October

October

வன்னி முகாம்களின் சாட்சியங்கள் : ரி சோதிலிங்கம் & எஸ் குமாரி

A_Barber_in_Chettikulamவன்னி முகாம்களின் நிலை தொடர்பாக பல்வேறு விதமான செய்திகள் வெளிவருகின்றது. அம்மக்கள் சார்பாக பேசுவதாகவும் எழுதுவதாகவும் கற்பிதம் செய்கின்ற பலர் தங்கள் அரசியல் நிலைப்பாடுகளுடன் அவற்றை திரிபுபடுத்தி அங்குள்ள யதார்த்தத்தில் இருந்து புலம்பெயர் மக்களை அந்நியப்படுத்தி வைத்துள்ளனர். வன்னி முகாம்களில் உள்ள மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட தங்கள் அரசியல் அடையாளத்தை உறுதிப்படுத்துகின்ற கோரிக்கைகள் அம்மக்களின் சார்பில் முன்வைக்கப்படுகின்றன. நாடுகடந்த தமிழீழம் முதல் வன்னி முகாம் மக்களுக்கும் வன்னி மக்களுக்கும் உதவுவது துரோகத்தனம் என்பது வரை புலம்பெயர்ந்த தமிழ் அரசியல் பரந்துவிரிந்தள்ளது.

ஆகவே அங்குள்ள மக்களின் வாழ்நிலையின் உண்மைத்தன்மையை அறிவது மிக மிக முக்கியமானது. அதனை அறிந்து கொள்வதன் மூலமே மக்களுக்கான தேவைகளையும் கோரிக்கைகளையும் அறிந்து கொள்ள முடியும். அதைவிடுத்து புலம்பெயர்ந்தவர்களின் போராட்டத்திற்காக அம்மக்களை ஆட்டிப்படைக்க முடியாது. அதனைக் கருத்திற்கொண்டு அண்மைக் காலமாக வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாம்களில் உள்ள பலருடனும் வவுனியாவில் வதிபவர்களுடனும் தொடர்பு கொண்டு பேசுவது வழக்கம். இவர்களில் சிலருடன் பல மணித்தியாலங்களாக பேசுவதும் வழக்கமாகிவிட்டதொன்று. அவர்களது உள்ளக்கிடக்கைகளை வெளிக்கொண்டுவரவே இவற்றை வெளியிடுகிறோம்.

ஓக்ரோபர் 6ல் மூன்று நாட்கள் வெளியே வந்து தங்கும் அனுமதியுடன் வந்தவருடன் தொலைபேசி மூலம் உரையாடும்போது அவர் தன்னைப் பற்றிய அறிமுகத்துடன் தொடர்ந்தார்.

இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். வவுனியாவிலும் முத்தையன் கட்டிலும் வியாபாரியாக இருந்தவர். தனது இரண்டு வயது குழந்தையுடன் தான் தப்பி வந்து இடையில் ஏதும் நடந்தாலுமென்று, அங்கேயே நின்று பின்னர் புலிகளினால் ஒட்டுமொத்தமாக எடுத்துச் செல்லப்பட்ட மக்களுடன் முள்ளிவாய்க்கால்வரை சென்றார். பின்னர் மே மாதம் பத்தாம் திகதியளவில் பெருந்தொகையாக இடம்பெயர்ந்தவர்களுடன் சேர்ந்து இடம்பெயர்ந்தவர். தனது முகாம் வாழ்க்கை பற்றி இவ்வாறு சொன்னார்.

”நான் செட்டிக்குளம் ராமநாதன் காம்பில் இருக்கின்றேன். செட்டிக்குளம் டிஸ்றிக்கில் ஆனந்தகுமாரசாமி முகாம், ராமநாதன் முகாம், அருணாசலம் முகாம், Zone 4, வீரபுரம், கதிர்காமர் முகாம், Zone 5 என காம்ப்புகள் இருக்குது. ராமநாதன் காம்பில் 65 000 பேர் இருக்கிறோம். அங்கு பெரும்பாலான கட்டுப்பாடு பொலிஸ்தான். ஆமியும் வந்து போவார்கள்.

சாப்பாடு, தண்ணி, ரொய்லெட் வசதி வந்த புதிதில் மிகமோசம். இப்ப பிரச்சினை இல்லை. முந்தி நாங்கள் கொஞ்ச கொஞ்சப் பேராகச் சேர்ந்து ரேன் வைத்து மாறி மாறி எல்லாருக்குமாய் சமைப்போம். இப்ப எல்லாரும் தனித்தனிய குடும்பமாய்த்தான் சமைக்கிறோம். ஓவ்வொரு வியாழனும் World food சமையல் சாமான்கள் தருவார்கள். தண்ணீர் பைப் வசதி இருக்குது. ரியூப் வெல் அடிச்சு வைத்திருக்கிறார்கள். குடி தண்ணீர் கிடைக்கிறது. மரங்களை வெட்டி மண்றோட்டுகள் போட்டிருக்கிறாங்கள். கறண்ட் இருக்குது. பிள்ளைகள் படிக்கப் போகினம். ரென்ட்டுகளை வீடுகளாய் கட்டிவிட்டால் மாதிரிக் கிராமம்தான். ரென்ட் சரியான வெக்கையாய் இருக்கும். நாங்கள் பெரியஆட்கள் சமாளிப்பம். குழந்தைகள்பாடு சரியான கஸ்டம். மழை வந்தால் பெரிய சிக்கல் இந்த ரென்டுகள் தாங்காது. அதுதான் தொல்லை. வெய்யில் நேரங்களில் ரென்ட்டுக்குள் இருக்கேலாது அவ்வளவு வெக்கை.

மெனிக்பார்ம் பிரச்சினைகள்பற்றி கேட்டபோது ”நீங்கள் சொல்லுமாப்போல பெரிய பிரச்சனையாக நான் கேள்விப்படவில்லை. வன்னிக்குள் நடந்ததை விடபெரிசாய் என்ன நடக்கப் போகுது. காம்புக்குள்ளே சின்னச் சின்னதாய் பிரச்சினைகள நடக்கும்தானே. சாப்பிட்டுவிட்டு சும்மா இருக்கிற சனத்துக்கு வேற வேலை இல்லைத்தானே. என்ன செய்வதென்று தெரியாமல் சண்டை வரும்தானே. நீ புலி. அவன் புலி எண்டும் சண்டை வரும். சனங்கள் உங்கை சும்மா சும்மா கதைக்கினம்போல.

ஆமிக்காரன் ஆட்களை பிடிக்கிறது ஏத்திக்கொண்டு போறாங்களாமே எனக் கேட்டபோது ”எனக்குத் தெரிய நான் அப்படி எங்கட காம்பில் கேள்விப்படவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில விசயங்கள் நடந்திருக்கும்.

புலிகள் பற்றி ஒருத்தரும் கதைப்பாரில்லை. இலக்க்ஷன் பற்றி ஒருத்தருக்கும் அக்கறையில்லை. நான் நினைக்கிறேன் ரணில்தான் வருவாரெண்டு. காம்புக்கு டக்ளஸ்தான் ரெண்டு மூண்டுதரம் வந்தார். உதவிகள் கேட்டால் செய்வார். அந்த ஆள் யாழ்ப்பாணத்துக்கு நிறையச் செய்கிறார். எங்களுக்கு தேவை அபிவிருத்தி. அதை அவர் செய்கிறார் அது எங்களுக்கு நல்லது தானே.”

”எப்படி நீங்கள் வெளியே வந்தீங்கள்” என கேட்டபோது: ”அரசாங்கத்தின் லெட்டரோடை காம்புக்கு வெளியே வந்து மூன்று நாள் தங்கலாம். பிறகு திரும்ப வேணும். நான் அப்படி ரெண்டு மூண்டு தரம் வந்தனான். அடிக்கடி வந்தால் சந்தேகப்படலாம் என்பதால் ஏதும் தேவைக்காக வந்துபோவேன். அப்படி எல்லாரும் வரலாமோ இல்லையோ எனக்குத் தெரியாது. எனக்கு வந்து தங்க இடமிருக்குது சொந்தக்காரர் இருக்கினம் வாறேன். எல்லாருக்கும் அப்படி யாரையும் தெரிந்திராதுதானே. வந்தும் என்ன செய்வது. நான் வெளியே வந்து எனது குடும்பம் தங்க இடம் வேலை ஒன்று கடையில் எடுக்க அலுவல் பார்க்கிறேன். காம்பை விட்டு வெளியே போக கச்சேரியில் போர்ம் கொடுத்திருக்கிறேன். ஆமி கொமாண்டர் சைன்பண்ணி வந்ததும் போகலாம். சனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக போய்க் கொண்டிருக்கினம். எனக்குத் தெரிந்த சொந்தக்காரர் போனகிழமை போய்விட்டார். நான் இரண்டு வயதுப் பிள்ளையுடன் இருக்கிறேன். இந்த மாதக் கடைசிக்குள் நானும் போய்விடுவேன். ஊரில் தங்க இடம் இருக்கு. அங்கும் விதானையார் கையெழுத்துப் போட்டால் எங்களை விடுவினம் இப்படி பலர் போய்விட்டார்கள்.

குழந்தைகளோடை இருக்கிறவை முதல் ஊனமுற்றோர் இரண்டாவது கர்ப்பிணியாட்கள் மூன்றாவது என படிப்படியாய் ஒவ்வொரு காம்பிலும் இருந்து வெளியேபோக விடுகிறார்கள். அவர்களை வேறை காம்பில கொண்டு போய் வைத்திருப்பதாக நான் அறியவில்லை. எல்லாரையும் ஒரேயடியாக வெளியே விட ஏலாதுதானே. ஆட்களை விசாரிச்சு விசாரிச்சுத்தான் விடுவாங்கள்.

வெளியில் உதவிக்கு ஆட்கள் இருக்கிறவை போவினம். இல்லாதவை வெளியே வந்து என்ன செய்வது. எப்படிச் சீவிப்பது. வெளியில வாடகைவீடு 10 000, 15 000 என்று கேட்பார்கள். சாப்பாட்டுச் செலவு வேலை என்று எல்லாத்துக்கும் எங்கை போவது. இவ்வளவு காசு கொடுக்க இயலாத, அப்படியான ஆட்கள்தான் பெரும்பாலான ஆட்கள். அவர்கள் போனால் வன்னிக்குத்தான் போவம் இல்லாவிட்டால் எங்கும் போகமாட்டம் என்று பின்னடிக்கினம்.

என்னிடம் கைத்தொலைபேசி இல்லை. வைத்திருக்க விடமாட்டாங்கள். வைத்திருப்பவையும் ஒழித்து வைத்துத்தான் கதைப்பது. நான் உங்களுக்கு மற்றைய காம்பில் உள்ளவர்களின் தொலைபேசி இலக்கங்கள் எடுத்துத்தாறன் கதையுங்கோ” என்றார்.

”ஒரு முகாமில் இருந்து இன்னொரு முகாமுக்குப் போவதில் தடையில்லை. சில பிள்ளைகள் ஒரு முகாமில் இருந்து மற்றமுகாமுக்குப் போய்ப் படிக்கிறார்கள்” என்றார்.

(இந்த தொலைபேசி அழைப்பில் எம்முடன் பேசியவர் ஒக்ரோபர் 12ம்திகதி முகாமிலிருந்து வெளியேறி தற்போது யாழ் கோவில்ப்பற்று பகுதியில் தனது பிறந்து வளர்ந்த வீட்டில் தனது உறவினர்களுடன் இணைந்துள்ளார்)

கதிர்காமர் முகாமின் உள்ளே இருக்கும் ஒருவருடன் ஓக்ரோபர் 8ல் தொடர்பு கொண்ட போது….

தனது கைத் தொலைபேசியை மற்றவர்களுக்கு கொடுத்து எம்முடன் கதைக்க உதவுபவர்களில் ஒருவர் மாவீரர் குடும்பமொன்றைச் சேர்ந்தவர் (அவரே சொன்னார்). ஜுன் மாதத்தில் எம்முடன் கதைக்கும்போது அவரின் பார்வையில் – இப்படித்தான் புலி வீழ்ந்தாலும் காலத்துக்கு காலம் மீண்டும் வரும் என்ற எதிர்பார்ப்பு அவரிடம் தென்பட்டது. இவர் சரளமாக கதைக்கமாட்டார். அது அவர் தன்மை என்பதே என் அனுமானம். ஒக்ரோபரில் கதைக்கையில் அவர் எதுவுமே கதைக்கப் பிரியப்படவில்லை. ”என்னத்தை அண்ணை சொல்ல” என்று மிகவும் மனச் சோர்வுடன் சலித்துக் கொண்டார். ”எனக்குப் பக்கத்தில் இப்ப நிக்கிறவர் நல்லாய்க் கதைப்பார். அவரிடம் கொடுக்கிறேன். கதையுங்கோ” என்றார்.

அந்த புதியவர் என்னிடம் ”நீங்கள் யார்? என்ன செய்கிறியள்?” என்று விபரம் கேட்டபோது நாம் என்ன செய்கிறோம் என்று சொன்னேன். ”ஏன் அண்ணை தேசம் எண்டு சொல்லுறியள். கோதாரி எண்டு சொல்லுங்கோ. இவ்வளவு காலமும் நடந்தது கோதாரி இல்லையோ?. கண்டறியாத போராட்டம். சனம் பற்றி யார் நினைச்சது. தாங்கள் தாங்கள் தங்கட நலனுக்குப் போராட்டம் என்று சனத்தைச் சாகடிச்சுக் கொண்டு தங்கட குடும்பத்தைப் பார்த்தவை. போராட்டம் நடத்தியிருந்தால் இப்பிடியா முடிஞ்சிருக்கும். என்ன பிள்ளைகளுக்கு சாப்பாடு உடுப்பு படிப்பு இதுக்குத்தான் அண்ணை இப்ப போராட்டம். எங்களுக்கு மொழி, சாதி இது என்னண்ணை?. சிங்களமொழி, சனங்கள் என்ன பிழை எண்டு சொல்லுங்கோ. சனங்கள் – மனிசர் எண்ட நினைப்பு இல்லாமல் எல்லாம் நடத்தியவையள். நடந்ததுகள் நினைவுக்கு வந்தால், திருப்பி யோசிச்சால் அழுகை வருகிறது. இளம் குழந்தைகள் பொடியன்கள் பிள்ளைகள் எல்லாம் அநியாயம். இயற்கைக்கு ஒத்து வராமல்தான் இப்படி இந்த திருவிழாவை இயற்கை முடிச்சு வைச்சது” என்றார்.

முன்னர் ஈபிஆர்எல்எப் ஆதரவாளராக இருந்த 42 வயதான வசாவிளானைச் சேர்ந்த இவர் யாழ்ப்பாணத்தில் இருந்து புலிகளுடன் வன்னிக்கு இடம்பெயர்ந்தவர். இவர் தற்போது கைவசம் எதுவுமேயில்லாமல் எதிர்காலம் என்ன என்று நிச்சயம் இல்லாமல் தற்போது கதிர்காமர் முகாமில் இருக்கிறார்.

”தனிநாடு யார் அண்ணை கேட்டது. எல்லாமே புலிகளின் பம்மாத்தும் சுத்துமாத்தும் தானே. வன்னியில் இருந்த சாதாரண சனத்திடம் தனிநாடு என்ற நம்பிக்கை எண்டைக்குமே இருந்ததில்லை. புலிகளின் தொடர்ச்சியான கெடுபிடிகளே இருந்தது. புலிகள் கோவில் திருவிழா செய்வது போலவே எல்லாம் செய்தார்கள். யாரும் ஏன், எது, எப்படி என்று கேட்கமுடியாது. சொல்லும் எல்லாத்துக்கும் ஓம் சொல்ல வேணும்.

எப்பசரி மக்களின் கருத்துக்களைக் கேட்டார்களா? தாங்கள் செய்வது சரியா என்று யாரிடமும் கேட்கவில்லையே? யாருக்கும் எதுவும் தெரியாது. தங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் எண்டு இப்ப தெரியுது இவையளுக்கு என்ன தெரியும் எண்டு” என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

”முகாம்களுக்கு வெளிநாட்டு ஆட்கள் வந்து பார்த்ததாக கேள்விப்பட்டேன்” என்று நான் பேச்சை வளர்த்தேன். ‘நான் சந்திக்கவில்லை. டக்ளஸ் இப்பவும் வந்து மக்களின்ரை அபிப்பிராயத்தைக் கேட்கிறார். அவர் ஓ.கே. வளைந்து கொடுத்து செயல்படுகிறார். இப்ப எங்களுக்குத் தேவை உதவிகள். அதைப்பற்றி அபிப்பிராயம் கேட்கிறார். அரசியல் கதைப்பதேயில்லை. எல்லாம் வெளியே வந்தபின் அரசியல் கதைப்போம். இப்ப என்ன அவசரம் என்றார். அவர் சொல்லுறது சரிதானே இப்ப உள்ளது எங்கட பிரச்சினைகள்.

நான் வன்னியில் இருக்கும்போது 2 சாரம் 2, 3 சேட்டு இதைவிட ஒரு துவாய்; வேற எதுவுமில்லை. பிள்ளைகளுக்கு கொஞ்ச உடுப்பு. பழைய கொட்டில்தான் எங்கட வீடு. வேலையில்லை. புலிகளுக்கு வேலை செய்தா சம்பளம். கூலி வேலை. இப்ப வேலையில்லை. காம்பில் சாப்பாடு உடுப்பு தண்ணீர் எல்லாம் கிடைக்கிறது. பிள்ளைகள் படிக்கினம். ஆனால் அகதிமுகாம் எண்டு பெயர். பிள்ளைகள் எப்ப சரி ரெயினை புது பஸ்களை கண்டவையோ?

வன்னியில் நான் புலிகளுக்கு பதிவுக்கு கொடுத்தது சொந்தப் பெயரல்ல. ஊரில் இருந்து வரும்போதே நானும் எனது மனைவியும் இப்படித்தான் எண்டு யோசிச்சு கொடுத்தம். இல்லாவிட்டால் என்னை ஈபிஆர்எல்எப் என்று சுட்டுப் போட்டிருப்பாங்கள். இப்ப ராணுவத்திடம் எல்லாம் சொல்லி உண்மையான பெயர் கொடுத்துள்ளேன். என்னுடைய அரசாங்க அடையாள அட்டையை திண்ணை மண்ணுக்குள் புதைத்து மெழுகிவைத்திருந்தேன். இப்பத்தான் அதைப் பாவிக்கிறம்.

எனக்கு வேறு இடத்திலும் ஆட்கள் இல்லை. வேறு இடங்களுக்கு போக முடியாது. போனாலும் சாப்பாடு வீடு எல்லாத்துக்கும் என்ன செய்வது. எனது யாழ்ப்பாண வீடு இருந்த இடம் இப்ப இராணுவ முகாம். வீடு எல்லை அடையாளமே இல்லாமல் உள்ளது. திரும்பிப் போக அங்கு இடமில்லை. என்ன செய்யலாம் திடீரென்று போ என்றாலும் எங்க போறது ஒண்டுமே தெரியாத நிலவரம்.

வன்னிக்கு திரும்பப் போகமாட்டேன். புலிகளிடமிருந்த மிதிவெடிகளின் அளவு எனக்கல்லோ தெரியும். அவ்வளவும் ஊர் தேசம் எல்லாம் புதைச்சாங்கள். எல்லாம் மழை வெள்ளத்துக்கு மூடுப்பட்டிருக்கும். யாரோ துப்பரவு பண்ணித்தான் தீரவேணும். இனிமேல் வன்னிக்குள் போய் காலை கையை உயிரை இழப்பது புத்திசாலித்தனம் இல்லை. என்னை வெளியே விட்டாலும் வன்னிக்குப் போகமாட்டேன். நான் என்ன மடையனோ வன்னிக்குள்ள குடும்பத்தைக் கொண்டுபோய் கால் கையை முறிக்க. வன்னிக்குத் திரும்பப் போனால் அந்த கொலை மரண சம்பபவங்கள்தான் எங்களுக்கும் எங்கட பிள்ளையளுக்கும் திரும்ப திரும்ப நினைவுவரும். நான் வவுனியா மதவாச்சி அல்லது அனுராதபுரம் போய் இருப்பனே தவிர திரும்ப வன்னிக்குப் போகமாட்டேன். எங்கட சொந்த பந்தங்கள் எங்கே எண்டு தெரியாது எப்படி கண்டுபிடிக்கிறது.

முகாம்கள் மூடவேணும். மூடுவது என்றால் எல்லோருக்கும் எப்படி வசதிகள் செய்து கொடுக்கப் போகினம். யார் பொறுப்பு. புலி இல்லை. அரசாங்கத்திடம் எப்படிக் கேட்பது. அவனை – சிங்களவனை – கொல்ல திட்டம் போட்ட இனம் எண்ட பெயர் எங்களுக்கு. எப்படிக் கேட்க முடியும். 25 வருஷம் சனத்தின்ரை வாழ்க்கை அனியாயம். 3 வருஷம் இந்த அகதிமுகாமில இருக்கலாம். பிரச்சினையில்லை. இருக்கிற வீடு ரென்ட் சரியில்லை. மழை காத்து எண்டால் பிரச்சினை. மற்றும்படி தண்ணி கக்கூசு பிரச்சினை.

முன்னர் கொழும்பில் விவேகானாந்தா மேட்டில் கொஞ்சநாள் இருந்தனான். அங்க பொதுக் கக்கூசு தான் அண்ணை பாவித்தனான். அப்பிடியும் சீவித்த எங்களுக்கு இது என்ன புதிசோ?. இப்ப கக்கூசு அது இது எல்லாம் எங்களுக்கு பழகிப்போச்சு. அதைவிட கக்கூசு எல்லாம் திருத்தியாச்சு.

காம்பிற்கு வந்த புதிசில மன அழுத்தம் – மனப்பிரச்சினை – பெரிதாக இருந்தது. இப்ப அப்படியில்லை. வெளிநாட்டில் உள்ள புலிகள் ஆட்கள் என்ன செய்கினம். புலி முடிஞ்சா போராட்டம் முடிஞ்சுதாமோ? எங்களைப்போல சனங்கள் கஸ்ரப்பட்ட நாடுகளில் எப்பவுமே போராட்டம்தான். இந்தியாவில் சேரிப்புற மக்கள் வாழ்வது என்ன வாழ்க்கையோ?. அது போராட்டம்தானே. அதோடை பார்க்கையில் நாங்கள் இருக்கிற முகாம்களில் சாப்பாடு கிடைக்கிறது.

அவரிடம் ”உங்கள் அனுபவங்கள் கண்டது கேட்டவை எல்லாத்தையும் எழுதமாட்டீங்களா” எனக்கேட்டதற்கு எனக்கு அப்படி எழுத பெரிசாய் வராது. பேசுவேன். 30 வருஷமாக உலகத்தில் என்ன நடந்ததென்றே தெரியாது. எல்லாம் ஒரு இருண்ட காட்டில் இருந்த மாதிரி ஒரே விசயத்தை திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டு வாழ்ந்திட்டோம்.

(இந்த நண்பர்கள் இன்றும் அகதிமுகாமில் இருக்கிறார்கள்)

இவர்களது வாக்கு மூலங்கள் மட்டுமல்ல இன்னும் பலவும் தேசம்நெற் இல் வெளிவரும். உள்ளதை உள்ளபடி அவர்களுடைய மொழியிலேயே பதிவு செய்ய முயற்சிக்கின்றோம். அவர்களுடன் உரையாடும் போது அவர்கள் பட்டதுன்பங்களையும் இயலாமையையும் வெளிப்படுத்தும் போது அவர்களுக்கு ஆறுதல் அளிக்க வார்த்தைகள் இன்றி திக்குமுக்காட வேண்டியுள்ளது. குற்ற உணர்வில் மனம் குமைகின்றது. அவர்களிடம் கேள்விகளைக் கேட்கின்ற மனத்துணிவு வருவதில்லை. அவர்கள் என்ன சொல்கின்றார்களோ அதனை அவதானமாக கேட்டுக்கொண்டோம்.

வன்னி மக்கள் பற்றிய முன்னைய பதிவுகள்:

புலம்பெயர் புனைகதைக்குள் புகுந்துவந்த பயணம். : வவுனியன்

மனிதக் கொடுமையினூடாகப் பயணித்த இளம் தாயின் நேரடிச் சாட்சியம். : தொகுப்பு குமாரி

வன்னி முகாம்களை மூடுவது மட்டும் தீர்வாகாது! : த ஜெயபாலன்

அரசின் முகத்திரையைக் கிழிக்கும் வன்னி முகாம்களின் முட்கம்பிவேலி : த ஜெயபாலன்

மெல்ல வெளிவரும் நிஜங்கள் – வெளியேறி வருவோரின் வாக்கு மூலங்கள் : த ஜெயபாலன்

தொடரும் யுத்தமும் வன்னி மக்களின் ஏக்கமும் : த ஜெயபாலன்

எமது துயரக்குரலுக்கு தயவுசெய்து உங்கள் ஆதரவை தாருங்கள்! : கப்பல் அகதிகளின் கோரிக்கை.

Tamil_Boat_Refugeesகடந்த அறுபது வருட காலமாகச் சிங்கள பௌத்த இனவாத இலங்கை அரசின் அடக்குமுறைக்குள்ளாகி வரும் தமிழ் பேசும் மக்களுக்குச் சார்பாக இயங்க உலகின் எந்த அரசும் சரியான முறையில் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து மனித உரிமை மீறல்களைச் செய்து வந்த இலங்கை அரசின் இனவாதத்தின் உச்சக்கட்டமாக அண்மையில் நடைபெற்ற யுத்தம் ஆயிரக்கணக்கான உயிர்களையும் உடைமைகளையும் காவு கொண்டுள்ளது.

குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்துள்ளார்கள். பலர் தமது ஒட்டுமொத்த குடும்பத்தையுமே இழந்துள்ளார்கள். கல்வி உரிமைகளை இழந்துள்ள சிறுவர்கள், தம் வாழ்வியல்புகளை இழந்த பல உறவுகள் என்று தமிழ் மக்களின் அவலங்கள் சொல்லில் அடங்காது.

யுத்தம் முடிவுற்றதாக அரசு கூறிவரும் நிலையில் 250 000க்கும் மேற்பட்ட மக்கள் இன்றும் அகதிமுகாம் என அழைக்கப்படும் சித்திரவதை முகாம்களில் படும் கோரக் காட்சிகளை கண்டு உலகமே இன்று அதிர்ந்து போயுள்ளது. கண்டனங்களைத் தெரிவிக்கிறது. இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் தமிழ் மக்கள் இன்றும் கைது செய்யப்பட்டும் கடத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டும் அழிக்கப்படுகின்றார்கள்.

அவர்களது வாக்குமூலம்:

உறவுகளையும் வாழ்வியல்புகளையும் இழந்து பாதிப்புற்ற நாம் எம் உயிரையும் எதிர்காலத்தையும் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கோடு இலங்கை நாட்டை விட்டு வெளியேறி அகதி அந்தஸ்து மற்றும் வாழ் உரிமைகளை வழங்கும் நாடு அவுஸ்திரேலியா என்ற நம்பிக்கையில் அந்நாடு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது கடந்த 11-10-2009 அன்று சர்வதேசக் கடற்பரப்பில் இந்தோனேசியக் கடற்படையினரால் தடுக்கப்பட்டு எமது பயணம் திசைமாற்றப்பட்டு இந்தோனேசியாவில் அமைந்துள்ள மேராக் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளோம். ஆறு மாதக் குழந்தை முதல் ஒரு கர்ப்பிணிப் பெண் உட்பட அறுபத்தாறு வயதுள்ளவர் வரை கடலில் கப்பலில் தடுத்து வைக்கப்பட்டு தத்தளித்துக் கொண்டிருக்கிறோம். கடந்த இரண்டு கிழமைகளாக உலகின் ஒரு நாடாவது எம்மை ஏற்றுக்கொள்ளாதா என்று காத்திருக்கிறோம்.

பல மதங்களைச் சேர்ந்த மக்கள் வாழக் கூடியதாகவும் மற்றும் 400க்கும் மேற்பட்ட மொழிகள் பழக்கத்தில் உள்ளதாகவும் இருக்கும் இந்தோனேசியாவில் சிறுபான்மை மொழிகள்கூட தேசிய மொழியாக இருப்பது போன்ற ஜனநாயக முறைகள் பழக்கத்தில் உள்ளதை அறிந்து எமது ஜனநாயக உரிமைகளும் மதிக்கப்படும் என்று நம்புகிறோம். எவ்வித குற்றங்களையும் புரியாது அகதிகளாக வந்த எம்மை தடுப்பு காவலில் வைக்க முயல்வது எம்மை மட்டுமல்லாது எமக்கு ஆதரவு தரும் தமிழ் பேசும் முழுச்சமூகத்தையுமே துயரத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

சொந்த நாட்டிலேயே அகதிகளாகி உரிமைகள் மறுக்கப்பட்டு உறவுகள் உடமைகளை இழந்து உயிரை மட்டும் வைத்துக்கொண்டு நாம் தேடிச்செல்வது எம்மை தடுப்பு காவலில் வைக்காது எமது இளையோரின் கல்வி உயிருக்கு உத்தரவாதம் மற்றும் இதர உரிமைகளை வழங்கக்கூடிய ஒரு நாட்டையே.

ஏதாவது ஒரு அரசு எமது துயர நிலையை அறிந்து ஜக்கிய நாடுகள் சபை மூலம் அல்லது ஏதாவது ஒரு முறையில் ஆவனை செய்யும்வரை நாம் கப்பலை விட்டு வெளியேற மாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளோம். எமது தேவைகளையும் அவலத்தையும் உணர்ந்து எமது உரிமைகளை வழங்கக்கூடிய அகதி அந்தஸ்து வழங்கும் ஒரு நாடு எம்மை ஏற்றுக்கொள்ளும் என்பதில் நாம் நம்பிக்கையும் உறுதியும் கொண்டு கப்பலிற் காத்திருக்கிறோம்.

· இந்தோனேசிய, அவுஸ்திரேலிய வாழ் மக்கள் மற்றும் அங்குள்ள தொழிற் சங்கங்கள் மனித உரிமை அமைப்புக்கள் பென்கள் அமைப்புக்கள் தயுவுசெய்து எமது துயர் அறிந்து எமது கோரிக்கைக்கு ஆதரவளிக்குமாறு வேண்டுகின்றோம்.

· மனித உரிமைக்காக குரல்கொடுக்கும், ஒடுக்குமுறைக்கு எதிராக இயங்கும் உலகெங்கும் இருக்கும் அமைப்புக்கள் எமக்கு முடிந்தளவு உதவி செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

· தமிழ்நாட்டிலும் மலேசியாவிலும் வாழும் எமது சகோதர சகோதரிகளிடமும் எம்மைப் போலவே இலங்கை அரசின் அடக்குமுறைக்கு பலியாகி உலகெங்கும் வாழும் தமிழ் பேசும் மக்களை எங்களுக்காக குரல்கொடுக்கும்படியும் உரிமையுடன் கேட்டுகொள்கின்றோம்.

எமது குரல் கேட்கப்படாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் உள்ளோம். எமக்கு ஆதரவு கோரி வரும் திங்கள் 26-10-2009 அன்று கப்பலில் ஒரு போராட்டத்தை நடத்த உள்ளோம். எமக்கு வேறுவழி தெரியவில்லை. நாம் எமது இந்தக் கோரிக்கையைத் தமிழ் ஒருங்கமைப்பு மூலமாகவும், தொழிலாளர் அகிலத்துக்கான அமைப்பு மூலமாகவும் உங்களுக்கு அனுப்பிவைத்துள்ளோம். எமது துயரக்குரலுக்கு தயவுசெய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.

._._._._._.

Tamil_Boat_Refugeesஇந்தோனேசியாவில் உள்ள கப்பல் அகதிகளின் எதிர்காலம் தொடர்ந்தும் கேள்விக்குறியாக உள்ளது. இலங்கைத் தமிழர்களை ஏற்றிக் கொண்டு மலேசியாவில் இருந்து புறப்பட்ட கப்பல் ஒக்ரோபர் 10ல் இந்தோனேசிய அதகாரிகளால் தடுக்கப்பட்டது. அவுஸ்ரேலியா நோக்கிச் சென்ற இவர்கள் இந்தோனேசிய அதகாரிகளால் தடுக்கப்பட்டதை அடுத்து அவர்களை அவுஸ்திரேலியாவுக்கு அனுமதிக்க வேண்டாம் என அவுஸ்திரேலிய பிரதமர் இந்தோனேசியப் பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கிடையே இக்கப்பல் அகதிகளின் விபரங்களைத் திரட்டி அவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்துவர முயற்சிகள் எடுக்கப்படுவதாக வெளிவிவகார அமைச்சு ஒக்ரோபர் 18ல் அறிவித்து இருந்தது.

தங்களுக்கு ஏதாவது நாடு அடைக்கலம் வழங்க வேண்டும் என்று கோரி கப்பலில் இருந்தவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். தங்களுடைய கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படும் என்ற நம்பிக்கையில் அவரகள் உண்ணாவிரதத்தை பின்னர் கைவிட்டனர். இம்மக்களுடைய கோரிக்கையை வலுப்படுத்தும் வகையில் அவர்களுக்கு அடைக்கலம் வழங்கக் கோரி லண்டணில் உள்ள அவுஸ்திரேலிய தூதரகத்தின் முன்பாக போராட்டம் ஒன்றுக்கு தமிழர் ஒருங்கிணைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

இது பற்றிய விடியோச் செய்தி: http://www.youtube.com/watch?v=Qbr5kgJK3_E

இது பற்றி தமிழர் ஒருங்கிணைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை கீழே தரப்பட்டுள்ளது:

Continued Persecution of Tamil Speaking People must STOP.

Protest Called by Tamil Solidarity

Tamil_Boat_RefugeesTamil-speaking refugees on a boat off the Indonesian coast have contacted Tamil Solidarity. Their continued suffering and the denial of their rights demands an urgent response.

Join the Tamil Solidarity protest

Monday 26 October 2009 – 4:00 pm

Australia House, Strand, London W2B 4LA

War and Aftermath:
Over the last year the brutal oppression of the Tamil-speaking people in Sri Lanka by the Sinhala nationalist government has reached new levels of horror. Under the Rajapakse regime these people have faced an unending nightmare. It is estimated that over 20,000 people were killed in the last week of the war alone.

Since the government declared the end of the war in May 2009 over 300,000 people have been forcefully detained in concentration-style camps and denied the right to return to their homes.

It is estimated that among those incarcerated, without proper access to shelter, food and medicine, are 31,000 children. While the government was prepared to pour an estimated $5 million per day into its vicious war effort, little is spent to protect those in the camp against the oncoming monsoon floods which threaten a humanitarian catastrophe.

While around the world the Tamil diaspora conducted a ferocious anti-war campaign, governments in the west and in Asia remained deaf to the suffering of the Tamil-speaking people in Sri Lanka, preferring to maintain trade links with and sell arms to the Sri Lankan government.

Suffering Continues:
Now, forced by these horrendous conditions, a small number of Tamil-speaking people have managed to escape. Around the world there will be shock and anger to hear that these people, who have seen their families massacred, have so far been denied the refuge they seek.

Over 250 Tamil-speaking people remain on a boat in Merak harbour, Indonesia. 207 Sri Lankan asylum-seekers are held at the Immigration Detention Centre at Kuala Lumpar International Airport, and there are 108 Sri Lankan refugees detained at Pekan Nanas Immigration Detention Centre in Malaysia. After Canadian authorities intercepted a ship the 76 men on board were taken to jail for questioning.

Not only have these governments not acted decisively to assist the traumatised Tamil-speaking people, but they have extended their detention. That it has been suggested they be returned to Sri Lanka, to the situation they have fled, is a further indictment of the international ruling elite who has no interest in acting in the interests of ordinary people.

Solidarity Needed:
Tamil Solidarity has been in contact with the people on the boat in Merak harbour and calls for immediate solidarity action to assist their appeal for refuge. We call for a protest outside the Australian embassy in London and other countries to expose the rotten role of this government. It is clear that it is actions like this, of ordinary people in the Tamil diaspora and all communities in the trade unions, universities, schools and colleges, that are required to build a movement against the camps, against the racist discrimination against refugees and against governments who stand in the interests of big business and the rich no matter the consequences for ordinary people.

Tamil Solidarity:
For the rights of all workers and oppressed people in Sri Lanka.

Contact Senan on 07908050217 or on senan@tamilsolidarity.org

Related News: APPEAL FROM TAMIL PEOPLE FROM THE BOAT HELD AT MERAK ON THE NORTH-WESTERN TIP OF JAVA, INDONESIA : Tamil People from the boat

கிழக்கு மாகாண ஆளுனருக்கும், ஆளும் தரப்புக்குமிடையிலான முறுகல் உச்சகட்டம் – நஜிமிலாஹி

ep-map.jpgஅதிகாரங்கள் மனிதனை முதன்மைப்படுத்துகிறது. அதிகாரமுள்ள மனிதன் முன் சகலதும் அடிமைதான் என்பதுதான் இன்றைய உலக அரசியலாக காணப்படுகிறது. இந்த அரசியல் எமது நாட்டுக்கும் புதுமையானதல்ல. அரசியல் என்ற சொல்லாடல் உச்சரிக்கப்படும் பொழுது அது அதிகாரத்தையும் உள்வாங்கிக் கொண்டு அதன் தன்மையைப் பிரதிபலிக்கும் முகமாகவே இருக்கிறது. இந்த அதிகாரங்கள் என்ற வார்த்தை தற்போது கிழக்கு மாகாண சபையில் சூடான ஒரு விவாதப் பொருளாக மாறியிருப்பவதை நாம் அவதானிக்கலாம்.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின்படி மாகாண சபைகள் உருவாக்கம் இலங்கை அரசியல் அமைப்பில் இடம்பெறுகிறது. இந்தியாவிலிருக்கும் மாநில அரசாங்க முறைக்கு ஒத்ததாக இலங்கையில் மாகாண சபைகள் கொண்டுவரப்பட்டன. இருந்தாலும் இந்திய மாநிலங்களுக்கும்,  இலங்கை மாகாணங்களுக்குமிடையில் அதிகாரங்களை ஒப்பிட்டு நோக்கும் பொழுது இந்திய மாநிலங்கள் பலமானதாக காணப்படுகிறது. இருந்தாலும் இலங்கைப் பிரச்சினையை தணிக்கும் முகமாகக் கொண்டுவரப்பட்ட படியால் இலங்கை மாகாண சபைகளுக்கு குறிப்பிட்டு சொல்லக்கூடிய அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த மாகாண சபைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு சிறுபான்மை சமூகம் குறிப்பாக தமிழர்கள் தங்களது உரிமைகளை படிப்படியாக பெற்றுக்கொள்வதற்கான ஒரு ஏற்பாடாகத்தான் 13ம் அரசியல் சீர்திருத்தத்தின்படி மாகாண சபைகள் அரசாங்கமுறை புகுத்தப்பட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருதினார்கள்.

ஆனால் இந்த வழிமுறைக்கு உடன்பட மறுத்த தமிழீழ விடுதலைப் புலிகள் மாகாண அரசாங்க முறைக்கு தங்களது கடும் எதிர்ப்பை பிரயோகித்தார்கள். இந்த அரசாங்க முறையை இலங்கைக்குக் கொண்டுவந்த இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியை புலிகள் கொன்று சர்வதேச ரீதியாக மாகாண அரசாங்க முறையை தாங்கள் எதிர்பபதாக பிரபாகரன் தமது அரசியல் நகர்வை மேற்கொண்டார்.

கடைசியில் பிரபாகரனின் தோல்விக்கும் மாகாண அரசாங்க முறை முக்கிய புள்ளியாக அல்லது கருவாக இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. இலங்கைக்கு மாகாண அரசாங்க முறையை கொண்டு வந்தவர் கொலை செய்யப்பட்டு இரு தசாப்தங்களின் பின்னர் மாகாண அரசாங்க முறையை எதிர்த்தவரும் கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே,  ஆரம்பம் தொடக்கம் இன்று வரையும் மாகாண அரசாங்க முறைமை இலங்கை அரசியலில் முக்கிய பங்காளியாக காணப்படுகிறது.

இந்த வகையில் 21 வருடங்களின் பின் ஏற்படுத்தப்பட்ட கிழக்கு மாகாண சபை தற்போது அதிகாரங்கள் தொடர்பில் மத்திய அரசாங்கத்துக்கும் மாநில அரசாங்கத்துக்கும் இடையில் கேள்விகள் எழத் தொடங்கியுள்ளதை நாம் அவதானிக்கலாம். கிழக்கு ஆளுனர் தமது அதிகாரத்தைப் பயன்படுத்துவதால் மாகாண சபையை சுயமாகக் கொண்டு நடாத்த முடியாத நிலை எழுந்துள்ளதாக குற்றம் சாட்டுகிறது.

221009eastern-provincial.jpgஆளுனர் முதலமைச்சர் உட்பட அமைச்சர்களுக்கு கூடுதலான அழுத்தங்களை பிரயோகிப்பதாகவும் இதனால் கிழக்கு மாகாண மக்களுக்கு மாகாண சபையால் எதுவிதப் பயனும் கிடைக்காமல் போகும் என்ற மனப்பதிவுடன் கிழக்கு மாகாண அமைச்சர்கள் சோர்ந்திருக்கின்றார்கள். கிழக்கு மாகாண ஆளுனர் மொஹான் விஜயவிக்கிரம கிழக்கு மாகாண சபையினை தீர்மானிக்கும் சக்தியாக தென்படுகிறார். இதனை அவரே வெளிப்படையாக சொல்லியிருக்கிறார். மாகாண சபையைக் கலைக்கும் அதிகாரம் ஆளனரின் அதிகாரங்களின் கோடிட்டுக் காட்ட வேண்டிய பந்தியாகும்.

முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்த் அவர்களின் செயலாளராக கடமையாற்றிய மாமங்கராஜா முதலமைச்சரின் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இவர் 60 வயதைக் கடந்ததால் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் முதலமைச்சர் ஆளுனரிடம் மாமங்கராஜாவை இன்னும் 02 வருடங்களுக்கு பதவி நீடிப்பு செய்யுமாறு கேட்டு ஆளுனர் அதற்கான அனுமதியைக் கொடுக்க மறுத்துள்ளார். அதேபோன்று கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராகக் கடமையாற்றிய தயாபரன் என்பவரை ஆளுனர் இடைநிறுத்தம் செய்துள்ளார். இவ்வாறான சம்பவங்களால் முதலமைச்சருக்கும் ஆளுனருக்குமிடையிலான நிர்வாக முறுகல்கள் ஏற்பட்டுள்ளன.

221009hisbullah.jpgஅதேபோன்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் அதிகாரம் தொடர்பில் அடிக்கடி ஆளுனரிடம் முரண்பட்ட நிலையில் காணப்படுகிறார்.  ஒரு சாதாரண சுகாதார தொழிலாளியை நியமிக்கும் அதிகாரம் தனக்குதான் உண்டு என ஆளுனர் செயற்படுகிறார். இவ்வாறு அனைத்து துறைகளிலும் ஆளுனரின் தலையீடு இருப்பதாக அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கருத்து தெரிவித்துள்ளார். ஆளுனரின் தலையீடு அமைவதால் ஏனைய மாகாண சபைகளுக்குள்ள அதிகாரம் கூட கிழக்கு மாகாண சபைக்கு இல்லை என்று அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாண சபை அதிகாரம் தொடர்பில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகளால் கிழக்கு அபிவிருத்திகள் கூட பின்தள்ளப்படலாம் அல்லது காலம் நீடித்து செல்லலாம் என்ற கருத்தும் தற்போது காணப்படுகிறது. மக்கள் பிரதிநிதிகள் தமது சேவைகளை வழங்க முடியாத ஒரு நிலை எழுந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களை விட ஆளுனர் பலசாலியாக இருப்பது மாகாண சபை நிர்வாகத்தை கொண்டு நடத்துவதில் பல முட்டுக்கட்டைகள் ஏற்படும் என்ற கருத்தில் கிழக்கு மாகாண சபை ஆளுந்தரப்பு உள்ளது.

13ம் அரசியல் சிர்திருத்தத்தின்படி கொண்டுவரப்பட்ட மாகாண சபை அரசாங்க முறைமையின் மீது தொடுக்கப்பட்ட விமர்சனங்களில் முக்கியமானது ஆளுனர் தொடர்பானது ஏனெனில் மக்களின் விருப்புக்கு அப்பாற்பட்டவராக ஆளுனர் காணப்படுகிறார். மாகாண சபையின் எதிர்பார்ப்புக்கள் ஆளுனரின் மிதமிஞ்சிய அதிகாரத்தினால் இல்லாமல் போய்விடுகிறது. எனவே அதிகாரம் தொடர்பில் கிழக்கு மாகாண சபையில் சர்ச்சைகள் எழுந்தவாறு உள்ளன.

ஆளுனருக்கு எதிராக கிழக்கு மாகாண முதலமைச்சர் உட்பட அமைச்சர்கள் ஆளுனருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவருவதற்கு முயற்சிகள் செய்தபோதும் அதனை அறிந்த ஆளுனர் தனக்கு எதிராக மாகாண சபை செயற்பட முன்வந்தால் நான் 24 மணித்தியாலத்துக்குள் சபையைக் கலைத்து விடுவேன் என எச்சரித்துள்ளார். இதனால் கிழக்கு மாகாண சபை அமைச்சர்கள் ஆளனரின் எச்சரிக்கைக்குப் பயந்து தமது இருப்பை தக்கவைத்துக் கொண்டு காலத்தைக் கடத்தும் நிலையில் காணப்படுகிறார்கள். இவ்வாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் உட்பட அமைச்சர்கள் செல்லாக் காசாகவே இருக்கிறார்கள்.

மாகாண சபையைக் கலைத்தால் அடுத்த தேர்தலில் தமது நிலையை நினைத்துப் பயந்துபோய் காலத்தைக் கடத்துகிறார்கள் கிழக்கு மாகாண சபை அமைச்சர்கள் குழாம்.

உலக சமாதானத்தை ஏற்படுத்துவதில் ஐக்கிய நாடுகள் தவறி விட்டனவா? – புன்னியாமீன் –

un.jpgமுதலாம் உலக மகாயுத்தம் முடிவடைந்ததும் உலக சமாதானத்திற்கான அறைகூவல்கள் மீண்டும் ஓங்கலாயிற்று. உலக யுத்தங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு உலக மக்களை ஒன்றிணைக்கும் நோக்குடன் சமாதானத்தின் பக்கம் உலக மக்களின் கவனம் ஈர்க்கப்பட்டன. இவற்றின் பெறுபேறாக 1919 ஆண்டு ஜுன் மாதம் 28 ஆம்திகதி  உதயமானதே (League of Nation) சர்வதேச சங்கமாகும்.

ஆனால், காலப்போக்கில் சிற்சில நாடுகள் சர்வதேச நலனைவிட தத்தமது சொந்த நலனைக் கருத்திற் கொண்டு மேற்கொண்ட நடவடிக்கைகள் சர்வதேச ஒத்துழைப்பு எனும் உன்னத நோக்கை அடையும் முயற்சி வெற்றியளிக்காமைக்கு முக்கிய காரணமாயிற்று. சர்வதேச சங்கத்தின் நோக்கம் தோல்வி கண்டதும் மீண்டும் ஓர் உலகமகாயுத்தம் ஏற்படலாயிற்று. அதுவே 2ம் உலக மகாயுத்தமாகும்.

2ம் உலக மகாயுத்தம் முடிவடைந்த பின்னர் சர்வதேச சங்கத்தில் காணப்பட்ட குறைபாடுகள் இல்லாதவகையில் ஐக்கிய நாடுகள் சபை என்ற பெயரில் சமாதானத்தை நிலைநாட்டும் ஒரு அமைப்பு, எதிர்கால சந்ததியினரை யுத்த ஆபத்திலிருந்து காப்பாற்றும் நோக்கோடு 1945 இல் தோற்றுவிக்கப்பட்டது. 2ம் உலக மகாயுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெலும், பிரித்தானியப் பிரதமர் வின்சன் சர்ச்சிலும் அத்திலாந்திக் கடலில் கப்பலொன்றில் (1941.08.14) ஒன்றுகூடி உலக சமாதானத்தை ஏற்படுத்த முடிவுசெய்து ஒப்பந்தமொன்றைச் செய்து கொண்டனர். ஆரம்பத்தில் இந்த அமைப்பு 1 ஜனவரி 1942 முதல் போர்க்கால கூட்டணியாக செயற்பட்டது.

இதையடுத்து 1943 அக்டோபர் மாதத்தில் அமெரிக்கா,  சீனா,  பிரித்தானியா,  ரஸ்யா ஆகிய நாடுகள் மொஸ்கோவில் ஒன்றுகூடி உலகில் சமாதானத்தை ஏற்படுத்த ஒரு தனிநிறுவனம் அமைக்க வேண்டுமென முடிவு செய்தன.

இவற்றின் விளைவாக யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர், கலிபோர்னியாவிலுள்ள, சென்பிரான்ஸிஸ்கோ நகரில் (1945 ஜூலை) 51 நாடுகளின் பிரதிநிதிகள் பங்குபற்றிய ஒரு மகாநாடு கூட்டப்பட்டது. இம் மகாநாட்டிலேயே ஐக்கிய நாடுகள் சாசனம் உருவாக்கப்பட்டது. 1945 ஒக்டோபர் 24ம் திகதி இச்சாசனத்தில் சீனா, பிரான்ஸ், சோவியத் நாடு, பிரித்தானியா, அமெரிக்கா ஆகியன கைச்சாத்திடப்பட்ட பின்பே அதே தினத்தில் உத்தியோகபூர்வமான முறையில் ஐக்கிய நாடுகள் சபை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இன்றும் அக்டோபர் 24ம் திகதியே ஐக்கிய நாடுகள் தினமாகக் உலகளாவியரீதியில் கொண்டாடப்படுகின்றது. 51 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய முதலாவது பொதுச்சபை, ஜனவரி 10 1946 இல், இலண்டனிலுள்ள வெஸ்ட்மினிஸ்டர் மெதடிஸ்த மத்திய மண்டபத்தில் கூடியது. 1960இல் 100 நாடுகளும், 1980 ஆம் ஆண்டில் 154 நாடுகளும் அங்கத்துவம் பெற்றிருந்த இவ்வமைப்பில்  2009 ஆண்டு தரவுகளின் படி தற்போது 192 நாடுகள் அங்கத்துவம் வகிக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோக பூர்வ மொழிகளாக அரபு, மாண்டரின், ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்ய மொழி, எசுப்பானிய மொழி என்பன காணப்படுகின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் பொது நோக்கங்களை பின்வருமாறு சுருக்கமாகக் குறிப்பிடலாம். சர்வதேச சமாதானத்தையும் பொது பாதுகாப்பையும் பேணல், நாடுகளுக்கிடையே நட்புறவை வளர்த்தல், உறுப்பு நாடுகள் ஒரு நாட்டின் உள்நாட்டு, விவகாரத்தில் பிரிதொரு நாடு தலையிடாதிருத்தல், சர்வதேச பொருளாதார, சமூக, கலாசார மனிதாபிமானப் பிணக்குகளைத் தீர்த்தல், மனித அடிப்படை உரிமைகளையும், சுதந்திரத்தையும் பாதுகாத்தல். ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடுகள் அனைத்தும் சமமானவைகளே, எனவே அங்கத்துவ நாடுகள் தங்களுக்கிடையே ஏற்படும் பிரச்சினைகளைச் சர்வதேச அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் சமாதான முறையில் தீர்த்துக் கொள்ளல் வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையின் பிரதான அமைப்புக்களைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம். பொதுச் சபை (General Assabbly),
பாதுகாப்புச் சபை (Security Council),
பொருளாதார, சமூக சபை (Socio Economic Council),
நம்பிக்கைப் பொறுப்புச் சபை (Trustieship Council),
சர்வதேச நீதிமன்றம் (International Court of Justice),
செயலகம் (The Secretariat)

பொதுச்சபை

192 அங்கத்துவ நாடுகளையும் இது கொண்டிருக்கும். எல்லா அங்கத்துவ நாடுகளும் 5 பிரதிநிதிகளை பொதுச்சபைக்கு அனுப்பலாம். இருப்பினும் ஒருவர் மட்டுமே வாக்கிற்கு உரித்தானவர். பொதுச்சபை பொதுவாக வருடத்தில் ஒருமுறை கூடும். ஐக்கிய நாடுகள் சபையின் 64-வது வருடாந்த அமர்வு 2009 அக்டோபரில் நியூயோர்க் நகரில் நடைபெற்ற போது சமாதானம் மற்றும் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி, மனித உரிமை விருத்தி, மனிதாபிமான மற்றும் அனர்த்த நிவாரண விடயம், சர்வதேச சட்டங்கள் மற்றும் நீதி, போதைப்பொருள் தடுப்பு, ஆயுதக் களைவு, நிர்வாக விவகாரம், பயங்கரவாதத்தை ஒழித்தல் ஆகிய ஒன்பது விடயங்கள் குறித்த விவாதங்கள் நடைபெற்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் நியுயேர்க்கில் அமைந்துள்ளது. சாசனத்தின் வரையறைகளுக்குட்பட்டு எந்தப் பிரச்சினைகளையும்,  எந்த அங்கத்துவ நாடும் விவாதிக்கலாம். முக்கிய நெருக்கடிப் பிரச்சினைகளைப் பற்றிய முடிவெடுக்க மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் அவசியம்.

இதன் பொறுப்புக்கள் 7 நிர்வாகக் குழுக்கள் மூலம் நிறைவேற்றப்படும் அவையாவன: அரசியல் பாதுகாப்பு, பொருளாதாரம், சமூகம், கலாசாரம், தர்மகர்த்தா, நீதி, நிர்வாகம், சிறப்பு அரசியல் குழு என்பனவாகும். பாதுகாப்புச் சபையின் சில உறுப்பினர்களையும், பொருளாதார சமூக சபையின் அனைத்து உறுப்பினர்களையும், பொதுச் செயலாளரையும் பொதுச்சபையே தெரிவு செய்யும்.

பாதுகாப்புச்சபை

இதன் மொத்த அங்கத்தவர் எண்ணிக்கை 15 ஆகும். நிரந்தர அங்கத்துவ நாடுகள் 5, அவையாவன: சீனா, பிரான்ஸ், ரஸ்யா அமெரிக்கா, பிரித்தானியா. ஏனைய 10 நாடுகளையும் பொதுச்சபை 2 ஆண்டுகளுக்கொருமுறை தெரிவு செய்யும். பாதுகாப்புச் சபையின் அங்கத்தவர் எண்ணிக்கையை 17ஆக உயர்த்துவதற்கும் யப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு நிரந்தர அங்கத்துவத்தை வழங்கவும் கொள்கையளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதுவரை இது நடைமுறைப் படுத்தப்படவில்லை. அதே நேரம் இந்தியாவும் நிரந்தர அங்கத்துவத்தைப் பெறமுயன்று வருகிறது.

பாதுகாப்புச்சபையில் ஒரு தீர்மானத்தை எடுக்க 5 நிரந்தர அங்கத்துவ நாடுகளும் ஏனைய 4 நாடுகளும் வாக்களிக்க வேண்டும். 5 நிரந்தர அங்கத்துவ நாடுகளில் ஒரு நாடாவது பிரேரணையை நிராகரித்தால் நடைமுறைப்படுத்த முடியாது. இவ்விசேட அதிகாரம் ‘வீட்டோ” எனப்படும். இந்த ‘வீட்டோ” அதிகார முறை தற்போது பலதரப்பட்ட விமர்சனங்களுக்கு உற்பட்டு வருகின்றது. அதே நேரம் இந்த வீட்டோ அதிகாரம் ரஸ்யா, சீனாவிடம் இல்லாவிடின் மேலைத்தேய நாடுகளின் செல்வாக்கு மிகைத்து விட்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

பாதுகாப்புச் சபையின் நோக்கங்களும், செயற்பாடுகளும்

ஐ.நா.வின் நோக்கங்களுக்கும், கொள்கைகளுக்கும் ஏற்ப உலக சமாதானத்தையும், பாதுகாப்பையும் பேணல், சர்வதேச மோதல்களுக்கு வழிகோலும் அபிப்பிராய பேதங்கள் பற்றி ஆராய்தல், இத்தகைய மோதல்களைத் தீர்ப்பதற்கான வழிகளை அல்லது நிபந்தனைகளை முன்வைத்தல், ஆயுதக் குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளல், சமாதானத்திற்கெதிராக எழும் பிரச்சினைகள், ஆக்கிரமிப்புக்கள் பற்றி ஆராய்ந்து மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை முன்வைத்தல்

இச்சந்தர்ப்பத்தில் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளல், ஆக்கிரமிப்பைத் தடுக்க பொருளாதாரத் தடை, ஒழுக்க நடவடிக்கையை எடுத்தல், இராணுவப் பலத்தைப் பிரயோகித்தல் போன்ற படிமுறைகள் மேற்கொள்ளப்படும். அண்மைக்காலத்தில் ஈராக் மீது அமெரிக்க நேசப்படைகள் தாக்குதல் மேற்கொண்டமை ஐ.நா மீது அமெரிக்காவின் செல்வாக்கை நிரூபிக்கும் ஒரு நிகழ்வாகவே கருதப்படுகிறது.  

பொருளாதார சமூக சபை அங்கத்துவ நாடுகள் 54 ஐக் கொண்டது. 18 நாடுகள் 3 ஆண்டுகள் காலத்துக்குப் பொதுச்சபையால் தெரிவு செய்யப்படும். ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அமைப்புக்களை ஒன்றிணைக்கும் அமைப்பே இது. இது வருடத்தில் இரு தடவைகள் கூடும் (ஏப்ரல் மாதத்தில் நியுயேர்க்கிலும்,  ஜூலை மாதத்தில் ஜெனிவாவிலும் கூடும்)

இந்நிறுவனத்தின் கடமைகள் துணைக் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன. போக்குவரத்து, செய்தித் தொடர்புகள் குழு, புள்ளிவிபரக்குழு, சனத்தொகைக் குழு,  சமூக வளர்ச்சிக் குழு, மனித உரிமைகள் பாதுகாப்புக் குழு, சிறுபான்மையினரின் பாதுகாப்புக் குழு, பெண்கள் நல பாதுகாப்புக் குழு மேலும் ஐரோப்பிய ஆசிய,  லத்தீன் அமெரிக்கா நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கும் என தனித்தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கும்.

நம்பிக்கைப் பொறுப்புச்சபை

சுதந்திரம் பெறாத நாடுகள் தாம் வளர்ச்சி பெறும்வரை வல்லரசுகளின் பொறுப்பில் இருக்கும். அவ்வாறு இருக்கும் நாடுகளால் (உறுப்பு) நிர்வாகிக்கப்படும் நாடுகளைக் கண்காணிக்க இது அமைக்கப்பட்டது. இச்சபையில் 12 உறுப்பினர்கள் இடம்பெறுவர் 3 ஆண்டுகளுக்கொருமுறை பொதுச்சபையால் இத்தெரிவு இடம்பெறும். இன்றைய காலகட்டத்தில் நம்பிக்கைப் பொறுப்புச்சபை முக்கியத்துவம் இழந்ததொரு சபையாகவே திகழ்கின்றது.

சர்வதேச நீதிமன்றம்

இது ஹெய்க் நகரில் அமைந்துள்ளது. இந்நீதிமன்றத்தின் சட்டங்களை ஏற்றுள்ள எந்தவொரு உறுப்பு நாடும் தமது பிணக்குகளைத் தீர்த்துக் கொள்ள இந்நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கலாம். இதில் 15 நீதிபதிகள் இருப்பர் (பதவிக்காலம் 9 ஆண்டுகள்)

செயலகம்

ஐ.நா. சபையின் ஏனைய அமைப்புக்களுக்குச் சேவையாற்றவே பொதுச் செயலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் முதல்வர் செயலாளர் நாயகமாவார். இதன் முதலாவது செயலாளர் நாயகம் டிரக்லி வி என்பவராவார். தற்போதைய செயலாளர் நாயகம் ‘பன்-கீ மூன்” ஆவார்.
செயலாளர் நாயகம் பாதுகாப்புச் சபையின் சிபார்சின் பேரில் பொதுச்சபையால் தெரிவு செய்யப்படுவார். ஐக்கிய நாடுகள் சபையின் பிரதான நிர்வாகியான இவரது பிரதான கடமை உலக சமாதானத்தையும்ää பாதுகாப்பையும் பாதிக்கும் எந்த விடயத்தையும் பாதுகாப்புச் சபையின் கவனத்திற்குக் கொண்டு வருவதாகும்.

ஐக்கிய நாடுகள் சபை கொண்டுள்ள நடவடிக்கைகள் விமர்சன ரீதியில் நோக்கப்பட வேண்டியதாகும்.

சர்வதேச சங்கத்தால் உலக சமாதானத்தைப் பேண முடியாமற் போனதன் காரணமாக 2ம் உலக மகாயுத்தம் ஏற்பட்டது. இனிமேல் இதுபோன்றதொரு யுத்தம் ஏற்படக்கூடாது என்பதைப் பிரதானமாக் கொண்டு உலக சமாதானத்தை நிலைநிறுத்த வேண்டியிருந்தது. உலக மகாயுத்தங்களை எடுத்து நோக்குமிடத்து நாடுகளுக்கிடையே ஏற்பட்ட அடிப்படைப் பிரச்சினைகள் காலகதியில் விஸ்வரூபம் எடுப்பதன் காரணமாகவே யுத்தங்கள் தோற்றுவிக்கப்பட்டன. எனவே உலக சமாதானத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் நாடுகளுக்கிடையிலான பிணக்குகள் சுமுகமாகத் தீர்க்கப்பட வேண்டியதன் அவசியம் உணரப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் ஐக்கிய நாடுகள் சபை ஏற்படுத்தப்பட்ட பின் மற்றுமொரு உலக யுத்தம் ஏற்படவில்லை. இவ்வடிப்படையில் நோக்குமிடத்து ஐ.நா. அமையம் உலக சமாதானத்தை ஏற்படுத்த வில்லையென்று முற்றுமுழுதாகக் கூறமுடியாது.
பல சந்தரப்பங்களில் ஐ.நா. சபையின் அங்கத்துவ நாடுகளிடையே ஏற்பட்டுள்ள பிணக்குகளை (குறுங்காலப் பிணக்குகள் அல்ல நீண்ட காலப் பிணக்குகள்) ஐக்கிய நாடுகள் சபையினால் தீர்க்க முடியாமற்போன சந்தர்ப்பங்களும் உண்டு. உதாரணமாக மத்திய கிழக்குப் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண முடியாமல் இதுவரை ஐ.நாவின் பிரயத்தனங்கள் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளமை. 1967 ஆம் ஆண்டு ஐ.நா வின் தீர்மானத்தை மீறி இஸ்ரேல், பலஸ்தீன் பகுதிகளை ஆக்கிரமித்தமை, – 1968 ஆம் ஆண்டில் சோவியத் – செக்லோஸ்லவியா பிரச்சினை, 1974 ஆம் ஆண்டு துருக்கியின் சைப்ரஸ் படையெடுப்பு, 1991 ஆம்ஆண்டு அமெரிக்க ஈராக் யுத்தம், அண்மைக் காலத்தில் அமெரிக்க – ஈராக், அமெரிக்க – ஆப்கான் யுத்தம்…   இதைப் போன்ற காரணங்களை எடுத்து நோக்குமிடத்து ஐ.நா. சபை உலக சமாதானத்தைப் பேணவில்லை என்ற கூற்றில் சில உண்மைகள் இருப்பதை மறுக்க முடியாது.

ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகளை நடைமுறைப் படுத்துகையில் ஏற்படக்கூடிய சிற்சில பிரச்சினைகள் உலக சமாதானத்திற்கான தலையீடாக அமைந்து காணப்படுகின்றன. இவற்றை பின்வருமாறு சுருக்கமாக நோக்கலாம்.

பிரச்சினை நிலைகளில் ஐ.நா. சபையின் யோசனைகளை கட்டாயம் ஏற்க வேண்டும் என்ற நிலை இல்லாமை. சட்ட அதிகாரம் பொருந்தியதாக இன்மை. வல்லரசுகள் ஐ.நா.சபைக்குப் புறம்பான முறையில் தனது பலத்தினைப் பிரயோகித்தல் அமைப்பினுள் வல்லரசுகளின் தலையீடு. இத்தகைய தலையீடுகளுக்கிடையே ஐ.நா. சபை செயற்பாடு; சிக்கல்களை எதிர் நோக்குகின்றன. எனவே, உலக சமாதானத்தை ஏற்படுத்துவதில் ஐ.நா. சபை தவறிவிட்டது என்ற கருத்து சற்று உண்மையாகின்றது சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யம் என வர்ணிக்கப்பட்ட பிரித்தானியா 2ம் உலகப் போரின் பின்னர் தன் முதன்மையை இழக்க, அமெரிக்கா, சோவியத் ரஸ்யா ஒன்றியம் ஆகிய இரு பெரும் வல்லரசுகள் எழுச்சி பெற்றன. முன்பு பிரித்தானியாவின் தனியுரிமையாக இருந்த உலக நிர்வாகம்,  பொருளாதாரச் சுரண்டல், இராணுவ ஆதிக்கம் என்பன இவ்விரு வல்லரசுகளுக்கிடையேயும் பங்கிடப்பட்டன. இவ்விரு வல்லரசுகளுக்கிடையிலான பனிப்போர் (Cold War) பல சிறிய நாடுகளை நசுக்குவதன் மூலம் செயற்பட்டன. தவிர மறை முகமாக ஐ.நா சபை அமெரிக்காவின் கைப்பொம்மையாகவே செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது.

2ம் உலக மகாயுத்தம் முடிவடைந்து இன்றுவரை பல தசாப்தங்கள் கழிந்துவிட்டன. ஆனால், 1ம் உலக மகாயுத்தம் முடிவடைந்து 2 தசாப்தங்களுக்குள்ளேயே 2ம் உலக மகாயுத்தம் ஏற்பட்டுவிட்டது. எனவே 2ம் உலக மகாயுத்தத்தின் பின்னர் மீண்டும் ஒரு உலக மகாயுத்தம் ஏற்படாமைக்கு ஐ.நா. சபை முழுமையான காரணியா? இவ்வினாவினைச் சற்று அழுத்தமான முறையில் ஆராய்தல் வேண்டும். எவ்வாறாயினும் உலக சமாதானத்தைப் பேணத்தக்க முறையில் சில அத்தியாவசியமான கருமங்களை இது ஆற்றிவருவதை எம்மால் மறுக்கமுடியாது.

வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்களின் வாழ்வாதார தொழிலை மேம்படுத்த உலகவங்கி 8.6 பில்லியன் ரூபா நிதி உதவி!

23wb_jayasundara.pngநாட்டில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களின் வாழ்வாதார தொழிலை ஊக்குவிக்கும் நோக்கில் 8.6 பில்லியன் இலங்கை ரூபாவினை வழங்க உலக வங்கி முன்வந்துள்ளது என நிதி,  திட்டமிடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கான ஒப்பந்தம் நேற்று நிதி, திட்டமிடல் அமைச்சில் வைத்து கைச்சாத்திடப்பட்டது. அரசாங்கத் தரப்பில் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.பி. ஜயசுந்தரவும் உலக வங்கியின் வதிவிடப் பணிப்பாளர் நாக்கோ இஷியும் இதில் கையொப்பமிட்டனர்.

செயற்படுத்தப்பட்டு வரும் சமுதாய அபிவிருத்தி மற்றும் வாழ்க்கைத் தொழிலை முன்னேற்றும் செயற்திட்டத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகளுக்காக இந்நிதி பயன்படுத்தப்படும்

இச் செயற்திட்டத்தின் மூலம் ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த 800 பின்தங்கிய கிராமங்களிலுள்ள ஒரு மில்லியன் மக்கள் நன்மையடையவுள்ளனர்.  உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் பதுள்ளை,  மொனராகலை,  அம்பாந் தோட்டை,  கேகாலை,  நுவரெலியா,  இரத்தினபுரி மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களை இலக்கு வைத்து இச்செயற்திட்டம் அமுல்படுத்தப் படும்.

இதன் பிரதான நோக்கம் கிராம அபிவிருத்தி, கிராமங்களுக்கிடையிலான தொடர்பை அபிவிருத்தி செய்தல்,  வாழ்க்கைத் தொழிலை முன்னேற்றல் என்ப னவாகும். தேச நிர்மாண மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் கண்காணிப்பின் கீழ் கெமிதிரிய மன்றம், சமுர்த்தி அதிகார சபை அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலாளர்களுடன் இணைந்து இத்திட்டத்தை செயற்படுத்தவுள்ளது.

வியட்நாம் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் செய்ய இணக்கம்

231009mahi-nuban.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பை ஏற்றுக் கொண்ட வியட்நாம் ஜனாதிபதி நுயன் மின் ட்ரயட்,  இலங்கைக்கு விஜயம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வியட்நாம் சென்றிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந்நாட்டு ஜனாதிபதியை இலங்கை நேரப்படி நேற்று மாலை சந்தித்து இருதரப்பு பேச்சு நடத்தினார். இதன்போதே இந்த அழைப்பு முன் வைக்கப்பட்டது.

இச்சந்திப்பின்போது இரு அரசாங்கங்களுக்குமிடையில் முக்கிய பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. குற்றச்செயல்களை தடுத்தல், இரு நாடுகளினதும் பிராந்தியங்களினதும் பாதுகாப்பை பலப்படுதல் தொடர்பான ஒப்பந்தங்களில் இருநாடுகளும் கைச்சாத்திட்டன.

இரு தரப்பு சந்திப்பின்போது ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ, தென் கிழக்காசிய நாடுகளில் வியட்நாம் பொருளாதாரத்துறையில் பெரும் வளர்ச்சியடைந்து வருவதாக அந் நாட்டு ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினார். இரு நாடுகளினதும் இருதரப்பு வர்த்தகத்தை வலுப்படுத்தும் வகையில் விசாயம் மற்றும் மீன்பிடித்துறை குறித்தும் இச்சந்திப்பின்போது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும் யுத்தம் முடிவடைந்ததுடன் நாட்டில் வர்த்தகம் மற்றும் முதலீடுகளுக்கான சந்தர்ப்பம் அதிகரித்திருப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். பயங்கரவாதத்தை தோற்கடித்தமை க்காக இலங்கை ஜனாதிபதியை வியட்நாம் ஜனாதிபதி பாராட்டியதுடன் இலங்கையில் முதலீடு செய்வது தொடர்பாகவும் கூடிய கவனம் செலுத்தியுள்ளார்.

புலிகளின் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் இரண்டு மீட்பு

புலிகள் தமது பயங்கரவாத செயற்பாடுகளுக்காக பயன்படுத்திய விமான எதிர்ப்பு ஏவுகணைகளான இரண்டு சேம் மிசைல்களை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று கைப்பற்றியிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இராணுவத்தின் 8வது செயலணியின் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைவே புதுக்குடியிருப்பு இரணைப்பாளை எனும் இடத்திலிருந்து நேற்று இரண்டு விமான எதிர்ப்பு ஏவுகணைகளும் மீட்கப்பட்டுள்ளன.

புலிகள் தம்மிடமிருந்த அதிசக்தி வாய்ந்த ஏவுகணைகளைக் கொண்டு கடந்த காலங்களில் விமாப் படையினரின் விமானங்களை இலக்கு வைத்து பல்வேறு பயங்கரவாதச் செயற்பாடுகளை நடத்தியமையையும் பிரிகேடியர் நாணயக்கார சுட்டிக்காட்டினார்.

இதேவேளை அப்பகுதியிலிருந்து எம்.பி.எம்.ஜி உள்ளடக்கப்பட்ட ஒரு பீப்பாயும் 240 லீற்றர் மண்ணெண்ணெய் கொண்ட 10 பீப்பாய்களும், பல்வேறு வகையான மோட்டார் குண்டுகளும் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இராணுவத்தின் 8வது செயலணியின் படைத் தளபதியான ரவிப்பிரிய லியனகே தலைமையிலான புலனாய்வுப் பிரிவினரே நேற்று இவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.

அமெரிக்க இராஜாங்க அமைச்சின் அறிக்கையை காலாவதியாக்கும், முகாம் மக்களை வெளியேற்றும் இலங்கை அரசின் அறிவிப்பும், தொடரும் மௌனமான அடையாள அரசியல் அழிப்பும் : த ஜெயபாலன்

US_State_Department_Report_on_Sri_Lankaஅமெரிக்க அரசு இலங்கை அரசின் நடந்து முடிந்த யுத்தம் பற்றிய அறிக்கையை இன்று (ஒக்ரோபர் 22) வெளியிட்டுள்ள அதே நேரம் வன்னி முகாம்களில் உள்ள மக்களில் 40 000 பேரை மீள்குடியேற்றுவதற்கான அறிவிப்பை இலங்கை அரசு இன்று (ஒக்ரோபர் 22)ல் வெளியிட்டுள்ளது. நடந்த முடிந்த யுத்தத்தில் பாதுகாப்பு வலயங்களை அறிவித்துவிட்டு அந்த பாதுகாப்பு வலயங்களை நோக்கி இலங்கைப் படைகள் செல் தாக்குதல்களை நடத்தி உள்ளனர், தற்காலிக யுத்த நிறுத்தங்களை அறிவித்துவிட்டு யுத்த நிறுத்தம் முடிவடைவதற்கு முன்னரே அரச படைகள் தாக்குதலை நடத்தி உள்ளனர், சரணடைந்த விடுதலைப் புலிகளை இலங்கை அரசு சட்டவிரோதமாகக் கொலை செய்துள்ளது, வன்னி மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாம்கள் மிக மோசமான நிலையில் இருக்கின்றது போன்ற குற்றச்சாட்டுக்களை அமெரிக்க ராஜாங்க அமைச்சின் அறிக்கை கொண்டுள்ளது. இந்த அறிக்கையை சர்வதேச அரங்கில் பலவீனப்படுத்தி அதனை பெரிது பண்ண விடாமல் செய்யும் வகையில் இலங்கை அரசு ஏற்கனவே திட்டமிட்டபடி வன்னி முகாம்களில் இருந்து ஒரே தடவையில் 40 000 பேரை விடுவிக்கும் அறிவிப்பை வெளியிட்டதுடன் இன்று 5700 பேரை விடுவித்தும் உள்ளது. 

இவ்வாண்டு முடிவிற்குள் இலங்கை அரசு வன்னி முகாம்களில் உள்ள 80 வீதமான அவர்களது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்துவதில் உறுதியாக இருப்பதாக அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த சர்வதேச அபிவிருத்திச் செயலகத்தின் செயலாளர் மைக்கல் போஸ்ர் நேற்று (ஒக்ரோபர் 21)ல் பிரித்தானிய பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போது தெரிவித்தார். வன்னி முகாம்களில் சுகாதாரம், மனிதத்துவ உதவிகளுக்கான அனுமதி இன்னமும் மட்டுமப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் குடும்ப உறுப்பினர்கள் பிரிக்கப்பட்டு இருப்பதாகவும் அதீத இராணுவ கட்டுப்பாடு பற்றி தாங்கள் கரிசனை கொண்டிருப்பதாகவும் மைக்கல் போஸ்ரர் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் தெரிவித்தார். தான் ஏப்ரலில் விஜயம் செய்த போது இருந்த நிலைமைகளிலும் தற்போதுள்ள நிலை முன்னேற்றகரமாக இருப்பதாகத் தெரிவித்துள்ள அவர் அடிப்படைத் தேவைகளான உணவும் உறைவிடமும் அனைவருக்கும் வழங்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாண்டு முடிவிற்குள் 80 வீதமானவர்களை மீளக் குடியேற்றுவதற்கான கண்ணி வெடிகளை அகற்றுவது போன்ற பணிகளுக்கு 500 000 பவுண்களை வழங்க உள்ளதாகவும் அவர் அறிவித்தார்.

இலங்கைகயின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு வழங்கப்பட்ட வரி நீக்கச் சலுகையை – ஜிஎஸ்பி பிளஸ் யை நீக்குவது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த மைக்கல் போஸ்ரர்அது தொடர்பாக வெளிவந்துள்ள அறிக்கை சுட்டிக்காட்டுகின்ற விடயங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாகத் தெரிவித்தார். தொழிற்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் சினோபிம் மக்டோனா ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை நீக்க வேண்டும் என்று குறிப்பிடுகையில் கொன்சவேடிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜெப்ரி கிளிப்ரன்-பிறவுன் ’80 வீதமான மக்களை கிறிஸ்மஸ்ஸிற்கு முன்னதாக மீளக்குடியமர்த்தவும் மீளவும் உறவுகளை வலுப்படுத்தவும் இலங்கை அரசாங்கத்தை சம்மதிக்க வைப்பதற்கு ஜீஎஸ்பி பிளசை நீக்குவதா ஆரோக்கியமான நடவடிக்கை? இதனையா வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களும் பிரித்தானியாவில் உள்ள இலங்கையர்களும் தீவிரமாக எதிர்பார்க்கிறார்கள்’ என்று கேள்வி எழுப்பினார்.

அங்கு மைக்கல் போஸ்ரர் மேலும் தெரிவிக்கையில் செப்ரம்பரில் 32 000 பேர் வன்னி முகாம்களில் இருந்து வெளியேறி உள்ளனர் என்றும் மேலும் 41 000 பேரை மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சியில் மீள்குடியேற்ற ஐஓஎம் இன் உதவியை நாடி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிரித்தானிய பாராளுமன்ற விவாதமும் இலங்கை அரசின் 40 000 பேரை விடுவிக்கின்ற அறிவிப்பும் இலங்கை அரசு தான் இழந்த சர்வதேச அங்கிகாரத்தை மீளவும் தக்க வைப்பதற்கான நடவடிக்கையில் இறங்கி இருப்பதை வெளிப்படுத்துகின்றது. தமிழகத்தில் இருந்து சட்டசபை உறுப்பினர்களை வரவழைத்து அவர்களது வேண்டுகோள்களை ஏற்றுக்கொள்வது போன்ற ஒரு நடவடிக்கையையும் எடுத்து வன்னி முகாம்களில் உள்ளவர்கள் தற்போது ஆயிரக்கணக்கில் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். முகாம் மக்களை குறிப்பிட்ட காலத்திற்குள் விடுவிப்பது என்ற திட்டம் இலங்கை அரசிடம் ஏற்கனவே இருந்தது என்பதும் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது என்பதும் பற்றி தேசம்நெற்றில் பரவலாக செய்திகள் வெளிவந்திருந்தது. மேலும் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள படையினர் பலரும் இப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்நடவடிக்கைகள் விரும்பியோ விரும்பாமலோ சர்வதேச சமூசத்தை மீண்டும் வென்றெடுத்து தங்கள் மீதுள்ள அவப்பெயரை நீக்குவதற்கான முயற்சியாகவே இருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களும் புலித் தமிழ் தேசியவாதிகளும் புலி மார்க்ஸிஸ்ட்டுக்களும் பிரச்சாரம் செய்வது போன்ற ஒரு முரட்டுத்தனமான முட்டாள்தனமான இன ஒடுக்குமுறையை இலங்கை அரசு மே 18ன் பின் மேற்கொள்ளவில்லை. தற்போது தமிழ் அரசியல் அடையாளத்தை நீண்ட காலப்போக்கில் இல்லாதொழிக்கின்ற நாசுக்கான மௌனமான அடையாள அரசியல் அழிப்பையே இலங்கை அரசு மேற்கொள்கிறது. அதில் தமிழ் அரசியல் தலைமைகளால் பணயம் வைக்கப்பட்டு முள்ளிவாய்க்காலில் கைவிடப்பட்ட மக்களுக்கு இலங்கை அரசினால் மட்டுமே தலைமை கொடுக்கும் ஆளுமை உள்ளது என்பதை இலங்கை அரசு தனது ஒவ்வொரு நடவடிக்கையின் மூலமும் உறுதிப்படுத்தி வருகின்றது.

தமிழக சட்டசபைக் குழுவையும் பிபிசி ஊடகவியலாளர்களையும் வன்னி முகாம்களுக்குச் செல்ல அனுமதித்த அரசு தமிழீழ விடுதலைப் புலிகளின் பினாமிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பை வன்னி முகாம்களுக்கு அனுமதிக்கவே இல்லை. அரசு அனுமதிக்காவிட்டாலும் அந்த மக்களைப் பார்க்க தங்களை அனுமதிக்கும்படி இவர்கள் போராடவும் இல்லை. ஏதாவது வகையில் முகாம்களில் உள்ள மக்களுக்கு தங்கள் உதவிகளை நல்கவும் இல்லை. அதே போன்று சமாதான காலத்தில் பொங்கு தமிழ் கொண்டாடி போர் முழக்கம் செய்த புலம்பெயர் தமிழர்கள் மிக முட்டாள்தனமாக புலிகளின் முல்லைத்தீவு கடற்கரைக்கு வணங்கா மண் அனுப்ப பல மில்லியன் பவுண்களைச் செலவழித்தனர். இன்று அவ்வளவு மில்லியன் பவுண்களும் அவத்தில் அழிந்தது. ‘300 000 மக்களுக்கு நாங்கள் எதற்காக உதவ வேண்டும்’ ‘அது அரசின் கடமை’ என்று சொல்லி தங்கள் குறைந்தபட்ச பொறுப்புகளையும் தட்டிக் கழித்தது புலம்பெயர் சமூகம். (தனிப்பட்ட முறையில் சில உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்பது மறுப்பதற்கில்லை.) அம்முகாம்களில் உள்ள மக்களுக்கு உதவுவது தவறு, அம்மக்கள் வலியுடன் இருந்தால் தான் போராடுவார்கள் என்று இலங்கை அரசின் கைகளிலேயே அம்மக்களைத் தள்ளிவிட்டுள்ளனர். இவர்கள் தலைவரை விட்டுவிட்ட வெளியேறியதற்காக அம்மக்களை துரோகிகள் என்றும் பட்டம் கொடுத்தனர். இன்று அம்மக்களுக்குள்ள ஒரே நம்பிக்கை இலங்கை அரசு மட்டுமே என்ற நிலையை ஏற்படுத்தியதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளினதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் வங்குரோத்து அரசியல் மட்டுமல்ல புலத்தில் உள்ள புலி ஆதரவு அறிவுகளின் புலி மார்க்ஸிஸ்டுக்களின் சிந்தனையும் தான் காரணம். ஆயிரக் கணக்கில் மக்கள் கொல்லப்பட்டால் தான் போராட்டம் உக்கிரமடையும் சர்வதேசம் தலையிடும் என்ற ஆலோசனை ஆங்கிலம் பேசுகின்ற நாடுகளில் உள்ள கோட்சூட் அணிந்த புலிக் கனவான்களின் ஆலாசணை.

சமையற் குறிப்பெடுத்து சமையல் செய்பவர்கள் போல் சிவப்புப் புத்தகம் வாசித்து புரட்சி செய்ய புறப்பட்ட பேப்பர் மார்க்ஸிட்டுக்கள் இப்பொது இணையம் வசதியாக உள்ளதால் கூகிள் மார்க்ஸிட்டுக்கள். உண்மையில் இவர்கள் குணாம்சத்தில் மார்க்ஸிசத் தோல் போர்த்தியிருக்கும் புலிகள். தலைவர் வே பிரபாகரன் நத்திக் கடலில் விட்ட ‘போராட்ட’ குத்தகையை தாங்கள் பொறுப்பெடுத்த விட்ட கனவில் நிதர்சனம் நடத்துகின்றனர். மார்க்ஸிய கருத்துக்களை முன்னெடுப்பதாகக் கூறுபவர்கள் நடைமுறையில் மக்களையே கோட்டைவிட்டு விடுகின்றனர். அது மார்க்ஸிய தத்துவத்தின் தவறு அல்ல. அதனை முன்னெடுப்பவர்களின் பலவீனமும் அர்ப்பணிப்பின்மையும். இது புலம்பெயர் தமிழ் சூழலுக்கு மிகவும் பொருந்தும். ஏனெனில் இங்கு சொகுசு மார்க்ஸிட்டுக்கள் மலிந்துவிட்டனர்.

அதற்காக அனைவரையும் ஒருங்குசேர ‘சொகுசு மார்க்ஸிஸ்ட்டுகள்’ என்ற வரையறைக்குள் அடைக்க முடியாது. நம்பிக்கையான சில போராட்டங்களும் முயற்சிகளும் இடம்பெறவே செய்கின்றன. இலங்கையில் உள்ள அனைத்து ஒடுக்கப்பட்ட சமூகங்கள் சார்பாகவும் குரலெழுப்பப்ட வேண்டியதன் அவசியத்தை குயின்ஸ்மேரி பல்கலைக் கழக கண்டனக் கூட்டத்தில் இளம்தலைமுறை மாணவர்கள் முன்வைத்தனர். வரலாற்றை சரியாகக் கற்றுக்கொள்ளத் தவறினால் அது மீளவும் நடைபெறுவதைத் தடுக்க முடியாது என்றும் ஐ நா போன்ற அமைப்புகளிடம் எமது கோரிக்கைகளை முன் வைப்பதும் அவர்களிடம் எதிர்பார்ப்பதும் அர்த்தமற்றது என்றும் மாணவர்கள் தங்கள் கருத்துக்களை வெளியிட்டனர். அண்மைக்காலத்தில் இடம்பெற்ற ஒரு இடதுசாரி அமைப்பின் கூட்டத்தில் மாணவர்கள் கலந்துகொண்டு முன்னின்று செயற்பட்டதை முதற்தடவையாக அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

ஒக்ரோபர் 17ல் ‘தமிழர் ஒருங்கிணைப்பு’ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் பல்கலைக் கழக தமிழ் மாணவர்கள் நூறுபேர் வரை கலந்துகொண்டனர். அவர்கள் அவர்களில் பல்வேறு அரசியல் பின்னணிகளைக் கொண்டவர்கள் இருந்த போதும் விவாதத்திற்கும் மீளாய்விற்கும் தாங்கள் தயார் என்பதை தங்கள் கருத்துக்கள் மூலம் வெளிப்படுத்திக் கொண்டனர். ‘தமிழர் ஒருங்கமைப்பு’ கடந்த சில மாதங்களாக உலகின் பல்வேறு பாகங்களிலும் சிறிய அளவிலாயினும் தனது போராட்டங்களை முன்னெடுத்து வந்துள்ளது. ஆனால் இப்போராட்டங்களில் கலந்துகொண்டவர்களில் பெரும்பான்மையினர் இளைஞர்களும் யுவதிகளும் என்பது குறிப்பிடத்தக்கது. அலையென அடித்துச் செல்லும் குறும் தமிழ்த் தேசிய அலையை எதிர்த்து தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்கள் என்று ஒடுக்கப்பட்ட மக்களது குரல்களும் ‘கீபோட்டுக்கு’ அப்பால் அங்கு மட்டுமே தற்போது ஒலித்து வருகின்றது.

இன்று இலங்கை அரசு மிக நாசுக்காக தனது மௌனமான தமிழ் அரசியல் அடையாள அழிப்பு முயற்சிகளை மேற்கொள்கின்றது. இலங்கை அரசு இனவாத அரசாக இருந்த போதும் அதனிடமுள்ள விவேகத்தையும் திட்டமிடல்களையும் அதனை நடைமுறைப்படுத்துகின்ற வேகத்தையும் எதிர்கொள்கின்ற ஆற்றல் இலங்கையிலும் சரி புலம்பெயர் தேசங்களிலும் சரி தமிழ் அரசியல் சக்திகளிடையே மிகக் குறைந்த அளவிலும் இல்லை என்பதே வேதனையான உண்மை. கட்சி அரசியல், குழுவாத அரசியல், புலி அரசியல் எனத் தங்கள் அடையாள அரசியலை நிறுவுவதிலேயே அவர்கள் வலு அவதானமாக இருக்கின்றனர். குறிப்பாக புலம்பெயர் தேசத்தின் குழுவாத அரசியலுக்கும் இலங்கையில் உள்ள தமிழ் கட்சிகளின் அரசியலுக்கும் பாரிய வேற்றுமைகள் கிடையாது. தங்கள் இருப்பை அடையாளப்படுத்துவதற்கு இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள் அறிக்கை விடுவார்கள். கடிதம் எழுதுவார்கள். புலத்து குழுவாதிகள் தங்கள் இணையங்களில் அல்லது சார்பு இணையங்களில் கட்டுரை எழுதுவார்கள். தேவைப்பட்டால் கடிதமும் எழுதுவார்கள். ஆனால் பாதிக்கப்பட்ட மக்கள் இலங்கை அரசின் முடிவுகளுக்காக காத்திருப்பதைத் தவிர அவர்களுக்கு வேறுவழியில்லை.

இலங்கை அரசின் மிக நிதானமான திட்டமிடல் காலவரையறை வைத்து புலிகளை அழித்தொழிக்க வழிகோலியது. இன்று அதே நிதானத்துடன் தமிழ் மக்களது அரசியலைப் பலவீனப்படுத்துவதை நோக்கி அரசு நகர்கின்றது. அதில் குறிப்பிடத்தக்க வெற்றியும் கண்டு வருகின்றது. ஜனாதிபதி மகிஹிந்த ராஜபக்ச ஒரு ஸ்ரண்ட் மாஸ்ரர். புலிகளை தான் குறிப்பிட்ட கால வரையறைக்குள் முடிவுக்குக் கொண்டு வந்ததாக சிங்கள மக்களிடம் பெயரெடுத்தவர். தான் குறிப்பிட்ட 180 நாள் காலக்கெடுவினுள் வன்னி முகாம்களையும் மூடிவிடுவேன் என்று மீண்டும் மீண்டும் கூறி வந்தவர். அதனை தற்போது ஒரு ஸ்ரண்ட் ஆகவே அறிவித்தும் உள்ளார். இலங்கை அரசு இவ்வாறான ஒரு ஸ்ரண்டைச் செய்யும் என்பதனை பலர் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். நம்பகமற்ற செய்திகளைப் பரப்பி, செய்திகளை தங்கள் அரசியலுக்கேற்ப திரிபுபடுத்தி உண்மையான விடயங்களும் மூடிமறைக்கப்படுவதற்கு வழிசெய்யப்பட்டது. இலங்கை அரசு நாசுக்காக செய்து வருகின்ற மௌனமான அடையாள அழிப்பை (தமிழ் மக்களை சுட்டுக் கொல்லாமல் இளம்பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தாமல்) அம்பலப்படுத்த இவர்களுக்கு முடியவில்லை.

ஸ்ரண்ட் மாஸ்ரர் வன்னி முகாம்களை அடுத்த ஆண்டு முற்பகுதிக்குள் மூடிவிட்டால் இங்குள்ள பலருக்கு போராடவும், குரலெழுப்பவும் விடயமே இருக்காது. ஏனெனில் இவர்களிடம் இருப்பது வெறும் உணர்ச்சியும் வேகமும் மட்டுமே. புலம்பெயர்ந்து வாழும் புலிகளின் சில முக்கிய உறுப்பினர்களுக்கு வன்னி முகாம்கள் மூடுப்படுவதில் உள்ளுக்குள் மிகுந்த புழுக்கம். ஏனென்றால் முகாம்களை மூடினால் போராட முடியாது என்ற கவலை. இதே கவலை மே 18க்குப் பின் சரணடைந்த போரளிகள் வகைதொகையின்றிக் கொல்லப்படவில்லை என்பதிலும் பெண்கள் வகைதொகையின்றி பாலியல் வல்லுறவுக்கு உட்படவில்லை என்பதிலும் இருந்தது. தங்களது எதிர்மறை அரசியலை முன்னெடுக்வே இவர்கள் களம் தேடுகின்றனர். அந்த அரசியலை மட்டுமே இவர்கள் அறிந்து வைத்துள்ளனர். அதனால் இலங்கை அரசு மேற்கொள்கின்ற மெனனமான அடையாள அழிப்பிற்கு முகம்கொடுக்க இவர்களால் முடியவில்லை.

தற்போது அரசு மேற்கொண்டு வருகின்ற நடவடிக்கைகள் தான் இழந்த கௌரவத்தை மீள்விப்பதை நோக்கிப் படிப்படியாக நகர்கின்றது. இந்திய அரசை தனக்கு ஆதரவாகக் கொண்டிருந்த நிலையில் இருந்து தற்போது புலிகளின் முக்கிய ஆதரவுத்தளமான தமிழகத்தை அரசு தன்பக்கம் வளைத்துப் போட்டுள்ளது. தனது 180 நாள் உறுதிப்படி வன்னி மக்களை மீள்குடியேற்றுகிறேன் என்றும் அரசு அறிவிக்க ஆரம்பித்துவிட்டது. அந்த ஆரம்பத்திலேயே தனக்கு எதிராக வரவிருந்த அமெரிக்க இராஜாங்க அமைச்சின் அறிக்கையை காலாவதியான அறிக்கையாக்கும் வகையில் தனது காயை இலங்கை அரசு நகர்த்தி உள்ளது.

