20

20

அச்சுறுத்தும் கொவிட் 19 – கொரோனா பாதிப்பால் பார்வையை இழந்த 11வயது சிறுமி!

டெல்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) தனது கொரோனா வைரஸ் நோயாளியான 11 வயது சிறுமி ஒருவருக்கு மூளை நரம்பு பாதிப்பைத் ஏற்பட்டு உள்ளது என்றும் இது அவரது பார்வை மங்கலாகிவிட்டது எனவும் கூறி உள்ளது.
குழந்தை நரம்பியல் பிரிவு மருத்துவர்கள் சிறுமியின் உடல்நிலை குறித்து ஒரு அறிக்கையைத் தயாரித்து வருகிறார்கள். அது விரைவில் வெளியிடப்படும்.
இதுகுறித்த வரைவு அறிக்கை கூறியதாவது:-
11 வயது சிறுமி ஒருவர் கொரோனா நோய்த்தொற்றால்தூண்டப்பட்ட அக்யூட் டெமிலினேட்டிங் நோய்க்குறி (ஏடிஎஸ்) இருப்பதைக் கண்டுபிடித்தோம். குழந்தை வயதினரிடையே பதிவான முதல் பக்கவிளைவு இதுவாகும் என்று கூறியுள்ளது.
குழந்தை நரம்பியல் பிரிவின் தலைவர் டாக்டர் ஷெபாலி குலாட்டி கூறியதாவது:-
இந்த சிறுமி பார்வை இழப்புடன் எங்களிடம் வந்தார் எம்.ஆர்.ஐ  சோதனை ஏ.டி.எஸ் பாதிப்பை காட்டியது, இது ஒரு புதிய பக்கவிளைவாகும். இருப்பினும், வைரஸ் மூளை மற்றும் நுரையீரலை பெரும்பாலும் பாதிக்கிறது என்பதை இப்போது நாம் அறிவோம்.
ஏடிஎஸ் என்பது  நரம்புகள் மெய்லின் எனப்படும் பாதுகாப்பு அடுக்குடன் மூடப்பட்டிருக்கும், இது மூளையில் இருந்து வரும் செய்திகளை உடலின் வழியாக விரைவாகவும் சுமுகமாகவும் நகர்த்த உதவுகிறது.
மெய்லின் பாதிப்பால் மூளை சமிக்ஞைகளை சேதப்படுத்தும் மற்றும் பார்வை, தசை இயக்கம், புலன்கள், சிறுநீர்ப்பை மற்றும் குடல் இயக்கம் போன்ற நரம்பியல் செயல்பாடுகளின் வரம்பை பாதிக்கும் என கூறப்படுகிறது.

நான்கு கோடியை கடந்தது உலக கொரோனா பாதிப்பு !

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது.  இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.06 கோடியைத் தாண்டியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி மீண்டவர்கள் எண்ணிக்கை 3.03 கோடியைக் கடந்தது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 72 ஆயிரத்து 500-க்கும் அதிகமானோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 11.22 லட்சத்தைக் கடந்துள்ளது.

தொடரும் சென்னை சூப்பர்கிங்ஸின் தோல்விகள் – பட்லரின் அதிரடியுடன் வென்றது ராஜஸ்தான் !

ஐ.பி.எல் தொடரின் 37-வது லீக் ஆட்டம் அபுதாபியில் நேற்றையதினம் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின.
இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற  வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் டோனி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.
அதன்படி சென்னை அணியின் டுபிளசிஸ் மற்றும் சாம் கர்ரன் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 9 பந்துகளை சந்தித்த டு பிளசிஸ் 10 ஓட்டங்களில்  வெளியேறினார். அடுத்து வந்த வாட்சன் 3 பந்தில் 8 ஓட்டங்களில் எடுத்த நிலையில் வெளியேறினார்.
25 பந்தில் 22 ஓட்டங்கள் எடுத்திருந்த சாம் கர்ரன் ஷ்ரேஷ் கோபால் பந்து வீச்சில் வெளியேறினார். அடுத்த வந்த அம்பதி ராயுடு, கேப்டன் டோனி அணியின் ஓட்டத்தை  உயர்த்த முற்பட்டனர்.  ஆனால்,  ராஜஸ்தான் அணியின் சிறப்பான பந்து வீச்சால் சென்னை அணி வீரர்களால் அணியின் ஓட்டத்தை உயர்த்தமுடியவில்லை.
19 பந்துகளை சந்தித்த ராயுடு 13 ஓட்டங்களிலும், 28 பந்துகளை சந்தித்த கேப்டன் டோனி 22 ஓட்டங்களிலும் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர்.  இதனால், 20 பந்துப்பரிமாற்றங்கள்   முடிவில் 5 இலக்குகளை  இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 125 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
இதையடுத்து, 126 ஓட்டங்ககள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் களமிறங்கியது. முதலில் முக்கிய இலக்குகளை இழந்த ராஜஸ்தான், அதன் பின் நிதானமாக ஆடியது. ஜோஸ் பட்லரும், ஸ்மித்தும் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
இறுதியில், 17.3 பந்துப்பறிமாற்றங்களில்  3 இலக்குகளை இழந்து  126 ஓட்டங்களை  எடுத்து ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.  பட்லர் 70 ஓட்டங்களும், ஸ்மித் 26 ஓட்டங்களும் எடுத்து அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினர். மேலும் இந்த வெற்றியுடன் 08 புள்ளிகளை பெற்ற ராஜஸ்தான் ரோஜல்ஸ் புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்திற்கு முன்னேறியது.