16

16

கொழும்பில் இன்று 24 மணி நேர நீர்வெட்டு

கொழும்பு மற்றும் அதனை அண்டிய சில பகுதிகளில் இன்று சனிக்கிழமை காலை 9 மணி முதல் மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி வரையான 24 மணி நேர நீர் வெட்டு அமுல் செய்யப்படவிருப்பதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமை ப்புச் சபை அறிவித்துள்ளது.

மாளிகாகந்த நீர்த்தேக்கத்தின் பிரதான நீர் விநியோக குழாயிலும் மற்றும் ஹெவ்லொக் டவுனிலும் அத்தியாவசிய திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பதனாலேயே இந்த நீர் வெட்டு அமுல் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் கோட்டை, புறக்கோட்டை, கொம்பனித்தெரு, பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, கிருலபனை, பூர்வாராம மாவத்த, ஹெவ்லொக் டவுண், திம்பிரிகஸ்யாய, பாம்மன்கட, நாரஹேன்பிட்டி, பொரல்ல, சஹஸ்புர, மருதானை, மாளிகாவத்தை, கருவாத்தோட்டம், கொட்டாஞ்சேனை, கிராண்ட்பாஸ், வித்தியாலய மாவத்தை, சென்றல் வீதி, ஆட்டுப்பட்டித்தெரு, ஜிந்துப்பிட்டி வீதி, ஆண்டிவால் வீதி, விவேகானந்தா மேடு, வாழைத்தோட்டம், அல்ஸ்ட்ரோஸ் வீதி, ஸ்டேஸ் வீதி, லெயாட்ஸ் ப்ரோட்வே, புளுமெண்டல் வீதி, மஹவத்த ஆகிய பிரதான வீதிகளிலும் அவற்றுடன் இணைந்த அனைத்து கிளை வீதிகளிலும் நீர் வெட்டு மேற்கொள்ளப்படவிருப்பதாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கொலன்னாவ பெற்றோலியக் கூட்டுத்தாபனம், அரச தொழிற்சாலைகள், ஸ்ரன்வி மின் உற்பத்தி நிலையம், வெல்லம்பிட்டிய, சேதவத்த, வென்னவத்த, கெட்டுவில, மற்றும் இத்தமபவ்வ பகுதிகளிலும் நீர்வெட்டு அமுல் செய்யப் படவுள்ளது.

சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் இழுபறியாகவிருந்த பிரச்சினைகளுக்கு பொது இணைக்கப்பாடு – திஸ்ஸ விதாரண

Minister Tissa Vitharanaசர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவில் இதுவரை இழுபறியாகவிருந்த பிரச்சினைகளுக்கு பொது இணக்கப்பாடு ஏற்பட்டுவிட்டதாக குழுவின் தலைவர் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

இதன்படி குழு நடத்திவந்த கலந்துரையாடல்கள் நிறைவுக்கு வந்துள்ளதாகவும், இனி தீர்வுத் திட்டத்தைத் தயாரிக்கும் பணிகளை ஆரம்பித்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.இனப் பிரச்சினைக்குத் தீர்வொன்றைத் தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழு, கடந்த இரண்டு வருடங்களாக, நூற்றுக்கும் மேற்பட்ட தட வைகள் கூடி ஆராய்ந்து வந்தது. அண்மைய நாட்களில் 95% விடயங்களுக்குப் பொது இணக்கப்பாடு ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேநேரம் இந்த வாரம் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சுமுகமாக இணக்கம் காணப்பட்டு விட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதனையடுத்து, தீர்வுத் திட்டத்தை பிரிவு பிரிவாகத் தயாரிக்கும் பணியை ஆரம்பித்து விட்டதாகவும் பெரும்பாலும் அடுத்த மாத ஆரம்பத்தில் தீர்வுத் திட்டத்தைத் தயாரித்து நிறைவு செய்ய முடியுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தீர்வுத்திட்டத்தின் கீழ் மாகாண சபை முறைமையும் அதிகாரப் பகிர்வும் உள்ளடக்கப்பட்டு தீர்வு வரைவு தயாரிக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார். இந்தப் புதிய தீர்வுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குப் புதிய அரசியலமைப்பொன்று அவசியமானதென்றும் தீர்வுத் திட்டம் தயாரிக்கப்பட்டதும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படும்.

அதனை நடைமுறைப்படுத்துவதற்கான அங்கீகாரத்தை அவர் பெற்று செயற்படுத்துவாரென்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இன்று முதலமைச்சர்கள் மாநாடு; நகர் விழாக்கோலம்; கடும் பாதுகாப்பு

25th-cm-con.jpg25வது முதலமைச்சர்கள் மாநாடு மட்டக்களப்பில் இன்று (16) காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகிறது. கிழக்கு மாகாண முதலமைச்சரும், 25வது முதலமைச்சர்கள் மாநாட்டின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் மட்டக்களப்பு நகர மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இம்மாநாட்டில் கலந்து கொள்ளும் முதலமைச்சர்கள் நேற்று பிற்பகலிலிருந்து மட்டக்களப்புக்கு வருகைதந்தனர். மட்டக்களப்புக்கு வருகைதந்த முதலமைச்சர்களை கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபை மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரன், முதலமைச்சரின் செயலாளர் ஆகியோர் மாநகர சபையின் வாடிவீட்டின் முன்பாக நின்று வரவேற்றனர்.

மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு இவர்கள் வரவேற்கப்பட்டனர். இதேவேளை இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அரசாங்கத்தின் பிரதிநிதியாக அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்றுக்காலை மட்டக்களப்புக்கு வருகை தந்தார். மட்டக்களப்பு மாநகர சபைக்கு வருகைதந்த அமைச்சரை மட்டக்களப்பு மாநகர சபை மேயர், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஆகியோர் வரவேற்றனர். மாநகர சபையின் வாசஸ்தளத்தில் மாநகர மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரன் அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டார்.

இதையடுத்து மாநாட்டு ஒழுக்குகள் குறித்து அமைச்சர் ராஜித சேனாரத்ன கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் கேட்டறிந்து கொண்டதுடன் மாநாட்டு மண்டபத்தையும் பார்வையிட்டார்.

இம்மாநாடு நடைபெறும் மண்டபம் பலத்த பாதுகாப்புக்குட் படுத்தப்பட்டுள்ளது. இன்று காலை வைபவரீதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையுரை நிகழ்த்தி முதலமைச்சர்கள் மாநாட்டை ஆரம்பித்து வைப்பார்.

இதையடுத்து மாநாடு முடிவுற்றதும் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு இம்மாநாடு தொடர்பான பத்திரிகையாளர் மாநாடும் நடைபெறவுள்ளது. அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார மற்றும் சகவாழ்வு மன்றத் தலைவர் குமார் ரூபசிங்கவும் மட்டக்களப்புக்கு வருகை தந்திருந்திருந்தனர். மாநாட்டை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகரம் அலங்கார வளைவுகளாலும் கட்அவுட்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

மாநகர மண்டபத்துக்கு சமீபமாக வீதியின் அருகில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனும் 7 முதலமைச்சர்களுடனும் காணப்படும் முழு உருவம் கொண்ட 8 கட்அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. இன்று காலை 9.00 மணிக்கு மட்டக்களப்பு நீதிமன்ற நுழைவாயிலில் வைத்து முதலமைச்சர்களும் அதிதிகளும் மலர்மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு மேளம் மற்றும் மங்கள வாத்தியம் முழங்க கலை, கலாசார நிகழ்வுகளுடன் மாநாட்டு மண்டபத்துக்கு அழைத்துச் செல்லப்படுவர்.

பாடும் மீன் ஹோட்டல் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள மட்டக்களப்பு வாடி வீட்டில் முதலமைச்சர் சந்திரகாந்தன் முதலமைச்சர்களுக்கும் அதிதிகளுக்கும் நேற்று இராப்போசன விருந்தளித்து கெளரவித்தார்.

வெள்ளவத்தை தொடர்மாடி வீட்டில் 4 தற்கொலை அங்கிகள் மீட்பு – சந்தேக நபர் 7வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை

wellawatta.jpgகொழும்பு, வெள்ளவத்தையில் தொடர்மாடியொன்றில் பொலிஸார் நடத்திய சுற்றி வளைப்பு தேடுதலின் போது சுமார் 40 கிலோ வெடி மருந்துடன் கூடிய 4 தற்கொலை அங்கிகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. அத்துடன் 25 கிலோ எடை கொண்ட கிளேமோர் குண்டொன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

தற்கொலை அங்கிகளை மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படும் நான்கு சந்தேக நபர்களுள் ஒருவர் கட்டடத்தின் ஏழாவது மாடியிலிருந்து பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெவித்தார்.

குறிப்பிட்ட வீட்டிலிருந்த ஏனைய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் வழங்கிய தகவலின்படி வெள்ளவத்தையில் மேலும் இரு இளைஞர்களும் இரத்மலானை இராணுவ முகாமிலுள்ள இராணுவ அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய புலனாய்வுத்துறைக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் வெள்ளவத்தை பொலிஸாரின் உதவியுடன் நேற்று முன்தினம் இரவு வெள்ளவத்தை இல. 55 பெனிகுயின் வீதியிலுள்ள சன்பிளவர் தொடர்மாடி வீட்டுத் தொகுதியில் பொலிஸார் தேடுதல்களை மேற்கொண்டனர். கட்டடத்தின் ஏழாவது மாடி வீடொன்றில் மொரட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட 4 இளைஞர்கள் தங்கியிருந்தனர். மேற்படி இளைஞர்கள் தங்கியிருந்த வீட்டின் (சீலிங்) கூரைப் பகுதியை பொலிஸார் சோதனையிட்டனர்.

இங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 தற்கொலை அங்கிகளையும் கிளேமோர் குண்டையும் பொலிஸார் கண்டெடுத்தனர். இச்சமயத்தில் திடீரென சந்தேக நபர்களுள் ஒருவர் வீட்டின் ஜன்னல் வழியே ஏழாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்து கொண்ட நபர் சுரேந்திரன் என்றழைக்கப்படும் தாமோதரபிள்ளை சச்சிந்திரன் (வயது 23) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரது சடலம் கொழும்பு களுபோவில ஆஸ்பத்திரி சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

ஜன்னல் வழியாக பாய்ந்த சந்தேக நபர் முதலாவது மாடியில் வெள்ளை இரும்பு சட்டங்களால் அமைக்கப்பட்ட கூரையில் விழுந்து மரணமானார். கல்கிஸ்ஸை மாஜிஸ்திரேட் மேலதிக நீதவான் தர்ஷிகா விமல சிறி சம்பவ இடத்திற்கு வந்து விசா ரணைகளை மேற்கொண்டார். கைதான மூன்று இளைஞர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் இரத்மலானை பகுதியில் இராணுவ முகாமிலுள்ள இராணுவ அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து கைத் துப்பாக்கியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இரவு சுமார் 9.30 மணிக்கு ஆரம்பமான இத் தேடுதல் நடவடிக்கைகள் நள்ளிரவு 12.00 மணிவரை நடைபெற்றது. சந்தேக நபர்கள் தொடர்பான விசாரணைகளை தேசிய புலனாய்வுப் பிரிவு மேற்கொண்டு வருகிறது.

ஈராக்கின் உதவி ஜனாதிபதியுடன் நேற்று பேச்சுவார்த்தை

pre-iraq.jpgமூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று காலை ஈராக்கின் உதவி ஜனாதிபதி அதி அத்துல் மகதியைச் சந்தித்து உரையாடினார்.

இரு நாடுகளுக்குமிடையிலான முக்கிய விடயங்கள் குறித்து இருவரும் கலந்துரையாடியுள்ளர்.

இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகளைப் பேணும் வகையில் ஈராக்கில் இலங்கைத் தூதரகம் ஒன்றை அமைப்பது தொடர்பாகவும் இப்பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து மேலும் கூடுதலான தேயிலையைக் கொள்வனவு செய்ய ஈராக் நடவடிக்கை எடுக்கும் என ஈராக்கின் உதவி ஜனாதிபதி இங்கு உறுதி தெரிவித்தார். 

பாதுகாப்பு செயலருக்கு எதிராக அவதூறு செய்திகளை வெளியிடுவதில்லை – லீடர் பப்ளிகேஷன்ஸ் நீதிமன்றத்தில் உறுதி

gotabaya-rajapakasa.jpgபாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு அவதூறு ஏற்படும் வகையிலான எந்தவொரு செய்தியையும் எதிர்காலத்தில் பிரசாரம் செய்வதில்லையென லீடர் பப்ளிகேஷன்ஸ் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது. லீடர் பப்ளிகேசனில் கடந்த வருடம் வெளியான ஒரு செய்தி பாதுகாப்புச் செயலாளருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்ததாக குறிப்பிட்டு, 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் எட்டாம் திகதி பாதுகாப்பு அமைச்சரினால் 1000 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி மான நஷ்ட வழக்கு தொடரப்பட்டிருந்தது.

வழக்கு தொடரப்பட்டிருந்தது முதல் நேற்று முன்தினம் வரை லீடர் பப்ளிகேஷனில் பாதுகாப்புச் செயலாளர் தொடர்பான செய்திகளை பிரசுரிப்பதற்கு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்திருந்தது. கல்கிசை மாவட்ட மேலதிக நீதவான் மெக்கி மொஹமட் இந்த வழக்கை நேற்று மீள்பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டபோதே லீடர் பப்ளிகேஷன் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர்கள், பாதுகாப்புச் செயலாளருக்கு அவதூறு ஏற்படும் வகையிலான எந்தவொரு செய்தியையும் எதிர்காலத்தில் பிரசுரிப்பதில்லையென உறுதியளித்தனர்.

அரசாங்க ஊழியர்களுக்கு இலகு கடனில் வீட்டு வசதி

sarath.jpgஅரசாங்க ஊழியர்களுக்கு குறைந்த வட்டியுடன் இலகு கடன் முறையில் வீடொன்றைப் பெற்றுக் கொள்வதற்கான திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப் படவுள்ளதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார்.

இதற்கிணங்க தற்போது, 1,500 வீடுகளுக்கான நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளதுடன் கொழும்பிலும் கண்டியிலும் புதிய வீட்டுத் திட்டங்கள் விரைவில் ஆரம்பிக்கப் படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

வீடொன்றைப் பெற்றுக்கொள்ள விருபும் அரச ஊழியர்கள் அரச சேவையில் நிரந்தர நியமனத்தைக் கொண்டவராகவும் ஐந்து வருடத்தை நிறைவுசெய்தவராகவும் இருத்தல் வேண்டும். இவர்களுக்கு அரசாங்கம் குறைந்த வட்டி வீதத்தில் சகல வசதிகளையும் கொண்ட வீடுகளைப் பெற்றுக்கொடுக்கத் தீர்மானித்துள்ளதெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் பொதுநிர்வாக அமைச்சுக்கு ஏற்கனவே கிடைத்துள்ளதுடன் இதற்கிணங்க காலியில் 1,500, வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. கொழும்பில் கெப்பொட்டிபொல மாவத்தையிலும் கண்டி குண்டசாயிலும் இத்தகைய வீட்டுத் திட்டங்களுக்கான நிர்மானப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர் அமுனுகம அரசாங்கம் நகரங்களைப் போன்றே கிராமியப்புறங்களையும் அபிவிருத்தி செய்வதில் முனைப்புடன் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

நலன்புரி நிலையங்களுக்கு தொலைபேசி வங்கி வசதிகள்

imobile-phone.jpgயாழ் மாவட்டத்தில் வன்னியில் இருந்து இடம்பெயாந்த மக்கள் தங்கியிருக்கும் நலன்புரி நிலையங்களுக்கு தொலைபேசி சேவை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அங்கு மொத்தமாக உள்ள 12 நலன்புரி நிலையங்களில் 8 நலன்புரி நிலையங்களுக்கு சிடிஎம்ஏ தொலைபேசி வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் தபால் மற்றும் வங்கிச் சேவைகளும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் 11 ஆயிரத்தி 79 பேர் இடம்பெயர்ந்து வந்து முகாம்களில் தங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்

சப்ரகமுவ ஆளுநரின் இறுதிக் கிரியை இன்று

ellawala.jpgசப்ரகமுவ மாகாண ஆளுநர் காலஞ்சென்ற மொகான் சாலிய எல்லாவளவின் இறுதிக் கிரியைகள் இன்று (16) சனிக்கிழமை பலாங்கொடையில் நடைபெறுகின்றன.

சுகவீனமுற்ற நிலையில் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டிருந்த மொகான் எல்லாவள கடந்த செவ்வாய்க்கிழமை (12) காலமானார்.

2008 ஒக்டோபர் மாதம் இரண்டாந் திகதி ஆளுநராக நியமிக்கப்பட்ட அவர், மாகாண சபை உறுப்பினராக, அமைச்சராக, முதலமைச்சராக பதவி வகித்துள்ளார்.

கல்வி அமைச்சின் செயலாளருக்கு அதிபர்களுக்கான தரம் உயர்வு

susilpremjayanth.jpgஅரச சேவைகள் ஆணைக்குழு நியமிக்கப்படும் வரை கல்வி அமைச்சின் செயலாளருக்கு பாடசாலை அதிபர்களுக்கான தரம் உயர்வு வழங்குவதற்கான அதிகாரம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார். நிலவும் வெற்றிடங்கள் அனைத்துக்கும் ஏற்ற வகையில் தரம் உயர்வு வழங்கப்படவுள்ளது.