அதுமட்டுமல்ல அடுத்த ஆறு மாத காலத்திற்குள் ஜிஎஸ்பி பிளஸ் சலுகை தொடர்பான முடிவெடுக்கப்படும் போது இலங்கை அரசு ஐரோப்பிய ஒன்றியத்தில் தனக்குச் சாதகமான நிலையை ஏற்படுத்தினால் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனாலும் அரசின் மௌனமான தமிழ் அரசியல் அடையாள அழிப்புத் தொடரும். அதனை எதிர்கொள்ளுமா எமது அரசியல் சக்திகள்?

ஒக்ரோபர் 21ல் பிரித்தானிய பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதம்:

House of Commons : Wednesday 21 October 2009 : Oral Answers to Questions

International Development : Sri Lanka

Mr. Jim Cunningham (Coventry, South) (Lab): What his most recent assessment is of the humanitarian situation of refugees in Sri Lanka; and if he will make a statement.

The Parliamentary Under-Secretary of State for International Development (Mr. Michael Foster): Two weeks ago, I visited Sri Lanka to see for myself the situation of the 250,000 internally displaced people detained in camps. Conditions have improved there compared with my previous visit in April, with basic needs such as food and shelter being met. However, health care and humanitarian access remain inadequate and we are concerned about military oversight of the camps and family separations. We also believe that conditions will deteriorate during the monsoon season, which is about to start. While I was in Sri Lanka, I repeated the United Kingdom’s call for freedom of movement for all the IDPs so that they can go back to host families, relatives or their places of origin.

Mr. Cunningham: May I ask my hon. Friend whether he has been able to get a time scale for the Tamils to go back to their homes in Sri Lanka? Also, how has the aid been distributed?

Mr. Foster: The Government of Sri Lanka were committed to having 80 per cent. of those detained in camps going back to their places of origin by the end of the year. To facilitate that process, I am pleased to announce today an allocation of £500,000 to the HALO Trust for mine surveillance and de-mining in the Mullaitivu area. That work has started and will make the area safe for homes and for land use for the people who were put in the camps.

Mr. Lee Scott (Ilford, North) (Con): Will the Minister look into whether further pressure can be put on Sri Lanka by the Commonwealth? If Sri Lanka continues not to let people return or go home from the camps, perhaps it should be suspended from the Commonwealth.

Mr. Foster: It is important that the international community makes clear its position with regard to the number of people still in the camps and the importance of freedom of movement. We believe that that is happening, but, as far as the Commonwealth’s position is concerned, I know that the Government of Sri Lanka are keen to host the Commonwealth Heads of Government meeting in a couple of years’ time. That might have some bearing on their response to the developments for people who are in the camps.

Siobhain McDonagh (Mitcham and Morden) (Lab): May I thank the Minister for his statements and for his visit to Sri Lanka on behalf of my Tamil constituents? May I also ask his Department to support the EU Trade Commissioner’s GSP—or generalised system of preferences—plus report, which was issued on Monday, to ensure that preferred status will be withdrawn from Sri Lanka should things continue as they are?

Mr. Foster: My hon. Friend has long been an advocate for her Tamil constituents and I applaud her for her commitment. As regards the GSP plus and the announcement made this week by the European Commission, there is a process that should be followed to maintain the integrity of the GSP plus system. We believe that in the meantime the Government of Sri Lanka should look at the findings and act on them swiftly.

Malcolm Bruce (Gordon) (LD): As someone who visited the camps earlier this year, along with you,

Mr. Speaker, I welcome the Minister’s report on the basic conditions in the camps. Does he agree with me, however, that the Sri Lankan Government would better serve their interests if they gave full unrestricted access to the camp to the media and all the agencies and fulfilled their promise to allow people to return home before Christmas? What are the chances of that happening?

Mr. Foster: The right hon. Gentleman knows the situation well from his own experience and from his experience as Chairman of the Select Committee. I agree entirely with his assessment that it is in the Government of Sri Lanka’s interest to allow open access to the media. During the visit that I undertook two weeks ago, I had people from the BBC with me. It had full access to camps and individuals within those camps to do whatever reporting it felt necessary. Let me give the right hon. Gentleman an indication of the scale of the transfer that is needed. We have had a request from the International Organisation for Migration for transport assistance to help 41,000 people from the camps go back to Mannar, Mullaitivu and Kilinochchi, in addition to the 32,000 whom we know left the camps in September.

Mr. Eddie McGrady (South Down) (SDLP): I had the very distressing experience with the all-party group of visiting the camps at Menik farms zones 2 and 3 at Vavuniya. In spite of that distressing aspect, there was an uplifting side to the visit because of the attitude of the people and their hope for the future. Will the Minister ensure that any aid that is forthcoming from the Government is directed primarily at the welfare of the people in the camps and their displacement back to their own homes, which have been out of reach, to be joined with their families? Secondly—

Mr. Speaker: Order. I do not wish to be discourteous to the hon. Gentleman, but I think that one question will do.

Mr. Foster: When I was in Sri Lanka, I made it clear to the Government that from the end of this year, when the monsoon season was brought to a conclusion, we would no longer be funding aid for closed camps and that our aid would be directed towards facilitating movement from the camps. That includes the de-mining to which I have referred and means that I can announce £250,000 for predictable, safe and dignified transport for people from the camps back to host communities, as well as a further £220,000 to the Food and Agriculture Organisation to provide bushels of rice seeds to enable people to have a decent livelihood when they get back to their homes.

Mr. Geoffrey Clifton-Brown (Cotswold) (Con): The Minister has confirmed this morning that a package of rehabilitation measures is being put in place by the Department. That is welcome, but he has also confirmed that emergency aid will be redirected away from the camps. The Government also voted against the $2.5 billion International Monetary Fund package in July and are now considering ending the EU’s special trade privileges that the hon. Member for Mitcham and Morden (Siobhain McDonagh) mentioned. Is that really the most constructive way to persuade the Sri Lankan Government to promote a long-term reconciliation process, and to meet their stated pledge that 80 per cent. of displaced people should be returned by Christmas? That is what members of the Sri Lankan diaspora, and all Sri Lankan people in the UK, desperately want.

Mr. Foster: We were speaking up for all the people I saw in the camps two weeks ago. It was clear that they wanted to be returned to their homes as quickly as possible, but the nature of the closed camps, with their restrictions and military oversight, is wholly wrong. That is why our assistance will be geared to the de-mining, transport and livelihood programmes, as they will enable people to move safely and securely from the camps back to their homes, where they will be able to get on with their lives. I think that that is what the diaspora community here in the UK wants to hear.

ஒக்ரோபர் 22ல் அமெரிக்க இராஜாங்க அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையின் முக்கிய சாரம்:

III. Executive Summary

This report is submitted pursuant to the Joint Explanatory Statement accompanying the Supplemental Appropriations Act, 2009 (P.L. 111-32), which directed the Secretary of State to submit a report ―detailing incidents during the recent conflict in Sri Lanka that may constitute violations of international humanitarian law or crimes against humanity, and, to the extent practicable, identifying the parties responsible.‖ The alleged incidents set forth herein occurred in the context of the final months of an armed conflict between the Government of Sri Lanka (GSL) and the Liberation Tigers of Tamil Eelam (LTTE), which has been listed as a terrorist organization by the United States since 1997. While the conflict lasted intermittently for 25 years, this report focuses on incidents that occurred from January 2009, when fighting intensified, through the end of May 2009, when Sri Lankan government forces defeated the LTTE. It does not provide, nor is it intended to be, a comprehensive portrayal of the conflict.

The United States recognizes a state’s inherent right to defend itself from armed attacks, including those by non-state actors such as terrorist groups. The United States also expects states and non-state actors to comply with their international legal obligations. This report compiles alleged incidents that transpired in the final stages of the war, which may constitute violations of international humanitarian law (IHL) or crimes against humanity and related harms. The report does not reach legal conclusions as to whether the incidents described herein actually constitute violations of IHL, crimes against humanity or other violations of international law. Nor does it reach conclusions concerning whether the alleged incidents detailed herein actually occurred.

The report addresses the following categories of incidents:

Children in armed conflict—According to reports, on numerous occasions during the January to May 2009 reporting period the LTTE took both male and female children, some as young as 12, to join LTTE cadres.

Harm to civilians and civilian objects—The State Department has not received casualty estimates covering the entire reporting period; sources alleged that a significant number of deaths and injuries incurred at the time of attack were likely never recorded. Senior Sri Lankan officials made repeated public statements denying that the GSL was shelling the NFZ or targeting hospitals and was not responsible for any civilian casualties. However, sources alleged that the majority of shelling in the NFZ was from GSL forces. The GSL announced that it would observe a 48-hour ceasefire on two occasions. The stated aim of these was to allow civilians to move into areas in which they would not be subject to shelling. Incident reports suggest, however, that the GSL may have begun shelling before the end of the second 48-hour ceasefire. Reports also indicated that the LTTE forcibly prevented the escape of IDPs and used them as ―human shields‖.

Killing of captives or combatants seeking to surrender—A number of sources alleged that the GSL committed unlawful killings. Multiple reports alleged that in the final few days of fighting, senior LTTE leaders contacted international representatives in an effort to broker a surrender but were killed after they allegedly reached a surrender agreement with the GSL.

Disappearances—According to reports, GSL forces or GSL-supported paramilitaries abducted and in some instances then killed Tamil civilians, particularly children and young men. Sources reported that these individuals were taken to undisclosed locations without any further information being provided to relatives. IDP checkpoints and camps were alleged to be particularly vulnerable areas, with a heavy military presence hindering the ability of international organizations to conduct protection monitoring and confidential IDP interviews.

Humanitarian conditions—Reports include instances of severe food shortages; malnutrition, particularly among the very young and old; as well as surgeries being performed with little or no anesthetic. The GSL pledged to provide sufficient food and medical supplies to people in IDP camps and to those trapped in the NFZ. However, most reports point to significant gaps between food, medicine, and clean water needs and the available supplies in the NFZ and IDP camps.

அறிக்கையை முழுமையாக வாசிக்க:

APPEAL FROM TAMIL PEOPLE FROM THE BOAT HELD AT MERAK ON THE NORTH-WESTERN TIP OF JAVA, INDONESIA : Tamil People from the boat

Tamil_Boat_RefugeesThis appeal has been communicated via Tamil Solidarity and Committee for Workers International (CWI).We will be sending more information of further action soon.

Call Senan on  07 90 80 50 217 or 07 90 80 50 217 : www.tamilsolidarity.org

255 held from 10 October by Indonesia authorities after leaving Malaysia.

We took to the sea to escape Malaysia, where we were not given asylum after fleeing Sri Lanka. After hellish days at sea, full of fear and uncertainty on our small boat, we are all suffering from fatigue and are very depressed that still our lives are hanging in the balance.

There are no real facilities in the boat. We all are sharing just one toilet for example. 17 children among us are suffering from malnutrition. Majority of us are very frustrated and pushed to the edge of life. Numbers of refugees have already threatened to jump off the board into the sea.

Tamil_Boat_RefugeesWe have suffered enough at the hands of the Sri Lankan government. Our life so far has been wasted by the war. We were forced to escape as a result of the horrific attacks on Tamil-speaking people in Sri Lanka. Thirty year long war in Sri Lanka had devastated our lives. International governments, who refused to protect the lives, were also responsible for the death of thousands. The Sri Lankan government is still holding 250,000 Tamils in small camps in horrific conditions. There is no way we want to go back to that horrendous life. Return to Sri Lanka will mean being returned to hell and all our lives will be in danger.

We have wasted half of our lives for war and in the camps. All we demand is a right to have a decent life with basic democratic rights including right to education for our kids. We are determined not to waste rest of our life in another detention camp which denies us our fundamental rights. There are other Sri Lankan refugees living in Indonesia who are not given their full democratic rights. We also believe that Indonesian government using us to meet their political aims with Australia and with some aid agencies. With no trust that Indonesian government will respect our rights we refuse to come out of the boat. We appeal to Indonesian masses to understand our plea and support us.

We are also very disappointed to learn that Australian prime minister Kevin Rudd made a phone call to Indonesia’s president Susilo Bambang Yudhoyono to stop our boat and keep us away from Australia. We are harmless peaceful people who are trying to save our lives and asking our fundamental rights to be respected. We pose no threat. We have stopped our hunger strike with the belief that our plea will be listened to. However we are determined to continue to stay in the boat until our demands for basic rights are respected. In that respect we are disappointed with UN which should be standing on our site negotiating a better life for us. We appal to the UN and its general secretary Ban Ki-Moon to take necessary steps immediately.

All we demand is a better life that all human beings deserve in the world. We won’t get off the boat until any country that can provide our rights comes forward to take us.

Tamil People from the boat held at Merak.

கிழக்கு மற்றும் வட மத்திய மாகாண வீதிகள் புனரமைப்பு!

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் வட மத்திய மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களின் சீர்குலைந்த 370 கி.மீ. தூரமான வீதிகளை புனரமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.

அதனடிப்படையில் இத்திட்டத்துக்கு கடனுதவி வழங்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் உடன்படிக்கை கைச்சாத்திடப் படவுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள 4 வருட காலம் கொண்ட இத்திட்டத்துக்கு 78 மில்லியன் அமெரிக்க டொலர் செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கி 70 மில்லியன் டொலரையும் இலங்கை அரசாங்கம் 8 மில்லியன் டொலரையம் வழங்கவுள்ளது.