), பல்கேரியா ($1.5 பில்லியன்), நார்வே ($1 பில்லியன்), செக் குடியரசு ($5.6 பில்லியன்) உள்ளிட்ட நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

ஐரோப்பிய நாடுகளை தவிர, தென் கொரியா ($5 பில்லியன்), ஆஸ்திரேலியா ($6.3 பில்லியன்), ஜப்பான் ($1 பில்லியன்) ஆகிய நாடுகளும் குறித்த பட்டியலில் உள்ளன.

“பிராந்திய மற்றும் உலக பாதுகாப்பிற்கு நீண்டகால அடிப்படையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ராணுவ பாதுகாப்புக்கான வர்த்தகமும், ஆயுத விற்பனையும் அமெரிக்காவின் வெளியுறவு கொள்கையில் முக்கியமான அம்சம்” என அமெரிக்கா தொடர்ந்தும் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *