வியட்நாம் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் செய்ய இணக்கம்

231009mahi-nuban.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பை ஏற்றுக் கொண்ட வியட்நாம் ஜனாதிபதி நுயன் மின் ட்ரயட்,  இலங்கைக்கு விஜயம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வியட்நாம் சென்றிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந்நாட்டு ஜனாதிபதியை இலங்கை நேரப்படி நேற்று மாலை சந்தித்து இருதரப்பு பேச்சு நடத்தினார். இதன்போதே இந்த அழைப்பு முன் வைக்கப்பட்டது.

இச்சந்திப்பின்போது இரு அரசாங்கங்களுக்குமிடையில் முக்கிய பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. குற்றச்செயல்களை தடுத்தல், இரு நாடுகளினதும் பிராந்தியங்களினதும் பாதுகாப்பை பலப்படுதல் தொடர்பான ஒப்பந்தங்களில் இருநாடுகளும் கைச்சாத்திட்டன.

இரு தரப்பு சந்திப்பின்போது ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ, தென் கிழக்காசிய நாடுகளில் வியட்நாம் பொருளாதாரத்துறையில் பெரும் வளர்ச்சியடைந்து வருவதாக அந் நாட்டு ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினார். இரு நாடுகளினதும் இருதரப்பு வர்த்தகத்தை வலுப்படுத்தும் வகையில் விசாயம் மற்றும் மீன்பிடித்துறை குறித்தும் இச்சந்திப்பின்போது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும் யுத்தம் முடிவடைந்ததுடன் நாட்டில் வர்த்தகம் மற்றும் முதலீடுகளுக்கான சந்தர்ப்பம் அதிகரித்திருப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். பயங்கரவாதத்தை தோற்கடித்தமை க்காக இலங்கை ஜனாதிபதியை வியட்நாம் ஜனாதிபதி பாராட்டியதுடன் இலங்கையில் முதலீடு செய்வது தொடர்பாகவும் கூடிய கவனம் செலுத்தியுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *